Verse 1
திருவழுதி நாடென்றும் தென்குருகூர் என்றும்\nமருவினிய வண்பொருநல் என்றும் - அருமறைகள்\nஅந்தாதி செய்தான் அடியிணையே எப்பொழுதும்\nசிந்தியாய் நெஞ்சே! தெளிந்து.
Verse 2
மனத்தாலும் வாயாலும் வண்குருகூர் பேணும்\nஇனத்தாரை அல்லாது இறைஞ்சேன் - தனத்தாலும்\nஏதும் குறைவிலேன் எந்தை சடகோபன்\nபாதங்கள் யாமுடைய பற்று.
Verse 3
ஏய்ந்தபெருங் கீர்த்தி இராமா நுசமுனிதன்\nவாய்ந்தமலர்ப் பாதம் வணங்குகின்றேன்- ஆய்ந்தபெருஞ்\nசீரார் சடகோபன் செந்தமிழ்வே தம்தரிக்கும்\nபேராத உள்ளம் பெற.
Verse 4
வான்திகழும் சோலை மதிள் அரங்கர் வண்புகழ்மேல்\nஆன்ற தமிழ்மறைகள் ஆயிரமும் - ஈன்ற\nமுதல்தாய் சடகோபன்; மொய்ம்பால் வளர்த்த\nஇதத்தாய் இராமா நுசன்.
Verse 5
உயர்வற வுயர்நலம் முடையவன் யவனவன்\nமயர்வற மதிநலம் அருளினன் யவனவன்\nஅயர்வறும் அமரர்கள் அதிபதி யவனவன்\nதுயரறு சுடரடி தொழுதெழென் மனனே.
Verse 6
மனனக மலமற மலர்மிசை யெழுதரும்\nமனனுணர் வளவிலன், பொறியுணர் வவையிலன்\nஇனனுணர், முழுநலம், எதிர்நிகழ் கழிவினும்\nஇனனிலன், னெனனுயிர், மிகுநரை யிலனே.
Verse 7
இலனது வுடையனி தெனநினை வரியவன்\nநிலனிடை விசும்பிடை உருவினன் அருவினன்\nபுலனொடு புலனலன் , ஒழிவிலன், பரந்த அந்\nநலனுடை யொருவனை நணுகினம் நாமே.
Verse 8
நாமவ னிவனுவன், அவளிவளுவளெவள்\nதாமவரிவருவர், அதுவிது வுதுவெது\nவீமவை யிவையுவை, யவைநலந் தீங்கவை\nஆமவை யாயவை, யாய்நின்ற அவரே.
Verse 9
அவரவர் தமதம தறிவறி வகைவகை\nஅவரவ ரிறையவ ரெனவடி யடைவர்கள்\nஅவரவ ரிறையவர் குறைவில ரிறையவர்\nஅவரவ விதிவழி யடையநின் றனரே.
Verse 10
நின்றனரிருந்தனர் கிடந்தனர் திரிந்தனர்\nநின்றிலரிருந்திலர் கிடந்திலர்திரிந்திலர்\nஎன்றுமோரியல்வினர் எனநினைவரியவர்\nஎன்றுமோரியல்வொடு நின்றவெந்திடரே.
Verse 11
திடவிசும் பெரிவளி நீர்நில மிவைமிசை\nபடர்பொருள் முழுவது மாயவை யவைதொறும்\nஉடல்மிசை யுயிரெனக் கரந்தெங்கும் பரந்துளன்\nசுடர்மிகு சுருதியு ளிவையண்ட சுரனே.
Verse 12
சுரரறி வருநிலை விண்முதல் முழுவதும்\nவரன்முத லாயவை முழுதுண்ட பரபரன்\nபுரமொரு மூன்றெரித் தமரர்க்கு மறிவியந்து\nஅரனயன் எனவுல கழித்தமைத் துளனே.
Verse 13
உளனெனி லுளனவ னுருவமிவ் வுருவுகள்\nஉளனல னெனிலவன் அருவமிவ் வருவுகள்\nஉளனென விலனென விவைகுண முடைமையில்\nஉளனிரு தகைமையொ டொழிவிலன் பரந்தே.
Verse 14
பரந்ததண் பரவையுள்நீர்தொறும் பரந்துளன்\nபரந்தஅ ண்டமிதென நிலவிசும் பொழிவற\nகரந்தசி லிடந்தொறும் இடந்திகழ் பொருடொறும்\nகரந்தெங்கும் பரந்துள னிவையுண்ட கரனே.
Verse 15
கரவிசும் பெரிவளி நீர்நில மிவைமிசை\nவரனவில் திறல்வலி யளிபொறை யாய்நின்ற\nபரனடி மேல்குரு கூர்ச்சட கோபன்சொல்\nநிரனிறை யாயிரத் திவைபத்தும் வீடே.
Verse 16
வீடுமின் முற்றவும் வீடுசெய்து உம்முயிர்\nவீடுடை யானிடை வீடுசெய்ம்மினே.
Verse 17
மின்னின் நிலையில--மன்னுயி ராக்கைகள்\nஎன்னு மிடத்து இறை--உன்னுமின் நீரே.
Verse 18
நீர்நும தென்றிவை, வேர்முதல் மாய்த்து இறை\nசேர்மின் உயிர்க்கு அதனேர்நிறை யில்லே.
Verse 19
இல்லது முள்ளதும் அல்ல தவனுரு\nஎல்லையி லந்நலம் புல்குபற் றற்றே.
Verse 20
அற்றது பற்றெனில் உற்றது வீடுஉயிர்\nசெற்றது மன்னுறில் அற்றிறை பற்றே.
Verse 21
பற்றில னீசனும் முற்றவும் நின்றனன்\nபற்றிலை யாய் அவன் முற்றி லடங்கே.
Verse 22
அடங்கெழில் சம்பத்து அடங்கக்கண்டு ஈசன்\nஅடங்கெழி லஃதென்று--அடங்குக வுள்ளே.
Verse 23
உள்ள முரைசெயல் உள்ளவிம் மூன்றையும்\nஉள்ளிக் கெடுத்து இறை யுள்ளிலொ டுங்கே.
Verse 24
ஒடுங்க அவன்கண் ஒடுங்கலு மெல்லாம்\nவிடும்பின்னு மாக்கை விடும்பொழு தெண்ணே.
Verse 25
எண்பெருக் கந்நலத்து ஒண்பொரு ளீறில\nவண்புகழ் நாரணன் திண்கழல் சேரே.
Verse 26
சேர்த்தடத் தென்குரு கூர்ச்ட கோபன்சொல்\nசீர்த்தொடை யாயிரத்து ஓர்த்தவிப் பத்தே.
Verse 27
பத்துடை யடியவர்க் கெளியவன், பிறர்களுக் கரிய\nவித்தகன் மலர்மகள் விரும்பும்நம் அரும்பெற லடிகள்\nமத்துறு கடை வெண்ணெய் களவினில் உரவிடை யாப்புண்டு\nஎத்திறம் உரலினோ டிணைந்திருந் தேங்கிய எளிவே.
Verse 28
எளிவரு மியல்வினன் நிலைவரம் பிலபல பிறப்பாய்,\nஒளிவரு முழு நலம் முதலில கேடில வீடாம்,\nதெளிதரும் நிலைமைய தொழிவிலன் முழுவதும், மிறையோன்,\nஅளிவரு மருளினோ டகத்தனன், புறத்தன னமைந்தே..
Verse 29
அமைவுடை யறநெறி முழுவது முயர்வற வுயர்ந்த,\nஅமைவுடை முதல்கெடல் ஒடிவிடை யறநில மதுவாம்,\nஅமைவுடை யமரரும் யாவையும் யாவரும் தானாம,\nஅமைவுடை நாரணன் மாயையை யறிபவர் யாரே?
Verse 30
யாருமோர் நிலைமைய னெனவறி வரிய வெம்பெருமான்,\nயாருமோர் நிலைமைய னெனவறி வெளியவெம் பெருமான்,\nபேருமோ ராயிரம் பிறபல வுடையவெம் பெருமான்,\nபேருமோ ருருவமு முளதில்லை யிலதில்லை பிணக்கே.
Verse 31
பிணக்கற அறுவகைச் சமயமும் நெறியுள்ளி யுரைத்த,\nகணக்கறு நலத்தனன் அந்தமி லாதியம் பகவன்,\nவணக்குடைத் தவநெறி வழிநின்று புறநெறி களைகட்டு,\nஉணக்குமின் பசையற அவனுடை, யுணர்வுகொண் டுணர்ந்தே.
Verse 32
உணர்ந்துணர்ந் திழிந்தகன் றுயர்ந்துரு வியந்தவிந்நிலைமை,\nஉணர்ந்துணர்ந் துணரிலும் இறைநிலையுணர்வரி துயிர்காள்,\nஉணர்ந்துணர்ந் துரைத்துரைத் தரியய னரனென்னுமிவரை,\nஉணர்ந்துணர்ந் துரைத்துரைத் திறைஞ்சுமின் மனப்பட்டதொன்றே.
Verse 33
ஒன்றெனப் பலவென அறிவரும் வடிவினுள் நின்ற,\nநன்றெழில் நாரணன் நான்முகன் அரனென்னு மிவரை,\nஒன்றநும் மனத்து வைத் துள்ளிநும் இருபசை யறுத்து,\nநன்றென நலஞ்செய்வ தவனிடை நம்முடை நாளே.
Verse 34
நாளு நின் றடு நமபழ மையங் கொடுவினையுடனே\nமாளும், ஓர் குறைவில்லை மனனக மலமறக் கழுவி,\nநாளூநந் திருவுடை யடிகள்தம் நலங் கழல் வணங்கி,\nமாளுமோ ரிடத்திலும் வணக்கொடு மாள்வது வலமே.
Verse 35
வலத்தனன் திரிபுர மெரித்தவ னிடம்பெறத் துந்தித்\nதலத்து, எழுதிசைமுகன் படைத்தநல் லுலகமும் தானும்\nபுலப்பட பின்னும்தன் உலகத்தி லகத்தனன் தானே\nசொலப்புகில் இவைபின்னும் வயிற்றுள இவையவன் துயக்கே.
Verse 36
துயக்கறு மதியில்நல் ஞானத்துள் அமரரைத் துயக்கும்,\nமயக்குடை மாயைகள் வானிலும் பெரியன வல்லன்,\nபுயற்கரு நிறத்தனன் பெரு நிலங் கடந்தநல் லடிப்போது ,\nஅயர்ப்பில னலற்றுவன் தழுவுவன் வணங்குவ னமர்ந்தே.
Verse 37
அமரர்கள் தொழுதெழ அலைகடல் கடைந்தவன் றன்னை,\nஅமர்பொழில் வளங்குரு கூர்ச்சடகோபன் குற்றேவல்கள்,\nஅமர்சுவை யாயிரத் தவற்றினு ளிவைபத்தும் வல்லார்\nஅமரரோ டுயர்விற்சென் றறுவர்தம் பிறவியஞ் சிறையே.
Verse 38
அஞ்சிறைய மடநாராய். அளியத்தாய் நீயும்நின்\nஅஞ்சிறைய சேவலுமாய் ஆவாவென் றெனக்கருளி\nவெஞ்சிறைப்புள் ளுயர்த்தாற்கென் விடுதூதாய்ச் சென்றக்கால்\nவன்சிறையில் அவன்வைக்கில் வைப்புண்டா லென்செய்யுமோ?
Verse 39
என்செய்ய தாமரைக்கண் பெருமானார்க் கென்தூதாய்\nஎன்செய்யும் உரைத்தக்கால் இனக்குயில்காள். நீரலிரே?\nமுன்செய்த முழுவினையால் திருவடிக்கீழ்க் குற்றேவல்\nமுன்செய்ய முயலாதேன் அகல்வதுவோ விதியினமே?
Verse 40
விதியினால் பெடைமணக்கும் மென்னடைய அன்னங்காள்.\nமதியினால் குறள்மாணாய் உலகிரந்த கள்வற்கு\nமதியிலேன் வல்வி னையே மாளாதோ வென்று , ஒருத்தி\nமதியெல்லாம் முள்கலங்கி மயங்குமால் என்னீரே.
Verse 41
என்நீர்மை கண்டிரங்கி யிதுதகா தென்னாத\nஎன்நீல முகில்வண்ணற் கென்சொலியான் சொல்லுகேனோ\nநன்னீர்மை யினியவர் கண் தங்காதென் றொருவாய்ச்சொல்\nநன்னீல மகன்றில்காள். நல்குதிரோ நல்கீரோ?
Verse 42
நல்கித்தான் காத்தளிக்கும் பொழிலேழும் வினையேற்கே,\nநல்கத்தா னாகாதொ? நாரணனைக் கண்டக்கால்\nமல்குநீர்ப் புனற்படப்பை இரைதேர்வண் சிறுகுருகே.\nமல்குநீர்க் கண்ணேற்கோர் வாசகங்கொண் டருளாயே.
Verse 43
அருளாத நீரருளி யவராவி துவராமுன்\nஅருளாழிப் புட்கடவீர் அவர்வீதி யொருநாள் என்று\nஅருளாழி யம்மானைக் கண்டக்கா லிதுசொல்லி\nயருள் ஆழி வரிவண்டே. யாமுமென் பிழைத் தோமே?
Verse 44
என்பிழைகோப் பதுபோலப் பனிவாடை யீர்கின்றது\nஎன்பிழையே நினைந்தருளி யருளாத திருமாலார்க்கு\nஎன்பிழைத்தாள் திருவடியின் தகவினுக் கென் றொருதவாய்ச்சொல்\nஎன்பிழைக்கும் இளங்கிளியே யான்வளர்த்த நீயலையே?
Verse 45
நீயலையே சிறுபூவாய். நெடுமாலார்க் கென்தூதாய்\nநோயெனது நுவலென்ன, நுவலாதே யிருந்தொழிந்தாய்\nசாயலொடு மணிமாமை தளர்ந்தேன் நான் இனியுனது\nவாயலகில் இன்னடிசில் வைப்பாரை நாடாயே.
Verse 46
நாடாத மலர்நாடி நாள்தோறும் நாரணந்தன்,\nவாடாத மலரடிக்கீழ் வைக்கவே வகுக்கின்று,\nவீடாடி வீற்றிருத்தல் வினையற்ற தென்செய்வதோ?\nஊடாடு பனிவாடாய். உரைத்தீராய் எனதுடலே.
Verse 47
உடலாடிப் பிறப்புவீ டுயிர்முதலா முற்றுமாய்,\nகடலாழி நீர்தோற்றி யதனுள்ளே கண்வளரும்\nஅடலாழி யம்மானைக் கண்டக்கா லிதுசொல்லி\nவிடலாழி மடநெஞ்சே. வினையோமொன் றாமளவே.
Verse 48
அளவியன்ற ஏழுலகத் தவர்பெருமான் கண்ணனை\nவளவயல்சூழ் வண்குருகூர்ச்சடகோபன் வாய்ந்துரைத்த\nஅளவியன்ற அந்தாதி யாயிரத்துள் இப்பத்தின்\nவளவுரையால் பெறலாகும் வானோங்கு பெருவளமே.
Verse 49
வளவே ழுலகின் முதலாய் வானோ ரிறையை அருவினையேன்\nகளவேழ் வெண்ணெய் தொடுவுண்ட கள்வா என்பன், பின்னையும்,\nதளவேழ் முறுவல் பின்னைக்காய் வல்லா னாயர் தலைவனாய்,\nஇளவே றேழும் தழுவிய எந்தாய் என்பன் நினைந்துநைந்தே.
Verse 50
நினைந்து நைந்துள் கரைந்துருகி, இமையோர் பலரும் முனிவரும்,\nபுனைந்த கண்ணி நீர்சாந்தம் புகையோ டேந்தி வணங்கினால்,\nநினைந்த எல்லாப் பொருள்கட்கும் வித்தாய், முதலில் சிதையாமே,\nமனஞ்செய் ஞானத் துன்பெருமை மாசூ ணாதோ மாயோனே.
Verse 51
மாயோ னிகளாய் நடைகற்ற வானோர் பலரும் முனிவரும்,\nநீயோ னிகளைப் படை என்று நிறைநான் முகனைப் படைத்தவன்\nசேயோ னெல்லா அறிவுக்கும், திசைக ளெல்லாம் திருவடியால்\nதாயோன் எல்லா வெவ்வுயிர்க்கும் தாயோன் தானோ ருருவனே.
Verse 52
தானோ ருருவே தனிவித்தாய்த் தன்னில் மூவர் முதலாய\nவானோர் பலரும் முனிவரும் மற்றும் மற்றும் முற்றுமாய்\nதானோர் பெருநீர் தன்னுள்ளே தோற்றி அதனுள் கண்வளரும்\nவானோர் பெருமான் மாமாயன் வைகுந் தன்எம் பெருமானே.
Verse 53
மானேய் நோக்கி மடவாளை மார்வில் கொண்டாய் மாதவா\nகூனே சிதைய வுண்டைவில் நிறத்தில் தெறித்தாய் கோவிந்தா!\nவானார் சோதி மணிவண்ணா. மதுசூ தாநீ யருளாய் உன்\nதேனே மலரும் திருப்பாதம் சேரு மாறு வினையேனே.
Verse 54
வினையேன் வினைதீர் மருந்தானாய் விண்ணோர் தலைவா கேசவா!\nமனைசே ராயர் குலமுதலே மாமா யன்னே மாதவா!\nசினையேய் தழைய மராமரங்கள் ஏழும் எய்தாய் சிரீதரா!\nஇனையா யினைய பெயரினாய் என்று நைவன் அடியேனே!
Verse 55
அடியேன் சிறிய ஞானத்தன், அறித லார்க்கு மரியானை\nகடிசேர் தண்ணந் துழாய்க்கண்ணி புனைந்தான் தன்னைக் கண்ணனை\nசெடியார் ஆக்கை யடியாரைச் சேர்தல் தீர்க்கும் திருமாலை\nஅடியேன் காண்பான் அலற்றுவன், இதனில் மிக்கோர் அயர்வுண்டே?
Verse 56
உண்டா யுலகேழ் முன்னமே, உமிழ்ந்து மாயை யால்புக்கு\nஉண்டாய் வெண்ணெய் சிறுமனிசர் உவலை யாக்கை நிலையெய்தி\nமண்டான் சோர்ந்த துண்டேலும் மனிசர்க்காகும் பீர் சிறிதும்\nஅண்டா வண்ணம் மண்கரைய நெய்யூண் மருந்தோ? மாயோனே
Verse 57
மாயோம் தீய அலவ லைப் பெருமா வஞ்சப் பேய்வீய\nதூயகுழவி யாய்விடப்பால் அமுதா அமுது செய்திட்ட\nமாயன் வானோர் தனித்தலைவன் மலராள் மைந்த னெவ்வுயிர்க்கும்\nதாயோன் தம்மா னென்னம்மான் அம்மாமூர்த்தி யைச்சார்ந்தே.
Verse 58
சார்ந்த இருவல் வினைகளும் சரித்து மாயப் பற்றறுத்து\nதீர்ந்து தன்பால் மனம்வைக்கத் திருத்தி வீடு திருத்துவான்,\nஆர்ந்த ஞானச் சுடராகி அகலம் கீழ்மேல் அளவிறந்து,\nநேர்ந்த வுருவாய் அருவாகும் இவற்றி னுயிராம் நெடுமாலே.
Verse 59
மாலே மாயப் பெருமானே மாமா யனே என்றென்று\nமாலே யேறி மாலருளால் மன்னு குருகூர்ச் சடகோபன்\nபாலேய் தமிழ ரிசைகாரர் பத்தர் பரவும் ஆயிரத்தின்\nபாலே பட்ட இவைபத்தும் வல்லார்க் கில்லை பரிவதே.
Verse 60
பரிவதி லீசனைப் பாடி விரிவது மேவ லுறுவீர்\nபிரிவகை யின்றிநன் னீர்தூய் புரிவது வும்புகை பூவே.
Verse 61
மதுவார் தண்ணந் துழாயான்முதுவே தமுதல் வனுக்கு\nஎதுவே தென்பணி என்னாததுவே யாட்செய்யு மீடே.
Verse 62
ஈடு மெடுப்புமி லீசன் மாடு விடாதென் மனனே\nபாடுமென் நாவலன் பாடல் ஆடுமெ னங்கம ணங்கே.
Verse 63
அணங்கென ஆடுமெ னங்கம் வணங்கி வழிபடு மீசன்\nபிணங்கி யமரர் பிதற்றும்குணங்கெழு கொள்கையி னானே.
Verse 64
கொள்கைகொ ளாமையி லாதான் எள்கலி ராகமி லாதான்\nவிள்கைவிள் ளாமைவி ரும்பி உள்கலந் தார்க்கோ ரமுதே.
Verse 65
அமுதம் அமரகட் கீந்த நிமிர்சுட ராழி நெடுமால்\nஅமுதிலு மாற்ற இனியன் நிமிர்திரை நீள்கட லானே.
Verse 66
நீள்கடல் சூழிலங் கைக்கோன் தோள்கள் தலைதுணி செய்தான்\nதாள்கள் தலையில் வணங்கி நாள்கள் தலைக்க ழிமினே.
Verse 67
கழிமின்தொண் டீர்கள் கழித்துத் தொழுமீன் அவனைத் தொழுதால்\nவழிநின்ற வல்வினை மாள்வித்து அழிவின்றி யாக்கம் தருமே.
Verse 68
தரும அரும்பய னாய திருமக ளார்தனிக் கேள்வன்,\nபெருமை யுடைய பிரானார், இருமை வினைகடி வாரே.
Verse 69
கடிவார் தீய வினைகள் நொடியா ருமள வைக்கண்\nகொடியா அடுபுள் ளுயர்த்த வடிவார் மாதவ னாரே.
Verse 70
மாதவன் பால்சட கோபன் தீதவ மின்றி யுரைத்த\nஏதமி லாயிரத் திப்பத்து ஓதவல் லார்பிற வாரே.
Verse 71
பிறவித்துயரற ஞானத்துள் நின்று,\nதுறவிச்சு டர்விளக்கம் தலைப்பெய்வார்,\nஅறவனை யாழிப்படை யந்தணனை,\nமறவியை யின்றி மனத்துவைப் பாரே.
Verse 72
வைப்பாம்மருந்தா மடியரை, வல்வினைத்\nதுப்பாம் புலனைந்தும் துஞ்சக கொடானவன்,\nஎப்பால் யவர்க்கும் நலத்தா லுயர்ந்துயர்ந்து,\nஅப்பால வனெங்க ளாயர் கொழுந்தே.
Verse 73
ஆயர் கொழுந்தா யவரால் புடையுண்ணும்,\nமாயப் பிரானையென் மாணிக்கச் சோதியை,\nதூய அமுதைப் பருகிப்பருகி, என்\nமாயப் பிறவி மயர்வறுத் தேனே.
Verse 74
மயர்வறவென்மனத்தே மன்னினான் றன்னை,\nஉயர்வினை யேதரும் ஒண்சுடர்க் கற்றையை,\nஅயர்வில் அமரர்கள் ஆதிக்கொழுந்தை, என்\nஇசைவினையென்சொல்லி யான்விடுவேனே.
Verse 75
விடுவேனோவென் விளக்கைஎன்னாவியை,\nநடுவேவந்துய்யக் கொள்கின்றநாதனை,\nதொடுவேசெய்திள ஆய்ச் சியர்க்கண்ணினுள்,\nவிடவேசெய்து விழிக்கும்பிரானையே.
Verse 76
பிரான்பெருநிலங் கீண்டவன், பின்னும்\nவிராய்மலர்த்துழாய் வேய்ந்தமுடியன்,\nமராமரமெய்த மாயவன், என்னுள்\nஇரானெனில்பின்னை யானொட்டுவேனோ.
Verse 77
யானொட்டியென்னுள் இருத்துவ மென்றிலன்,\nதானொட்டி வந்தென் தனிநெஞ்சை வஞ்சித்து,\nஊனொட்டி நின்றென் உயிரில் கலந்து, இயல்\nவானொட்டு மோஇனி யென்னை நெகிழ்க்கவே.
Verse 78
என்னை நெகிழ்க்கிலும் என்னுடை நன்னெஞ்சந்\nதன்னை, அகல்விக்கத் தானும்கில்லானினி,\nபின்னை நெடும்பணைத் தோள்மகிழ் பீடுடை,\nமுன்னை யமரர் முழுமுத லானே.
Verse 79
அமரர் முழுமுத லாகிய ஆதியை,\nஅமரர்க் கமுதீந்த ஆயர் கொழுந்தை,\nஅமர அழும்பத் துழாவியென் னாவி,\nஅமரர்த் தழுவிற் றினிய கலுமோ.
Verse 80
அகலில் அகலும் அணுகில் அணுகும்,\nபுகலு மரியன் பொருவல்ல னெம்மான்,\nநிகரில் அவன்புகழ் பாடி யிளைப்பிலம்,\nபகலு மிரவும் படிந்து குடைந்தே.
Verse 81
குடைந்துவண் டுண்ணும் துழாய்முடி யானை,\nஅடைந்த தென் குருகூர்ச்சட கோபன்,\nமிடைந்த சொல்தொடை யாயிரத்திப்பத்து,\nஉடைந்து நோய்களை யோடு விக்குமே.
Verse 82
ஓடும்புள்ளேறி, சூடும தண்டுழாய்,\nநீடு நின்றவை, ஆடும் அம்மானே.
Verse 83
அம்மானாய்ப் பின்னும், எம்மாண புமானான,\nவெம்மா வாய்கீண்ட, செம்மா கண்ணனே.
Verse 84
கண்ணா வானென்றும், மண்ணோர்விண்ணோர்க்கு,\nதண்ணார் வேங்கட, விண்ணோர் வெற்பனே.
Verse 85
வெற்பை யொன்றெடுத்து, ஒற்க மின்றியே,\nநிற்கும் அம்மான்சீர், கற்பன் வைகலே.
Verse 86
வைகலும் வெண்ணெய், கைகலந்துண்டான்,\nபொய்கலவாது, என் - மெய்கலந்தானே.
Verse 87
கலந்தென்னாவி, நலங்கொள் நாதன்,\nபுலங்கொள் மாணாய், நிலம்கொண் டானே.
Verse 88
கொண்டா னேழ்வி டை, உண்டா னேழ்வையம்,\nதண்டா மஞ்செய்து, என் எண்டா னானானே.
Verse 89
ஆனா னானாயன், மீனோ டேனமும்,\nதானா னானென்னில், தானா யசங்கே.
Verse 90
சங்கு சக்கரம், அங்கையில் கொண்டான்,\nஎங்கும் தானாய, நங்கள் நாதனே.
Verse 91
நாதன்ஞாலங்கொள் பாதன்,என்னம்மான்,\nஓதம் போல்கிளர், வேதநீரனே.
Verse 92
நீர்புரை வண்ணன், சீர்ச்சடகோபன்,\nநெர்த லாயிரத்து, ஓர்தலிவையே.
Verse 93
இவையும் அவையும உவையம் இவரும் அவரும் உவரும்\nஎவையும் யவரும் தன்னுள்ளே ஆகியுமாக்கியுங்காக்கும்\nஅவையுள் தனிமுதலெம்மான் கண்ணபிரானென்னமுதம்\nசுவையன் திருவின்மணாளன் என்னுடைச் சூழலுளானே.
Verse 94
சூழல் பலபல வல்லான் தொல்லையங் காலத் துலகை\nகேழலொன் றாகியி டந்த கேசவ னென்னுடை யம்மான்,\nவேழ மருப்பையொ சித்தான் விண்ணவர்க் கெண்ணல் அரியான்\nஆழ நெடுங்கடல் சேர்ந்தான் அவனென னருகலி லானே.
Verse 95
அருகலி லாய பெருஞ்சர் அமரர்கள் ஆதி முதல்வன்,\nகருகிய நீலநன் மேனி வண்ணன்செந தாமரைக் கண்ணன்,\nபொருசிறைப்புள்ளுவந்தேறும் பூமகளார்தனிக்கேள்வன்,\nஒருகதியின்சுவைதந்திட் டொழிவிலனென்னோடுடனே.
Verse 96
உடனமர்க்காதல்மகளிர் திருமகள்மண்மகள் ஆயர்\nமடமகள், என்றிவர்மூவர் ஆளும் உலகமும்மூன்றே,\nஉடனவையொக்கவிழுங்கி ஆலிலைச்சேர்ந்தவனெம்மான்,\nகடல்மலிமாயப்பெருமான் கண்ணனென் ஒக்கலை யானே.
Verse 97
ஒக்கலைவைத்துமுலைப்பால் உண்ணென்றுதந்திடவாங்கி,\nசெக்கஞ்செகவன்றவள்பால் உயிர்செகவுண்டபெருமான்,\nநக்கபிரானோடயனும் இந்திரனும்முதலாக,\nஒக்கவும்தோற்றிய ஈசன் மாயனென்னெஞ்சினுளானே.
Verse 98
மாயனென்னெஞ்சினுள்ளன் மற்றும்யவர்க்கும் அஃதே,\nகாயமும்சீவனும்தானே காலுமெரியும் அவனே,\nசேயன் அணியன்யவர்க்கும் சிந்தைக்கும் கோசர மல்லன்,\nதூயன் துயக் கன்மயக்கன் என்னுடைத்தோளிணையானே.
Verse 99
தோளிணைமேலும் நன்மார்பின்மேலும் சுடர்முடிமேலும்,\nதாளிணைமேலும்பு னைந்த தண்ணந்துழாயுடையம்மான்\nகேளிணையொன்றுமிலாதான் கிளரும்சுடரொளிமூர்த்தி,\nநாளணைந்தொன்றுமகலான் என்னுடைநாவினுளானே.
Verse 100
நாவினுள்நின்றுமலரும் ஞானக்கலைகளுக்கெல்லாம்,\nஆவியுமாக்கையும்தானே அழிப்போடளிப்பவன்தானே,\nபூவியல் நால்தடந்தோளன் பொருபடையாழிசங்கேந்தும்,\nகாவிநன்மேனிக்கமலக் கண்ணனென்கண்ணினுளானே.
Verse 101
கமலக்கண்ணனென்கண்ணினுள்ளான் காண்பன்அவன் கண்களாலே,\nஅமலங்க ளாக விழிக்கும் ஐம்புல னுமவன்மூர்த்தி,\nகமலத்தயன்நம்பிதன்னைக் கண்ணுதலானொடும்தோற்றி\nஅமலத்தெய்வத்தோடுலகம் ஆக்கியென்நெற்றியுளானே.
Verse 102
நெற்றியுள்நின்றென் னையாளும் நிரைமலர்ப்பாதங்கள்சூடி,\nகற்றைத்துழாய்முடிக்கோலக் கண்ணபிரானைத்தொழுவார்,\nஒற்றைப்பிறையணிந்தானும் நான்முகனும் இந்திரனும்,\nமற்றையமரருமெல்லாம் வந்தெனதுச்சியுளானே.
Verse 103
உச்சியுள்ளேநிற்கும்தேவ தேவற்குக்கண்ணபிராற்கு,\nஇச்சையுள்செல்லவுணர்த்தி வண்குருகூர்ச்சடகோபன்,\nஇச்சொன்ன ஆயிரத்துள் இவையுமோர்பத்தெம்பிராற்கு,\nநிச்சலும்விண்ணப்பம்செய்ய நீள்கழல்சென்னிபெருமே.
Verse 104
பொருமாநீள்படை யாழிசங்கத்தொடு,\nதிருமாநீள்கழல் ஏழுலகும்தொழ,\nஒருமாணிக்குற ளாகிநிமிர்ந்த, அக்\nகருமாணிக்கமென் கண்ணுளதாகுமே.
Verse 105
கண்ணுள்ளே நிற்கும் காதன்மையால்தொழில்,\nஎண்ணிலும்வரு மென்னினிவேண்டுவம்?\nமண்ணும்நீரு மெரியும் நல்வாயுவும்,\nவிண்ணுமாய்விரியு மெம்பிரானையே.
Verse 106
எம்பிரானையெந்தை தந்தைதந்தைக்கும்\nதம்பிரானை, தண்தாமரைக்கண்ணனை,\nகொம்பராவு நுண்ணேரிடைமார்வனை,\nஎம்பிரானைத் தொழாய்மடநெஞ்சமே.
Verse 107
நெஞ்சமேநல்லை நல்லை,உன்னைப்பெற்றால்\nஎன்செய்யோம், இனியென்னகுறைவினம்?\nமைந்தனை மலராள்மணவாளனை,\nதுஞ்சும்போதும் விடாதுதொடர்க்கண்டாய்.
Verse 108
கண்டாயேநெஞ்சே கருமங்கள்வாய்க்கின்று, ஓர்\nஎண்டானுமின்றியே வந்தியலுமாறு,\nஉண்டானையுலகேழு மோர்மூவடி\nகொண்டானை, கண்டு கொண்டனைநீயுமே.
Verse 109
நீயும்நானுமிந் நேர்நிற்கில், மேல்மற்றோர்,\nநோயும்சார்க்கொடான் நெஞ்சமே, சொன்னேன்,\nதாயும்தந்தையுமா யிவ்வுலகினில்,\nவாயுமீசன் மணிவண்ணனெந்தையே.
Verse 110
எந்தையேயென்று மெம்பெருமானென்றும்,\nசிந்தையுள்வைப்பன் சொல்லுவன்பாவியேன்,\nஎந்தையெம்பெருமானென்று வானவர்,\nசிந்தையுள் வைத்துச் சொல்லும்செல்வ னையே.
Verse 111
செல்வநாரண னென்றசொல்கேட்டலும்,\nமல்கும்கண்பனி நாடுவன்மாயமே,\nஅல்லும்நன்பகலு மிடைவீடின்றி,\nநல்கியென்னை விடான்நம்பி நம்பியே.
Verse 112
நம்பியைத் தென் குறுங்குடிநின்ற, அச்\nசெம்பொனேதிக ழும்திருமூர்த்தியை,\nஉம்பர்வானவ ராதியஞ்சோதியை,\nஎம்பிரானையென் சொல்லிமறப்பனோ.
Verse 113
மறப்பும்ஞானமும் நானொன் றுணர்ந்திலன்,\nமறக்குமென்று செந்தாமரைக்கண்ணொடு,\nமறப்பற என்னுள்ளே மன்னினான் றன்னை,\nமறப்பனோவினி யானென்மணியையே?
Verse 114
மணியை, வானவர் கண்ணனை, தன்னது ஓர்\nஅணியை, தென் குருகூர் கடகோபன் சொல்\nபணி செய் ஆயிரத்துள் இவை பத்துடன்\nதணிவிலர் கற்பரேல், கல்வி வாயுமே.
Verse 115
வாயுந்திரையுகளும் கானல்மடநாராய்,\nஆயும் அமருலகும்துஞ்சிலும் நீதுஞ்சாயால்,\nநோயும் பயலைமையும் மீதூரவெம்மேபோல்,\nநீயும்திருமாலால் நெஞ்சம்கோட் பட்டாயே.
Verse 116
கோட்பட்டசிந்தையாய்க் கூர்வாய அன்றிலே,\nசேட்பட்ட யாமங்கள் சேரா திரங்குதியால்,\nஆட்பட்ட எம்மேபோல் நீயும் அரவணையான்,\nதாட்பட்ட தண்டுழாய்த் தாமம்கா முற்றாயே.
Verse 117
காமுற்ற கையறவோ டெல்லே இராப்பகல்,\nநீமுற்றக் கண்டுயிலாய் நெஞ்சுருகி யேங்குதியால்\nதீமுற்றத் தென்னிலங்கை யூட்டினான் தாள்நயந்த,\nயாமுற்ற துற்றாயோ வாழி கனைகடலே
Verse 118
கடலும்மலையும் விசும்பும் துழாயெம்போல்,\nசுடர்க்கொளிராப்பகல் துஞ்சாயால்தண்வாடாய்,\nஅடல்கொள்படையாழி அம்மானைக்காண்பான்நீ,\nஉடலம்நோயுற்றாயோ வூழிதோறூழியே.
Verse 119
ஊழிதோறூழி யுலகுக்குநீர்க்கொண்டு,\nதோழியரும்யாமும்போல் நீராய்நெகிழ்கின்ற,\nவாழியவானமே, நீயும் மதுசூதன்,\nபாழிமையிற் பட்டவன்கட்பாசத்தால்நைவாயே
Verse 120
நைவாய எம்மேபோல் நாண்மதியே நீயிந்நாள்,\nமைவான் இருளகற்றாய் மாழாந்துதேம்புதியால்,\nஐவாய் அரவணைமே லாழிப்பெருமானார்,\nமெய்வாசகம் கேட்டுன் மெய்ந்நீர்மை தோற்றாயே.
Verse 121
தோற்றோம்மடநெஞ்ச மெம்பெருமான்நாரணற்கு\nஎம்ஆற்றாமைசொல்லி யழுவோமை நீநடுவே,\nவேற்றோர்வகையில் கொடிதாயெனையூழி,\nமாற்றாண்மைநிற்றியோ வாழிகனையிருளே.
Verse 122
இருளின்திணிவண்ணம் மாநீர்க்கழியே,போய்,\nமருளுற்றிராப்பகல் துஞ்சிலும் நீதுஞ்சாயால்,\nஉருளும்சகடம் உதைத்தபெருமானார்,\nஅருளின்பெருநசையா லாழாந்துநொந்தாயே.
Verse 123
நொந்தாராக்காதல்நோய் மெல்லாவியுள்ளுலர்த்த,\nநந்தாவிளக்கமே நீயுமளியத்தாய்,\nசெந்தாமரைத்தடங்கண் செங்கனிவாயெம்பெருமான்,\nஅந்தாமத்தண்டுழா யாசையால்வேவாயே.
Verse 124
வேவாராவேட்கைநோய் மெல்லாவியுள்ளுலர்த்த,\nஓவாதிராப்பக லுன்பாலேவீழ்த்தொழிந்தாய்,\nமாவாய்பிளந்து மருதிடைபோய்மண்ணளந்த,\nமூவா முதல்வா இனியெம்மைச்சோரேலே
Verse 125
சோராத வெப்பொருட்கு ஆதியாம் சோதிக்கே,\nஆராத காதல் குருகூர்ச் சடகோபன்,\nஓராயிரம் சொன்ன அவற்றுளி வைப்பத்தும்,\nசோரார் விடார்க்கண்டீர் வைகுந்தம் திண்ணெனவே.
Verse 126
திண்ணன்வீடு முதல்முழுதுமாய்,\nஎண்ணின்மீதிய னெம்பெருமான்,\nமண்ணும்விண்ணுமெல்லா முடனுண்ட,\nநங்கண்ணன் கண்ணல்ல தில்லையோர்க்கண்ணே.
Verse 127
ஏபாவம்,பரமே, யேழுலகும்,\nஈபாவஞ்செய் தருளாலளிப்பாரார்,\nமாபாவம்விட அரற்குப்பிச்சைபெய்,\nகோபாலகோளரி யேறன்றியே.
Verse 128
ஏறனைப்பூவனைப் பூமகள்தன்னை,\nவேறின்றிவிண்தொழத் தன்னுள்வைத்து,\nமேல்தன்னைமீதிட நிமிர்ந்துமண்கொண்ட,\nமால்தனில்மிக்குமோர் தேவுமுளதே.
Verse 129
தேவுமெப் பொருளும்படைக்க,\nபூவில்நான் முகனைப்படைத்த,\nதேவனெம் பெருமானுக்கல்லால்,\nபூவும்பூசனையும் தகுமே.
Verse 130
தகும்சீர்த் தன்தனிமுதலினுள்ளே,\nமிகும்தேவு மெப்பொருளும்படைக்க,\nதகும்கோலத் தாமரைக்கண்ணனெம்மான்,\nமிகும்சோதி மேலறிவார்யவரே.
Verse 131
யவரும்யாவையு மெல்லாப்பொருளும்,\nகவர்வின்றித் தன்னுளொடுங்கநின்ற,\nபவர்க்கொள்ஞான வெள்ளச்சுடர்மூர்த்தி,\nஅவரெம் ஆழியம் பள்ளியாரே.
Verse 132
பள்ளியாலிலை யேழுலகும்கொள்ளும்,\nவள்ளல் வல்வயிற்றுப்பெருமான்,\nஉள்ளுளா ரறிவார் அவன்றன்,\nகள்ளமாய மனக்கருத்தே.
Verse 133
கருத்தில்தேவு மெல்லாப்பொருளும்,\nவருத்தித்தமர்யப் பிரானையன்றி,\nஆரே திருத்தித்திண்ணிலை மூவுலகும்\nதம்முள் இருத்திக்காக்கு மியல்வினரே.
Verse 134
காக்குமியல்வினன் கண்ணபெருமான்,\nசேர்க்கைசெய்து தன்னுந்தியுள்ளே,\nவாய்த்ததிசைமுக னிந்திரன்வானவர்,\nஆக்கினான் தெய்வவுலகுகளே.
Verse 135
கள்வா எம்மையு மேழுலகும்,\nநின் னுள்ளேதோற்றிய இறைவா என்று,\nவெள்ளேறன்நான்முக னிந்திரன்வானவர்,\nபுள்ளூர்திகழல் பணிந்தேத்துவரே.
Verse 136
ஏத்தவேழுலகுங் கொண்டகோலக்\nகூத்தனை, குருகூர்ச்சடகோபன்சொல்,\nவாய்த்தவாயிரத்துள் ளிவைபத்துடன்,\nஏத்தவல்லவர்க் கில்லையோர்ஊனமே.
Verse 137
ஊனில்வாழுயிரே நல்லைபோஉன்னைப்பெற்று,\nவானுளார்பெருமான் மதுசூதனென்னம்மான்,\nதானும்யானுமெல்லாம் தன்னுள்ளேகலந்தொழிந்தோம்,\nதேனும்பாலும்நெய்யும் கன்னலுமமுதுமொத்தே
Verse 138
ஒத்தார்மிக்காரை இலையாயமாமாய,\nஒத்தாயெப்பொருட்கு முயிராய், என்னைப்பெற்ற\nஅத்தாயாய்த்தந்தையா யறியாதனவறிவித்த,\nஅத்தா, நீ செய்தன அடியேனறியேனே.
Verse 139
அறியாக்காலத்துள்ளே யடிமைக்கணன்புசெய்வித்து,\nஅறியாமாமாயத் தடியேனைவைத்தாயால்,\nஅறியாமைக்குறளாய் நிலம்மாவலிமூவடியென்று,\nஅறியாமைவஞ்சித்தா யெனதாவியுள்கலந்தே.
Verse 140
எனதாவியுள்கலந்தபெரு நல்லுதவிக்கைம்மாறு,\nஎனதாவிதந்தொழிந்தே னினிமீள்வதென்பதுண்டே,\nஎனதாவியாவியும்நீ பொழிலேழுமுண்டவெந்தாய்,\nஎனதாவியாரயானார தந்தநீகொண்டாக்கினையே.
Verse 141
இனியார்ஞானங்களா லெடுக்கலெழாதவெந்தாய்,\nகனிவார்வீட்டின்பமே யென்கடற்படாவமுதே,\nதனியேன்வாழ்முதலே, பொழிலேழுமேனமொன்றாய்,\nநுனியார்க்கோட்டில்வைத்தா யுன்பாதம்சேர்ந்தேனே.
Verse 142
சேர்ந்தார்தீவினைகட் கருநஞ்சைத்திண்மதியை,\nதீர்ந்தார்தம்மனத்துப் பிரியாதவருயிரை,\nசோர்ந்தேபோகல்கொடாச் சுடரை அரக்கியைமூக்\nகீர்ந்தாயை அடியேனடைந்தேன் முதல்முன்னமே.
Verse 143
முன்நல்யாழ்பயில் நூல் நரம்பின்முதிர்சுவையே,\nபன்னலார்பயிலும் பரனே,பவித்திரனே,\nகன்னலே,அமுதே, கார்முகிலே,என்கண்ணா,\nநின்னலாலிலேன்கா ணென்னைநீகுறிக்கொள்ளே.
Verse 144
குறிக்கொள்ஞானங்களா லெனையூழிசெய்தவமும்,\nகிறிக்கொண்டிப்பிறப்பே சிலநாளிலெய்தினன்யான்,\nஉறிக்கொண்டவெண்ணெய்பா லொளித்துண்ணுமம்மான்பின்,\nநெறிக்கொண்டநெஞ்சனாய்ப் பிறவித்துயர்க்கடிந்தே
Verse 145
கடிவார்தண்ணந்துழாய்க் கண்ணன்விண்ணவர்பெருமான்,\nபடிவான்மிறந்த பரமன்பவித் திரன்சீர்,\nசெடியார்நோய்கள்கெடப் படிந்துகுடைந்தாடி,\nஅடியேன்வாய்மடுத்துப் பருகிக்களித்தேனே.
Verse 146
களிப்பும்கவர்வுமற்றுப் பிறப்புப்பிணிமூப்பிறப்பற்று,\nஒளிக்கொண்ட சோதியுமா யுடன்கூடுவதென்றுகொலோ,\nதுளிக்கின்றவானிந்நிலம் சுடராழிசங்கேந்தி,\nஅளிக்கின்றமாயப்பிரானடியார்கள் குழாங்களையே.
Verse 147
குழாங்கொள்பேரரக்கன் குலம்வீயமுனிந்தவனை,\nகுழாங்கொள்தென்குருகூர்ச் சடகோபன்தெரிந்துரைத்த,\nகுழாங்கொளாயிரத்து ளிவைபத்துமுடன்பாடி,\nகுழாங்களாயடியீருடன் கூடிநின்றாடுமினே.
Verse 148
ஆடியாடி யகம்கரைந்து, இசை\nபாடிப்பாடிக் கண்ணீர்மல்கி, எங்கும்\nநாடிநாடி நரசிங்காவென்று,\nவாடிவாடு மிவ்வாணுதலெ.
Verse 149
வாணுதலிம்மடவரல், உம்மைக்\nகாணுமாசையுள் நைகின்றாள், விறல்\nவாணனாயிரந்தோள்துணித்தீர், உம்மைக்\nகாண நீரிரக்கமிலீரே.
Verse 150
இரக்கமனத்தோ டெரியணை,\nஅரக்குமெழுகு மொக்குமிவள்,\nஇரக்கமெழி ரிதற்கென்செய்கேன்,\nஅரக்கனிலங்கை செற்றீருக்கே.
Verse 151
இலங்கைசெற்றவனே! என்னும், பின்னும்\nவலங்கொள்புள்ளுயர்த்தாய்! என்னும், உள்ளம்\nமலங்கவெவ்வுயிர்க்கும், கண்ணீர்மிகக்\nகலங்கிக்கைதொழும் நின்றிவளே.
Verse 152
இவளிராப்பகல் வாய்வெரீஇ, தன\nகுவளையொண்கண்ணநீர் கொண்டாள், வண்டு\nதிவளும்தண்ணந் துழாய்கொடீர், என\nதவளவண்ணர் தகவுகளே.
Verse 153
தகவுடையவனே யென்னும், பின்னும்\nமிகவிரும்பும்பிரான் என்னும், என\nதகவுயிர்க்கமுதே, என்னும், உள்ளம்\nஉகவுருகி நின்றுள்ளுளே.
Verse 154
உள்ளுளாவி யுலர்ந்துலர்ந்து, என\nவள்ளலே கண்ணனேயென்னும், பின்னும்\nவெள்ளநீர்க்கிடந்தாய்,என்னும், என்\nகள்விதான்பட்ட வஞ்சனையே.
Verse 155
வஞ்சனே, என்னும் கைதொழும், தன்\nநெஞ்சம்வே வநெடிதுயிர்க்கும், விறல்\nகஞ்சனைவஞ்சனை செய்தீர், உம்மைத்\nதஞ்சமென்றிவள் பட்டனவே.
Verse 156
பட்டபோதெழு போதறியாள், விரை\nமட்டலர்தண்துழாய் என்னும், சுடர்\nவட்டவாய்நுதி நேமியீர், நும\nதிட்டமென்கொ லிவ்வேழைக்கே.
Verse 157
ஏழைபேதை யிராப்பகல், தன\nகேழிலொண்கண்ணநீர் கொண்டாள், கிளர்\nவாழ்வைவேவ விலங்கை செற்றீர், இவள்\nமாழைநோக்கொன்றும் வாட்டேன்மினே.
Verse 158
வாட்டமில்புகழ் வாமனனை, இசை\nகூட்டிவண்சடகோபன் சொல், அமை\nபாட்டோராயிரத்திப் பத்தால், அடி\nகுட்டலாகு மந்தாமமே.
Verse 159
அந்தாமத்தன்புசெய் தென்னாவிசேரம்மானுக்கு,\nஅந்தாமவாழ்முடிசங் காழிநூலாரமுள,\nசெந்தாமரைத்தடங்கண் செங்கனிவாய்செங்கமலம்,\nசெந்தாமரையடிக்கள் செம்பொன்திருவுடம்பே.
Verse 160
திருவுடம்புவான்சுடர் செந்தாமரைகண்கைகமலம்,\nதிருவிடமேமார்வ மயனிடமேகொப்பூழ்,\nஒருவிடமுமெந்தை பெருமாற்கரனேயோ,\nஒருவிடமொன்றின்றி யென்னுள்கலந்தானுக்கே
Verse 161
என்னுள் கலந்தவன் செங்கனிவாய் செங்கமலம்,\nமின்னும்சுடர்மலைக்குக் கண்பாதம்கைகமலம்,\nமன்னுமுழுவேழுலகும் வயிற்றினுள,\nதன்னுள்கலவாத்து தெப்பொருளும்தானிலையே
Verse 162
எப்பொருளும்தானாய் மரகதக்குன்றமொக்கும்,\nஅப்பொழுதைத்தாமரைப்பூக் கண்பாதம்கைகமலம்,\nஎப்பொழுதும்நாள்திங்க ளாண்டூழியூழிதொறும்,\nஅப்பொழுதைக்கப்பொழு தென்னாராவமுதமே.
Verse 163
ஆராவமுதமர் யல்லாவியுள்கலந்த,\nகாரார்க்கருமுகில்போ லென்னம்மான்கண்ணனுக்கு,\nநேராவாய்செம்பவளம் கண்பாதம்கைகமலம்,\nபேராரநீண்முடிநாண் பின்னுமிழைபலவே.
Verse 164
பலபலவேயாபரணம் பேரும்பலபலவே,\nபலபலவேசோதிவடிவு பண்பெண்ணில்,\nபலபலகண்டுண்டு கேட்டுற்றுமோந்தின்பம்,\nபலபலவேஞானமும் பாம்பணைமேலாற்கேயோ.
Verse 165
பாம்பணைமேல்பாற்கடலுள் பள்ளியமர்ந்ததுவும்,\nகாம்பணைதோள்பின்னைக்கா எறுடனேழ்செற்றதுவும்,\nதேம்பணையசோலை மராமரமேழெய்ததுவும்,\nபூம்பிணையதண்துழாய்ப் பொன்முடியம் போரேறே.
Verse 166
பொன்முடியம் போரேற்றை யெம்மானைநால்தடந்தோள்,\nதன்முடிவொன்றில்லாத தண்டுழாய்மாலையனை,\nஎன்முடிவுகாணாதே யென்னுள் கலந்தானை,\nசொல்முடிவுகாணேன்நான் சொல்லுவதென்சொல்லீரே.
Verse 167
சொல்லீரென்னம்மானை யென்னாவியாவிதனை,\nஎல்லையில்சீரென் கருமாணிக்கச்சுடரை,\nநல்லவமுதம்பெற்றற்கரிய வீடுமாய்,\nஅல்லிமலர்விரையொத் தாணல்லன்பெண்ணல்லனே.
Verse 168
ஆணல்லன்பெண்ணல்லன் அல்லா அலியுமல்லன்,\nகாணலுமாகான் உளனல்லன் இல்லையல்லன்,\nபேணுங்கால்பேணுமுருவாகும் அல்லனுமாம்,\nகோணை பெரிதுடைத்தெம்மானைக்கூறுதலே.
Verse 169
கூறுதலொன்றாராக் குடக்கூத்தவம்மானை,\nகூறுதலேமேவிக் குருகூர்ச்சடகோபன்,\nகூறினவந்தாதி யோராயிரத்துளிப்பத்தும்,\nகூறுதல்வல்லாருளரேல் கூடுவர்வைகுந்தமே.
Verse 170
வைகுந்தாமணிவண்ணனே, என்போல்லாத்திருக்குறளா,\nஎன்னுள்மன்னி, வைகும்வைகல்தோறும் அமுதாயவானேறே,\nசெய்குந்தாவருந்தீமையுன்னடியார்க்குத்தீர்த்தசுரர்க்குத்தீமைகள்\nசெய்குந்தா, உன்னைநான் பிடித்தேன் கொள்சிக்கெனவே.
Verse 171
சிக்கெனச்சிறுதோரிடமும் புறப்படாத்தன்னுள்ளே, உலகுகள்\nஒக்கவேவிழுங்கிப் புகுந்தான்புகுந்ததற்பின்,\nமிக்கஞானவெள்ளச்சுடர்விளக்காய்த் துளக்கற்றமுதமர்ய், எங்கும்\nபக்கநோக்கறியானென் பைந்தாமரைக்கண்ணனே.
Verse 172
தாமரைக்கண்ணனைவிண்ணோர் பரவும்தலைமகனை, துழாய்விரைப்\nபூமருவுகண்ணி யெம்பிரானைப்பொன்மலையை,\nநாமருவி நன்கேத்தியுள்ளி வணங்கி நாம்மகிழ்ந்தாட, நாவலர்\nபாமருவிநிற்கத்தந்த பான்மையேவள்ளலே.
Verse 173
வள்ளலே,மதுசூதனா, என்மரகதமலையே, உனைநினைந்து,\nதெள்கல்தந்த எந்தாய் உன்னையெங்ஙனம்விடுகேன்,\nவெள்ளமேபுரைநின்புகழ்குடைந்தாடிப்பாடிக்களித்துகந்துகந்து\nஉள்ளநோய்களேல்லாம் துரந்துய்ந்து போந்திருந்தே
Verse 174
உய்ந்து போந்தென்னுலப்பிலாத வெந்தீவினைகளை நாசஞ்செய்துஉன்\nதந்தமிலடிமையடைந்தேன் விடுவேனோ,\nஐந்துபைந்தலையாடரவணைமேவிப்பாற்கடல்யோகநித்திரை,\nசிந்தைசெய்தவெந்தாய் உன்னைச்சிந்தைசெய்துசெய்தே.
Verse 175
உன்னைச் சிந்தைசெய்துசெய்துன்நெடுமாமொழியிசைபாடியாடிஎன்\nமுன்னைத்தீவினைகள்முழுவேரரிந்தனன்யான்,\nஉன்னைச்சிந்தையினாலிகழ்ந்த இரணியன் அகல்மார்வங்கீண்ட,என்\nமுன்னைகோளரியே, முடியாததென்னெனக்கே?
Verse 176
முடியாத்தென்னெக்கேலினி முழுவேழுலகு முண்டான் உகந்துவந்து\nஅடியேனுள் புகுந்தான் அகல்வானு மல்லனினி \nசெடியார்நோய்களெல்லாந்துரந்து எமர்கீழ்மேலெழுபிறப்பும் \nவிடியாவெந்நகரத்து என்றும் சேர்ந்தல்மாறினரே.
Verse 177
மாறிமாறிப்பலபிறப்பும்பிறந் தடியையடைந்துள்ளந்தேறி\nஈறிலின்பத்திருவெள்ளம் யான்மூழ்கினன்,\nபாறிப்பாறியசுர ர்தம்பல்குழாங்கள்நீறெழ, பாய்பறவையொன்\nறேறிவீற்றிருந்தாய் உன்னை யென்னுள்நீக்கேலெந்தாய்
Verse 178
எந்தாய்தண்திருவேங்கடத்துள் நின்றாய்! இலங்கைசெற்றாய், மராமரம்\nபைந்தாளேழுருவவொரு வாளிகோத்தவில்லா!\nகொந்தார்தண்ணந்துழாயினாயமுதே! உன்னையென்னுள்ளே குழைத்தவெம்\nமைந்தா!வானேறே, இனியெங்குப்போகின்றதே?
Verse 179
போகின்றகாலங்கள்போயகாலங் கள்போகுகாலங்கள், தாய்தந்தையுயி\nராகின்றாய் உன்னைநானடைந்தேன்விடுவேனோ,\nபாகின்றதொல்புகழ்மூவுலகுக்கும் நாதனே. பரமா, தண்வேங்கட\nமேகின்றாய்தண்டுழாய் விரைநாறுகண்ணியனே.
Verse 180
கண்ணித்தண்ணந்துழாய்முடிக் கமலத்தடம்பெருங் கண்ணனை, புகழ்\nநண்ணித்தென்குருகூர்ச்சடகோபன்மாறன்சொன்ன,\nஎண்ணில்சோர்விலந்தாதியாயிரத் துள்ளிவையுமோர்பத்திசையொடும்,\nபண்ணில்பாடவல்லாரவர் கேசவன்தமரே.
Verse 181
கேசவன்தமர்க்கீழ்மே லெமரேழெழுபிறப்பும்,\nமாசதிரிதுபெற்று நம்முடைவாழ்வுவாய்க்கின்றவா,\nஈசனென்கருமாணிக்கமென் செங்கோலக்கண்ணன்\nவிண்ணோர் நாயகன், எம்பிரானெம்மான்நாராயணனாலே
Verse 182
நாரணன்முழுவேழுலகுக்கும் நாதன்வேதமயன்,\nகாரணம்கிரிசை கருமமிவைமுதல்வனெந்தை,\nசீரணங்கமரர்பிறர் பலரும்தொழுதேத்தநின்று,\nவாரணத்தைமருப்பொசித்த பிரானென்மாதவனே.
Verse 183
மாதவனென்றதேகொண் டென்னையினியிப்பால்பட்டது,\nயாதவங்களும்சேர்க்கொடேனென் றென்னுள்புகுந்திருந்து,\nதீதவம்கெடுக்குமமுதம் செந்தாமரைக்கட்குன்றம்,\nகோதவமிலென்கன்னற்கட்டி யெம்மானென்கோவிந்தனே
Verse 184
கோவிந்தன் குடக்கூத்தன் கோவலனென் றென்றேகுனித்து\nதேவும்தன்னையும் பாடியாடத்திருத்தி, என்னைக் கொண்டென்\nபாவந்தன்னையும் பாறக்கைத் தெமரேழெழு பிறப்பும்,\nமேவும்தன்மைய மாக்கினான் வல்லனெம் பிரான்விட்டுவே.
Verse 185
விட்டிலங்குசெஞ்சோதித் தாமரைபாதம்கைகள்கண்கள்,\nவிட்டிலங்குகருஞ்சுடர் மலையேதிருவுடம்பு,\nவிட்டிலங்குமதியம்சீர் சங்குசக்கரம்பரிதி,\nவிட்டிலங்குமுடியம்மான் மதுசூதனன்தனக்கே.
Verse 186
மதுசூதனையன்றிமற்றிலேனென் றெத்தாலும்கருமமின்றி,\nதுதிசூழ்ந்தபாடல்கள் பாடியாட நின்றூழியூழிதொறும்,\nஎதிர்சூழல்புக்கெனைத்தோர்பிறப்புமெனக்கேயருள்கள்செய்ய,\nவிதிசூழ்ந்ததாலெனக்கேலம்மான் திரிவிக்கிரமனையே.
Verse 187
திரிவிக்கிரமன்செந்தாமரைக்கணெம்மானேன்செங்கனிவாய்\nஉருவில்பொலிந்தவெள்ளைப்பளிங்குநிறத்தனனென்றென்று,\nஉள்ளிப் பரவிப்பணிந்து பல்லூழியூழிநின்பாதபங்கயமே,\nமருவித்தொழும்மனமேதந்தாய் வல்லைகாணென்வாமனனே
Verse 188
வாமனனென்மரகதவண்ணன் தாமரைக்கண்ணினன்\nகாமனைப்பயந்தாய், என்றென்றுன்கழல்பாடியேபணிந்து,\nதூமனத்தனனாய்ப் பிறவித்துழ திநீங்க, என்னைத்\nதீமனங்கெடுத்தா யுனக்கென்செய்கேனென்சிரீ தரனே.
Verse 189
சிரீஇதரன்செய்யதாமரைக்கண்ணனென்றென்றிராப்பகல்வாய்\nவெரீஇ, அலமந்துகண்கள்நீர்மல்கி வெவ்வுயிர்த்துயிர்த்து\nமரீஇயதீவினைமாளவின்பம்வளர வைகல்வைகல்\nஇரீஇ, உன்னையென்னுள்வைத்தனை யென்னிருடீகேசனே.
Verse 190
இருடீகேசனெம்பிரா னிலங்கையரக்கர்க்குலம்,\nமுருடுதீர்த்தபிரானெம்மா னமரர்பெம்மானென்றென்று,\nதெருடியாகில்நெஞ்சே,வணங்கு திண்ணமறியறிந்து,\nமருடியேலும்விடேல்கண்டாய் நம்பிபற்பநாபனையே
Verse 191
பற்பநாபனுயர்வறவுயரும் பெருந்திறலோன்,\nஎற்பரனென்னையாக்கிக் ¦ காண்டெனக்கேதன்னைத்தந்த\nகற்பகம், என்னமுதம் கார்முகில்போலும்வேங்கடநல்\nவெற்பன், விசும்போர்பிரா னெந்தைதாமோதரனே.
Verse 192
தாமோதரனைத்தனிமுதல்வனை ஞாலமுண்டவனை,\nஆமோதரமறிய வொருவ ர்க்கென்றெதொழுமவர்கள்,\nதாமோதரனுருவாகிய சிவற்கும்திசைமுகற்கும்,\nஆமோதரமறிய எம்மானையென்னாழிவண்ணனையே.
Verse 193
வண்ணமாமணிச்சோதியை யமரர்தலைமகனை,\nகண்ணனைநெடுமாலைத் தென்குருகூர்ச்சடகோபன்,\nபண்ணியதமிழ்மாலை யாயிரத்துள்ளிவைபன்னிரண்டும்,\nபண்ணில்பன்னிரு நாமப் பாட்டண்ணல்தாளணைவிக்குமே.
Verse 194
அணைவதரவணைமேல் பூம்பாவையாகம்\nபுணர்வது, இருவரவர்முதலும் தானே,\nஇணைவனாமெப்பொருட்கும் வீடுமுதலாம்,\nபுணைவன் பிறவிக்கடல்நீந்துவார்க்கே.
Verse 195
நீந்தும்துயர்ப்பிறவி யுட்படமற்றெவ்வெவையும்,\nநீந்தும் துயரில்லா வீடுமுதலாம்,\nபூந்தண்புனல்பொய்கை யானைஇடர்க்கடிந்த,\nபூந்தண்துழாயென் தனிநாயகன் புணர்ப்பே.
Verse 196
புணர்க்குமயனா மழிக்குமரனாம்,\nபுணர்த்ததன்னுந்தியோ டாகத்துமன்னி,\nபுணர்ததிருவாகித் தன்மார்வில்தான்சேர்,\nபுணர்ப்பன்பெரும்புணர்ப் பெங்கும்புலனே.
Verse 197
புலனைந்துமேயும் பொறியைந்துநீக்கி,\nநலமந்தமில்லதோர் நாடுபுகுவீர்,\nஅலமந்துவீய வசுரரைச்செற்றான்,\nபலமுந்துசீரில் படிமினோவாதே.
Verse 198
ஒவாத்துயர்ப்பிறவி யுட்படமற்றெவ்வெவையும்,\nமூவாத்தனிமுதலாய் மூவுலகும்காவலோன்,\nமாவாகியாமையாய் மீனாகிமானிடமாம்,\nதேவாதிதேவபெருமா னென்தீர்த்தனே.
Verse 199
தீர்த்தனுலகளந்த சேவடிமேல்பூந்தாமம்,\nசேர்த்தியவையே சிவன்முடிமேல்தான்கண்டு,\nபார்த்தன்தெளிந்தொழிந்த பைந்துழாயான்பெருமை,\nபேர்த்துமொருவரால் பேசக்கிடந்ததே?
Verse 200
கிடந்திருந்துநின்றளந்து கேழலாய்க்கீழ்புக்\nகிடந்திடும், தன்னுள்கரக்குமுமிழும்,\nதடம்பெருந்தோளாரத்தழுவும் பாரென்னும்\nமடந்தையை, மால்செய்கின்றமாலார்க்காண்பாரே.
Verse 201
காண்பாரா ரெம்மீசன் கண்ணனை யென்காணுமாறு,\nஊண்பேசி லெல்லா வுலகுமோர் துற்றாற்றா,\nசேண்பால வீடோ வுயிரோமற்றெப் பொருட்கும்,\nஏண்பாலும் சோரான் பரந்துளனா மெங்குமே.
Verse 202
எங்கும்முளன்கண்ண னென்றமகனைக்காய்ந்து,\nஇங்கில்லையால் என் றிரணியன் தூண்புடைப்ப,\nஅங்கப்பொழுதே அவன்வீயத்தோன்றிய, என்\nசிங்கப்பிரான்பெருமை யாராயும்சீர்மைத்தே.
Verse 203
சீர்மை கொள்வீடு சுவர்க்க நரகீறா,\nஈர்மை கொள்தேவர் நடுவாமற்றெப் பொருட்கும்,\nவேர்முதலாய் வித்தாய்ப் பரந்துதனிநின்ற,\nகார்முகில் போல்வண்ணனென் கண்ணனை நான்கண்டேனே.
Verse 204
கண்டலங்கள் செய்ய கருமேனி யம்மானை,\nவண்ட லம்பும்சோலை வழுதி வளநாடன்,\nபண்டலையில் சொன்னதமி ழாயிரத்திப்பத்தும் வல்லார்,\nவிண்டலை யில்வீற்றிருந் தாள்வரெம் மாவீடே
Verse 205
எம்மாவீட்டுத் திறமும்செப்பம், நின்\nசெம்மாபாதபற்புத் தலைசேர்த்தொல்லை,\nகைம்மாதுன்பம் கடிந்தபிரானே,\nஅம்மாவடியென் வேண்டுவதீதே.
Verse 206
இதேயானுன்னைக் கொள்வதெஞ்ஞான்றும், என்\nமைதோய்சோதி மணிவண்ணவெந்தாய்,\nஎய்தாநின்கழல் யானெய்த, ஞானக்\nகைதா காலக்கழிவுசெய்யேலே.
Verse 207
செய்யேல் தீவினையென் றருள் செய்யும்,என்\nகையார்ச்சக்கரக் கண்ணபிரானே,\nஐயார்க்கண்டமடைக்கிலும் நின்கழல்\nஎய்யாதேத்த, அருள்செய்யெனக்கே.
Verse 208
எனக்கே யாட்செய் யெக்காலத்து மென்று,என்\nமனக்கே வந்திடை வீடின்றி மன்னி,\nதனக்கே யாக வெனைக் கொள்ளுமீதே,\nஎனக்கே கண்ணனை யான்கொள் சிறப்பே.
Verse 209
சிறப்பில்வீடு சுவர்க்கம் நரகம்,\nஇறப்பிலெய்துக வெய்தற்க, யானும்\nபிறப்பில் பல்பிறவிப் பெருமானை,\nமறப்பொன்றின்றி யென்றும் மகிழ்வேனே.
Verse 210
மகிழ்கொள் தெய்வ முலோகம் அலோகம்,\nமகிழ்கொள்சோதி மலர்ந்தவம்மானே,\nமகிழ்கொள்சிந்தை சொல்செய்கைகொண்டு, என்றும்\nமகிழ்வுற்றுன்னை வணங்கவாராயே.
Verse 211
வாராயுன் திருப்பாதமலர்க்கீழ்,\nபேராதேயான் வந்தடையும்படி\nதாராதாய், உன்னையென்னுள்வைப்பிலென்றும்\nஆராதாய், எனக்கென்றுமெக்காலே.
Verse 212
எக்காலத்தெந்தையா யென்னுள்மன்னில், மற்\nறெக்காலத்திலும் யாதொன்றும்வேண்டேன்,\nமிக்கார்வேத விமலர்விழுங்கும், என்\nஅக்காரக்கனியே, உன்னையானே.
Verse 213
யானேயென்னை அறியகிலாதே,\nயானேயென்தனதே யென்றிருந்தேன்,\nயானேநீயென் னுடைமையும்நீயே,\nவானேயேத்து மெம்வானவரேறே.
Verse 214
ஏறேலேழும்வென் றேர்க்கொளிலங்கையை,\nநீறேசெய்த நெடுஞ்சுடர்ச்சோதி,\nதேறேலென்னையுன் பொன்னடிச்சேர்த்தொல்லை,\nவேறேபோக எஞ்ஞான்றும்விடலே.
Verse 215
விடலில் சக்கரத் தண்ணலை,மேவல்\nவிடலில் வண்குருகூர்ச் சடகோபன்சொல்,\nகெடலி லாயிரத்துள் ளிவைபத்தும்,\nகெடலில் வீடுசெய்யும் கிளர்வார்க்கே.
Verse 216
கிளரொளியிளமை கெடுவதன்முன்னம்,\nவளரொளிமாயோன் மருவியகோயில்,\nவளரிளம்பொழில்சூழ் மாலிருஞ்சோலை,\nதளர்விலராகில் சார்வதுசதிரே.
Verse 217
சதிரிளமடவார் தாழ்ச்சியை மதியாது,\nஅதிர்க்குரல்சங்கத் தழகர்தம்கோயில்,\nமதிதவழ்குடுமி மாலிருஞ்சோலை,\nபதியதுவேத்தி யெழுவதுபயனே.
Verse 218
பயனல்லசெய்து பயனில்லை நெஞ்சே \nபுயல்மழைவண்ணர் புரிந்துறைகோயில் \nமயல்மிகுபொழில்சூழ் மாலிருஞ்சோலை \nஅயன்மலையடைவது அதுகருமமே.
Verse 219
கரும வன் பாசம் கழித்து உர்ன்று உய்யவே,\nபெருமலை எடுத்தான் பீடு உறை கோயில்\nவரு மழை தவழும் மாலிருஞ்சோலைத்\nதிருமலை அதுவே, அடைவது திறமே.
Verse 220
திறமுடைவலத்தால் தீவினைபெருக்காது \nஅறமுயலாழிப் படையவன் கோயில் \nமறுவில் வண்சுனைசூழ் மாலிருஞ்சோலை \nபுறமலைசாரப் போவதுகிறியே.
Verse 221
கிறியெனநினைமின் கீழ்மைசெய்யாதே \nஉறியமர்வெண்ணெய் உண்டவன்கோயில் \nமறியொடுபிணைசேர் மாலிருஞ்சோலை \nநெறிபடவதுவே நினைவதுநலமே.
Verse 222
நலமெனநினைமின் நரகழுந்தாதே \nநிலமுனமிடத்தான் நீடுறைகோயில் \nமலமறுமதிசேர் மாலிருஞ்சோலை \nவலமுறையெய்தி மருவுதல்வலமே.
Verse 223
வலஞ்செய்து, வைகல் வலம் கழியாதே,\nவலஞ்செய்யும் ஆய – மாயவன் கோயில்,\nவலஞ்செய்யும் வானோர் மாலிருஞ்சோலை,\nவலஞ்செய்து நாளும் மருவுதல் வழக்கே.
Verse 224
வழக்கென நினைமின் வல்வினை மூழ்காது\nஅழக்கொடி அட்டான் அமர்பெரும் கோயில்\nமழக்களிற்றினம் சேர் மாலிரும் சோலை\nதொழக் கருதுவது துணிவது சூதே.
Verse 225
சூது என்று களவும் சூதும் செய்யாதே,\nவேதம் முன் விரித்தான் விரும்பிய கோயில்,\nமாது உறு மயில் சேர் மாலிருஞ் சோலைப்\nபோது அவிழ் மலையே, புகுவது பொருளே.
Verse 226
பொருள் என்று இவ் உலகம் படைத்தவன் புகழ்மேல்\nமருள் இல் வண் குருகூர் வண் சடகோபன்\nதெருள் கொள்ளச் சொன்ன ஓர் ஆயிரத்துள் இப் பத்து\nஅருளுடையவன் – தாள் அணைவிக்கும் முடித்தே.
Verse 227
முடிச்சோதி யாயுனது முகச்சோதி மலந்ததுவோ,\nஅடிச்சோதி நீநின்ற தாமரையாய் அலர்ந்ததுவோ,\nபடிச்சோதி யாடையொடும் பல்கலனாய், நின்பைம்பொன்\nகடிச்சோதி கலந்ததுவோ? திருமாலே கட்டுரையே.
Verse 228
கட்டுரைக்கில் தாமரைநின் கண்பாதம் கையொவ்வா,\nகட்டுரைத்த நன் பொன்னுள் திருமேனி ஒளி ஒவ்வாது,\nஒட்டுரைத்திவ் வுலகுன்னைப் புகழ்வெல்லாம் பெரும்பாலும்,\nபட்டுரையாய்ப் புற்கென்றே காட்டுமால் பரஞ்சோதீ.
Verse 229
பரஞ்சோதி. நீபரமாய் நின்னிகழ்ந்து பின், மற்றோர்\nபரஞ்சோதி யின்மையில் படியோவி நிகழ்கின்ற,\nபரஞ்சோதி நின்னுள்ளே படருலகம் படைத்த,எம்\nபரஞ்சோதி கோவிந்தா! பண்புரைக்க மாட்டேனே.
Verse 230
மாட்டாதே யாகிலுமிம் மலர்தலைமா ஞாலம்,\nநின் மாட்டாய மலர்ப்புரையும் திருவுருவும் மனம்வைக்க\nமாட்டாத பலசமய மதிகொடுத்தாய், மலர்த்துழாய்\nமாட்டேநீ மனம்வைத்தாய் மாஞாலம் வருந்தாதே.
Verse 231
வருந்தாத அருந்தவத்த மலர்க்கதிரின் சுடருடம்பாய்,\nவருந்தாத ஞானமாய் வரம்பின்றி முழுதியன்றாய்,\nவருங்காலம் நிகழ்காலம் கழிகால மாய்,உலகை\nஒருங்காக அளிப்பாய்சீர் எங்குலக்க ஓதுவனே?
Verse 232
ஓதுவார் ஓத்தெல்லாம் எவ்வுலகத் தெவ்வெவையும்,\nசாதுவாய் நின்புகழின் தகையல்லால் பிறிதில்லை,\nபோதுவாழ் புனந்துழாய் முடியினாய், பூவின்மேல்\nமாதுவாழ் மார்ப்பினாய். என்சொல்லியான் வாழ்த்துவனே?
Verse 233
வாழ்த்துவார் பலராக நின்னுள்ளே நான்முகனை,\nமூழ்த்தநீ ருலகெல்லாம் படையென்று முதல்படைத்தாய்\nகேழ்த்தசீ ரரன்முதலாக் கிளர்தெய்வ மாய்க்கிளர்ந்து,\nசூழ்த்தமரர் துதித்தாலுன் தொல்புகழ்மா சூணாதே?
Verse 234
மாசூணாச் சுடருடம்பாய் மலராது குவியாது,\nமாசூணா ஞானமாய் முழுதுமாய் முழுதியன்றாய்,\nமாசூணா வான்கோலத் தமரர்க்கோன் வழிபட்டால்,\nமாசூணா உன்பாத மலர்சோதி மழுங்காதே?
Verse 235
மழுங்காத வைந்நுதிய சக்கரநல் வலத்தையாய்,\nதொழுங்காதல் களிறளிப்பான் புள்ளூர்ந்து தோன்றினையே,\nமழுங்காத ஞானமே படையாக, மலருலகில்\nதொழும்பாயார்க் களித்தாலுன் சுடர்ச்சோதி மறையாதே?
Verse 236
மறையாய நால்வேதத் துள்நின்ற மலர்சுடரே,\nமுறையாலிவ் வுலகெல்லாம் படைத்திடந்துண் டுமிழ்ந்தளந்தாய்,\nபிறையேறு சடையானும் நான்முகனும் இந்திரனும்\nஇறையாதல் அறிந்தேத்த வீற்றிருத்தல் இதுவியப்பே?
Verse 237
வியப்பாய வியப்பில்லா மெய்ஞ்ஞான வேதியனை,\nசயப்புகழார் பலர்வாழும் தடங்குருகூர் சடகோபன்,\nதுயக்கின்றித் தொழுதுரைத்த ஆயிரத்து ளிப்பத்தும்,\nஉயக்கொண்டு பிறப்பறுக்கும் ஒலிமுந்நீர் ஞாலத்தே.
Verse 238
முந்நீர் ஞாலம் படைத்தவெம் முகில்வண்ணனே,\nஅந்நாள்நீ தந்த ஆக்கையின் வழியுழல்வேன்,\nவெந்நாள்நோய் வீய வி னைகளைவேர் அறப்பாய்ந்து,\nஎந்நாள்யான் உன்னை இனிவந்து கூடுவனே?
Verse 239
வன்மா வையம் அளந்த எம் வாமனா,நின்\nபன்மா மாயப் பல்பிறவியில் படிகின்றயான்,\nதொன்மா வல்வினைத் தொடர்களை முதலரிந்து,\nநின்மாதாள் சேர்ந்து நிற்பதெஞ் ஞான்றுகொலோ?
Verse 240
கொல்லா மாக்கோல் கொலைசெய்து பாரதப்போர்,\nஎல்லாச் சேனையும் இருநிலத் தவித்தவெந்தாய்,\nபொல்லா ஆக்கையின் புணர்வினை அறுக்கலறா,\nசொல்லாய்யா னுன்னைச் சார்வதோர் சூழ்ச்சியே.
Verse 241
சூழ்ச்சி ஞானச் சுடரொளி யாகி,என்றும்\nஏழ்ச்சிக்கே டின்றி எங்கணும் நிறைந்தவெந்தாய்,\nதாழ்ச்சிமற் றெங்கும் தவிர்ந்துநின் தாளிணக்கீழ்\nவாழ்ச்சி,யான் சேரும் வகையருளாய் வந்தே!
Verse 242
வந்தாய்போ லேவந்தும் என்மனத் தினைநீ,\nசிந்தாமல் செய்யாய் இதுவே யிதுவாகில்,\nகொந்தார்க்கா யாவின் கொழுமலர்த் திருநிறத்த\nஎந்தாய்,யானுன்னை எங்குவந் தணுகிற்பனே?
Verse 243
கிற்பன் கில்லேன் என்றிலன் முனநாளால்,\nஅற்பசா ரங்கள் அவைசுவைத் தகன்றொழிந்தேன்,\nபற்பல் லாயிரம் உயிர்செய்த பரமா,நின்\nநற்பொற்சோ தித்தாள் நணுகுவ தெஞ்ஞான்றே?
Verse 244
எஞ்ஞான்று நாமிருந் திருந்திரங்கி நெஞ்சே\nமெய்ஞ்ஞான மின்றி வினையியல் பிறப்பழுந்தி,\nஎஞ்ஞான்றும் எங்கும் ஒழிவற நிறைந்துநின்ற,\nமெய்ஞ்ஞானச் சோதிக் கண்ணனை மேவுதுமே?
Verse 245
மேவு துன்ப வினைகளை விடுத்துமிலேன்,\nஓவுதலின்றி உன்கழல் வணங்கிற்றிலேன்,\nபாவுதொல் சீர்க்கண்ணா. என் பரஞ்சுடரே,\nகூவுகின்றேன் காண்பான் எங்கொய்தக் கூவுவனே?
Verse 246
கூவிக்கூவிக் கொடுவினைத் தூற்றுள் நின்று\nபாவியேன் பலகாலம் வழிதிகைத் தலமர்க்கின்றேன்,\nமேவியன் றாநிரை காத்தவ னுலகமெல்லாம்,\nதாவிய அம்மானை எங்கினித் தலைப்பெய்வனே?
Verse 247
தலைப்பெய் காலம் நமன்தமர் பாசம்விட்டால்,\nஅலைப்பூ ணுண்ணுமவ் வல்லலெல் லாமகல,\nகலைப்பல் ஞானத்தென் கண்ணனைக் கண்டுகொண்டு,\nநிலைப்பெற்றென் னெஞ்சம் பெற்றது நீடுயிரே.
Verse 248
உயிர்க ளெல்லா உலகமு முடையவனை,\nகுயில்கொள் சோலைத் தென்குருகூர்ச் சடகோபன்,\nசெயிரில்சொல் இசைமாலை ஆயிரத்து ளிப்பத்தும்,\nஉயிரின்மே லாக்கை ஊனிடை ஒழிவிக்குமே.
Verse 249
ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி ,\nவழுவிலா அடிமை செய்ய வேண்டும்நாம்,\nதெழிகு ரல்அரு வித்திரு வேங்கடத்து,\nஎழில்கொள் சோதி எந்தைதந்தை தந்தைக்கே.
Verse 250
எந்தை தந்தை தந்தை தந்தைக்கும்\nமுந்தை, வானவர் வானவர் கோனொடும்,\nசிந்துபூ மகிழும் திருவேங் கடத்து,\nஅந்த மில்புகழ்க் காரெழில் அண்ணலே.
Verse 251
அண்ணல் மாயன் அணிகொள்செந் தாமரைக்\nகண்ணன், செங்கனி வாய்க்கரு மாணிக்கம்,\nதெண்ணி றைச்சுனை நீர்த்திரு வேங்கடத்து,\nஎண்ணில் தொல்புகழ் வானவ ரீசனே.
Verse 252
ஈசன் வானவர்க் கென்பனென் றால்,அது\nதேச மோதிரு வேங்கடத் தானுக்கு?,\nநீச னென் நிறை வொன்றுமி லேன்,என்கண்\nபாசம் வைத்த பரஞ்சுடர்ச் சோதிக்கே.
Verse 253
சோதி யாகியெல் லாவுல கும்தொழும்,\nஆதி மூர்த்தியென் றாலள வகுமோ?,\nவேதி யர்முழு வேதத் தமுதத்தை,\nதீதில் சீர்த்திரு வேங்கடத் தானையே.
Verse 254
வேங்க டங்கள்மெய்ம் மேல்வினை முற்றவும்,\nதாங்கள் தங்கட்கு நல்லன வேசெய்வார்,\nவேங்க டத்துறை வார்க்கு நமவென்ன\nலாங்க டமை,அதுசுமந் தார்க்கட்கே.
Verse 255
சுமந்து மாமலர் நீர்சுடர் தீபம்கொண்டு,\nஅமர்ந்து வானவர் வானவர் கோனொடும்,\nநமன்றெ ழும்திரு வேங்கடம் நங்கட்கு,\nசமன்கொள் வீடு தரும்தடங் குன்றமே.
Verse 256
குன்றம் ஏந்திக் குளிர்மழை காத்தவன்,\nஅன்று ஞாலம் அளந்த பிரான்,பரன்\nசென்று சேர்திரு வேங்கட மாமலை,\nஒன்று மேதொழ நம்வினை ஓயுமே.
Verse 257
ஓயு மூப்புப் பிறப்பிறப் புப்பிணி,\nவீயு மாறுசெய் வான்திரு வேங்கடத்\nதாயன், நாண்மல ராமடித் தாமரை,\nவாயுள் ளும்மனத் துள்ளும்வைப் பார்கட்கே.
Verse 258
வைத்த நாள்வரை எல்லை குறுகிச்சென்று,\nஎய்த்தி ளைப்பதன் முன்னம் அடைமினோ,\nபைத்த பாம்பணை யான்திரு வேங்கடம்,\nமொய்த்த சோலைமொய் பூந்தடம் தாழ்வரே.
Verse 259
தாள்ப ரப்பிமண் வதாவிய ஈசனை,\nநீள்பொ ழில்குரு கூர்ச்சட கோபன்சொல்,\nகேழில் ஆயிரத் திப்பத்தும் வல்லவர்,\nவாழ்வர் வாழ்வெய்தி ஞாலம் புகழவே.
Verse 260
புகழுநல்லொருவனென்கோ பொருவில்சீர்ப்பூமியென்கோ \nதிகழுந்தண்பரவையென்கோ தீயென்கோவாயுவென்கோ\nநிகழுமாகசமென்கோ நீள்சுடரிரண்டு மென்கோ\nஇகழ்விலிவ்வனைத்துமென்கே கண்ணனைக்கூவுமாறே.
Verse 261
கூவுமா றறிய மாட்டேன் குன்றங்கள் அனைத்தும் என்கோ,\nமேவுசீர் மாரி என்கோ விளங்குதா ரகைகள் என்கோ,\nநாவியல் கலைகள் என்கோ ஞானநல் லாவி என்கோ,\nபாவுசீர்க் கண்ணன் எம்மான் பங்கயக் கண்ண னையே.
Verse 262
பங்கையக் கண்ணன் என்கோ பவளச்செவ் வாயன் என்கோ,\nஅங்கதிர் அடியன் என்கோ அஞ்சன வண்ணன் என்கோ,\nசெங்கதிர் முடியன் என்கோ திருமறு மார்வன் என்கோ,\nசங்குசக் கரத்தன் என்கோ சாதிமா ணிக்கத் தையே.
Verse 263
சாதிமா ணிக்கம் என்கோ சவிகோள்பொன் முத்தம் என்கோ,\nசாதிநல் வயிரம் என்கோ, தவிவில்சீர் விளக்கம் என்கோ,\nஆதியஞ் சோதி என்கோ ஆதியம் புருடன் என்கோ,\nஆதுமில் காலத் தெந்தை அச்சுதன் அமல னையே.
Verse 264
அச்சுதன் அமலன் என்கோ, அடியவர் வினைகெடுக்கும்,\nநச்சுமா மருந்தம் என்கோ நலங்கடல் அமுதம் என்கோ,\nஅச்சுவைக் கட்டி என்கோ அறுசுவை அடிசில் என்கோ,\nநெய்ச்சுவைத் தேறல் என்கோ கனியென்கோ பாலென் கேனோ.
Verse 265
பாலென்கோ நான்குவேதப்பயனென்கோ சமயநீதி\nநூலென்கோ நுடங்குகேள்வியிசை யென்கோ இவற்றுள்நல்ல\nமேலென்கோ வினையின்மிக்க பயனென்கோ சண்ணனென்கோ\nமாலென்கோமாயனென்கோ வானவராதியையே.
Verse 266
வானவராதியென்கோ வானவர்தெய்வமென்கோ\nவானவர்போகமென்கோ வானவர்முற்றுமென்கோ\nஊனமில்செல்வமென்கோ ஊனமில்சுவர்க்கமென்கோ\nஊனமில்மோக்கமென்கோ ஒளிமணிவண்ணனையே
Verse 267
ஒளிமணி வண்ணன் என்கோ. ஒருவனென் றேத்த நின்ற\nநளிர்மதிச் சடையன் என்கோ. நான்முகக் கடவுள் என்கோ,\nஅளிமகிழ்ந் துலகமெல்லாம் படைத்தவை ஏத்த நின்ற,\nகளிமலர்த் துளவ னெம்மான் கண்ணனை மாய னையே.
Verse 268
கண்ணனை மாயன் றன்னைக் கடல்கடைந் தமுதங் கொண்ட,\nஅண்ணலை அச்சு தன்னை அனந்தனை அனந்தன் தன்மேல்,\nநண்ணிநன் குறைகின் றானை ஞாலமுண் டுமிழ்ந்த மாலை,\nஎண்ணுமா றறிய மாட்டேன், யாவையும் யவரும் தானே.
Verse 269
யாவையும் யவரும் தானாய் அவரவர் சமயந் தோறும்,\nதோய்விலன் புல னைந் துக்கும் சொலப்படான் உணர்வின் மூர்த்தி,\nஆவிசேர் உயிரின் உள்ளால் அதுமோர் பற்றி லாத,\nபாவனை அதனைக் கூடில் அவனையும் கூட லாமே.
Verse 270
கூடிவண் டறையும் தண்தார்க்கொண்டல்போல் வண்ணன் றன்னை\nமாடலர் பொழில்கு ருகூர் வண்சட கோபன் சொன்ன,\nபாடலோர் ஆயி ரத்துள் இவையுமோர் பத்தும் வல்லார்,\nவீடில போக மெய்தி விரும்புவர் அமரர் மொய்த்தே
Verse 271
மொய்ம்மாம் பூம்பொழில் பொய்கை முதலைச் சிறைப்பட்டு நின்ற,\nகைம்மா வுக்கருள் செய்த கார்முகில் போல்வண்ணன் கண்ணன்,\nஎம்மா னைச்சொல்லிப் பாடி எழுந்தும் பறந்தும்துள் ளாதார்,\nதம்மால் கருமமென் சொல்லீர் தண்கடல் வட்டத்துள் ளீரே.
Verse 272
தண்கடல் வட்டத்துள் ளாரைத் தமக்கிரை யாத்தடிந் துண்ணும்,\nதிண்கழற் காலசு ரர்க்குத் தீங்கிழைக் கும்திரு மாலை,\nபண்கள் தலைக்கொள்ளப் பாடிப் பறந்தும் குனித்துழ லாதார்,\nமண்கொள் உலகில் பிறப்பார் வல்வி னை மோத மலைந்தே.
Verse 273
மலையை யெடுத்துக்கல் மாரி காத்துப் பசுநிரை தன்னை,\nதொலைவு தவிர்த்த பிரானைச் சொல்லிச்சொல் லிநிறெப் போதும்,\nதலையினோ டாதனம் தட்டத் தடுகுட்ட மாய்ப்பற வ ¡தார்,\nஅலைகொள் நரகத் தழுந்திக் கிடந்துழைக் கின்ற வம்பரே.
Verse 274
வம்பவிழ் கோதை பொருட்டா மால்விடை யேழும் அடர்த்த,\nசெம்பவ ளத்திரள் வாயன் சிரீதரன் தொல்புகழ் பாடி,\nகும்பிடு நட்டமிட் டாடிக் கோகுகட் டுண்டுழ லாதார்,\nதம்பிறப் பால்பய னென்னே சாது சனங்க ளிடையே?
Verse 275
சாது சனத்தை நலியும் கஞ்சனைச் சாதிப்ப தற்கு,\nஆதியஞ் சோதி யுருவை அங்குவைத் திங்குப் பிறந்த,\nவேத முதல்வ னைப் பாடி வீதிகள் தோறும்துள் ளாதார்,\nஓதி யுணர்ந்தவர் முன்னா என்சவிப் பார்ம னிசரே?
Verse 276
மனிசரும் மற்றும் முற்றுமாய் மாயப் பிறவி பிறந்த,\nதனியன் பிறப்பிலி தன்னைத் தடங்கடல் சேர்ந்த பிரானை,\nகனியைக் கரும்பினின் சாற்றைக் கட்டியைத் தேனை அமுதை,\nமுனிவின்றி ஏத்திக் குனிப்பார் முழுதுணர் நீர்மையி னாரே.
Verse 277
நீர்மை நூற்றுவர் வீய ஐவர்க் கருள்¦ சய்து நின்று,\nபார்மல்கு சேனை அவித்த பரஞ்சுட ரைநினைந் தாடி.\nநீர்மல்கு கண்ணின ராகி நெஞ்சம் குழைந்துநை யாதே,\nஊர்மல்கி மோடு பருப்பார் உத்தமர்க்கட் கென்செய் வாரே?
Verse 278
வார்ப்புனல் அந்தண் ணருவி வடதிரு வேங்கடத் தெந்தை,\nபேர்ப்பல சொல்லிப் பிதற்றிப் பித்தரென் றேபிறர் கூற,\nஊர்ப்பல புக்கும் புகாதும் உலோகர் சிரிக்கநின் றாடி,\nஆர்வம் பெருகிக் குனிப்பார் அமரர் தொழப்படு வாரே.
Verse 279
அமரர் தொழப்படு வானை அனைத்துல குக்கும் பிரானை,\nஅமரர் மனத்தினுள் யோகு புணர்ந்தவன் தன்னோடொன் றாக,\nஅமரத் துணியவல் லார்கள் ஒழியஅல் லாதவ ரெல்லாம்,\nஅமர நினைந்தெழுந் தாடி அலற்றுவ தேகரு மமே.
Verse 280
கருமமும் கரும பலனும் ஆகிய காரணன் தன்னை,\nதிருமணி வண்ணனைச் செங்கண் மாலினைத் தேவ பிரானை,\nஒருமை மனத்தினுள் வைத்து உள்ளங் குழைந்தெழுந் தாடி,\nபெருமையும் நாணும் தவிர்ந்து பிதற்றுமின் பேதமை தீர்ந்தே.
Verse 281
தீர்ந்த அடியவர் தம்மைத்திருத் திப் பணிகொள்ள வல்ல,\nஆர்ந்த புகழச் சுதனை அமரர் பிரானையெம் மானை,\nவாய்ந்த வளவயல் சூழ்தண் வளங்குரு கூர்ச்சடகோபன்,\nநேர்ந்தவோ ராயிரத் திப்பத் தருவினை நீறு செய்யுமே.
Verse 282
செய்ய தாமரைக் கண்ண னாயுல கேழு முண்ட அவன்கண்டீர்,\nவையம் வானம் மனிசர் தெய்வம் மற்றும் மற்றும் மற்றும் முற்றுமாய்,\nசெய்ய சூழ்சு டர் ஞான மாய்வெளிப் பட்டி வைபடைத் தான்பின்னும்,\nமொய்கொள் சோதியொ டாயி னானொரு மூவ ராகிய மூர்த்தியே.
Verse 283
மூவ ராகிய மூர்த்தி யைமுதல் மூவர்க் குமுதல் வன்றன்னை,\nசாவ முள்ளன நீக்கு வ ¡னைத் தடங்க டல்கிடந் தான்தன்னைத்,\nதேவ தேவனைத் தென்னி லங்கை எரியெ ழச்செற்ற வில்லியை,\nபாவ நாசனைப் பங்க யத்தடங் கண்ண னைப்பர வுமினோ.
Verse 284
பரவி வானவ ரேத்த நின்ற பரம னைப்பரஞ் சோதியை,\nகுரவை கோத்த குழக னைமணி வண்ண னைக்குடக் கூத்தனை,\nஅரவ மேறி யலைக டலம ரும்து யில்கொண்ட அண்ணலை,\nஇரவும் நன்பக லும்வி டாதென்றும் ஏத்து தல்மனம் வைம்மினோ.
Verse 285
வைம்மின் நும்மனத் தென்று யானுரைக் கின்ற மாயவன் சீர்மையை\nஎம்ம னோர்க ளுரைப்ப தென்? அது நிற்க நாfடொறும்,\nவானவர் தம்மை யாளும் அவனும் நான்முக னும்ச டைமுடி அண்ணலும்,\nசெம்மை யாலவன் பாத பங்கயம் சிந்தித் தேத்தி திரிவரே.
Verse 286
திரியும் கற்றொ டகல்வி சும்பு திணிந்த மண்கிடந் தகடல்,\nஎரியும் தீயொ டிருசு டர்தெய்வம், மற்றும் மற்றும் முற்றுமாய்,\nகரிய மேனியன் செய்ய தாமரைக் கண்ணன் கண்ணன்விண் ணோரிறை,\nசுரியும் பல்கருங் குஞ்சி யெங்கள் சுடர்மு டியண்ணல் தோற்றமே.
Verse 287
தோற்றக் கேடவை யில்ல வனுடை யான வனொரு மூர்த்தியாய்,\nசீற்றத் தோடருள் பெற்ற வனடிக் கீழ்ப்பு கநின்ற செங்கண்மால்,\nநாற்றத் தோற்றச் சுவையொ லிஊ றல் ஆகி நின்ற,எம் வானவர்\nஏற்றை யேயன்றி மற்றொ ருவரை யானி லேனெழு மைக்குமே.
Verse 288
எழுமைக் குமென தாவிக் கின்னமு தத்தி னைஎன தாருயிர்,\nகெழுமி யகதிர்ச் சோதி யைமணி வண்ண னைக்குடக் கூத்தனை,\nவிழுமி யவம ரர்மு நிவர்வி ழுங்கும் கன்னல் கனியினை,\nதொழுமின் தூயம னத்த ராயிறை யும்நில் லாதுய ரங்களே.
Verse 289
துயர மேதரு துன்ப இன்ப வினைக ளாய்அ வை அல்லனாய்,\nஉயர நின்றதோர் சோதி யாயுல கேழு முண்டுமிழ்ந் தான்தன்னை,\nஅயர வாங்கு நமன்த மர்க்கரு நஞ்சி னையச்சு தன்தன்னை,\nதயர தற்கும கனறன் னையன்றி மற்றி லேன்தஞ்ச மாகவே.
Verse 290
தஞ்ச மாகிய தந்தை தாயொடு தானு மாயவை அல்லனாய்,\nஎஞ்ச லிலம ரர்க்கு லமுதல் மூவர் தம்முள்ளு மாதியை,\nஅஞ்சி நீருல கத்துள் ளீர்கள் அவனி வனென்று கூழேன்மின்,\nநெஞ்சி னால்நினைப் பான்ய வனவன் ஆகும் நீள்கடல் வண்ணனே.
Verse 291
கடல்வண் ணன்கண்ணன் விண்ண வர்க்கரு மாணிக் கமென தாருயிர்\nபடவ ரவின ணைக்கி டந்த பரஞ்சு டர்ப்பண்டு நூற்றுவர்,\nஅடவ ரும்படை மங்க ஐவர்க்கட் காகி வெஞ்சமத்து, அன்றுதேர்\nகடவி யபெரு மான்க னைகழல் காண்ப தென்றுகொல் கண்களே?
Verse 292
கண்கள் காண்டற் கரிய னாய்க்கருத் துக்கு நன்றுமெ ளியனாய்,\nமண்கொள் ஞாலத்து யிர்க்கெல் லாமருள் செய்யும் வானவ ரீசனை,\nபண்கொள் சோலை வழுதி நாடன் குருகைக் கோன்சட கோபன்சொல்,\nபண்கொள் ஆயிரத் திப்பத் தால்பத்த ராகக் கூடும் பயலுமினே.
Verse 293
பயிலும் சுடரொளி மூர்த்தியைப் பங்கயக் கண்ணனை,\nபயில இனியநம் பாற்கடல் சேர்ந்த பரமனை,\nபயிலும் திருவுடை யார்யவ ரேலும் அவர்க்கண்டீர்,\nபயிலும் பிறப்பிடை தோற்றெம்மை யாளும் பரமரே.
Verse 294
ஆளும் பரமனைக் கண்ணனை ஆழிப் பிரான்றன்னை,\nதோளுமோர் நான்குடைத் தூமணி வண்ணனெம் மான்தன்னை\nதாளும் தடக்கையும் கூப்பிப் பணியும் அவர்க்கண்டீர்,\nநாளும் பிறப்பிடை தோறு எம்மை யாளுடை நாதரே.
Verse 295
நாதனை ஞாலமும் வானமும் ஏத்தும் நறுந்துழாய்ப்போ\nதனை, பொன்னெடுஞ் சக்கரத் தெந்தை பிரான்தன்னை\nபாதம் பணியவல் லாரைப் பணியும் அவர்க்கண்டீர்,\nஓதும் பிறப்பி டை தோறெம்மை யாளுடை யார்களே.
Verse 296
உடையார்ந்த வாடையன் கண்டிகை யன்உ டை நாணினன்பு\nடையார்ப்பொன் னூலினன் பொன்முடி யன்மற்றும்பல் கலன்,\nநடையா வுடைத்திரு நாரணன் தொண்டர்தொண் டர்க்கண்டீர்,\nஇடையார் பிறப்பி டைதோறெமக் கெம்பெரு மக்களே.
Verse 297
பெருமக்க ளுள்ளவர் தம்பெரு மானை, அமரர்கட்க\nருமை யொழிய அன்றாரமு தூட்டிய அப்பனை,\nபெருமை பிதற்றவல் லாரைப் பிதற்றும் அவர்க்கண்டீர்,\nவருமையு மிம்மையும் நம்மை யளிக்கும் பிராக்களே.
Verse 298
அளிக்கும் பரமனை கண்ணனை ஆழிப் பிரான்தன்னை,\nதுளிக்கும் நறுங்கண்ணித் தூமணி வண்ணனெம் மான்தன்னை,\nஒளிக்கொண்ட சோதியை உள்ளத்துக் கொள்ளும் அவர்க்கண்டீர்,\nசலிப்பின்றி யாண்டெம்மைச் சன்மசன் மாந்தரங் காப்பரே.
Verse 299
சன்மசன் மாந்தரங் காத்தடி யார்களைக் கொண்டுபோய்,\nதன்மை பொறுத்தித்தன் தாளிணைக் கீழ்க்கொள்ளும்அப்பனை,\nதொன்மை பிதற்றவல் லாறைப் பிதற்றும் அவர்கண்டீர்,\nநம்மை பெறுத்தெம்மை நாளுய்யக் கொள்கின்ற நம்பரே.
Verse 300
நம்பனை ஞாலம் படைத்தவ னைதிரு மார்பனை,\nஉம்பர் உலகினில் யார்க்கும் உணர்வரி யான்தன்னைக்,\nகும்பிநரகர்கள் ஏத்துவ ரேலும் அவர்கண்டீர்,\nஎம்பல் பிறப்பிடை தோறெம் தொழுகுலம் தாங்களே.
Verse 301
குவலந்தாங்கு சாதிகள் நாலிலும் கீழிழிந்து, எத்தனை\nநலந்தா னிலாதசண் டாளசண் டாளர்க ளாகிலும்,\nவலந்தாங்கு சக்கரத் தண்ணல் மணிவண்ணற் காளென்றுள்\nகலந்தார், அடியார் தம்மடி யாரெம் மடிகளே.
Verse 302
அடியார்ந்த வையமுண் டாலிலை யன்ன சஞ்செய்யும்,\nபடியாது மில்குழ விப்படி யெந்தைபி ரான்றனக்கு,\nஅடியார் அடியார் தமடி யார்அ டி யார்தமக்\nகடியார் அடியார் தம்,அடியாரடி யோங்களே.
Verse 303
அடியோங்கு நூற்றவர் வீயஅ ன் றைவருக் கருள்செய்த\nநெடியோனை, தென்குரு கூர்ச்சட கோபன்குற் றேவல்கள்,\nஅடியார்ந்த ஆயிரத் துள்ளிவை பத்தவன் தொண்டர்மேல்\nமுடிவு,ஆரக் கற்கில் சன்மம்செய் யாமை முடியுமே.
Verse 304
முடியானே மூவுலகும் தொழுதேத் தும்சீர்\nஅடியானே, ஆழ்கடலைக் கடைந்தாய் புள்ளூர்\nகொடியானே, கொண்டல்வண் ணா அண்டத் தும்பரில்\nநெடியானே, என்று கிடக்குமென் நெஞ்சமே.
Verse 305
நெஞ்சமே. நீள்நக ராக இருந்தவென்\nதஞ்சனே, தண்ணிலங் கைக்கிறை யைச்செற்ற\nநஞ்சனே, ஞாலங்கொள் வான்குற ளாகிய வஞ்சனே,\nஎன்னுமெப் போதுமென் வாசகமே.
Verse 306
வாசகமே ஏத்த அருள்செய்யும் வானவர்தம்\nநாயகனே, நாளிளந் திங்களைக் கோள்விடுத்து,\nவேயகம் பால்வெண்ணெய் தொடுவுண்ட ஆனாயர்\nதாயவனே, என்று தடவுமென் கைகளே.
Verse 307
கைகளால் ஆரத் தொழுது தொழுதுன்னை,\nவைகலும் மாத்திரைப் போதுமோர் வீடின்றி,\nபைகொள் பாம்பேறி உறைபர னே,உன்னை\nமெய்கொள்ளக் காண விரும்புமென் கண்களே.
Verse 308
கண்களால் காண வருங்கொலைன் றாசையால்,\nமண்கொண்ட வாமனன் ஏற மகிழ்ந்துசெல்,\nபண்கொண்ட புள்ளின் சிறகொலி பாவித்து,\nதிண்கொள்ள ஓர்க்கும் கிடந்தென் செவிகளே.
Verse 309
செவிகளால் ஆரநின் கீர்த்திக் கனியென்னும்\nகவிகளே காலப்பண் தேனுறைப் பத்துற்று,\nபுவியின்மேல் பொன்னெடுஞ் சக்கரத் துன் னையே\nஅவிவின்றி யாதரிக் கும்என தாவியே.
Verse 310
ஆவியே, ஆரமுதே என்னை ஆளுடை,\nதூவியம் புள்ளுடை யாய்! சுடர் நேமியாய்!\nபாவியேன் நெஞ்சம் புலம்பப் பல காலும்,\nகூவியும் காணப் பெறேனுன கோலமே.
Verse 311
கோலமே தாமரைக் கண்ணதோர் அஞ்சன\nநீலமே,நின்றென தாவியை யீர்கின்ற சீலமே,\nசென்றுசொல் லாதன முன்நிலாம் காலமே,\nஉன்னையெந் நாள்கண்டு கொள்வனே?
Verse 312
கொள்வன்நான் மாவலி மூவடி தா என்ற\nகள்வனே, கஞ்சனை வஞ்சித்து வாணனை\nஉள்வன்மை தீர,ஓராயிரம் தோள்துணித்த\nபுள்வல்லாய், உன்னையெஞ் ஞான்று பொருந்துவனே?
Verse 313
பொருந்திய மாமரு தின்னிடை போயவெம்\nபெருந்தகாய், உன்கழல் காணிய பேதுற்று,\nவருந்திநான் வாசக மாலை¦ காண்டு உன்னையே\nஇருந்திருந் தெத்தனை காலம் புலம்புவனே.
Verse 314
புலம்புசீர்ப் பூமி அளந்த பெருமானை,\nநலங்கொள்சீர் நன்குரு கூர்ச்சட கோபன்,சொல்\nவலங்கொண்ட ஆயிரத் துள்ளிவை யுமோர்ப்பத்து,\nஇலங்குவான் யாவரும் ஏறுவர் சொன்னாலே.
Verse 315
சொன்னால் விரோதமிது ஆகிலும் சொல்லுவேன் கேண்மினோ,\nஎன்னாவில் இன்கவி யானொருவ ர்க்கும் கொடுக்கிலேன்,\nதென்னா தெனாவென்று வண்டு முரல்திரு வேங்கடத்து,\nஎன்னானை என்னப்பன் எம்பெருமானுள னாகவே.
Verse 316
உளனாக வேயெண்ணித் தன்னையொன்றாகத்தன்\nசெல்வத்தை வளனா மதிக்குமிம் மானிடத்தைக்கவி பாடியென்,\nகுளனார் கழனிசூழ் கண்ணன் குறுங்குடி மெய்ம்மையே,\nஉளனாய எந்தையை எந்தைபெம்மானை ஒழியவே?
Verse 317
ஒழிவென்றில் லாதபல் ஊழிதோறூழி நிலாவ,போம்\nவழியைத் தரும்நங்கள் வானவர் ஈசனை நிற் கப்போய்,\nகழிய மிகநல்ல வான்கவி கொண்டு புலவீர்காள்,\nஇழியக் கருதியோர் மானிடம் பாடலென் னாவதே.
Verse 318
என்னாவ தெத்தெனை நாளைக்குப் போதும் புலவீர்காள்,\nமன்னா மனிசரைப் பாடிப் படைக்கும் பெரும்பொருள்?,\nமின்னார் மணிமுடி விண்ணவர் தாதையைப் பாடினால்,\nதன்னாக வேகொண்டு சன்மம்செய்யாமையும் கொள்ளுமே.
Verse 319
கொள்ளும் பயனில்லைக் குப்பை கிளர்த்தன்ன செல்வத்தை,\nவள்ளல் புகழ்ந்துநும் வாய்மை இழக்கும் புலவீ ர்காள்,\nகொள்ளக் குறைவிலன் வேண்டிற்றெல் லாம்தரும் கோதில்,என்\nவள்ளல் மணிவண்ணன் தன்னைக் கவி சொல்ல வம்மினோ.
Verse 320
வம்மின்புலவீர்! நும் மெய்வருத்திக்கை செய் துய்ம்மினோ,\nஇம்மன் னுலகில் செல்வரிப்போதில்லை நோக்கினோம்,\nநும்மின் கவிகொண்டு நும்நுமிட்டாதெய்வம் ஏத்தினால்,\nசெம்மின் சுடர்முடி என்திருமாலுக்குச் சேருமே.
Verse 321
சேரும் கொடைபுகழ் எல்லையிலானை,ஓராயிரம்\nபேரும் உடைய பிரானையல்லால் மற்று யான்கிலேன்,\nமாரியனையகை மால்வரையொக்கும்திண் தோளென்று ,\nபாரிலோர் பற்றையைப் பச்சைப்பசும்பொய்கள் வேயவே.
Verse 322
வேயின் மலிபுரை தோளிபின்னைக்கு மணாளனை,\nஆய பெரும்புகழ் எல்லையிலாதன பாடிப்போய்,\nகாயம் கழித்துஅ வன் தாளிணைக்கீழ்ப்புகுங் காதலன்,\nமாய மனிசரை என்சொல்லவல்லேனென் வய்கொண்டே?
Verse 323
வாய்கொண்டு மானிடம் பாடவந்தகவி யேனல்லேன்,\nஆய்கொண்ட சீர்வள்ளல் ஆழிப்பிரானெனக் கேயுளன்,\nசாய்கொண்ட இம்மையும் சாதித்து வானவர் நாட்டையும்,\nநீகண்டு கொள் என்று வீடும் தரும்நின்று நின்றே.
Verse 324
நின்றுநின் றுபல நாளுய்க்கும் இவ்வுடல் நீங்கிப்போய்,\nசென்றுசென் றாகிலும் கண்டுசன் மங்கழிப் பானெண்ணி,\nஒன்றியொன் றியுல கம்படைத் தாங்கவி யாயினேற்கு,\nஎன்றுமென் றுமினி மற்றொரு வர்க்கவி யேற்குமே?
Verse 325
ஏற்கும் பெரும்புகழ் வானவர் ஈசன்கண் ணன்தனக்கு,\nஏற்கும் பெரும்புகழ் வண்குரு கூர்ச்சட கோபன் சொல்,\nஏற்கும் பெரும்புகழ் ஆயிரத் துள்ளிவையும் ஓர்ப்பத்து\nஏற்கும் பெரும்புகழ் சொல்லவல்லார்க்கில்லை சன்மமே.
Verse 326
சன்மம் பலபல செய்து வெளிப்பட்டுச் சங்கொடு சக்கரம்வில்,\nஒண்மை யுடைய வுலக்கையொள் வாள்தண்டு கொண்டுபுள் ளூர்ந்து,உலகில்\nவன்மை யுடைய அரக்கர் அசுரரை மாளப் படைபொருத,\nநன்மை யுடையவன் சீர்ப்பர வப்பெற்ற நானோர் குறைவிலனே.
Verse 327
குறைவில் தடங்கடல் கோளர வேறித்தன் கோலச்செந் தாமரைக்கண்,\nஉறைபவன் போலவோர் யோகு புணர்ந்த ஒளிமணி வண்ணன் கண்ணன்,\nகறையணி மூக்குடைப் புள்ளிக் கடாவி அசுரரைக் காய்ந்தவம்மான்,\nநிறைபுகழ் ஏத்தியும் பாடியும் ஆடியும் யானொரு முட்டிலனே.
Verse 328
முட்டில்பல் போகத் தொருதனி நாயகன் மூவுல குக்குரிய,\nகட்டியைத் தேனை அமுதைநன் பாலைக் கனியைக் கரும்புதன்னை,\nமட்டவிழ் தண்ணந்து ழாய்முடி யானை வணங்கி அவன்திறத்துப்\nபட்டபின்னை,இறை யாகிலும் யானென் மனத்துப் பரிவிலனே.
Verse 329
பரிவின்றி வாணனைக் காத்தும் என் றன்று படையொடும் வந்தெதிர்ந்த திரிபுரம்\nசெற்றவ னும்மக னும்பின்னும் அங்கியும் போர்தொலைய,\nபொருசிறைப் புள்ளைக் கடாவிய மாயனை ஆயனைப் பொற்சக்கரத்\nதரியி னை, அச்சுத னைப்பற்றி யானிறை யேனும் இடரிலனே.
Verse 330
இடரின்றி யேயொரு நாளொரு போழ்திலெல் லாவுல கும்கழிய,\nபடர்ப்புகழ்ப் பார்த்தனும் வைதிக னுமுடன் ஏறத்திண் தேர்க்கடவி,\nசுடரொளி யாய்நின்ற தன்னுடைச் சோதியில் வைதிகன் பிள்ளைகளை,\nஉடலொடும் கொண்டு கொடுத்தவ னைப்பற்றி ஒன்றும் துயரிலனே.
Verse 331
துயரில் சுடரொளி தன்னுடைச் சோதி நின்ற வண்ணம் நிற் கவே,\nதுயரில் மலியும் மனிசர் பிறவியில் தோன்றிக்கண் காணவந்து,\nதுயரங்கள் செய்து நன் தெய்வ நிலையுலகில் புக வுய்க்குமம்மான்,\nதுயரமில் சீர்க்கண்ணன் மாயன் புகழ்துற்ற யானோர்து ன்பமிலனே.
Verse 332
துன்பமும் இன்பமு மாகிய செய்வினை யாயுல கங்களுமாய்,\nஇன்பமில் வெந்நர காகி இனியநல் வான் சுவர்க் கங்களுமாய்,\nமன்பல் லுயிர்களு மாகிப் பலபல மாய மயக்குகளால்,\nஇன்புரும் இவ்விளை யாட்டுடை யானைப்பெற் றேதுமல் லலிலனே.
Verse 333
அல்லலில் இன்பம் அளவிறந் தெங்கும் அழகமர் சூழொளியன்,\nஅல்லி மலர்மகள் போக மயக்குகள் ஆகியும் நிற்குமம்மான்,\nஎல்லையில் ஞானத்தன் ஞானமஃதேகொண்டெல் லாக்கரு மங்களும்செய்,\nஎல்லையில் மாயனைக் கண்ணனைத் தாள்பற்றி யானோர்துக் கமிலனே.
Verse 334
துக்கமில் ஞானச் சுடரொளி மூர்த்தி துழாயலங் கல்பெருமான்,\nமிக்கபன் மாயங்க ளால்விகிர் தம்செய்து வேண்டும் உருவுகொண்டு,\nநக்கபி ரானோ டயன்முத லாகஎல் லாரும் எவையும்,தன்னுள்\nஒக்கவொ டுங்கவி ழுங்கவல் லானைப்பெற் றொன்றும் தளர்விலனே.
Verse 335
தளர்வின்றி யேயென்றும் எங்கும் பரந்த தனிமுதல் ஞானமொன்றாய்,\nஅளவுடை யைம்புலன் களறி யாவகை யாலரு வாகிநிற்கும்,\nவளரொளி ஈசனை மூர்த்தியைப் பூதங்கள் ஐந்தை யிருசுடரை,\nகிளரொளி மாயனைக் கண்ணனைத் தாள்பற்றி யானென்றும் கேடிலனே.
Verse 336
கேடில்வி ழுப்புகழ்க் கேசவ னைக்குரு கூர்ச்சட கோபன் சொன்ன,\nபாடலோ ராயிரத் துளிவை பத்தும் பயிற்றவல் லார்கட்கு,அவன்\nநாடும் நகரமும் நன்குடன் காண நலனிடை யூர்தி பண்ணி,\nவீடும்பெறுத் தித்தன் மூவுல குக்கும் தருமொரு நாயகமே.
Verse 337
ஒருநா யகமாய் ஓட,வுலகுட னாண்டவர்,\nகருநாய் கவர்ந்த காலர் சிதைகிய பானையர்,\nபெருநாடு காண இம்மையிலேபிச்சை தாம்கொள்வர்,\nதிருநாரணன்தாள் காலம் பெறச்சிந்தித் துய்ம்மினோ.
Verse 338
உய்ம்மின் திறைகொணர்ந் தென்றுலகாண்டவர், இம்மையே\nதம்மின் சுவைமட வாரைப்பிறர் கொள்ளத் தாம்விட்டு\nவெம்மி னொளிவெயில் கானகம்போய்க்குமை தின்பர்கள்,\nசெம்மின் முடித்திரு மாலைவிரைந்தடி சேர்மினோ.
Verse 339
அடிசேர் முடியின ராகியரசர்கள் தாம்தொழ,\nஇடிசேர் முரசங்கள் முற்றத்தியம்ப இருந்தவர்,\nபொடிசேர் துகளாய்ப் போவர்களாதலின் நொக்கென\nகடிசேர் துழாய்முடிக் கண்ணன் கழல்கள் நினைமினோ.
Verse 340
நினைப்பான் புகில்கடல் எக்கலின் நுண்மண லிற்பலர்,\nஎனைத்தோ ருகங்களும் இவ்வுல காண்டு கழிந்தவர்,\nமனைப்பால் மருங்கற மாய்தலல்லால்மற்றுக் கண்டிலம்,\nபனைத்தாள் மதகளி றட்டவன் பாதம் பணிமினோ.
Verse 341
பணிமின் திருவருள் என்னும்அஞ் சீதப் பைம்பூம்பள்ளி,\nஅணிமென் குழலார் இன்பக்கலவி அமுதுண்டார்,\nதுணிமுன்பு நாலப்பல் லேழையர் தாமிழிப் பச்செல்வர்,\nமணிமின்னு மேனிநம் மாயவன் பேர்சொல்லி வாழ்மினோ.
Verse 342
வாழ்ந்தார்கள் வாழ்ந்தது மாமழை மொக்குளின் மாய்ந்துமாய்ந்து,\nஆழ்ந்தாரென் றல்லால் அன்று முதலின் றறுதியா,\nவாழ்ந்தார்கள் வாழ்ந்தே நிற்பரென் பதில்லை நிற்குறில்,\nஆழ்ந்தார் கடல்பள்ளி அண்ணல் அடியவர் ஆமினோ.
Verse 343
ஆமின் சுவையவை ஆறொடடிசிலுண் டார்ந்தபின்,\nதூமென் மொழிமட வாரிரக்கப்பின்னும் துற்றுவார்,\nஈமின் எமக்கொரு துற் றென்றிடறுவ ராதலின்,\nகோமின் துழாய்முடி ஆதியஞ்சோதி குணங்களே.
Verse 344
குணங்கொள் நிறைபுகழ் மன்னர்க்கொடைக்கடன் பூண்டிருந்து,\nஇணங்கி யுலகுட னாக்கிலும் ஆங்கவ னையில்லார்,\nமணங்கொண்ட கோபத்து மன்னியு மீள்வர்கள் மீள்வில்லை,\nபணங்கொள் அரவணை யான்திரு நாமம் படிமினோ.
Verse 345
படிமன்னு பல்கலன் பற்றோடறுத்துஐம் புலன்வென்று,\nசெடிமன்னு காயம்செற்றார்களு மாங்கவ னையில்லார்,\nகுடிமன்னு மின்சுவர்க்க மெய்தியுமீள்வர்கள் மீள்வில்லை,\nகொடிமன்னு புள்ளுடை அண்ணல் கழல்கள் குறுகுமினோ.
Verse 346
குறுக மிகவுணர் வத்தொடு நோக்கியெல் லாம்விட்ட,\nஇறுக லிறப்பென்னும் ஞானிக்கும் அப்பய னில்லையேல்,\nசிறுக நினைவதோர் பாசமுண்டாம்பின்னும் வீடில்லை,\nமறுபகலில் ஈசனைப் பற்றி விடாவிடில் வீடஃதே
Verse 347
அஃதே உய்யப் புகுமாறென்று கண்ணன் கழல்கள்மேல்,\nகொய்பூம் பொழில்சூழ் குருகூர்ச்சடகோபன் குற்றேவல்,\nசெய்கோலத் தாயிரம் சீர்த்தொடைப்பாடல் இவைபத்தும்,\nஅஃகாமற் கற்பவர் ஆழ்துயர் போயுய்யற் பாலரே.
Verse 348
பாலனா யேழுல குண்டு பரிவின்றி,\nஆலிலை யன்னவ சஞ்செய்யும் அண்ணலார்,\nதாளிணை மேலணி தண்ணந் துழாயென்றே\nமாலுமால், வல்வினை யேன்மட வல்லியே.
Verse 349
வல்லிசேர் நுண்ணிடை யாய்ச்சியர் தம்மொடும்,\nகொல்லைமை செய்து குரவை பிணைந்தவர்,\nநல்லடி மேலணி நாறு துழாயென்றே\nசொல்லுமால், சூழ்வினை யாட்டியேன் பாவையே.
Verse 350
பாவியல் வேதநன் மாலை பலகொண்டு,\nதேவர்கள் மாமுனி வரிறைஞ் சநின்ற\nசேவடி மேலணி செம்பொற் றுழாயென்றே\nகூவுமால், கோள்வினை யாட்டியேன் கோதையே.
Verse 351
கோதில வண்புகழ் கொண்டு சமயிகள்,\nபேதங்கள் சொல்லிப் பிதற்றும் பிரான்பரன்,\nபாதங்கள் மேலணி பைம்பொற் றுழாயென்றே\nஓதுமால், ஊழ்வினை யேன்தடந் தோளியே
Verse 352
தோளிசேர் பின்னை பொருட்டெரு தேழ்தழீஇக்\nகோளியார் கோவல னார்க்குடக் கூத்தனார்,\nதாளிணை மேலணி தண்ணந்து ழாயென்றே\nநாளுநாள், நைகின்ற தால்எ ன்தன் மாதரே.
Verse 353
மாதர்மா மண்மடந் தைபொருட் டேனமாய்,\nஆதியங் காலத் தகலிடம் கீண்டவர்,\nபாதங்கள் மேலணி பைம்பொற் றுழாயென்றே\nஓதும்மால், எய்தினள் என்தன் மடந்தையே
Verse 354
மடந்தையை வண்கம லத்திரு மாதினை,\nதடங்கொள்தார் மார்பினில் வைத்தவர் தாளின்மேல்,\nவடங்கொள்பூந் தண்ணந் துழாய்மலர்க் கேயிவள்\nமடங்குமால், வாணுத லீர்!என் மடக்கொம்பே.
Verse 355
கொம்புபோல் சீதை பொருட்டிலங் கைநகர்\nஅம்பெரி யுய்த்தவர் தாளிணை மேலணி,\nவம்பவிழ் தண்ணந்து ழாய்மலர்க் கேயிவள்\nநம்புமால், நானிதற் கென்செய்கேன் நங்கைமீர்.
Verse 356
நங்கைமீர். நீரும்ஓர் பெண்பெற்று நல்கினீர்,\nஎங்ஙனே சொல்லுகேன் யான்பெற்ற ஏழையை,\nசங்கென்னும் சக்கர மென்னும் துழாயென்னும்,\nஇங்ஙனே சொல்லும் இராப்பகல் என்செய்கேன்?
Verse 357
என்செய்கேன் என்னுடைப் பேதையென் கோமளம்,\nஎன்சொல்லும் என்வச முமல்லள் நங்கைமீர்,\nமின்செய்பூண் மார்பினன் கண்ணன் கழல்துழாய்,\nபொன்செய்பூண் மென்முலைக் கென்று மெலியுமே.
Verse 358
மெலியுநோய் தீர்க்கும்நங் கண்ணன் கழல்கள்மேல்,\nமலிபுகழ் வண்குரு கூர்ச்சட கோபன்சொல்,\nஒலிபுகழ் ஆயிரத் திப்பத்தும் வல்லவர்,\nமலிபுகழ் வானவர்க் காவர்நற் கோவையே.
Verse 359
கோவை வாயாள் பொருட்டேற்றின் எருத்தம் இறுத்தாய், மதிளிலங்கைக்\nகோவை வீயச் சிலைகுனித்தாய்! குலநல் யானை மருப்பொசித்தாய்,\nபூவை வீயா நீர்தூவிப் போதால் வணங்கே னேலும்,நின்\nபூவை வீயாம் மேனிக்குப் பூசும் சாந்தென் னெஞ்சமே.
Verse 360
பூசும் சாந்தென் னெஞ்சமே புனையும் கண்ணி எனதுடைய,\nவாச கம்செய் மாலையே வான்பட் டாடை யுமஃதே,\nதேச மான அணிகலனும் என்கை கூப்புச் செய்கையே,\nஈசன் ஞால முண்டுமிழ்ந்த எந்தை யேக மூர்த்திக்கே.
Verse 361
ஏக மூர்த்தி இருமூர்த்தி மூன்று மூர்த்தி பலமூர்த்தி\nஆகி, ஐந்து பூதமாய் இரண்டு சுடராய் அருவாகி,\nநாகம் ஏறி நடுக்கடலுள் துயின்ற நாரா யணனே,உன்\nஆகம் முற்றும் அகத்தடக்கி ஆவி யல்லல் மாய்த்ததே.
Verse 362
மாய்த்தல் எண்ணி வாய்முலை தந்த மாயப் பேயுயிர்\nமாய்த்த, ஆய மாயனே. வாமனனே மாதவா,\nபூத்தண் மாலை கொண்டுன்னைப் போதால் வணங்கே னேலும்,நின்\nபூத்தண் மாலை நெடுமுடிக்குப் புனையும் கண்ணி எனதுயிரே.
Verse 363
கண்ணி யெனதுயிர் காதல் கனகச் சோதி முடிமுதலா,\nஎண்ணில் பல்க லன்களும் ஏலு மாடை யுமஃதே,\nநண்ணி மூவு லகும்நவிற்றும் கீர்த்தி யுமஃதே,\nகண்ண னெம்பி ரானெம்மான் கால சக்கரத் தானுக்கே.
Verse 364
கால சக்க ரத்தோடு வெண்சங் கம்கை யேந்தினாய்,\nஞால முற்று முண்டுமிழ்ந்த நாரா யணனே என்றென்று,\nஓல மிட்டு நானழைத்தால் ஒன்றும் வாரா யாகிலும்,\nகோல மாமென் சென்னிக்குன் கமலம் அன்ன குரைகழலே.
Verse 365
குரைக ழல்கள் நீட்டிமண் கொண்ட கோல வாமனா,\nகுரைக ழல்கை கூப்புவார்கள் கூடநின்ற மாயனே,\nவிரைகொள் பூவும் நீரும்கொண்டேத்த மாட்டே னேலும்,உன்\nஉரைகொள் சோதித் திருவுருவம் என்ன தாவி மேலதே.
Verse 366
என்ன தாவி மேலையாய் ஏர்கொள் ஏழு லகமும்,\nதுன்னி முற்று மாகிநின்ற சோதி ஞான மூர்த்தியாய்,\nஉன்ன தென்ன தாவியும் என்ன துன்ன தாவியும்\nஇன்ன வண்ண மேநின்றாய் என்று ரைக்க வல்லேனே?
Verse 367
உரைக்க வல்லேன் அல்லேனுன் உலப்பில் கீர்த்தி வெள்ளத்தின்\nகரைக்கண் என்று செல்வன்நான்? காதல் மையல் ஏறினேன்,\nபுரைப்பி லாத பரம்பரனே. பொய்யி லாத பரஞ்சுடரே,\nஇரைத்து நல்ல மேன்மக்கள் ஏத்த யானும் ஏத்தினேன்.
Verse 368
யானும் ஏத்தி ஏழுலகும் முற்றும் ஏத்தி, பின்னையும்\nதானும் ஏத்தி லும்தன்னை ஏத்த ஏத்த எங்கெய்தும்,\nதேனும் பாலும் கன்னலும் அமுதுமாகித் தித்திப்ப,\nயானு மெம்பி ரானையே ஏத்தி னேன்யா னுய்வானே.
Verse 369
உய்வு பாயம் மற்றின்மை தேறிக் கண்ணன் ஒண்கழல்கள்மேல்\nசெய்ய தாம ரைப்பழனத் தென்னன் குருகூர்ச் சடகோபன்,\nபொய்யில் பாடல் ஆயிரத்துள் இவையும் பத்தும் வல்லார்கள்,\nவையம் மன்னி வீற்றிருந்து விண்ணும் ஆள்வர் மண்ணூடே.
Verse 370
மண்ணை இருந்து துழாவி, வாமனன் மண் இது என்னும்,\nவிண்ணைத் தொழுது, அவன் மேவு வைகுந்தம் என்று கை காட்டும்,\nகண்ணை உள்நீர் மல்க நின்று, கடல்வண்ணன் என்னும், அன்னே! என்\nபெண்ணைப் பெருமயல் செய்தாற்கு என் செய்கேன், பெய் வளையீரே?
Verse 371
பெய்வளைக் கைகளைக் கூப்பிப் பிரான்கிடக் கும்கடல் என்னும்,\nசெய்யதோர் ஞாயிற்றைக் காட்டிச் சிரீதரன் மூர்த்தியீ தென்னும்,\nநையும்கண் ணீர்மல்க நின்று நாரணன் என்னுமன்னே,என்\nதெய்வ வுருவில் சிறுமான் செய்கின்ற தொன்றறி யேனே.
Verse 372
அறியும்செந் தீயைத் தழுவி அச்சுதன் என்னும்மெய் வேவாள்,\nஎறியும்தண் காற்றைத் தழுவி என்னுடைக் கோவிந்தன் என்னும்,\nவெறிகொள் துழாய்மலர் நாறும் வினையுடை யாட்டியேன் பெற்ற\nசெறிவளை முன்கைச் சிறுமான் செய்கின்ற தென்கண்ணுக் கொன்றே.
Verse 373
ஒன்றிய திங்களைக் காட்டி ஒளிமணி வண்ணனே என்னும்\nநின்றகுன்றத்தினை நோக்கி நெடுமாலே! வா என்று கூவும்,\nநன்றுபெய் யும்மழை காணில் நாரணன் வந்தான் என்றாலும்,\nஎன்றின மையல்கள் செய்தார் என்னுடைக் கோமளத் தையே.
Verse 374
கோமள வான்கன்றைப் புல்கிக் கோவிந்தன் மேய்த்தன என்னும்,\nபோமிள நாகத்தின் பின்போய் அவன்கிடக் கையீ தென்னும்,\nஆமள வொன்றும் அறியேன் அருவினை யாட்டியேன் பெற்ற,\nகோமள வல்லியை மாயோன் மால் செய்து செய்கின்ற கூத்தே.
Verse 375
கூத்தர் குடமெடுத் தாடில் கோவிந்த னாம் எனா ஓடும்,\nவாய்த்த குழலோசை கேட்கில் மாயவன் என்றுமை யாக்கும்,\nஆய்ச்சியர் வெண்ணெய்கள் காணில் அவனுண்ட வெண்ணெயீ தென்னும்,\nபேய்ச்சி முலைசுவைத் தாற்கென் பெண்கொடி யேறிய பித்தே.
Verse 376
ஏறிய பித்தினோ டெல்லா வுலகும்கண் ணன்படைப் பென்னும்\nநீறுசெவ் வேயிடக் காணில் நெடுமால் அடியார் என் றோடும்,\nநாறு துழாய்மலர் காணில் நாரணன் கண்ணியீ தென்னும்,\nதேறியும் தேறாது மாயோன் திறத்தன ளேயித் திருவே.
Verse 377
திருவுடை மன்னரைக் காணில் திருமாலைக் கண்டேனே என்னும்,\nஉருவுடை வண்ணங்கள் காணில் உலகளந் தான்என்று துள்ளும்,\nகருவுடைத் தேவில்க ளெல்லாம் கடல்வண்ணன் கோயிலே என்னும்\nவெருவிலும் வீழ்விலும் ஓவாக் கண்ணன் கழல்கள் விரும்புமே.
Verse 378
விரும்பிப் பகைவரைக் காணில் வியலிடம் உண்டானே என்னும்,\nகரும்பெரு மேகங்கள் காணில் கண்ணன் என் றேறப் பறக்கும்,\nபெரும்புல ஆநிரை காணில் பிரானுளன் என்றுபின் செல்லும்,\nஅரும்பெறல் பெண்ணினை மாயோன் அலற்றி அயர்ப்பிக்கின் றானே.
Verse 379
அயர்க்கும்சுற் றும்பற்றி நோக்கும் அகலவே நீள் நோக்குக் கொள்ளும்,\nவியர்க்கும் மழைக்கண் துளும்ப வெவ்வுயிர்க் கொள்ளும்மெய் சோரும்,\nபெயர்த்தும் கண்ணா என்று பேசும், பெருமானே வாஎன்று கூவும்,\nமயல்பெருங் காதலென் பேதைக் கென்செய்கேன் வல்வினை யேனே.
Verse 380
வல்வினை தீர்க்கும் கண்ணனை வண்குரு கூர்ச்சட கோபன்,\nசொல்வினை யால்சொன்ன பாடல் ஆயிரத் துள்ளிவை பத்தும்,\nநல்வினை யென்றுகற் பார்கள் நலனிடை வைகுந்தம் நண்ணி,\nதொல்வினை தீரவெல் லாரும் தொழுதெழ வீற்றிருப் பாரே.
Verse 381
வீற்றிருந் தேழுலகும் தனிக்கோல் செல்ல, வீவில்சீர்,\nஆற்றல்மிக் காளும் அம்மானைவெம்மா பிளந்தான்தன்னை,\nபோற்றி யென்றே கைகளாரத் தொழுது சொல்மாலைகள்,\nஏற்ற நோற்றேற் கினியென்னகுறை யெழுமையுமே?
Verse 382
மைய கண்ணாள் மலர்மேலுறைவா ளுறைமார்பினன்,\nசெய்ய கொலத் தடங்கண்ணன் விண்ணோர் பெருமான்தன்னை\nமொய்ய சொல்லா லிசைமாலைகளேத்தி யுள்ளப் பெற்றேன்,\nவெய்ய நோய்கள் முழுதும் வியன்ஞாலத்து வீயவே.
Verse 383
வீவி லின்ப மிகஎல்லை நிகழ்ந்தநம் அச்சுதன்,\nவீவில் சீரன் மலர்க்கண்ணன் விண்ணோர் பெருமான்தன்னை,\nவீவில் காலம் இசைமாலைகள் ஏத்தி மேவப்பெற்றேன்,\nவீவி லின்பமிக எல்லை நிகழ்ந்தனன் மேவியே.
Verse 384
மேவி நின்று தொழுவார் வினைபோக மேவும்பிரான்,\nதூவியம் புள்ளு டையான் அடலாழியம் மான்றன்னை,\nநாவிய லாலிசை மாலைக ளேத்திநண் ணப்பெற்றேன்,\nஆவியென் னாவியை யானறியேன்செய்த வாற்றையே.
Verse 385
ஆற்ற நல்ல வகைகாட்டும் அம்மானை, அமரர்தம்\nஏற்றை யெல்லாப் பொருளும் விரித்தானை எம்மான்தன்னை,\nமாற்ற மாலை புனைந்தேத்தி நாளும் மகிழ்வெய்தினேன்,\nகாற்றின் முன்னம் கடுகி வினைநோய்கள் கரியவே.
Verse 386
கரிய மேனிமிசை வெளிய நீறுசிறி தேயிடும்,\nபெரிய கோலத் தடங்கண்ணன் விண்ணோர் பெருமான்தன்னை,\nஉரிய சொல்லா லிசைமாலைகள் ஏத்தியுள்ளப் பெற்றேற்கு,\nஅரிய துண்டோ எனக்கின்று தொட்டுமினி யென்றுமே?
Verse 387
என்றும் ஒன்றாகி யொத்தாரும்மிக் கார்களும், தன்றனக்\nகின்றி நின்றானை யெல்லாவுலகும் உடையான் தன்னை,\nகுன்ற மொன்றால் மழைகாத்தபிரானைச்சொன் மாலைகள்,\nநன்று சூட்டும் விதியெய் தினம் என்ன குறைநமக்கே?
Verse 388
நமக்கும் பூவின்மிசை நங்கைக்கும் இன்பனை, ஞாலத்தார்\nதமக்கும் வானத் தவர்க்கும் பெருமானை, தண்டாமரை\nசுமக்கும் பாதப் பெருமானைச் சொன்மாலைகள், சொல்லுமா\nறமைக்க வல்லேற் கினியாவர் நிகரகல் வானத்தே?
Verse 389
வானத்தும் வானத்துள் ளும்பரும் மண்ணுள்ளும் மண்ணின்கீழ்த்\nதானத்தும், எண்டிசை யும்தவி ராதுநின் றான்தன்னை,\nகூனற்சங் கத்தடக் கையவனைக் குடமாடியை வானக்\nகோனைக், கவிசொல்ல வல்லேற் கினிமா றுண்டோ?
Verse 390
உண்டும் உமிழ்ந்தும் கடந்தும் இடந்தும் கிடந்தும்நின்றும்,\nகொண்ட கோலத் தொடுவீற் றிருந்தும் மணங்கூடியும்,\nகண்ட வாற்றால் தனக்கே யுலகென நின்றான்தன்னை,\nவண்தமிழ் நூற்க நோற்றேன் அடியார்க் கின்பமாரியே.
Verse 391
மாரி மாறாத தண்ணம்மலை வேங்கடத் தண்ணலை,\nவாரி வாறாத பைம்பூம் பொழில்சூழ் குருகூர்நகர்,\nகாரி மாறன் சடகோபன் சொல்லாயிரத் திப்பத்தால்,\nவேரி மாறாத பூமே லிருப்பாள் வினைதீர்க்குமே.
Verse 392
தீர்ப்பாரை யாமினி யெங்ஙனம் நாடுதும் அன்னைமீர்,\nஓர்ப்பாலிவ் வொண்ணுதல் உற்றநன் னோயிது தேறினோம்,\nபோர்ப்பாகு தான்செய்தன் றைவரை வெல்வித்த, மாயப்போர்த்\nதேர்ப்பாக னார்க்கிவள் சிந்தை துழாய்த்திசைக் கின்றதே.
Verse 393
திசைக்கின்ற தேயிவள் நோயிது மிக்க பெருந்தெய்வம்,\nஇசைப்பின்றி நீரணங் காடும் இளந்தெய்வம் அன்றிது,\nதிசைப்பின்றி யேசங்கு சக்கர மென்றிவள் கேட்க,நீர்\nஇசைக்கிற்றி ராகில்நன் றேயில் பெறுமிது காண்மினே.
Verse 394
இதுகாண்மின் அன்னைமீர். இக்கட்டு விச்சிசொற் கொண்டு,நீர்\nஎதுவானும் செய்தங்கோர் கள்ளும் இறைச்சியும் தூவேல்மின்,\nமதுவார் துழாய்முடி மாயப் பிரான்கழல் வாழ்த்தினால்,\nஅதுவே யிவளுற்ற நோய்க்கும் அருமருந்தாகுமே
Verse 395
மருந்தாகும் என்றங்கோர் மாய வலவைசொற் கொண்டு,நீர்\nகருஞ்சோறும் மற்றைச் செஞ்சோறும் களனிழைத் தென்பயன்?\nஒருங்காக வேயுல கேழும் விழுங்கி உமிழ்ந்திட்ட,\nபெருந்தெவன் பேர்சொல்ல கிற்கில் இவளைப் பெறுதிரே.
Verse 396
இவளைப் பெறும்பரி சிவ்வணங் காடுதல் அன்றந்தோ,\nகுவளைத் தடங்கண்ணும் கோவைச்செவ்வாயும் பயந்தனள்,\nகவளக் கடாக்களி றட்டபிரான்திரு நாமத்தால்,\nதவளப் பொடிக்கொண்டு நீரிட்டிடுமின் தணியுமே.
Verse 397
தணியும் பொழுதில்லை நீரணங்காடுதிர் அன்னைமீர்,\nபிணியும் ஒழிகின்ற தில்லை பெருகு மிதுவல்லால்,\nமணியின் அணிநிற மாயன் தமரடி நீறுகொண்டு,\nஅணிய முயலின்மற் றில்லைகண்டீரிவ் வணங்குக்கே
Verse 398
அணங்குக் கருமருந் தென்றங் கோர் ஆடும்கள் ளும்பராய்\nசுணங்கை யெறிந்துநுந் தோள்குலைக்கப்படும் அன்னைமீர்,\nஉணங்கல் கெடக்கழு தையுதடாட்டம்கண் டென்பயன்?\nவணங்கீர்கள் மாயப் பிரான்தமர் வேதம்வல் லாரையே.
Verse 399
வேதம்வல் லார்களைக் கொண்டுவிண்ணோர்பெரு மான்திருப்\nபாதம் பணிந்து,இவள் நோயிது தீர்த்துக்கொள் ளாதுபோய்\nஏதம் பறைந்தல்ல செய்துகள்ளூடு கலாய்த்தூய்,\nகீத முழவிட்டு நீர்அணங் காடுதல் கீழ்மையே.
Verse 400
கீழ்மையினா லங்கோர் கீழ்மகனிட்ட முழவின்கீழ்,\nநாழ்மை பலசொல்லி நீரணங்காடும்பொய் காண்கிலேன்,\nஏழ்மைப் பிறப்புக்கும் சேமமிந் நோய்க்குமீ தேமருந்து,\nஊழ்மையில் கண்ணபி ரான்கழல் வாழ்த்துமின் உன்னித்தே.
Verse 401
உன்னித்து மற்றொரு தெய்வம்தொழாளவ னையல்லால்,\nநும்மிச்சை சொல்லிநும் தோள்குலைக்கப்படும் அன்னைமீர்,\nமன்னப் படும்மறை வாணனை வண்துவ ராபதி\nமன்னனை, ஏத்துமின் ஏத்துதலும்தொழு தாடுமே.
Verse 402
தொழுதாடி தூமணி வண்ணனுக்காட்செய்து நோய்தீர்ந்த\nவழுவாத தொல்புகழ் வண்குருகூர்ச்சட கோபன், சொல்\nவழுவாத ஆயிரத் துள்ளிவை பத்து வெறிகளும்,\nதொழுதாடிப் பாடவல் லார்துக்க சீலம் இலர்களே.
Verse 403
சீலம் இல்லாச் சிறிய னேலும் செய்வினை யோபெரிதால்,\nஞாலம் உண்டாய் ஞானமூர்த்தி நாராய ணா. என்றென்று,\nகாலந் தோறும் யானிருந்து கைதலை பூசலிட்டால்\nகோல மேனி காண வாராய் கூவியும் கொள்ளாயே.
Verse 404
கொள்ள மாளா இன்ப வெள்ளம் கொதில தந்திடும்,என்\nவள்ள லேயோ வையங் கொண்ட வாமனாவோ என்றென்று,\nநள்ளி ராவும் நண்பகலும் நானிருந் தோலமிட்டால்,\nகள்ள மாயா உன்னை யென்கண் காணவந் தீயாயே.
Verse 405
ஈவி லாத தீவினைகள் எத்தனை செய்த னன்கொல்?\nதாவி வையம் கொண்ட எந்தாய் தாமோதரா என்றென்று\nகூவிக் கூவி நெஞ்சுருகிக் கண்பனி சோர நின்றால்,\nபாவி நீயென் றொன்று சொல்லாய் பாவியேன் காணவந்தே.
Verse 406
காண வந்தென கண்முகப்பே தாமரைக் கண்பிறழ,\nஆணி செம்பொன் மேனியெந்தாய். நின்றருளாய் என்றென்று,\nநாண மில்லாச் சிறுதகையேன் நானிங் கலற்றுவதென்,\nபேணிவானோர் காணமாட்டாப் பீடுடை யப்பனையே?
Verse 407
அப்பனே அடலாழியானே, ஆழ்கட லைக்கடைந்த\nதுப்பனே,உன் தோள்கள் நான்கும் கண்டிடக்கூடுங் கொலென்று,\nஎப்பொழுதும் கண்ண நீர்கொண் டாவி துவர்ந்துவர்ந்து,\nஇப்போழுதே வந்திடாயென் றேழையேன் நோக்குவனே.
Verse 408
நோக்கி நோக்கி உன்னைக் காண்பான் யானென தாவியுள்ளே,\nநாக்கு நீள்வன் ஞான மில்லை நாடோறு மென்னுடைய,\nஆக்கை யுள்ளூ மாவி யுள்ளும் அல்லபு றத்தினுள்ளும்,\nநீக்க மின்றி யெங்கும் நின்றாய் நின்னை யறிந்தறிந்தே.
Verse 409
அறிந்து அறிந்து தேறித் தேறி யானென தாவியுள்ளே,\nநிறைந்த ஞான மூர்த்தி யாயை நின்மல மாகவைத்து,\nபிறந்தும் செத்தும் நின்றிடறும் பேதைமை தீர்ந்தொ ழிந்தேன்\nநறுந்து ழாயின் கண்ணி யம்மா. நானுன்னைக் கண்டுகொண்டே.
Verse 410
கண்டு கொண்டென் கைக ளார நின்திருப் பாதங்கள்மேல்,\nஎண்டி சையு முள்ள பூக்கொண் டேத்தி யுகந்துகந்து,\nதொண்ட ரோங்கள் பாடி யாடச் சூழ்கடல் ஞாலத்துள்ளே,\nவண்டு ழாயின் கண்ணி வேந்தே! வந்திட கில்லாயே.
Verse 411
இடகி லேனோன் றட்ட கில்லேன் ஐம்புலன் வெல்லகில்லேன்,\nகடவ னாகிக் காலந் தோறும் பூப்பறித் தேத்தகில்லேன்,\nமடவன் நெஞ்சம் காதல் கூர வல்வினை யேன்அயர்ப்பாய்,\nதடவு கின்றே னெங்குக் காண்பன் சக்கரத் தண்ணலையே?
Verse 412
சக்க ரத்தண் ணலேயென்று தாழ்ந்து கண்ணீர் ததும்ப,\nபக்கம் நோக்கி நின்ற லந்தேன் பாவியேன் காண்கின்றிலேன்,\nமிக்க ஞான மூர்த்தி யாய வேத விளக்கினை,என்\nதக்க ஞானக் கண்க ளாலே கண்டு தழுவுவனே.
Verse 413
தழுவி நின்ற காதல்தன்னால் தாமரைக் கண்ணன்தன்னை,\nகுழுவு மாடத் தென்குரு கூர்மா றன்சட கோபன்,சொல்\nவழுவி லாத வொண்தமிழ்கள் ஆயிரத்து ளிப்பத்தும்,\nதழுவப் பாடி யாட வல்லார் வைகுந்த மேறுவரே.
Verse 414
ஏறாளும் இறையோனும் திசைமுகனும் திருமகளும்,\nகூறாளும் தனியுடம்பன் குலங்குலமா அசுரர்களை,\nநீறாகும் படியாக நிருமித்துப் படைதொட்ட,\nமாறாளன் கவராத மணிமாமை குறைவிலமே.
Verse 415
மணிமாமை குறைவில்லா மலர்மாதர் உறைமார்வன்,\nஅணிமானத் தடவரைத்தோள் அடலாழித் தடக்கையன்,\nபணிமானம் பிழையாமே யடியேனைப் பணிகொண்ட,\nமணிமாயன் கவராத மடநெஞ்சால் குறைவிலமே.
Verse 416
மடநெஞ்சால் குறைவில்லா மகள்தாய்செய் தொருபேய்ச்சி,\nவிடநஞ்ச முலைசுவைத்த மிகுஞானச் சிறுகுழவி,\nபடநாகத் தணைக்கிடந்த பருவரைத்தோள் பரம்புருடன்,\nநெடுமாயன் கவராத நிறையினால் குறைவிலமே.
Verse 417
நிறையினாற் குறைவில்லா நெடும்பணைத்தோள் மடப்பின்னை,\nபொறையினால் முலையணைவான் பொருவிடைஏழ் அடர்த்துகந்த,\nகறையினார் துவருடுக்கை கடையாவின் கழிகோல்கை,\nசறையினார் கவராத தளிர்நிறத்தால் குறைவிலமே.
Verse 418
தளிர்நிறத்தால் குறைவில்லாத் தனிச்சிறையில் விளப்புற்ற,\nகிளிமொழியாள் காரணமாக் கிளரரக்கன் நகரெரித்த,\nகளிமலர்த் துழாயலங்கல் கமழ்முடியன் கடல்ஞாலத்து,\nஅளிமிக்கான் கவராத அறிவினால் குறைவிலமே.
Verse 419
அறிவினால் குறைவில்லா அகல்ஞாலத் தவரறிய,\nநெறியெல்ல மெடுத்துரைத்த நிறைஞானத் தொருமூர்த்தி,\nகுறியமாண் உருவாகிக் கொடுங்கோளால் நிலங்கொண்ட,\nகிறியம்மான் கவராத கிளரொளியால் குறைவிலமே.
Verse 420
கிளரொளியால் குறைவில்லா அரியுருவாய்க் கிளர்ந்தெழுந்து,\nகிளரொளிய இரணியன தகல்மார்பம் கிழிந்துகந்த,\nவளரொளிய கனலாழி வலம்புரியன் மணிநீல,\nவளரொளியான் கவராத வரிவளையால் குறைவிலமே.
Verse 421
வரிவளையால் குறைவில்லாப் பெருமுழக்கால் அடங்காரை,\nஎரியழலம் புகவூதி யிருநிலமுன் துயர்தவிர்த்த,\nதெரிவரிய சிவன்பிரமன் அமரர் கோன் பணிந்தேத்தும்,\nவிரிபுகழான் கவராத மேகலையால் குறைவிலமே.
Verse 422
மேகலையால் குறைவில்லா மெலிவுற்ற அகலல்குல்,\nபோகமகள் புகழ்த்தந்தை விறல்வாணன் புயம்துணித்து,\nநாகமிசைத் துயில்வான்போல் உலகெல்லாம் நன்கொடுங்க,\nயோகணைவான் கவராத வுடம்பினால் குறைவிலமே.
Verse 423
உடம்பினால் குறைவில்லா உயிர்பிரிந்த மலைத்துண்டம்,\nகிடந்தனபோல் துணிபலவா அசுரர் குழாம் துணித்துகந்த,\nதடம்புனல சடைமுடியன் தனியொருகூ றமர்ந்துறையும்,\nஉடம்புடையான் கவராத உயிரினால் குறைவிலமே.
Verse 424
உயிரினால் குறைவில்லா உலகேழ்தன் உள்ளொடுக்கி,\nதயிர்வெண்ணெ யுண்டானைத், தடங்குருகூர்ச் சடகோபன்,\nசெயிரில்சொல் லிசைமாலை யாயிரத்து ளிப்பத்தால்\nவயிரம்சேர் பிறப்பறுத்து வைகுந்தம் நண்ணுவரே.
Verse 425
நண்ணாதார் முறுவலிப்ப நல்லுற்றார் கரைந்தேங்க,\nஎண்ணாராத் துயர்விளைக்கும் இவையென்ன உலகியற்கை?,\nகண்ணாளா கடல்கடைந்தாய் உனகழற்கே வரும்பரிசு,\nதண்ணாவா தடியேனைப் பணிகண்டாய் சாமாறே.
Verse 426
சாமாறும் கெடுமாறும் தமருற்றார் தலைத்தலைப்பெய்து,\nஏமாறிக் கிடந்தலற்றும் இவையென்ன உலகியற்கை?,\nஆமாறொன் றறியேன்நான் அரவணையாய். அம்மானே,\nகூமாறே விரைகண்டாய் அடியேனைக் குறிக்கொண்டே.
Verse 427
கொண்டாட்டும் குலம்புனைவும் தமருற்றார் விழுநிதியும்,\nவண்டார்பூங் குழலாளும் மனையொழிய வுயிர்மாய்தல்,\nகண்டாற்றேன் உலகியற்கை கடல்வண்ணா அடியேனைப்\nபண்டேபோல் கருதாதுன் அடிக்கேகூய்ப் பணிகொள்ளே.
Verse 428
கொள்ளென்று கிளர்ந்தெழுந்த பெருஞ்செல்வம் நெருப்பாக,\nகொள்ளென்று தமம்மூடும் இவையென்ன உலகியற்கை?\nவள்ளலே மணிவண்ணா உனகழற்கே வரும்பரிசு,\nவள்ளல்செய் தடியேனை உனதருளால் வாங்காயே.
Verse 429
வாங்குநீர் மலருலகில் நிற்பனவுமீ திரிவனவும்,\nஆங்குயிர்கள் பிறப்பிறப்புப் பிணிமூப்பால் தகர்ப்புண்ணும்,\nஈங்கிதன்மேல் வெந்நரகம் இவையென்ன உலகியற்கை?\nவாங்கெனைநீ மணிவண்ணா. அடியேனை மறுக்கேலே.
Verse 430
மறுக்கிவல் வலைப்படுத்திக் குமைத்திட்டுக் கொன்றுண்பர்,\nஅறப்பொருளை யறிந்தோரார் இவையென்ன உலகியற்கை?\nவெறித்துளவ முடியானே வினையேனை யுனக்கடிமை\nஅறக்கொண்டாய், இனியென்னா ரமுதே.கூய் அருளாயே.
Verse 431
ஆயேயிவ் வுலகத்து நிற்பனவும் திரிவனவும்\nநீயேமற் றொருபொருளும் இன்றிநீ நின்றமையால்,\nநோயேமூப் பிறப்பிறப்புப் பிணியேயென் றிவையொழியக்,\nகூயேகொள் அடியேனைக் கொடுவுலகம் காட்டேலே.
Verse 432
காட்டிநீ கரந்துமிழும் நிலநீர்தீ விசும்புகால்,\nஈட்டீநீ வைத்தமைத்த இமையோர்வாழ் தனிமுட்டைக்,\nகோட்டையினில் கழித்தெனையுன் கொழுஞ்சோதி யுயரத்து,\nகூட்டரிய திருவடிக்க ளெஞ்ஞான்று கூட்டுதியே?
Verse 433
கூட்டுதிநின் குரைகழல்கள் இமையோரும் தொழாவகை செய்து,\nஆட்டுதிநீ யரவணையாய். அடியேனும் அஃதறிவன்,\nவேட்கையெல்லாம் விடுத்தெனையுன் திருவடியே சுமந்துழல,\nகூட்டரிய திருவடிக்கள் கூட்டினைநான் கண்டேனே.
Verse 434
கண்டுகேட் டுற்றுமோந்துண்டுழலும் ஐங்கருவி\nகண்டவின்பம், தெரிவரிய அளவில்லாச் சிற்றின்பம்,\nஒண்டொடியாள் திருமகளும் நீயுமே நிலாநிற்பக்,\nகண்டசதிர் கண்டொழிந்தேன் அடைந்தேனுன் திருவடியே.
Verse 435
திருவடியை நாரணனைக்கேசவனைப் பரஞ்சுடரை,\nதிருவடிசேர் வதுகருதிச் செழுங்குருகூர்ச் சடகோபன்,\nதிருவடிமே லுரைத்ததமிழ் ஆயிரத்து ளிப்பத்தும்,\nதிருவடியே அடைவிக்கும் திருவடிசேர்ந் தொன்றுமினே.
Verse 436
ஒன்றுந் தேவு முலகும் உயிரும் மற்றும் யாதுமில்லா\nஅன்று, நான்முகன் தன்னொடு தேவ ருலகோ டுயிர்படைத்தான்,\nகுன்றம் போல்மணி மாடம் நீடு திருக்குரு கூரதனுள்,\nநின்ற ஆதிப்பி ரான்நிற்க மற்றைத் தெய்வம் நாடுதிரே.
Verse 437
நாடி நீர்வ ணங்கும் தெய்வமும் உம்மையு முன்படைத்தான்,\nவீடில் சீர்ப்புக ழாதிப்பி ரானவன் மேவி யுறைகோயில்,\nமாட மாளிகை சூழ்ந்தழ காய திருக்குரு கூரதனைப்,\nபாடி யாடிப் பரவிச் செல்மின்கள் பல்லுல கீர்பரந்தே.
Verse 438
பரந்த தெய்வமும் பல்லுல கும்படைத் தன்றுட னேவிழுங்கிக்,\nகரந்து மிழ்ந்து கடந்தி டந்தது கண்டும் தெளியகில்லீர்,\nசிரங்க ளால்அ மரர்வ ணங்கும் திருக்குரு கூரதனுள்,\nபரன்திற மன்றிப் பல்லுலகீர் தெய்வம் மற்றில்லை பேசுமினே.
Verse 439
பேசநின்றசிவனுக்கும்பிரமன்தனக்கும் பிறர்க்கும்\nநாயகனவனே கபாலநன் மோக்கத்துக்கண்டுகொண்மின் \nதேசமாமதிள்சூர்ந்தழகாய திருக்குருகூரதனுள் \nஈசன்பாலோரவம்பறைதல் என்னாவதிலிங்கியர்க்கே?
Verse 440
இலிங்கத்திட்டபுராணத்தீரும் சமணரும்சாக்கியரும் \nவலிந்துவாதுசெய்வீர்களும் மற்றுநுந்தெய்வமுமாகிநின்றான் \nமலிந்துசெந்நெல்கவரிவீசும் திருக்குருகூரதனுள் \nபொலிந்துநின்றபிரான்கண்டீர் ஒன்றும் பொய்யில்லைபோற்றுமினே.
Verse 441
போற்றி மற்றோர் தெய்வம் பேணப் புறத்திட்டு உம்மையின்னே\nதேற்றி வைத்ததெல் லீரும் வீடு பெற்றாலுல கில்லையென்றே,\nசேற்றில் செந்நெல் கமலம் ஓங்கு திருக்குரு கூரதனுள்,\nஆற்ற வல்லவன் மாயம் கண்டீரது அறிந் தறிந் தோடுமினே.
Verse 442
ஓடி யோடிப் பல்பிறப்பும் பிறந்துமற் றோர்தெய்வம்,\nபாடி யாடிப் பணிந்துபல்படிகால் வழியே றிக்கண்டீர்,\nகூடி வானவ ரேத்தனின்ற திருக்குரு கூரதனுள்,\nஆடு புட்கொடி யாதி மூர்த்திக் கடிமை புகுவதுவே.
Verse 443
புக்கு அடி மையினால் தன்னைக் கண்ட மார்க்கண்டேயன் அவனை\nநக்கபிரானுமன் றுய்யக்கொண்டது நாராயணனருளே\nகொக்கலர் தடந்தாழை வேலித் திருக்குருகூரதனுள்\nமிக்க ஆதிப்பிரான் நிற்க மற்றைத் தெய்வம் விளம்புதிரே.
Verse 444
விளம்பும் ஆறு சமய மும்அ வை யாகியும் மற்றும் தன்பால்,\nஅளந்து காண்டற் கரிய னாகிய ஆதிப்பி ரானமரும்,\nவளங்கொள் தண்பணை சூழ்ந்தழ காய திருக்குரு கூரதனை,\nஉளங்கொள் ஞானத்து வைம்மின் உம்மை உய்யக்கொண்டு போகுறிலே.
Verse 445
உறுவ தாவ தெத்தேவும் எவ்வுலக கங்களும் மற்றும்தன்பால்,\nமறுவில் மூர்த்தியோ டொத்தித் தனையும் நின்றவண் ணம்நிற்கவே,\nசெறுவில் செந்நெல் கரும்பொ டோங்கு திருக்குரு கூரதனுள்\nகுறிய மாணுரு வாகிய நீள்குடக் கூத்தனுக் காட்செய்வதே.
Verse 446
ஆட்செய்த தாழிப்பி ரானைச் சேர்ந்தவன் வண்குரு கூர்நகரான்\nநாட்க மழ்மகிழ் மாலை மார்பினன் மாறன் சடகோபன்,\nவேட்கை யால்சொன்ன பாடல் ஆயிரத் துளிப்பத் தும்வல்லார்,\nமீட்சி யின்றி வைகுந்த மாநகர் மற்றது கையதுவே.
Verse 447
கையார் சக்கரத்தெங்கருமாணிக்கமே என்றென்று,\nபொய்யே கைம்மைசொல்லிப்புறமேபுற மேயாடி,\nமெய்யே பெற்றொழிந்தேன், விதிவாய்க்கின்று காப்பாரார்,\nஐயோ கண்ணபிரான் அறையோ இனிப்போனாலே.
Verse 448
போனாய் மாமருதின் நடுவேயென்பொல் லாமணியே!\nதேனே இன்னமுதே! என்றென்றேசில கூற்றுச் சொல்ல,\nதானே லெம்பெருமானவனென்னா கியொழிந்தான்,\nவானே மாநிலமேமற்றுமுற்றுமென் னுள்ளனவே.
Verse 449
உள்ளன மற்றுளவாப்புறமேசில மாயஞ்சொல்லி,\nவள்ளல் மணிவண்ணனே. என்றென்றேயுனை யும்வஞ்சிக்கும்,\nகள்ளம னம்தவிர்ந்தேயுனைக்கண்டுகொண் டுய்தொழிந்தேன்,\nவெள்ளத் தணைக்கிடந்தாயினியுன்னைவிட் டெங்கொள்வனே!
Verse 450
என்கொள்வ னுன்னைவிட்டென் னும்வாசகங் கள்சொல்லியும்,\nவன்கள்வ னேன்மனத்தை வலித்துக்கண்ண நீர் கரந்து,\nநின்கண் நெருங்கவைத்தே என்தாவியை நீக்ககில்லேன்,\nஎன்கண் மலினமறுத் தென்னைக்கூவி யருளாய்கண்ணனே.
Verse 451
கண்ணபி ரானைவிண்ணோர் கருமாணிக்கத் தையமுதை,\nநண்ணியும் நண்ணகில்லேன் நடுவேயோ ருடம்பிலிட்டு,\nதிண்ண மழுந்தக்கட்டிப் பலசெய்வினை வன்கயிற்றால்,\nபுண்ணை மறையவரிந் தெனைப்போரவைத் தாய்புறமே.
Verse 452
புறமறக் கட்டிக்கொண்டிரு வல்வினை யார்குமைக்கும்,\nமுறைமுறை யாக்கைபுகலொழியக் கண்டு கொண்டொழிந்தேன்,\nநிறமுடை நால்தடந்தோள் செய்யவாய்செய்ய தாமரைக்கண்,\nஅறமுய லாழியங்கைக் கருமேனியம் மான்தன்னையே.
Verse 453
அம்மா னாழிப்பிரான் அவனெவ்விடத் தான்யானார்,\nஎம்மா பாவியர்க்கும்வி திவாய்க்கின்று வாய்க்கும்கண்டீர்,\nகைம்மா துன்பொழித்தாய் என்றுகைதலை பூசலிட்டே,\nமெய்ம்மா லாயொழிந்தேனெம்பிரானுமென் மேலானே.
Verse 454
மேலாத் தேவர்களும் நிலத்தேவரும் மேவித்தொழும்,\nமாலார் வந்தினநாள் அடியேன்மனத்தே மன்னினார்,\nசேலேய் கண்ணியரும் பெருஞ்செல்வமும் நன்மக்களும்,\nமேலாத் தாய்தந்தையும் அவரேயினி யாவாரே.
Verse 455
ஆவா ரார்துணையென்றலைநீர்க்கட லுளழுந்தும்\nநாவாய் போல்,பிறவிக் கடலுள்நின்று நான்துளங்க,\nதேவார் கோலத்தொடும் திருச்சக்கரம் சங்கினொடும்,\nஆவா வென்றருள் செய்தடியேனொடு மானானே.
Verse 456
ஆனான் ஆளுடையா னென்றஃதேகொண் டுகந்துவந்து,\nதானே யின்னருள்செய் தென்னைமுற்றவும் தானானான்,\nமீனா யாமையுமாய் நரசிங்கமு மாய்க்குறளாய்,\nகானா ரெனாமுமாய்க் கற்கியாமின்னம் கார்வண்ணனே.
Verse 457
கார்வண்ணன் கண்ணபிரான் கமலத்தடங் கண்ணன்தன்னை,\nஏர்வள வொண்கழனிக்குருகூர்ச்சட கோபன்சொன்ன,\nசீர்வண்ண வொண் தமிழ்களிவையாயிரத் துளிப்பத்தும்\nஆர்வண்ணத் தாலுரைப்பார் அடிக்கீழ்புகு வார்பொலிந்தே.
Verse 458
பொலிக பொலிக பொலிக போயிற்று வல்லுயிர்ச் சாபம்,\nநலியும் நரகமும் நைந்த நமனுக்கிங் கியாதொன்று மில்லை,\nகலியும் கெடும்கண்டு கொள்மின் கடல்வண்ணன் பூதங்கள் மண்மேல்,\nமலியப் புகுந்திசை பாடி யாடி யுழிதரக் கண்டோம்.
Verse 459
கண்டோம் கண்டோம் கண்டோம் கண்ணுக் கினியன கண்டோம்,\nதொண்டீர் எல்லீரும் வாரீர் தொழுது தொழுதுநின் றார்த்தும்,\nவண்டார் தண்ணந்து ழாயான் மாதவன் பூதங்கள் மண்மேல்,\nபண்டான் பாடிநின் றாடிப் பரந்து திரிகின் றனவே.
Verse 460
திரியும் கலியுகம் நீங்கித் தேவர்கள் தாமும் புகுந்து,\nபெரிய கிதயுகம் பற்றிப் பேரின்ப வெள்ளம் பெருக,\nகரிய முகில்வண்ண னெம்மான் கடல்வண்ணன் பூதங்கள் மண்மேல்,\nஇரியப் புகுந்திசை பாடி எங்கும் இடங்கொண் டனவே.
Verse 461
இடங்கொள் சமயத்தை யெல்லாம் எடுத்துக் களைவன போல,\nதடங்கடல் பள்ளிப் பெருமான் தன்னுடைப் பூதங்க ளேயாய்\nகிடந்தும் இருந்தும் எழுந்தும் கீதம் பலபல பாடி,\nநடந்தும் பறந்தும் குனித்தும் நாடகம் செய்கின் றனவே.
Verse 462
செய்கின்ற தென்கண்ணுக் கொன்றே ஒக்கின்ற திவ்வுல கத்து,\nவைகுந்தன் பூதங்க ளேயாய் மாயத்தி னாலெங்கும் மன்னி,\nஐயமொன் றில்லை யரக்கர் அசுரர் பிறந்தீருள் ளீரேல்,\nஉய்யும் வகையில்லை தொண்டீர்! ஊழி பெயர்த்திடும் கொன்றே.
Verse 463
கொன்றுயி ருண்ணும் விசாதி பகைபசி தீயன வெல்லாம்,\nநின்றிவ் வுலகில் கடிவான் நேமிப்பி ரான்தமர் போந்தார்,\nநன்றிசை பாடியும் துள்ளி யாடியும் ஞாலம் பரந்தார்,\nசென்று தொழுதுய்ம்மின் தொண்டீர் சிந்தையைச் செந்நி றுத்தியே.
Verse 464
நிறுத்திநும் உள்ளத்துக் கொள்ளும் தெய்வங்க ளும்மையுய் யக்கொள்\nமறுத்து மவனோடே கண்டீர் மார்க்கண் டேயனும் கரியே\nகறுத்த மனமொன்றும் வேண்டா கண்ணனல் லால்தெய்வ மில்லை,\nஇறுப்பதெல் லாமவன் மூர்த்தி யாயவர்க் கேயி றுமினே.
Verse 465
இறுக்கு மிறையிறுத்துண்ண எவ்வுல குக்கும்தன் மூர்த்தி,\nநிறுத்தினான் தெய்வங்க ளாக அத்தெய்வ நாயகன் றானே\nமறுத்திரு மார்வன் அவன்றன் பூதங்கள் கீதங்கள் பாடி,\nவெறுப்பின்றி ஞாலத்து மிக்கார் மேவித் தொழுதுய்ம்மி னீரே.
Verse 466
மேவித் தொழுதுய்ம்மி னீர்கள் வேதப் புனித இருக்கை,\nநாவிற்கொண் டச்சுதன் றன்னை ஞான விதிபிழை யாமே,\nபூவில் புகையும் விளக்கும் சாந்தமும் நீரும் மலிந்து\nமேவித் தொழுமடி யாரும் பகவரும் மிக்க துலகே.
Verse 467
மிக்க வுலகுகள் தோறும் மேவிக்கண் ணன்திரு மூர்த்தி,\nநக்கபி ரானோ டயனும் இந்திர னும்முதலாக,\nதொக்க அமரர் குழாங்கள் எங்கும் பரந்தன தொண்டீர்,\nஒக்கத் தொழுகிற்றி ராகில் கலியுக மொன்றுமில் லையே.
Verse 468
கலியுக மொன்றுமின் றிக்கே தன்னடி யார்க்கருள் செய்யும்,\nமலியும் சுடரொளி மூர்த்தி மாயப்பி ரான்கண்ணன் றன்னை,\nகலிவயல் தென்னன் குருகூர்க் காரிமா றன்சட கோபன்,\nஒலிபுக ழாயிரத் திப்பத்து உள்ளத்தை மாசறுக் கும்மே.
Verse 469
மாசறு சோதியென் செய்ய வாய்மணிக் குன்றத்தை\nஆசறு சீலனை யாதி மூர்த்தியை நாடியே,\nபாசற வெய்தி யறிவிழந் தெனைநா ளையம்?,\nஏசறு மூரவர் கவ்வை தோழீ. என்செய்யுமே?
Verse 470
என்செய்யு மூரவர் கவ்வை தோழீ இனிநம்மை,\nஎன்செய்ய தாமரைக் கண்ண னென்னை நிறைகொண்டான்,\nமுன்செய்ய மாமை யிழந்து மேனி மெலிவெய்தி,\nஎன்செய்ய வாயும் கருங்கண் ணும்பயப் பூர்ந்தவே.
Verse 471
ஊர்ந்த சகடம் உதைத்தபாதத்தன், பேய்முலை\nசார்ந்து சுவைத்த செவ்வாயன் என்னை நிறைகொண்டான்,\nபேர்ந்தும் பெயர்ந்தும் அவனோடன்றியோர் சொல்லிலேன்,\nதீர்ந்தவென் தோழீ என்செய்யு மூரவர் கவ்வையே?
Verse 472
ஊரவர் கவ்வை யெருவிட்டன்னைசொல் நீர்மடுத்து,\nஈரநெல் வித்தி முளைத்த நெஞ்சப் பெருஞ்செய்யுள்,\nபேரமர் காதல் கடல்புரைய விளைவித்த,\nகாரமர் மேனிநங் கண்ணன் தோழீ! கடியனே.
Verse 473
கடியன் கொடியன் நெடியமாலுல கங்கொண்ட\nஅடியன், அறிவரு மேனிமாயத்தன், ஆகிலும்\nகொடியவென் னெஞ்சம் அவனென்றே கிடக்கு மெல்லே,\nதுடிகொ ளிடைமடத் தோழீ! அன்னையென் செய்யுமே?
Verse 474
என்னையென் செய்யிலென் ஊரென் சொல்லிலென் தோழிமீர்,\nஎன்னை யினியுமக் காசை யில்லை யகப்பட்டேன்,\nமுன்னை யமரர் முதல்வன் வண்துவ ராபதி\nமன்னன், மணிவண் ணன்வாசு தேவன் வலையுளே.
Verse 475
வலையுள் அகப்பட்டுத் தென்னைநன் நெஞ்சம் கூவிக்கொண்டு,\nஅலைகடல் பள்ளி யம்மானை ஆழிப் பிரான்தன்னை\nகலைகொள் அகலல்குல் தோழீ. நம்கண்க ளால்கண்டு\nதலையில் வணங்க மாங்கொலோ தையலார் முன்பே?
Verse 476
பேய்முலை யுண்டு சகடம் பாய்ந்து மருதிடைப்\nபோய்முதல் சாய்த்து, புள்வாய் பிளந்து களிறட்ட,\nதூமுறு வல்தொண்டை, வாய்ப்பிரானையெந் நாள்கொலோ,\nயாமுறு கின்றது தோழீ! அன்னையர் நாணவே?
Verse 477
நாணும் நிறையும் கவர்ந்தென்னை நன்னெஞ்சம் கூவிக்கொண்டு,\nசேணுயர் வானத் திருக்கும் தேவ பிரான்தன்னை,\nஆணையென்? தோழீ! உலகு தோறலர் தூற்றி,ஆம்\nகோணைகள் செய்து குதிரியாய் மடலூர்துமே.
Verse 478
யாமட லூர்ந்தும் எம்மாழியங்கைப் பிரானுடை,\nதூமடல் தண்ணம் துழாய்மலர் கொண்டு சூடுவோம்,\nயாமட மின்றித் தெருவு தோறயல் தையலார்,\nநாமடங் கப்பழி தூற்றி நாடும் இரைக்கவே.
Verse 479
இரைக்கும் கருங்கடல் வண்ணன் கண்ணபிரான்தன்னை,\nவிரைக்கொள் பொழில்குரு கூர்ச்சட கோபன் சொன்ன,\nநிரைக்கொளந் தாதி யோரா யிரத்து ளிப்பத்தும்,\nஉரைக்கவல் லார்க்கு வைகுந்த மாகும்தம் மூரெல்லாம்.
Verse 480
ஊரெல்லாம் துஞ்சி யுலகெல்லாம் நள்ளிருளாய்,\nநீரெல்லாம் தேறியோர் நீளிரவாய் நீண்டதால்,\nபாரெல்லா முண்டநம் பாம்பணையான் வாரானால்,\nஆரெல்லே! வல்வி னையேன் ஆவிகாப் பாரினையே?
Verse 481
ஆவிகாப் பாரினியார்? ஆழ்கடல்மண் விண்மூடி,\nமாவிகார மாயோர் வல்லிரவாய் நீண்டதால்,\nகாவிசேர் வண்ணனென் கண்ணனும் வாரானால்,\nபாவியேன் நெஞ்சமே! நீயும்பாங் கல்லையே?
Verse 482
நீயும்பாங் கல்லைகாண் நெஞ்சமே! நீளிரவும்,\nஓயும் பொழுதின்றி யூழியாய் நீண்டதால்,\nகாயும் கடுஞ்சிலையென் காகுத்தன் வாரானால்,\nமாயும் வகையறியேன் வல்வி னையேன் பெண்பிறந்தே.
Verse 483
பெண்பிறந்தார் எய்தும் பெருந்துயர்காண் கிலேனென்று,\nஒண்சுடரோன் வாரா தொளித்தான்,இம்\nமண்ணளந்த கண்பெரிய செவ்வாயெங் காரேறு வாரானால்,\nஎண்பெரிய சிந்தைநோய் தீர்ப்பாரார் என்னையே?
Verse 484
ஆரென்னை யாராய்வார்? அன்னையரும் தோழியரும்,\nநீரென்னே? என்னாதே நீளிரவும் துஞ்சுவரால்,\nகாரன்ன மேனிநங் கண்ணனும் வாரானால்,\nபேரென்னை மாயாதால் வல்வினையேன் பின்நின்றே.
Verse 485
பின்நின்ற காதல்நோய் நெஞ்சம் பெரிதடுமால்,\nமுன்நின் றிராவூழி கண்புதைய மூடிற்றால்,\nமன்னின்ற சக்கரத்தெம் மாயவனும் வாரானால்,\nஇந்நின்ற நீளாவி காப்பாரார் இவ்விடத்தே?
Verse 486
காப்பாரார் இவ்விடத்து? கங்கிருளின் நுண்துளியாய்,\nசேட்பால தூழியாய்ச் செல்கின்ற கங்குல்வாய்,\nதூப்பால வெண்சங்கு சக்கரத்தன் தோன்றானால்,\nதீப்பால வல்வி னையேன் தெய்வங்காள். என்செய்கேன்?
Verse 487
தெய்வங்காள். என்செய்கேன்?ஓரிர வேழ் ஊழியாய்,\nமெய்வந்து நின்றென தாவி மெலிவிக்கும்\nகைவந்த சக்கரதென் கண்ணனும் வாரானால்,\nதைவந்த தண்தென்றல் வெஞ்சுடரில் தானடுமே.
Verse 488
வெஞ்சுடரில் தானடுமால் வீங்கிருளின் நுண்துளியாய்,\nஅஞ்சுடர வெய் யோன் அணிநெடுந்தேர் தோன்றாதால்,\nசெஞ்சுடர்த் தாமரைக்கண் செல்வனும் வாரானால்,\nநெஞ்சிடர்தீர்ப் பாரினியார்? நின்றுருகு கின்றேனே.
Verse 489
நின்றுருகு கின்றேனே போல நெடுவானம்,\nசென்றுருகி நுண்துளியாய்ச்செல்கின்ற கங்குல்வாய்,\nஅன்றொருகால் வையம் அளந்தபிரான் வாரானென்று,\nஒன்றொருகால் சொல்லாதுலகோ உறங்குமே.
Verse 490
உறங்குவான் போல்யோகு செய்த பெருமானை,\nசிறந்தபொழில் சூழ்குரு கூர்ச்சட கோபன்சொல்,\nநிறங்கிளர்ந்த அந்தாதி யாயிரத்து ளிப்பத்தால்,\nஇறந்துபோய் வைகுந்தம் சேராவா றெங்ஙனேயோ?
Verse 491
எங்ஙனேயோ அன்னை மீர்காள்! என்னை முனிவது நீர்?,\nநங்கள்கோலத் திருக் குறுங்குடி நம்பியை நான்கண்டபின்,\nசங்கினோடும் நேமி யோடும் தாமரைக் கண்களொடும்,\nசெங்கனிவா யொன்றி னொடும் செல்கின்ற தென்நெஞ்சமே.
Verse 492
என்நெஞ்சி னால்நோக்கிக் காணீர் என்னை முனியாதே,\nதென்னன் சோலைத் திருக்குறுங்குடி நம்பியை நான்கண்டபின்\nமின்னும் நூலும் குண்டலமும் மார்வில் திருமறுவும்,\nமன்னும் பூணும் நான்குதோளும் வந்தெங்கும் நின்றிடுமே.
Verse 493
நின்றிடும் திசைக்கும் நையுமென்று அன்னைய ரும்முனிதிர்,\nகுன்ற மாடத் திருக்குறுங்குடி நம்பியை நான்கண்டபின்,\nவென்றி வில்லும் தண்டும் வாளும் சக்கரமும்சங்கமும்,\nநின்று தோன்றிக் கண்ணுள்நீங்கா நெஞ்சுள்ளும் நீங்காவே.
Verse 494
நீங்கநில்லாக் கண்ண நீர்களென்று அன்னையரும் முனிதிர்,\nதேன்கொள் சோலைத் திருக்குறுங்குடி நம்பியை நான்கண்டபின்,\nபூந்தண் மாலைத் தண்டுழாயும் பொன்முடி யும்வடிவும்,\nபாங்கு தோன்றும் பட்டும்நாணும் பாவியேன் பக்கத்தவே.
Verse 495
பக்கம்நோக்கி நிற்கும் நையுமென்று அன்னைய ரும்முனிதிர்,\nதக்ககீர்த்திக் திருக்கு றுங்குடி நம்பியை நான்கண்டபின்\nதொக்கசோதித் தொண்டை வாயும் நீண்ட புருவங்களும்,\nதக்கதாமரைக் கண்ணும் பாவியே னாவியின் மேலனவே.
Verse 496
மேலும் வன்பழி நங்குடிக்கிவள் என்றன்னை காணக்கொடாள்\nசோலைசூழ் தண்திருக் குறுங்குடி நம்பியை நான்கண்டபின்,\nகோலநீள் கொடிமூக்கும் தாமரைக் கண்ணும் கனிவாயும்,\nநீலமேனியும் நான்கு தோளுமென் நெஞ்சம் நிறைந்தனவே.
Verse 497
நிறைந்த வன்பழி நங்குடிக்கிவள் என்றன்னை காணக்கொடாள்\nசிறந்தகீர்த்தித் திருக்கு றுங்குடி நம்பியை நான்கண்டபின்,\nநிறைந்தசோதி வெள்ளஞ் சூழ்ந்த நீண்டபொன் மேனியொடும்\nநிறைந்தென் னுள்ளே நின்றொழிந்தான் நேமியங் கையுளதே.
Verse 498
கையுள்நன் முகம்வைக்கும் நையுமென்று அன்னைய ரும்முனிதிர்,\nமைகொள் மாடத் திருக்குறுங்குடி நம்பியை நான்கண்டபின்,\nசெய்யதாமரைக் கண்ணு மல்குலும் சிற்றிடை யும்வடிவும்,\nமொய்யநீள்குழல் தாழ்ந்த தோள்களும் பாவியேன் முன்னிற்குமே.
Verse 499
முன்னின் றாயென்று தோழிமார்களும் அன்னைய ரும்முனிதிர்,\nமன்னு மாடத் திருக்குறுங்குடி நம்பியை நான்கண்டபின்,\nசென்னி நீண்முடி யாதியாய உலப்பி லணிகலத்தன்,\nகன்னல் பாலமு தாகிவந்தென் நெஞ்சம் கழியானே.
Verse 500
கழீயமிக்கதோர் காதல ளிவளென் றன்னை காணக்கொடாள்,\nவழுவில் கீர்த்தித் திருக்குறுங்குடி நம்பியை நான்கண்டபின்,\nகுழுமித் தேவர் குழாங்கள்தொழச் சோதிவெள் ளத்தினுள்ளே,\nஎழுவதோ ருருவென் னெஞ்சுள்ளெழும் ஆர்க்கு மறிவரிதே.
Verse 501
அறிவரிய பிரானை யாழியங்கையனை யேயலற்றி,\nநறியநன் மலர்நாடி நன்குருகூர்ச்சடகோபன் சொன்ன,\nகுறிகொளா யிரத்துள் ளிவைபத்தும் திருக்குறுங் குடிய தன்மேல்\nஅறியக் கற்றுவல்லார் வைட்டணவராழ்கடல் ஞாலத்துள்ளே.
Verse 502
கடல்ஞாலம் செய்தேனும் யானே என்னும்\nகடல்ஞாலம் ஆவேனும் யானே என்னும்,\nகடல்ஞாலம் கொண்டேனும் யானே என்னும்\nகடல்ஞாலம் கீண்டேனும் யானே என்னும்,\nகடல்ஞாலம் முண்டேனும் யானே என்னும்\nகடல்ஞாலத் தீசன்வந் தேறக் கொலோ?,\nகடல்ஞா லத்தீர்க் கிவையென் சொல்லுகேன்\nகடல்ஞா லத்தென் மகள்கற் கின்றனவே?
Verse 503
கற்கும்கல் விக்கெல்லை யிலனே என்னும்\nகற்கும்கல்வி யாவேனும் யானே என்னும்,\nகற்கும்கல்வி செய்வேனும் யானே என்னும்\nகற்கும்கல்வி தீர்ப்பேனும் யானே என்னும்,\nகற்கும்கல்விச் சாரமும் யானே என்னும்\nகற்கும்கல்வி நாதன்வன் தேறக் கொலோ?,\nகற்கும் கல்வியீ ர்க் கிவையென் சொல்லுகேன்\nகற்கும் கல்வியென் மகள்காண் கின்றனவே?
Verse 504
காண்கின்ற நிலமெல்லாம் யானே என்னும்\nகாண்கின்ற விசும்பெல்லாம் யானே என்னும்,\nகாண்கின்ற வெந்தீயெல்லாம் யானே என்னும்\nகாண்கின்ற இக்காற்றெல்லாம் யானே என்னும்,\nகாண்கின்ற கடலெல்லாம் யானே என்னும்\nகாண்கின்ற கடல்வண்ண னேறக் கொலோ?\nகாண்கின்ற வுலகத் தீர்க்கென் சொல்லுகேன்\nகாண்கின்ற வென்கா ரிகைசெய் கின்றனவே.
Verse 505
செய்கின்ற கிதியெல்லாம் யானே என்னும்\nசெய்வானின் றனகளும் யானே என்னும்,\nசெய்துமுன் னிறந்தனவும் யானே என்னும்\nசெய்கைப்பய னுண்பேனும் யானே என்னும்,\nசெய்வார்களைச் செய்வேனும் யானே என்னும்\nசெய்யகம லக்கண்ண னேறக் கொலோ?\nசெய்யவுல கத்தீர்க் கிவையென் சொல்லுகேன்\nசெய்ய கனிவா யிளமான் திறத்தே.
Verse 506
திறம்பாமல் மண் காக்கின்றேன் யானே என்னும்\nதிறம்பாமல் மலையெடுத் தேனே என்னும்,\nதிறம்பாமல் அசுரரைக்கொன் றேனே என்னும்\nதிறங்காட்டி யன்றைவரைக் காத்தேனே என்னும்,\nதிறம்பாமல் கடல்கடைந் தேனே என்னும்\nதிறம்பாத கடல்வண்ண னேறக் கொலோ?\nதிறம்பாத வுலகத் தீர்க்கென் சொல்லுகேன்\nதிறம்பா தென்திரு மகளெய் தினவே?
Verse 507
இனவேய்மலை யேந்தினேன் யானே என்னும்\nஇனவேறுகள் செற்றேனும் யானே என்னும்,\nஇனவான்கன்று மேய்த்தேனும் யானே என்னும்\nஇனவாநிரை காத்தேனும் யானே என்னும்,\nஇனவாயர் தலைவனும் யானே என்னும்\nஇனத்தேவர் தலைவன்வந் தேறக் கொலோ?,\nஇனவேற்கண் நல்லீர்க் கிவையென் சொல்லுகேன்\nஇனவேற் கண்ணி யென்மக ளுற்றனவே?
Verse 508
உற்றார்க ளெனக்கில்லை யாரும் என்னும்\nஉற்றார்க ளெனக்கிங்கெல் லாரும் என்னும்,\nஉற்றார்களைச் செய்வேனும் யானே என்னும்\nஉற்றார்களை அழிப்பேனும் யானே என்னும்,\nஉற்றார்களுக் குற்றேனும் யானே என்னும்\nஉற்றாரிலி மாயன் வந்தேறக் கொலோ?,\nஉற்றீர்கட் கென்சொல்லிச் சொல்லு கேன்யான்\nஉற்றென் னுடைப்பே தையுரைக் கின்றன வே.
Verse 509
உரைக்கின்ற முக்கட்பிரான் யானே என்னும்\nஉரைக்கின்ற திசைமுகன் யானே என்னும்,\nஉரைக்கின்ற அமரரும் யானே என்னும்\nஉரைக்கின்ற அமரர் கோன் யானே என்னும்,\nஉரைக்கின்ற முனிவரும் யானே என்னும்\nஉரைக்கின்ற முகில்வண்ண னேறக் கொலோ?,\nஉரைக்கின்ற உலகத் தீர்க்கென் சொல்லுகேன்\nஉரைக்கின்ற வென்கோ மளவொண் கொடிக்கே?
Verse 510
கொடிய வினையாது மிலனே என்னும்\nகொடியவினை யாவேனும் யானே என்னும்,\nகொடியவினை செய்வேனும் யானே என்னும்\nகொடியவினை தீர்ப்பேனும் யானே என்னும்,\nகொடியா னிலங்கைசெற் றேனே என்னும்\nகொடியபுள் ளுடையவ னேறக் கொலோ?,\nகொடிய வுலகத்தீர்க் கிவையென் சொல்லுகேன்\nகொடியேன் கொடியென் மகள்கோ லங்களே?
Verse 511
கோலங்கொள் சுவர்க்கமும் யானே என்னும்\nகோலமில் நரகமும் யானே என்னும்,\nகோலம்திகழ் மோக்கமும் யானே என்னும்\nகோலங்கொ ளுயிர்களும் யானே என்னும்,\nகோலங்கொள் தனிமுதல் யானே என்னும்\nகோலங்கொள் முகில்வண்ண னேறக் கொலோ?\nகோலங்கொ ளுலகத் தீர்க்கென் சொல்லுகேன்\nகோலந் திகழ்கோ தையென்கூந் தலுக்கே.
Verse 512
கூந்தல்மலர் மங்கைக்கும் மண்மடந் தைக்கும்\nகுலவாயர் கொழுந்துக்கும் கேள்வன் தன்னை\nவாய்ந்த வழுதி நாடன் மன்னு\nகுருகூர்ச் சடகோபன் குற்றே வல்செய்து,\nஆய்ந்த தமிழ்மாலை ஆயி ரத்துள்\nஇவையுமோர் பத்தும்வல் லார்,உலகில்\nஏந்து பெருஞ்செல்வந் தாராய்த் திருமால்\nஅடியார் களைப்பூ சிக்கநோற் றார்களே.
Verse 513
நோற்ற நோன்பிலேன் நுண்ணறி விலேனாகிலும் இனி யுன்னைவிட்டு,ஒன்றும்\nஆற்ற கின்றிலேன் அரவினணை யம்மானே,\nசேற்றுத் தாமரை செந்நெ லூடுமலர் சிரீவர மங்கலநகர்,\nவீற்றிருந்த எந்தாய். உனக்கு மிகையல்லே னங்கே.
Verse 514
அங்குற்றே னல்லே னிங்குற்றே னல்லேன் உன்னைக் காணும் அவாவில்\nவீழ்ந்து,நான் எங்குற் றேனுமல் லேனிலங்கைசெற்ற அம்மானே,\nதிங்கள் சேர்மணி மாடம் நீடு சிரீவர மங்கல நகருறை,\nசங்கு சக்கரத் தாய்! தமியேனுக் கருளாயே.
Verse 515
கருள புட்கொடி சக்க ரப்படை வான நாட! எங் கார்முகில் வண்ணா,\nபொருளல்லாத என்னைப் பொருளாக்கி அடிமை கொண்டாய்,\nதெருள்கொள் நான்மறை வல்லவர் பலர்வாழ் சிரீவர மங்கலநகர்க்கு,\nஅருள்செய்தங்கிருந் தாயறி யேனொரு கைம்மாறே.
Verse 516
மாறு சேர்படை நூற்றுவர் மங்க வோரைவர்க்கு ஆயன்று மாயப்போர் பண்ணி,\nநீறு செய்த எந்தாய். நிலங்கீண்ட அம்மானே,\nதேறு ஞானத்தர் வேத வேள்வியறாச் சிரீவர மங்கலநகர்,\nஏறிவீற் றிருந்தாய். உன்னை எங்கெய்தக் கூவுவனே?
Verse 517
எய்தக் கூவுதல் ஆவதே எனக்கு? எவ்வதெய் வத்து ளாயுமாய் நின்று,\nகைத வங்கள்செய் யும்கரு மேனியம் மானே,\nசெய்த வேள்வியர் வையத் தேவரறாச் சிரீவர மங்கலநகர்,\nகைத்தொழ இருந்தாய் அதுநானும் கண்டேனே.
Verse 518
ஏன மாய்நிலங் கீண்டவென் அப்பனே! கண்ணா! என்று மென்னை யாளுடை,\nவானநா யகனே! மணிமா ணிக்கச் சுடரே,\nதேன மாம்பொழில் தண்சிரீ வரமங்கலத் தவர்க்கை தொழவுறை\nவான மாமலை யே!அடி யேன்தொழ வந்தருளே.
Verse 519
வந்தருளி யென்னெஞ் சிடங்கொண்ட வானவர் கொழுந்தே! உலகுக்கோர்\nமுந்தைத் தாய்தந்தையே! முழுஏழுலகு முண்டாய்,\nசெந்தொ ழிலவர் வேத வேள்வியறாச் சிரீவர மங்கலநகர்,\nஅந்தமில் புகழாய்! அடியேனை அகற்றேலே.
Verse 520
அகற்ற நீவைத்த மாயவல் லைம்புலங்களாம் அவை நன்கறிந்தனன்,\nஅகற்றி என்னையும் நீஅருஞ் சேற்றில் வீழ்த்தி கண்டாய்,\nபகற்கதிர் மணிமாடம் நீடு சிரீவர மங்கை வாணனே! என்றும்\nபுகற்கரிய எந்தாய்!புள்ளின்வாய் பிளந்தானே!
Verse 521
புள்ளின்வாய் பிளந்தாய். மருதிடை போயினாய். எருதேழ் அடர்த்த,என்\nகள்ள மாயவனே! கருமாணிக்கச் சுடரே!\nதெள்ளியார் திருநான் மறைகள் வல்லார் மலிதண் சிரீவர மங்கை,\nஉள்ளிருந்த எந்தாய்! அருளாய் உய்யுமா றெனக்கே.
Verse 522
ஆறெ னக்குநின் பாதமே சரணாகத் தந்தொழிந்தாய், உனக் கோர்கைம்\nமாறு நானொன் றிலேனென தாவியு முனதே,\nசேரு கொள்கரும் பும்பெருஞ் செந்நெல்லும் மலிதண் சிரீவர மங்கை\nநாறு பூந்தண் துழாய்முடி யாய்! தெய்வ நாயகனே!
Verse 523
தெய்வ நாயகன் நாரணன் திரிவிக்கிரமன் அடியிணைமிசை,\nகொய்கொள் பூம்பொழில் சூழ்குரு கூர்ச்சட கோபன்\nசெய்த ஆயிரத் துள்ளிவை தண்சிரீ வரமங்கை மேய பத்துடன்,\nவைகல் பாட வல்லார் வானோர்க் காரா அமுதே.
Verse 524
ஆரா அமுதே! அடியேன் உடலம் நின்பால் அன்பாயே,\nநீராய் அலைந்து கரைய வுருக்குகின்ற நெடுமாலே,\nசீரார் செந்நெல் கவரி வீசும் செழுநீர்க் திருகுடந்தை,\nஏரார் கோலம் திகழக் கிடந்தாய் கண்டேன் எம்மானே!
Verse 525
எம்மா னே!என் வெள்ளை மூர்த்தி! என்னை ஆள்வானே,\nஎம்மா வுருவும் வேண்டு மாற்றால் ஆவாய் எழிலேறே,\nசெம்மா கமலம் செழுநீர் மிசைக்கண்மலரும் திருக்குடந்தை,\nஅம்மா மலர்க்கண் வளர்கின் றானே.என்நான் செய்கேனே.
Verse 526
என்நான் செய்கேன்? யாரே களைகண்? என்னையென் செய்கின்றாய்?\nஉன்னால் அல்லால் யாவ ராலும் ஒன்றும் குறைவேண்டேன்,\nகன்னார் மதிள்சூழ் குடந்தைக் கிடந்தாய்! அடியேன் அருவாழ்ணாள்,\nசென்னா ளெந்நாள் அந்நா ளுன்தாள் பிடித்தே செலக்காணே.
Verse 527
செலக்காண் கிற்பார் காணும் அளவும் செல்லும் கீர்த்தியாய்!\nஉலப்பி லானே எல்லா வுலகும் உடைய ஒருமூர்த்தி!\nநலத்தால் மிக்கார் குடந்தைக் கிடந்தாய்! உன்னைக் காண்பான்நான்\nஅலப்பாய்,ஆகா சத்தை நோக்கி அழுவன் தொழுவனே.
Verse 528
அழுவன் தொழுவன் ஆடிக் காண்பன் பாடி அலற்றுவன்,\nதழுவல் வினையால் பக்கம் நோக்கி நாணிக் கவிழ்ந்திருப்பன்,\nசெழுவொண் பழனக் குடந்தைக் கிடந்தாய்! செந்தா மரைக்கண்ணா!\nதொழுவன் னேனை யுன்தாள் சேரும் வகையே சூழ்கண்டாய்.
Verse 529
சூழ்கண் டாயென் தொல்லை வினையை அறுத்துன் அடி சேரும்\nஊழ்கண் டிருந்தே, தூராக் குழிதூர்த்து எனைநாள் அகன்றிருப்பன்?\nவாழ்தொல் புகழார் குடந்தைக் கிடந்தாய்! வானோர் கோமானே!\nயாழி னிசையே! அமுதே! அறிவின் பயனே! அரியேறே!
Verse 530
அரியே றே!என் அம்பொற் சுடரே! செங்கட் கருமுகிலே,\nஎரியேபவளக் குன்றே! நாற்றோள் எந்தாய்! உனதருளே,\nபிரியா அடிமை யென்னைக் கொண்டாய் குடந்தைத் திருமாலே,\nதரியே னினியுன் சரணந் தந்தென் சன்மம் களையாயே.
Verse 531
களைவாய் துன்பம் களையா தொழிவாய் களைகண் மற்றிலேன்,\nவளைவாய் நேமிப் படையாய்! குடந்தைக் கிடந்த மாமாயா!\nதளரா வுடலம் என்ன தாவி சரிந்து போம்போது,\nஇளையா துனதாள் ஒருங்கப் பிடித்து போத இசைநீயே.
Verse 532
இசைவித் தென்னை யுன்தாள் இணைகீழ் இருத்தும் அம்மானே!\nஅசைவில் அமரர் தலைவர்! தலைவா ஆதி பெருமூர்த்தி!\nதிசைவில் வீசும் செழுமா மணிகள் சேரும் திருக்குடந்தை,\nஅசைவில் உலகம் பரவக் கிடந்தாய். காண வாராயே.
Verse 533
வாரா வருவாய் வருமென் மாயா! மாயா மூர்த்தியாய்!\nஆரா அமுதாய் அடியேன் ஆவி அகமே தித்திப்பாய்,\nதீரா வினைகள் தீர என்னை ஆண்டாய்! திருக்குடந்தை\nஊராய்! உனக்காட்பட்டும் அடியேன் இன்னம் உழல்வேனோ?
Verse 534
உழலை யென்பின் பேய்ச்சி முலையூடு அவளை யுயிருண்டான்,\nகழல்கள் அவையே சரணாக் கொண்ட குருகூர்ச் சடகோபன்,\nகுழலில் மலியச் சொன்ன ஓராயிரத்துள் இப்பத்தும்\nமழலை தீர வல்லார் காமர் மானேய் நோக்கியர்க்கே.
Verse 535
மானேய் நோக்குநல்லீர்! வைகலும்வினை யேன்மெலிய,\nவானார் வண்கமுகும் மதுமல்லிகை யுங்கமழும்,\nதேனார் சோலைகள்சூழ் திருவல்ல வாழுறையும்ரை,\nகோனாரை அடியேண் அடிகூடுவ தென்றுகொலோ?
Verse 536
என்றுகொல் தோழிமீர்காளெம்மைநீர்நலிந் தென்செய்தீரோ?\nபொன்திகழ் புன்னைமகிழ் புதுமாதவி மீதணவி,\nதென்றல் மணங்கமழும் திருவல்ல வாழ்நகருள்\nநின்றபி ரான்,அடிநீ றடியோங்கொண்டு சூடுவதே?
Verse 537
சூடும் மலர்க்குழலீர்! துயராட்டியே னைமெலிய,\nபாடுநல் வேதவொலி பரவைத்திரை போல்முழங்க,\nமாடுயர்ந் தோமப்புகை கமழும்தண் திருவல்லவாழ்\nநீடுறை கின்றபிரான் கழல்கண்டுங்கொல் நிச்சலுமே?
Verse 538
நிச்சலும் தோழிமீர்காள்! எம்மைநீர்நலிந் தென்செய்தீரோ?\nபச்சிலை நீள்கமுகும் பலவும்தெங்கும் வாழைகளும்,\nமச்சணி மாடங்கள்மீ தணவும்தண் திருவல்லவாழ்\nநச்சர வினணைமேல் நம்பிரானது நன்னலமே.
Verse 539
நன்னலத் தோழிமீர்காள். நல்லவந்தணர் வேள்விப்புகை,\nமைந்நலங் கொண்டுயர்விண் மறைக்கும்தண் திருவல்லவாழ்,\nகன்னலங் கட்டிதன்னைக் கனியையின் னமுதந்தன்னை,\nஎன்னலங் கொள்சுடரை என்றுகொல்கண்கள் காண்பதுவே?
Verse 540
காண்பதெஞ் ஞான்றுகொலொ வினையேன்கனி வாய்மடவீர்,\nபாண்குரல் வண்டினோடு பசுந்தென்றலு மாகியெங்கும்,\nசேண்சினை யோங்குமரச் செழுங்கானல் திருவல்லவாழ்,\nமாண்குறள் கோலப்பிரான் மலர்த்தாமரைப் பாதங்களே?
Verse 541
பாதங்கள் மேலணிபூத் தொழக்கூடுங்கொல் பாவைநல்லீர்,\nஓதநெ டுந்தடத்துள் உயர்தாமரை செங்கழுநீர்,\nமாதர்கள் வாண்முகமும் கண்ணுமேந்தும் திருவல்லவாழ்,\nநாதனிஞ் ஞாலமுண்ட நம்பிரான்தன்னை நாடோறுமே?
Verse 542
நாள்தோறும் வீடின்றியே தொழக்கூடுங்கொல் நன்னுதலீர்,\nஆடுறு தீங்கரும்பும் விளைசெந்நெலு மாகியெங்கும்,\nமாடுறு பூந்தடஞ்சேர் வயல்சூழ்தண் திருவல்லவாழ்,\nநீடுறை கின்றபிரான் நிலந்தாவிய நீள்கழலே?
Verse 543
கழல்வளை பூரிப்பயாம் கண்டுகைதொழக் கூடுங்கொலோ,\nகுழலென்ன யாழுமென்னக் குளிர்சோலையுள் தேனருந்தி,\nமழலை வரிவண்டுகள் இசைபாடும் திருவல்லவாழ்,\nசுழலின் மலிசக்கரப் பெருமானது தால்லருளே?
Verse 544
தொல்லருள் நல்வினையால் சொல்லக்கூடுங்கொல் தோழிமீர்காள்,\nதொல்லருள் மண்ணும்விண்ணும் தொழநின்ற திருநகரம்,\nநல்லரு ளாயிரவர் நலனேந்தும் திருவல்லவாழ்,\nநல்லருள் நம்பெருமான் நாராயணன் நாமங்களே?
Verse 545
நாமங்க ளாயிர முடையநம்பெரு மானடிமேல்,\nசேமங்கொள் தென்குருகூர்ச்சடகோபன் தெரிந்துரைத்த,\nநாமங்க ளாயிரத்துள் இவைபத்தும் திருவல்லவாழ்,\nசேமங்கொள் தென்னகர்மேல் செப்புவார்சிறந் தார்பிறந்தே.
Verse 546
பிறந்த வாறும் வளர்ந்த வாறும் பெரிய பாரதம் கைசெய்து, ஐவர்க்குத்\nதிறங்கள் சாட்டி யிட்டுச் செய்து போன மாயங்களும்,\nநிறந்த னூடுபுக் கெனதாவியை நின்றுநின்று உருக்கி யுண்கின்ற,இச்\nசிறந்த வான்சுட ரே! உன்னை யென்றுகொல் சேர்வதுவே.
Verse 547
வதுவை வார்த்தையுள் ஏறு பாய்ந்ததும் மாய மாவினை வாய்பி ளந்ததும்\nமதுவைவார் குழலார் குரவை பிணைந்த குழகும், அதுவிது\nஉதுவென்ன லாவன வல்ல என்னையுன் செய்கை நைவிக்கும்,\nமுதுவைய முதல்வா! உன்னை யென்று தலைப் பெய்வனே?
Verse 548
பெய்யும் பூங்குழல் பேய்முலை யுண்ட பிள்ளைத் தேற்றமும் பேர்ந்தோர் சாடிறச்\nசெய்ய பாதமொன் றால்செய்த நின்சிறுச் சேவகமும்,\nநெய்யுண் வார்த்தையுள், அன்னை கோல்கொள்ள நீயுன் தாமரைக் கண்கள் நீர்மல்க,\nபையவே நிலையும் வந்தென் னெஞ்சை யுருக்குங்களே.
Verse 549
கள்ள வேடத்தைக் கொண்டுபோய்ப் புறம்புக்க வாறும்,\nகலந்தசுரரை உள்ளம் பேதம்செய் திட்டுயி ருண்ட உபாயங்களும்,\nவெள்ள நீர்ச்சடை யானும் நின்னிடை வேறலாமை\nவிளங்க நின்றதும், உள்ளமுள் குடைந்தென் உயிரை யுருக்கி யுண்ணுமே.
Verse 550
உள்ளம் வானவர் கோனுக் காயர் ஒருப்ப டுத்த அடிசி லுண்டதும்,\nவண்ணமால் வரையை யெடுத்து மழைகாத்ததும்,\nமண்ணை முன்படைத் துண்டு மிழ்ந்துக டந்தி டந்து மணந்த மாயங்கள்,\nஎண்ணுந் தோறுமென் னெஞ்செரி வாய்மெழு கொக்குநின்றே.
Verse 551
நின்றவாறு மிருந்த வாறும் கிடந்த வாறும் நினைப்பரியன\nஒன்றலா வுருவாய் அருவாயநின் மாயங்கள்,\nநின்று நின்று நினைக்கின் றேனுன்னை எங்ங னம்நினை கிற்பன்,பாவியேற்கு\nஒன்றுநன் குரையாய் உலக முண்ட ஒண்சுடரே.
Verse 552
ஒண்சுடரோ டிருளுமாய் நின்ற வாறும் உண்மையோ டின்மையாய் வந்து,என்\nகண்கொ ளாவகை நீகரந் தென்னைச் செய்கின்றன,\nஎண்கொள் சிந்தையுள் நைகின்றேனென் கரிய மாணிக்க மே.என் கண்கட்குத்\nதிண்கொள்ள வொருநாள் அருளாயுன் திருவுருவே.
Verse 553
திருவுருவு கிடந்த வாறும் கொப்பூழ்ச் செந்தா மரைமேல்,திசைமுகன்\nகருவுள்வீற் றிருந்து படைத்திட்ட கருமங்களும்,\nபொருவி லுந் தனி நாயகமவை கேட்குந் தோறுமென் னெஞ்சம் நின்று நெக்கு,\nஅருவி சோரும் கண்ணீ ரென்செய்கேன் அடியேனே.
Verse 554
அடியை மூன்றை யிரந்த வாறும் அங்கேநின்றாழ் கடலும் மண்ணும் விண்ணும்\nமுடிய, ஈரடியால் முடித்துக் கொண்ட முக்கியமும்,\nநொடியு மாறவை கேட்குந் தோறுமென் நெஞ்சம் நின்தனக் கேக ரைந்துகும்,\nகொடியவல் வினையேன் உன்னை யென்றுகொல் கூடுவதே?
Verse 555
கூடிநீரை கடைந்த வாறும் அமுதம் தேவர் உண்ண, அசுரரை\nவீடும் வண்ணங்க ளேசெய்து போன வித்தகமும்,\nஊடு புக்கென தாவியை யுருக்கி யுண்டிடு கின்ற, நின்தன்னை\nநாடும் வண்ணம் சொல்லாய் நச்சுநா கணையானே.
Verse 556
நாகணைமிசை நம்பிரான் சரணே சரண் நமக்கென்று, நாடொறும்\nஏக சிந்தைய னாய்க்குரு கூர்ச்சட கோபன் மாறன்,\nஆக நூற்ற அந்தாதி யாயிரத்துள் இவையுமோர் பத்தும் வல்லார்,\nமாக வைகுந்தத்து மகிழ்வெய்துவர் வைகலுமே.
Verse 557
வைகல்பூங் கழிவாய் வந்து மேயும் குருகினங்காள்,\nசெய்கொள் செந்நெ லுயர்திருவண்வண் டூருறையும்,\nகைகொள் சக்கரத் தென்கனி வாய்பெரு மானைக்கண்டு,\nகைகள் கூப்பிச் சொல்லீர் வினையாட்டியேன் காதன்மையே.
Verse 558
காதல் மென்பெடை யோடுடன் மேயும் கருநாராய்!\nவேத வேள்வி யொலிமுழங்கும் தண் டிருவண்வண்டூர்,\nநாதன் ஞாலமெல் லாமுண்ட நம்பெரு மானைக்கண்டு,\nபாதம் கைதொழுது பணியீ ரடியேன் திறமே.
Verse 559
திறங்க ளாகியெங் கும்செய்களூடுழல் புள்ளினங்காள்,\nசிறந்த செல்வம் மல்கு திருவண்வண் டூருறையும்,\nகறங்கு சக்கரக் கைக்கனி வாய்ப்பெரு மானைக்கண்டு,\nஇறங்கி நீர்தொழுது பணியீரடியே னிடரே.
Verse 560
இடரில் போகம் மூழ்கி யிணைந்தாடும் மடவன்னங்காள்,\nவிடலில் வேத வொலிமுழங்கும்தண் திருவண்வண்டூர்,\nகடலில் மேனிப் பிரான்கண் ணணைநெடு மாலைக்கண்டு,\nஉடலம் நைந்தொருத் தியுரு கும் என் றுணர்த்துமினே.
Verse 561
உணர்த்த லூட லுணர்ந்துடன் மேயும் மடவன்னங்காள்,\nதிணர்த்த வண்டல்கள் மேல்சங்கு சேரும் திருவண்வண்டூர்,\nபுணர்த்த பூந்தண் டுழாய்முடி நம்பெரு மானைக்கண்டு,\nபுணர்த்த கையினரா யடியேனுக்கும் போற்றுமினே.
Verse 562
போற்றியான் இரந் தேன்புன்னை மேலுறை பூங்குயில் காள்,\nசேற்றில் வாளை துள்ளும் திருவண்வண் டூருறையும்,\nஆற்ற லாழியங் கையம ரர்பெரு மானைக்கண்டு,\nமாற்றங் கொண்டரு ளீர்மையல் தீர்வ தொருவண்ணமே.
Verse 563
ஒருவண்ணம்சென்று புக்கெனக்கு ஒன்றுரை யொண்கிளியே,\nசெருவொண் பூம்பொழில் சூழ்செக்கர் வேலை திருவண்வண்டூர்,\nகருவண்ணம் செய்யவாய் செய்யகண் செய்யகை செய்யகால்,\nசெருவொண் சக்கரம் சங்கடை யாளம் திருந்தக் கண்டே.
Verse 564
திருந்தக் கண்டெனக் கொன்றுரை யாயொண் சிறுபூவாய்\nசெருந்தி ஞாழல் மகிழ்புன்னை சூழ்தண் டிருவண்வண்டூர்,\nபெருந்தண் தாமரைக் கண்பெரு நீண்முடி நாள்தடந்தோள்,\nகருந்திண் மாமுகில் போல்திரு மேனி யடிகளையே.
Verse 565
அடிகள் கைதொழு தலர்மேல் அசையும் அன்னங்காள்,\nவிடிவை சங்கொலிக் கும்திரு வண்வண் டூருறையும்,\nகடிய மாயன்தன் னைக்கண்ணனை நெடு மாலைக்கண்டு,\nகொடிய வல்வினை யேன்திறம் கூறுமின் வேறுகொண்டே.
Verse 566
வேறு கொண்டும்மை யானிரந் தேன்வெறி வண்டினங்காள்,\nதேறு நீர்ப்பம் பைவட பாலைத் திருவண்வண்டூர்,\nமாறில் போரரக் கன்மதிள் நீறெழச் செற்றுகந்த,\nஏறுசேவக னார்க்கென்னை யுமுளள் என்மின்களே.
Verse 567
மின்கொள் சேர்புரி நூல்குற ளாயகல் ஞாலம்கொண்ட,\nவன்கள் வனடி மேல்குரு கூர்ச்சட கோபன்சொன்ன,\nபண்கொள் ஆயிரத் துள்ளிவை பத்தும் திருவண்வண்டூர்க்கு,\nஇன்கொள் பாடல் வல்லார் மதனர்மின் னி டையவர்க்கே.
Verse 568
மின்னிடை மடவார்கள் நின்னருள் சூடுவார் முன்புநா னதஞ்சுவன்,\nமன்னுடை இலங்கை யரண்காய்ந்த மாயவனே!\nஉன்னுடைய சுண்டாயம் நானறிவன் னினியது கொண்டு செய்வதென்,\nஎன்னுடைய பந்தும் சுழலும் தந்து போகு நம்பீ!
Verse 569
போகுநம் பீ! உன்தாமரை புரைகண் ணிணையும் செவ்வாய் முறுவலும்,\nஆகுலங்கள் செய்ய அழிதற்கே நோற்றோ மேயாம்?,\nதோகைமா மயிலார்கள் நின்னருள் சூடுவார் செவியோசை வைத்தெழ,\nஆகள் போகவிட்டுப் குழலூது போயிருந்தே.
Verse 570
போயி ருந்தும்நின் புள்ளுவம் அறியாத வர்க்குரை நம்பி! நின்செய்ய\nவாயிருங் கனியுங் கண்களும் விபரீத மிந்நாள்,\nவேயி ருந்தடந் தோளினா ரித்திரு வருள்பெறு வார்யவர் கொல்\nமாயிருங் கடலைக் கடைந்த பெருமானாலே?
Verse 571
ஆலி னீளிலை யேழுலக முண்டன்று நீகிடந் தாய்,உன் மாயங்கள்\nமேலை வானவரு மறியா ரினியெம் பரமே?\nவேலி னேர்த்தடங் கண்ணினார் விளையாடு சூழலைச் சூழவே நின்று\nகாலி மேய்க்கவல் லாய்! எம்மைநீ கழறேலே.
Verse 572
கழறேல் நம்பீ உன் கைதவம் மண்ணும் விண்ணும் நன்கறியும், திண்சக்கர\nநீழறு தொல்படை யாய்.உனக் கொன்றுணர்த் துவன் நான்,\nமழறு தேன்மொழி யார்கள் நின்னருள் சூடுவார் மனம் வாடி நிற்க,எம்\nகுழறு பூவையோடும் கிளியோடும் குழகேலே.
Verse 573
குழகி யெங்கள் குழமணன் கொண்டு கோயின்மை செய்து கன்மமொன் றில்லை,\nபழகி யாமிருப் போம்பர மேயித் திருவருள்கள்?,\nஅழகி யாரிவ் வுலகுமூன் றுக்கும் தேவிதமை தகுவார் பலருளர்,\nகழக மேறேல் நம்பீ! உனக்கும் இளைதே கன்மமே.
Verse 574
கன்மமன் றெங்கள் கையில் பாவை பறிப்பது கடல்ஞால முண்டிட்ட,\nநின்மலா நெடியாய். உனக்கேலும் பிழைபிழையே,\nவன்மமே சொல்லி யெம்மைநீ விளையாடுதி அதுகேட்கில்\nஎன்னைமார், தன்ம பாவமென் னாரொரு நான்று தடிபிணக்கே.
Verse 575
பிணக்கி யாவையும் யாவரும் பிழையாமல் பேதித்தும் பேதி யாதது,ஓர்\nகணக்கில் கீர்த்தி வெள்ளக் கதிர்ஞான மூர்த்தியினாய்,\nஇணக்கி யெம்மையெந் தோழிமார் விளையாடப் போதுமின் என போந்தோமை,\nஉணக்கி நீவளைத் தாலென்சொல் லாருக வாதவரே?
Verse 576
உகவையால் நெஞ்சம் உள்ளுருகி உன்தாமரைத் தடங்கண் விழிகளின்,\nஅகவலைப் படுப்பான் அழித்தாயுன் திருவடியால்,\nதகவு செய்திலை எங்கள் சிற்றிலும் யாமடு சிறுசோறுங் கண்டு,நின்\nமுகவொளி திகழ முறுவல் செய்து நின்றிலையே.
Verse 577
நின்றிலங்கு முடியினாய். இருபத்தோர் கால்அரசு களை கட்ட,\nவென்றி நீண்மழுவா வியன்ஞாலம் முன்படைத்தாய்,\nஇன்றிவ் வாயர் குலத்தை வீடுய்யத் தோன்றிய கருமா ணிக்கச்சுடர்,\nநின்றன்னால் நலிவே படுவோ மென்றும் ஆய்ச்சி யோமே.
Verse 578
ஆய்ச்சி யாகிய அன்னையால் அன்று வெண்ணெய் வார்த்தையுள்,\nசீற்ற முண்டழு கூத்த அப்பன் தன்னைக் குருகூர்ச் சடகோபன்,\nஏத்திய தமிழ்மாலை யாயிரத்துள் இவையு மோர்பத் திசையோடும்,\nநாத்தன்னால் நவில வுரைப்பார்க் கில்லை நல்குரவே.
Verse 579
நல்குரவும் செல்வும் நரகும் சுவர்க்கமுமாய்,\nவெல்பகையும் நட்பும் விடமும் அமுதமுமாய்,\nபல்வகையும் பரந்தபெரு மானென்னை யாள்வானை,\nசெல்வம்மல்கு குடித்திரு விண்ணகர்க் கண்டேனே.
Verse 580
கண்டவின்பம் துன்பம் கலக்கங்களும் தேற்ற முமாய்,\nதண்டமும் தண்மையும் தழலும் நிழலுமாய்,\nகண்டுகோ டற்கரிய பெருமானென்னை யாள்வானூர்,\nதெண்டிரைப் புனல்சூழ் திருவிண்ணகர் நன்னகரே.
Verse 581
நகரமும் நாடுகளுமு ஞானமும் மூடமும் ஆய்,\nநிகர் இல் சூழ், சுடர் ஆய், இருள் ஆய், நிலன் ஆய், விசும்பு ஆய்,\nசிகர மாடங்கள் சூழ் திருவண்ணகர் சேர்ந்த பிரான்\nபுகர் கொள் கீர்த்தி அல்லால், இல்லை- யாவர்க்கும் புண்ணியமே
Verse 582
புண்ணியம் பாவம், புணர்ச்சி பிரிவு என்று இவை ஆய்,\nஎண்ண ஆய் மறப்பு ஆய் உண்மை ஆய் இன்மை ஆய், அல்லன் ஆய்,\nதிண்ண மாடங்கள் சூழ் திருவிண்ணகர் சேர்ந்த பிரான்.\nகண்ணன் இன் அருளே கண்டு கொள்மின்கள் – கைதவமே?
Verse 583
கைதவம் செம்மை கருமை வெளுமையுமாய்,\nமெய்பொய் யிளமை முதுமைபுதுமை பழமையுமாய்,\nசெய்யதிண் மதிள்சூழ் திருவிண்ணகர்ச் சேர்ந்தபிரான்,\nபெய்தகாவு கண்டீர் பெருந்தேவுடை மூவுலகே.
Verse 584
மூவுலகங் களுமாய் அல்லனாயுகப் பாய்முனிவாய்,\nபூவில்வாழ் மகளாய்த் தவ்வையாய்ப்பு ழாய்பழியாய்,\nதேவர்மே வித்தெழும் திருவிண்ணகர்ச் சேர்ந்தபிரான்,\nபாவியேன் மனத்தே யுறைகின்ற பரஞ்சுடரே.
Verse 585
பரஞ்சுடர் உடம்பாய் அழுக்குபதித்த வுடம்பாய்,\nகரந்தும்தோன் றியும்நின்றும் கைதவங்கள் செய்யும்,விண்ணோர்\nசிரங்களால் வணங்கும் திருவிண்ணகர்ச் சேர்ந்தபிரான்,\nவரங்கொள்பாத மல்லாலில்லை யாவர்க்கும் வன்சரணே.
Verse 586
வன்சரண் சுரர்க்காய் அசுரர்க்குவெங் கூற்றமுமாய்,\nதன்சரண் நிழற்கீ ழுலகம்வைத்தும் வையாதும்,\nதென்சரண் திசைக்குத் திருவிண்ணகர்ச் சேர்ந்தபிரான்,\nஎன்சரணென் கண்ணன் என்னையாளுடை என்னப்பனே..
Verse 587
என்னப்பன் எனக்காயிகுளாய் என்னைப் பெற்றவளாய்,\nபொன்னப்பன் மணியப்பன் முத்தப்பனென் அப்பனுமாய்,\nமின்னப்பொன் மதிள்சூழ்திரு விண்ணகர்ச் சேர்ந்தவப்பன்,\nதன்னொப்பா ரில்லப்பன் தந்தனன்தன தாள்நிழலே.
Verse 588
நிழல்வெயில் சிறுமைபெருமை குறுமை நெடுமையுமாய்,\nசுழல்வனநிற் பனமற்று மாயவை அல்லனுமாய்,\nமழலைவாழ் வண்டுவாழ் திருவிண்ணகர் மன்னுபிரான்,\nகழல்களன்றி மற்றோர் களைகணிலம் காண்மின்களே.
Verse 589
காண்மின்க ளுலகீர் என்று கண்முகப் பேநிமிர்ந்த,\nதாளிணையன் தன்னைக் குருகூர்ச் சடகோபன் சொன்ன,\nஆணையா யிரத்துத்திரு விண்ணகர்ப்பத் தும்வல்லர்,\nகோணையின்றி விண்ணோர்க் கொன்றுமாவர்குரவர்களே.
Verse 590
குரவை யாய்ச்சிய ரோடு கோத்ததும் குன்றமொன் றேந்தியதும்\nஉரவுநீர்ப் பொய்கை நாகம் காய்ந்ததும் உட்பட மற்றும்பல,\nஅரவில் பள்ளிப் பிரான்தன் மாய வினைகளை யேயலற்றி,\nஇரவும் நன்பக லும்த விர்கிலம் என்ன குறைவெனக்கே?
Verse 591
கேயத் தீங்குழ லூதிற்றும் நிரைமேய்த்த தும்,கெண்டை யொண்கண்\nவாசப் பூங்குழல் பின்னை தோள்கள் மணந்ததும் மற்றும்பல,\nமாயக் கோலப் பிரான்தன் செய்கை நினைந்து மனம்குழைந்து,\nநேயத் தோடு கழிந்த போதெனக் கெவ்வுல கம்நிகரே?
Verse 592
நிகரில்மல்ல ரைச்செற்ற தும்நிரை மேய்த்ததும் நீணெடுங்கைச்,\nசிகரமாகளி றட்டதும் இவை போல்வனவும் பிறவும்,\nபுகர்கொள் சோதிப் பிரான்தன் செய்கை நினைந்து புலம்பி, என்றும்\nநுகர் வைகல் வைகப்பெற் றேன் எனக்கு என்இனி நோவதுவே.
Verse 593
நோவ ஆய்ச்சி யுரலோ டார்க்க இரங்கிற்றும் வஞ்சப்பெண்ணைச்,\nசாவப் பாலுண் டதும்ஊர் சகடம் இறச்சா டியதும்,\nதேவக் கோல பிரான்தன் செய்கை நினைந்து மனம்குழைந்து,\nமேவக் காலங்கள் கூடி னேன்எ னக்கு என்இனி வேண்டுவதே?
Verse 594
வேண்டி தேவ ரிரக்க வந்து பிறந்ததும் வீங்கிருள்வாய்,\nபூண்டன் றன்னை புலம்பப் போயங்கோர் ஆய்க்குலம் புக்கதும்,\nகாண்ட லின்றி வளர்ந்து கஞ்சனைத் துஞ்சவஞ் சம்செய்ததும்,\nஈண்டு நான்அலற் றப்பெற் றென்எ னக்கு என்ன இகலுளதே?
Verse 595
இகல்கொள் புள்ளை பிளந்த தும்இ மில் ஏறுகள் செற்றதுவும்,\nஉயர்கொள் சோலைக் குருந்தொ சித்ததும் உட்பட மற்றும்பல,\nஅகல்கொள் வையம் அளந்த மாயனென் அப்பன்றன் மாயங்களே,\nபகலிராப் பரவப் பெற்றேன் எனக்கென்ன மனப்ப ரிப்பே?
Verse 596
மனப்பரி போட ழுக்கு மானிட சாதியில் தான்பிறந்து,\nதனக்கு வேண்டுருக் கொண்டு தான்றன சீற்றத்தினை முடிக்கும்,\nபுனத்து ழாய்முடி மாலை மார்பனென் அப்பன்தன் மாயங்களே,\nநினைக்கும் நெஞ்சுடை யேனெ னக்கினி யார்நிகர் நீணிலத்தே?
Verse 597
நீணிலத் தொடுவான் வியப்ப நிறைபெரும் போர்கள் செய்து,\nவாண னாயிரம் தோள்து ணித்ததும் உட்பட மற்றும்பல,\nமாணி யாய்நிலம் கொண்ட மாயனென் அப்பன்றன் மாயங்களே,\nகாணும் நெஞ்சுடை யேனெனக் கினியென கலக்க முண்டே?
Verse 598
கலக்க வேழ்கட லேழ்மலை யுலகே ழும்கழி யக்கடாய்,\nஉலக்கத் தேர் கொடு சென்ற மாயமும் உட்பட மற்றும்பல,\nவலக்கை யாழி யிடக்கை சங்கம் இவையுடை மால்வண்ணனை,\nமலக்குநா வுடையேற்கு மாறுள தோவிம் மண்ணின் மிசையே?
Verse 599
மண்மிசைப் பெரும்பாரம் நீங்கவோர்பாரத மாபெ ரும்போர்,\nபண்ணி, மாயங்கள் செய்து, சேனையைப் பாழ்பட நூற்றிட்டுப்போய்,\nவிண்மி சைத்தன தாம மேபுக மேவிய சோதிதன்தாள்,\nநண்ணி நான்வணங் கப்பெற் றென்எனக் கார்பிறர் நாயகரே?
Verse 600
நாய கன்முழு வேழுல குக்குமாய் முழுவே ழுலகும்,தன்\nவாய கம்புக வைத்துமிழ்ந் தவையாய் அவையல் லனுமாம்,\nகேசவன் அடியி ணைமிசைக்குரு கூர்ச்சட கோபன் சொன்ன\nதூய வாயிரத் திப்பத் தால் பத்தராவர் துவளின்றியே.
Verse 601
துவளில் மாமணி மாட மோங்கு தொலைவில் லிமங்க லம்தொழும்\nஇவளை, நீரினி யன்னை மீர்! உமக் காசை யில்லை விடுமினோ,\nதவள வொண்சங்கு சக்க ரமென்றும் தாம ரைத்தடங் கணென்றும்,\nகுவளை யொண்மலர்க் கண்கள் நீர்மல்க நின்று நின்று குமுறுமே.
Verse 602
குமிறு மோசை விழவொ லித்தொலை வில்லி மங்கலம் கொண்டுபுக்கு,\nஅமுத மென்மொழி யாளை நீருமக் காசை யின்றி அகற்றினீர்,\nதிமிர்க்கொண் டாலொத்து நிற்கும் மற்றிவள் தேவ தேவபி ரானென்றே,\nநிமியும் வாயொடு கண்கள் நீர்மல்க நெக்கொ சிந்து கரையுமே.
Verse 603
கரைகொள் பைம்பொழில் தண்ப ணைத்தொலை வில்லி மங்கலம் கொண்டுபுக்கு,\nஉரைகொ ளின்மொழி யாளை நீருமக் காசை யின்றி அகற்றினீர்,\nதிரைகொள் பெளவத்து சேர்ந்த தும்திசை ஞாலம் தாவி யளந்ததும்,\nநிரைகள் மேய்த்தது மேபி தற்றி நெடுங்கண் ணீர்மல்க நிற்குமே.
Verse 604
நிற்கும் நான்மறை வாணர் வாழ்தொலை வில்லி மங்கலங் கண்டபின்,\nஅற்க மொன்றும் அறிவு றாள்மலிந் தாள்கண் டீரிவள் அன்னைமீர்,\nகற்கும் கல்வியெல் லாம்க ருங்கடல் வண்ணன் கண்ணபி ரானென்றே,\nஒற்க மொன்றுமி லள்உகந்துகந்து உள்மகிழ்ந்து குழையுமே.
Verse 605
குழையும் வாள்முகத் தேழை யைத்தொலை வில்லி மங்கலம் கொண்டுபுக்கு,\nஇழைகொள் சோதிச்செந் தாம ரைக்கட் பிரானி ருந்தமை காட்டினீர்,\nமழைபெய் தாலொக்கும் கண்ண நீரினொடு அன்று தொட்டும்மை யாந்து,இவள்\nநுழையும் சிந்தையள் அன்னை மீர்.தொழும் அத்தி சையுற்று நோக்கியே.
Verse 606
நோக்கும் பக்கமெல் லாம்க ரும்பொடு செந்நெ லோங்குசெந் தாமரை,\nவாய்க்கும் தண்பொரு நல்வ டகரை வந்தொ லைவில்லி மங்கலம்,\nநோக்கு மேல்அத் திசையல் லால்மறு நோக்கி லள்வைகல் நாள்டொறும்,\nவாய்க்கொள் வாசக மும்ம ணிவண்ணன் நாம மேயிவள் அன்னைமீர்.
Verse 607
அன்னைமீர்!அணிமாமயில் சிறுமானி வள்நம்மைக் கைவலிந்து,\nஎன்ன வார்த்தையும் கேட்குறாள் தொலைவில்லி மங்கலம் என்றல்லால்,\nமுன்னம் நோற்ற விதிகொ லோமுகில் வண்ணன் மாயங்கொ லோ,அவன்\nசின்னமும்திருநாம முமிவள் வாயனகள் திருந்தவே.
Verse 608
திருந்து வேதமும் வேள்வி யும்திரு மாம களிரும் தாம்,மலிந்,\nதிருந்து வாழ்பொரு நல்வ டகரை வண்தொ லைவில்லி மங்கலம்,\nகருந்த டங்கண்ணி கைதொ ழுதஅந்நாள்தொ டங்கியிந் நாள்தொறும்,\nஇருந்தி ருந்துதரவிந்த லோசன! என்றேன் றேநைந்தி ரங்குமே.
Verse 609
இரங்கிநாள்தொறும் வாய்வெ ரீஇ யிவள் கண்ணநீர்கள் அலமர,\nமரங்க ளுமிரங் குவகை மணிவண்ணவோ. என்று கூவுமால்,\nதுரங்கம் வாய்பிளந் தானு றைதொலை வில்லி மங்கல மென்று ,தன்\nகரங்கள் கூப்பித் தொழுமவ் வூர்த்திரு நாமங் கற்றதற் பின்னையே.
Verse 610
பின்னைகொல் நிலமாமகள்கொல்? திருமகள்கொல்? பிறந்திட்டாள்,\nஎன்ன மாயங்கொ லோ?இ வள்நெடு மாலென் றேநின்று கூவுமால்,\nமுன்னி வந்தவன் நின்றி ருந்துறை யும்தொ லைவில்லி மங்கலம்\nசென்னி யால்வணங் கும்அவ்வூர்த்திரு நாமம் கேட்பது சிந்தையே.
Verse 611
சிந்தை யாலும்சொல் லாலும் செய்கையினாலும் தேவ பிரானையே,\nதந்தை தாயென் றடைந்த வண்குரு கூர வர்சட கோபன்சொல்,\nமுந்தை யாயிரத் துள்ளி வைதொலை வில்லி மங்கலத் தைச்சொன்ன,\nசெந்தமிழ்பத்தும் வல்லாரடிமை செய் வார்திரு மாலுக்கே.
Verse 612
மாலுக்கு வையம் அளந்த மணாளற்கு,\nநீலக் கருநிற மேக நியாயற்கு,\nகோலச்செந் தாமரைக் கண்ணற்கு,என் கொங்கலர்\nஏலக் குழலி யிழந்தது சங்கே.
Verse 613
சங்குவில் வாள்தண்டு சக்கரக் கையற்கு,\nசெங்கனி வாய்ச்செய்ய தாமரை கண்ணற்கு,\nகொங்கலர் தண்ணந் துழாய்முடி யானுக்கு,என்\nமங்கை யிழந்தது மாமை நிறமே.
Verse 614
நிறங்கரி யானுக்கு நீடுல குண்ட,\nதிறம்கிளர் வாய்ச்சிறு கள்ள னவற்கு,\nகறங்கிய சக்கரக் கையவ னுக்கு,என்\nபிறங்கிருங் கூந்தல் இழந்தது பீடே.
Verse 615
பீடுடை நான்முக னைப்படைத்தானுக்கு,\nமாடுடை வையம் அளந்த மணாளற்கு,\nநாடுடை மன்னர்க்குத் தூதுசெல் நம்பிக்கு,என்\nபாடுடை அல்குல் இழந்தது பண்பே.
Verse 616
பண்புடை வேதம் பயந்த பரனுக்கு,\nமண்புரை வையம் இடந்த வராகற்கு,\nதெண்புனல் பள்ளியெந் தேவப் பிரானுக்கு,என்\nகண்புனை கோதை இழந்தது கற்பே.
Verse 617
கற்பகக் காவன நற்பல தோளற்கு,\nபொற்சுடர்க் குன்றன்ன பூந்தண் முடியற்கு,\nநற்பல தாமரை நாண்மலர்க் கையற்கு,என்\nவிற்புரு வக்கொடி தோற்றது மெய்யே.
Verse 618
மெய்யமர் பல்கலன் நன்கணிந் தானுக்கு,\nபையர வினணைப் பள்ளியி னானுக்கு,\nகையொடு கால்செய்ய கண்ண பிரானுக்கு,என்\nதையல் இழந்தது தன்னுடைச் சாயே.
Verse 619
சாயக் குருந்தம் ஒசித்த தமியற்கு,\nமாயச் சகடம் உதைத்த மணாளற்கு,\nபேயைப் பிணம்படப் பாலுண் பிரானுக்கு,என்\nவாசக் குழலி இழந்தது மாண்பே.
Verse 620
மாண்பமை கோலத்தெம் மாயக் குறளற்கு,\nசேண்சுடர்க் குன்றன்ன செஞ்சுடர் மூர்த்திக்கு,\nகாண்பெருந் தோற்றத்தெங் காகுத்த நம்பிக்கு,என்\nபூண்புனை மென்முலை தோற்றது பொற்பே.
Verse 621
பொற்பமை நீண்முடிப் பூந்தண் டுழாயற்கு,\nமற்பொரு தோளுடை மாயப் பிரானுக்கு,\nநிற்பன பல்லுரு வாய்நிற்கு மாயற்கு,என்\nகற்புடை யாட்டி யிழந்தது கட்டே.
Verse 622
கட்டெழில் சோலைநல் வேங்கட வாணனை,\nகட்டெழில் தென்குரு கூர்ச்சட கோபன்சொல்,\nகட்டெழில் ஆயிரத் திப்பத்தும் வல்லவர்,\nகட்டெழில் வானவர் போகமுண் பாரே.
Verse 623
உண்ணுஞ் சோறு பருகுநீர் தின்னும்வெற் றிலையுமெல்லாம்\nகண்ணன், எம்பெருமான் னென்றென் றேகண்கள் நீர்மல்கி,\nமண்ணினுள் அவன்சீர் வளம்மிக் கவனூர் வினவி,\nதிண்ண மென்னிள மான்புகு மூர்திருக் கோளூரே.
Verse 624
ஊரும் நாடும் உலகமும் தன்னைப்போல் அவனுடைய\nபேரும் தார்களுமே பிதற்ற, கற்பு வான் இடறி,\nசேரும் நல் வளம் சேர் பழனத் திருக்கோளூர்க்கே\nபோரும்கொல், உரையீர், கொடியேன்கொடி-பூவைகளே?
Verse 625
பூவைபைங்கிளிகள் பந்துதூதைபூம்பட்டில்கள்\nயாவையும்திருமால் திருநாமங்களே கூவியெழும் என்\nபாவைபோயினித் தண்பழனத்திருக்கோளூர்க்கே\nகோவைவாய்துடிப்ப மழைக்கண்ணொடென் செய்யுங்கொலோ?
Verse 626
கொல்லை யென்பர்கொ லோகுணம் மிக்கனள் என்பர்கொலோ,\nசில்லை வாய்ப்பெண் டுகளயற் சேரியுள் ளாருமெல்லே,\nசெல்வம் மல்கி யவன் கிடந்த திருக்கோ ளூர்க்கே,\nமெல்லிடை நுடங்க இளமான் செல்ல மேவினளே.
Verse 627
மேவி நைந்து நைந்துவிளை யாடலுறா ளென்சிறுத்\nதேவிபோய், இனித்தன் திருமால் திருக்கோ ளூரில்,\nபூவியல் பொழிலும் தடமும் அவன்கோ யிலுங்கண்டு,\nஆவியுள் குளிர எங்ஙனே யுகக்குங்கொல் இன்றே?
Verse 628
இன்றெனக் குதவா தகன்ற இளமான் இனிப்போய்,\nதென்திசைத் திலத மனைய திருக்கோ ளூர்க்கே சென்று,\nதன் திருமால் திருக்கண்ணும் செவ்வாயும் கண்டு,\nநின்று நின்று நையும் நெடுங்கண்கள் பனிமல்கவே.
Verse 629
மல்குநீர் கண்ணோடு மையலுற்ற மனத்தனளாய்,\nஅல்லுநன் பகலும் நெடுமாலென்றழைத் தினிப்போய்,\nசெல்வம் மல்கி அவன்கிடந்த திருக்கோ ளூர்க்கே,\nஒல்கி யொல்கி நடந்தெங்ஙனே புகுங்கொ லோசிந்தே?
Verse 630
ஒசிந்த நுண்ணிடை மேல்கையை வைத்து நொந்துநொந்து,\nகசிந்த நெஞ்சின ளாய்க்கண்ண நீர்த்துளும்பச் செல்லுங்கொல்,\nஒசிந்த வொண்மல ராள்கொழுநன் திருக்கோ ளூர்க்கே,\nகசிந்த நெஞ்சின ளாயெம்மை நீத்தஎ ம் காரிகையே?
Verse 631
காரியம் நல்லன களவை காணிலென் கண்ணனுக்கென்று,\nஈரியா யிருப்பாளி தெல்லாம் கிடக்க இனிப்போய்,\nசேரி பல்பழி தூயிரைப்பத் திருக்கோ ளூர்க்கே,\nநேரிழை நடந்தா ளெம்மை யொன்றும் நினைத்திலளே.
Verse 632
நினைக்கிலேன் தெய்வங்காள் நெடுங்கண் இளமான் இனிப்போய்,\nஅனைத்து லகுமு டைய அரவிந்த லோசனனை,\nதினைத்தனை யும்விடா ளவன்சேர் திருக்கோ ளூர்க்கே,\nமனைக்கு வான்பழியும் நினையாள் செல்ல வைத்தனளே.
Verse 633
வைத்த மாநிதி யாம்மது சூதனை யேயலற்றி,\nகொத்த லர்பொழில் சூழ்குரு கூர்ச்சட கோபன்சொன்ன,\nபத்து நூறு ளிப்பத் தவன்சேர் திருக்கோளூர்க்கே,\nசித்தம் வைத்து ரைப்பார் திகழ்பொன் னுலகாள்வாரே.
Verse 634
பொன்னுல காளீரோ? புவனிமுழு தாளீரோ?,\nநன்னலப் புள்ளினங்காள். வினையாட்டியேன்நானிரந்தேன்,\nமுன்னுல கங்களெல்லாம் படைத்தமுகில்வண்ணன்கண்ணன்,\nஎன்னலங் கொண்டபிரான் தனக்கென் நிலைமையுரைத்தே?
Verse 635
மையமர் வாள்நெடுங்கண் மங்கைமார்முன்பென் கையிருந்து,\nநெய்யம ரின்னடிசில் நிச்சல்பாலோடு மேவீரோ,\nகையமர் சக்கரத்தென் கனிவாய்ப்பெரு மானைக்கண்டு\nமெய்யமர் காதல்சொல்லிக் கிளிகாள்!விரைந் தோடிவந்தே?
Verse 636
ஓடிவந் தென்குழல்மேல் ஒளிமாமல ரூதீரோ,\nகூடிய வண்டினங்காள்! குருநாடுடை ஐவர்கட்காய்\nஆடிய மாநெடுந்தேர்ப் படைநீறெழ செற்றபிரான்,\nசூடிய தண்டுளவ முண்டதூமது வாய்கள்கொண்டே?
Verse 637
தூமது வாய்கள்கொண்டு வந்தென்முல்லைகள் மேல்தும்பி காள்,\nபூமது வுண்ணச்செல்லில் வினையேனைப் பொய்செய்தகன்ற,\nமாமது வார்தண்டுழாய் முடிவானவர் கோனைக்கண்டு,\nயாமிது வோதக்கவா றென்னவேண்டும்கண் டீர்நுங்கட்கே.
Verse 638
நுங்கட்கி யானுரைக்கேன் வம்மின்யான்வளர்த் தகிளிகாள்,\nவெங்கட்புள் ளூர்ந்துவந்து வினையேனைநெஞ் சம்கவர்ந்த,\nசெங்கட் கருமுகிலைச் செய்யவாய்ச்செழுங் கற்பகத்தை,\nஎங்குச்சென் றாகிலும்கண் டிதுவோதக்க வாறென்மினே.
Verse 639
என்மின்னு நூல்மார்வ னென்கரும்பெரு மானென்கண்ணன்,\nதன்மன்னு நீள்கழல்மேல் தண்டுழாய்நமக் கன்றிநல்கான்,\nகன்மின்க ளென்றும்மையான் கற்பியாவைத்த மாற்றம்சொல்லி,\nசென்மின்கள் தீவினையேன் வளர்த்தசிறு பூவைகளே.
Verse 640
பூவைகள் போல்நிறத்தன் புண்டரீகங்கள் போலும்கண்ணன்,\nயாவையும் யாவருமாய் நின்றமாயனென் ஆழிபிரான்,\nமாவைவல் வாய்பிளந்த மதுசூதற்கென் மாற்றம்சொல்லி,\nபாவைகள் தீர்க்கிற்றிரே வினையாட்டியேன் பாசறவே.
Verse 641
பாசற வெய்தியின்னே வினையேனெனை யூழிநைவேன்?,\nஆசறு தூவிவெள்ளைக் குருகே! அருள் செய்யொருநாள்,\nமாசறு நீலச்சுடர் முடிவானவர் கோனைக்கண்டு,\nஏசறும் நும்மையல்லால் மறுநோக்கிலள் பேர்த்துமற்றே.
Verse 642
பேர்த்துமற் றோர்களைகண் வினையாட்டியேன் நானொன்றிலேன்,\nநீர்த்திரை மேலுலவி யிரைதேரும்பு தாவினங்காள்,\nகார்த்திரள் மாமுகில்போல் கண்ணன்விண்ணவர் கோனைக்கண்டு,\nவார்த்தைகள் கொண்டருளி யுரையீர்வைகல் வந்திருந்தே.
Verse 643
வந்திருந் தும்முடைய மணிச்சேவலும் நீருமெல்லாம்,\nஅந்தர மொன்றுமின்றி யலர்மேலசை யுமன்னங்காள்,\nஎன்திரு மார்வற்கென்னை யின்னாவாறிவள் காண்மினென்று,\nமந்திரத் தொன்றுணர்த்தி யுரையீர்வைகல் மறுமாற்றங்களே.
Verse 644
மாற்றங்க ளாய்ந்துகொண்டு மதுசூதபி ரானடிமேல்,\nநாற்றங்கொள் பூம்பொழில்சூழ் குருகூர்ச்சட கோபன்சொன்ன,\nதோற்றங்க ளாயிரத்துள் இவையுமொரு பத்தும்வல்லார்,\nஊற்றின்கண் நுண்மணல்போல் உருகாநிற்பர் நீராயே.
Verse 645
நீராய் நிலனாய் தீயாய்க் காலாய் நெடுவானாய்,\nசீரார் சுடர்க்க ளிரண்டாய்ச் சிவனாய் அயனாய்,\nகூரார் ஆழி வெண்சங் கேந்திக் கொடியேன்பால்\nவாராய், ஒருநாள் மண்ணும் விண்ணும் மகிழவே.
Verse 646
மண்ணும் விண்ணும் மகிழக் குறளாய் வலங்காட்டி,\nமண்ணும் விண்ணும் கொண்ட மாய அம்மானே,\nநண்ணி யுனைநான் கண்டு கந்து கூத்தாட,\nநண்ணி யொருநாள் ஞாலத் தூடே நடவாயே.
Verse 647
ஞாலத் தூடே நடந்தும் நின்றும் கிடந்திருந்தும்,\nசாலப் பலநாள் உகந்தோ றுயிர்கள் காப்பானே,\nகோலத் திருமா மகளோ டுன்னைக் கூடாதே,\nசாலப் பலநாள் அடியேன் இன்னம் தளர்வேனோ?
Verse 648
தளர்ந்தும் முறிந்தும் சகட வசுரர் உடல்வேறா,\nபிளந்து வீயத் திருக்கா லாண்ட பெருமானே,\nகிளர்ந்து பிரமன் சிவனிந் திரன்விண் ணவர்சூழ,\nவிளங்க வொருநாள் காண வாராய் விண்மீதே.
Verse 649
விண்மீதிருப்பாய் மலைமேல் நிற்பாய். கடல்சேர்ப்பாய்!\nமண்மீதுழல்வாய் இவற்றுளெங்கும் மறைந்துறைவாய்!\nஎண்மீதியன்ற புறவண்டத்தாய் எனதாவி,\nஉண்மீதாடி உருக்காட்டாதே யொளிப்பாயோ?
Verse 650
பாயோர் அடிவைத் ததன்கீழ்ப் பரவை நிலமெல்லாம்\nதாய்,ஓர் அடியாய் எல்லா வுலகும் தடவந்த\nமாயோன், உன்னைக் காண்பான் வருந்தி யெனைநாளும்,\nதீயோடுடன்சேர் மெழுகாய் உலகில் திரிவேனோ?
Verse 651
உலகில் திரியும் கரும கதியாய் உலகமாய்,\nஉலகுக்கேகேயோ ருயிரு மானாய்! புறவண்டத்து,\nஅலகில் பெலிந்த திசைபத் தாய அருவேயோ!\nஅலகில் பொலிந்த அறிவி லேனுக் கருளாயே.
Verse 652
அறிவி லேனுக் கருளாய் அறிவா ருயிரானாய்!\nவெறிகொள் சோதி மூர்த்தி! அடியேன் நெடுமாலே!\nகிறிசெய் தென்னைப் புறதிட் டின்னம் கெடுப்பாயோ,\nபிறிதொன் றறியாவடியே னாவி திகைக்கவே?
Verse 653
ஆவி திகைக்க ஐவர் குமைக்கும் சிற்றின்பம்,\nபாவி யேனைப் பலநீ காட்டிப் படுப்பாயோ,\nதாவி வையம் கொண்ட தடந்தா மரைகட்கே,\nகூவிக் கொள்ளும் கால மின்னம் குறுகாதோ?
Verse 654
குறுகா நீளா இறுதி கூடா எனையூழி,\nசிறுகா பெருகா அளவிலின்பம் சேர்ந்தாலும்,\nமறுகா லின்றி மாயோ னுனக்கே யாளாகும்,\nசிறுகா லத்தை யுறுமோ அந்தோ தெரியிலே?
Verse 655
தெரிதல் நினைதல் எண்ணல் ஆகாத் திருமாலுக்கு,\nஉரிய தொண்டர் தொண்டர் தொண்டன் சடகோபன்,\nதெரியச் சொன்ன ஓரா யிரத்து ளிப்பத்தும்\nஉரிய தொண்ட ராக்கும் உலகம் உண்டாற்கே.
Verse 656
உலகம் உண்ட பெருவாயா! உலப்பில் கீர்த்தி யம்மானே!\nநிலவும் சுடர்சூ ழொளிமூர்த்தி. நெடியாய் அடியே னாருயிரே!\nதிலதம் உலகுக் காய்நின்ற திருவேங் கடத்தெம் பெருமானே!\nகுலதொல் லடியேன் உன்பாதம் கூடு மாறு கூறாயே.
Verse 657
கூறாய் நீறாய் நிலனாகிக் கொடுவல் லசுரர் குலமெல்லாம்\nசீறா எறியும் திருநேமி வலவா. தெய்வக் கோமானே!\nசேறார் சுனைத்தா மரைசெந்தீ மலரும் திருவேங் கடத்தானே!\nஆறா அன்பில் அடி யேனுன் அடிசேர் வண்ணம் அருளாயே.
Verse 658
வண்ண மருள்கொள் அணிமேக வண்ணா! மாய அம்மானே!\nஎண்ணம் புகுந்து தித்திக்கும் அமுதே இமையோர் அதிபதியே!\nதெண்ணல் அருவி மணிபொன்முத் தலைக்கும் திருவேங் கடத்தானே!\nஅண்ண லே!உன் அடிசேர அடியேற் காவா வென்னாயே.
Verse 659
ஆவா வென்னா துலகத்தை அலைக்கும் அசுரர் வாணாள்மேல்,\nதீவாய் வாளி மழைபொழிந்த சிலையா திருமா மகள்கேள்வா,\nதேவா! சுரர்கள் முனிக் கணங்கள் விரும்பும் திருவேங் கடத்தானே!\nபூவார் கழல்கள் அருவினையேன் பொருந்து மாறு புணராயே.
Verse 660
புணரா நின்ற மரமேழன் றெய்த வொருவில் வலவாவோ,\nபுணரேய் நின்ற மரமிரண்டின் நடுவே போன முதல்வாவோ,\nதிணரார் மேகம் எனக்களிறு சேரும் திருவேங் கடத்தானே,\nதிணரார் சார்ங்கத் துன்பாதம் சேர்வ தடியே னெந்நாளே?
Verse 661
எந்நா ளேநாம் மண்ணளந்த இணைத்தா மரைகள் காண்பதற்கெ ன்று,\nஎந்நா ளும்நின் றிமையோர்கள் ஏத்தி யிறைஞ்சி யினமினமாய்,\nமெய்ந்நா மனத்தால் வழிபாடு செய்யும் திருவேங் கடத்தானே,\nமெய்ந்நா னெய்தி யெந்நாளுன் அடிக்கண் அடியேன் மேவுவதே?
Verse 662
அடியேன் மேவி யம ர்கின்ற அமுதே. இமையோர் அதிபதியே,\nகொடியா அடுபுள் ளுடையானே. கோலக் கனிவாய்ப் பெருமானே,\nசெடியார் வினைகள் தீர்மருந்தே. திருவேங் கடத்தெம் பெருமானே,\nநொடியார் பொழுதும் உன்பாதம் காண நோலா தாற்றேனே.
Verse 663
நோலா தாற்றேன் நுன்பாதம் காண வென்று நுண்ணுணர்வில்,\nநீலார் கண்டத் தம்மானும் நிறைநான் முகனு மிந்திரனும்,\nசேலேய் கண்ணார் பலர்சூழ விரும்பும் திருவேங் கடத்தானே,\nமாலாய் மயக்கி யடியேன்பால் வந்தாய் போல வாராயே.
Verse 664
வந்தாய் போலே வாராதாய். வாரா தாய்போல் வருவானே,\nசெந்தா மரைக்கண் செங்கனிவாய் நால்தோ ளமுதே. எனதுயிரே,\nசிந்தா மணிகள் பகரல்லைப் பகல்¦ சய் திருவேங் கடத்தானே,\nஅந்தோ அடியேன் உன்பாதம் அகல கில்லேன் இறையுமே.
Verse 665
அகல கில்லேன் இறையும் என் றலர்மேல் மங் கை யுறைமார்பா,\nநிகரில் புகழாய். உலகமூன் றுடையாய். என்னை ஆள்வானே,\nநிகரில் அமரர் முனிக்கணங்கள் விரும்பும் திருவேங் கடத்தானே,\nபுகலொன் றில்லா அடியேனுன் அடிக்கீ ழமர்ந்து புகுந்தேனே.
Verse 666
அடிக்கீ ழமர்ந்து புகுந்தடியீர். வாழ்மின் என்றென் றருள்கொடுக்கும்\nபடிக்கே ழில்லாப் பெருமானைப் பழனக் குருகூர்ச் சடகோபன்,\nமுடிப்பான் சொன்ன ஆயிரத்துத் திருவேங் கடத்துக் கிவைபத்தும்,\nபிடித்தார் பிடித்தார் வீற்றிருந்து பெரிய வானுள் நிலாவுவரே.
Verse 667
உண்ணி லாவிய ஐவ ரால்குமை தீற்றி யென்னையுன் பாத பங்கயம்,\nநண்ணிலா வகையே நலிவா னின்ன மெண்ணு கின்றாய்,\nஎண்ணி லாப்பெரு மாயனே இமையோர்கள் ஏத்து முலக மூன்றுடை,\nஅண்ண லேஅமு தேஅப்ப னேஎன்னை யாள்வானே!
Verse 668
என்னை யாளும் வங்கோ வோரைந் திவைபெய் திராப்பகல் மோது வித்திட்டு,\nஉன்னை நானணு காவகை செய்து போதி கண்டாய்,\nகன்ன லேஅமு தேகார் முகில்வண்ண னேகடல் ஞாலம் காக்கின்ற,\nமின்னு நேமியி னாய் வினை யேனுடை வேதியனே!
Verse 669
வேதியா நிற்கும் ஐவரால் வினையேனை மோது வித்து,\nஉன் திருவடிச் சாதி யாவகை நீதடுத் தென்பெறு தியந்தோ,\nஆதி யாகி யகலி டம்படைத் துண்டு மிழந்து கடந்திடந் திட்ட,\nசோதி நீண்முடி யாய் தொண்ட னேன்மது சூதனனே.
Verse 670
சூது நானறி யாவகை சுழற்றியோர் ஐவரைக் காட்டி,உன்அடிப்\nபோது நானணு காவகை செய்து போதி கண்டாய்,\nயாதும் யாவரு மின்றிநின் னகம்பால் ஒடுக்கியோ ராலி னீளிலை,\nமீது சேர்குழவி! வினையேன் வினைதீர் மருந்தே!
Verse 671
தீர்மருந் தின்றி யைந்து நோயடும் செக்கி லிட்டுத் திரிக்கும் ஐவரை,\nநேர்ம ருங்குடைத் தாவடைத்து நெகிழிப்பான் ஒக்கின்றாய்,\nஆர்ம ருந்தினி யாகுவர்? அடலாழி யேந்தி யசுரர் வன்குலம்,\nவேர்ம ருங்கறுத் தாய்.விண்ணு ளார்பெரு மானேயோ.
Verse 672
விண்ணு ளார்பெரு மாற்க டிமைசெய் வாரை யும்செறும் ஐம்பு லனிவை,\nமண்ணு ளென்னைப் பெற்றா லெஞ்செய் யாமற்று நீயும்விட்டால்?\nபண்ணு ளாய்கவி தன்னுளாய் பத்தியினுள் ளாய்பர மீசனே! வந்தென்\nகண்ணுளாய் நெஞ்சுளாய்! சொல்லுளாய் ஒன்று சொல்லாயே.
Verse 673
ஒன்று சொல்லி ஒருத்தினில் நிற்கிலாத ஒரைவர் வன்கயவரை,\nஎன்று யான்வெல் கிற்பனுன் திருவருளில் லையேல்?,\nஅன்று தேவர் அசுரர் வாங்க அலைகட லரவம் அளாவி,ஓர்\nகுன்றம் வைத்த எந்தாய் கொடியேன் பருகின்னமுதே!
Verse 674
இன்ன முதெனத் தோன்றி யோரைவர் யாவரையும் மயக்க, நீவைத்த\nமுன்ன மாயமெல் லால்முழு வேரரிந்து, என்னையுன்\nசின்ன மும்திரு மூர்த்தியும் சிந்தித் தேத்திக் கைதொழ வேயரு ளெனக்கு,\nஎன்னம் மா! என் கண்ணா! இமையோர்தம் குலமுதலே!
Verse 675
குலமுத லிடும்தீ வினைக்கொடு வன்குழியினில் வீழ்க்கும் ஐவரை\nவலமுதல் கெடுக்கும் வரமே தந்தருள் கண்டாய்,\nநிலமுத லினீவ் வுலகுக்கும் நிற்பன செல்வன என,பொருள்\nபலமுதல் படைத்தாய்! என் கண்ணா! என் பரஞ்சுடரே!
Verse 676
என்பரஞ் சுடரே! என்றுன்னை அலற்றியுன் இணைத்தா மரைகட்கு,\nஅன்புருகி நிற்கும் அதுநிற் கச் சுமடு தந்தாய்,\nவன்பரங்க ளெடுத்துஐவர் திசைதிசை வலித்தெற்று கின்றனர்\nமுன்பரவை கடைந்தமுதங் கொண்ட மூர்த்தியோ!
Verse 677
கொண்ட மூர்த்தியோர் மூவராய்க் குணங்கள் படைத்தளித் துக்கெடுக் கும்,அப்\nபுண்ட ரீகப்கொப் பூழ்ப்புனற் பள்ளி யப்பனுக்கே,\nதொண்டர் தொண்டர் தொண்டர் தொண்டன் சடகோபன் சொல்லா யிரத்துளிப்பத்தும்,\nகண்டு பாடவல் லார்வினை போம்கங்கு லும்பகலே.
Verse 678
கங்குலும் பகலும் கண் துயி லறியாள் கண்ணநீர் கைகளால் இறைக்கும்,\nசங்குசக் கரங்க ளென்றுகை கூப்பும் தாமரைக் கண் என்று தளரும்,\nஎங்ஙனே தரிக்கே னுன்னைவிட்டு என்னும் இருநிலம் கைதுழா விருக்கும்,\nசெங்கயல் பாய்நீர்த் திருவரங் கத்தாய். இவள்திறத் தெஞ்செய்கின் றாயே?
Verse 679
எஞ்செய்கின் றாயென் தாமரைக் கண்ணா என்னும்கண் ணீர்மல்க இருக்கும்,\nஎஞ்செய்கே னெறிநீர்த் திருவரங் கத்தாய்? என்னும்வெவ் வுயிர்த்துயிர்த் துருகும்\nமுன்செய்த வினையே. முகப்படாய் என்னும் முகில்வண்ணா. தகுவதோ? என்னும்,\nமுஞ்செய்திவ் வுலகம் உண்டுமிழந் தளந்தாய் எங்கொலோ முடிகின்ற திவட்கே?
Verse 680
வட்கிலள் இறையும் மணிவண்ணா! என்னும் வானமே நோக்கும்மை யாக்கும்,\nஉட்குடை யசுரர் உயிரெல்லா முண்ட ஒருவனே என்னுமுள் ளுருகும்,\nகட்கிலீ உன்னைக் காணுமா றருளாய் காகுத்தா! கண்ணனே! என்னும்,\nதிட்கொடி மதிள்சூழ் திருவரங்கத்தாய்! இவள்திறத் தென்செய்திட் டாயே?
Verse 681
இட்டகால் இட்ட கையளாய் இருக்கும் எழுந்துலாய் மயங்கும்கை கூப்பும்,\nகட்டமே காதல் என்றுமூர்ச் சிக்கும் கடல்வண்ணா. கடியைகாண் என்னும்,\nவட்டவாய் நேமி வலங்கையா என்னும் வந்திடாய் என்றென்றே மயங்கும்,\nசிட்டனே செழுநீர்த் திருவரங் கத்தாய் இவள்திறத் தெஞ்சிந்தித் தாயே
Verse 682
சிந்திக்கும் திசைக்கும் தேறும்கை கூப்பும் திருவரங் கத்துள்ளாய் என்னும்\nவந்திக்கும், ஆங்கே மழைக்கண்ணீர் மல்க வந்திடாய் என்றென்றே மயங்கும்,\nஅந்திப்போ தவுணன் உடலிடந் தானே அலைகடல் கடைந்தவா ரமுதே,\nசந்தித்துன் சரணம் சார்வதே வலித்த தையலை மையல்செய் தானே.
Verse 683
மையல்செய் தென்னை மனம்கவர்ந்தானே என்னும் மா மாயனே! என்னும்,\nசெய்யவாய் மணியே என்னும் தண் புனல்சூழ் திருவரங் கத்துள்ளாய்! என்னும்,\nவெய்யவாள் தண்டு சங்குசக் கரம்வில் ஏந்தும்விண் ணோர்முதல் என்னும்,\nபைகொள்பாம் பணையாய்! இவள்திறத் தருளாய் பாவியேன் செய்யற்பா லதுவே.
Verse 684
பாலதுன் பங்கள் இன்பங்கள் படைத்தாய்! பற்றிலார் பற்றநின் றானே,\nகாலசக் கரத்தாய்! கடலிடங் கொண்ட கடல்வண்ணா கண்ணணே! என்னும்,\nசேல்கொள்தண் புனல்சூழ் திருவரங் கத்தாய். என்னும் என் தீர்த்தனே! என்னும்,\nகோலமா மழைக்கண் பனிமல்க இருக்கும் என்னுடைக் கோமளக் கொழுந்தே!
Verse 685
கொழுந்துவா னவர்கட்கு என்னும் குன்றேந்திக் கோநிரை காத்தவன்! என்னும்,\nஅழுந்தொழும் ஆவி அனலவெவ் வுயிர்க்கும் அஞ்சன வண்ணனே! என்னும்,\nஎழுந்துமேல் நோக்கி யிமைப்பிலள் இருக்கும் எங்ஙனே நோக்குகேன்? என்னும்,\nசெழுந்தடம் புனல்சூழ் திருவரங் கத்தாய். என்செய்கேன் என்திரு மகட்கே?
Verse 686
என்திரு மகள்சேர் மார்வனே! என்னும் என்னுடை யாவியே. என்னும்,\nநின்திரு எயிற்றால் இடந்துநீ கொண்ட நிலமகள் கேள்வ னே! என்னும்,\nஅன்றுரு வேழும் தழுவிநீ கொண்ட ஆய்மகள் அன்ப னே! என்னும்,\nதென்திரு வரங்கம் கோயில்கொண் டானே! தெளிகிலேன் முடிவிவள் தனக்கே!
Verse 687
முடிவிவள் தனக்கொன் றறிகிலேன் என்னும் மூவுல காளியே. என்னும்,\nகடிகமழ் கொன்றைச் சடையனே. என்னும் நான்முகக் கடவுளே! என்னும்,\nவடிவுடை வானோர் தலைவ னே!என்னும் வண்திரு வரங்கனே! என்னும்,\nஅடியடை யாதாள் போலிவள் அணுகி அடைந்தனள் முகில்வண்ணன் அடியே!
Verse 688
முகில்வண்ணன் அடியை அடைந்தருள் சூடி உய்ந்தவன் மொய்புனல் பொருநல்,\nதுகில்வண்ணத் தூநீர்ச் சேர்ப்பன்வண்பொழில்சூழ் வண்குரு கூர்ச்சட கோபன்,\nமுகில்வண்ணன் அடிமேல் சொன்னசொன்மாலை ஆயிரத் திப்பத்தும் வல்லார்,\nமுகில்வண்ண வானத் திமையவர் சூழ இருப்பர்பே ரின்பவெள் ளத்தே.
Verse 689
வெள்ளைச் சுரிசங்கொ டாழி யேந்தித் தாமரைக் கண்ணனென் னெஞ்சி னூடே,\nபுள்ளைக் கடாகின்ற வாற்றைக் காணீர் எஞ்சொல்லிச் சொல்லுகேன் அன்னை மீர்காள்,\nவெள்ளச் சுகமவன் வீற்றி ருந்த வேத வொலியும் விழா வொலியும்,\nபிள்ளைக் குழாவிளை யாட்டொலி யும் அறாத் திருப்பே ரையில் சேர்வன் நானே.
Verse 690
நானக் கருங்குழல் தோழி மீர்காள்! அன்னை யர்காள்! அயல் சேரியீர்காள்,\nநானித் தனிநெஞ்சம் காக்க மாட்டேன் என்வசம் அன்றிதி ராப்ப கல்போய்,\nதேன்மொய்த்த பூம்பொழில் தண்ப ணைசூழ் தெந்திருப் பேரையில் வீற்றி ருந்த,\nவானப்பி ரான்மணி வண்ணன் கண்ணன் செங்கனி வாயின் திறத்த துவே.
Verse 691
செங்கனி வாயின் திறத்த தாயும் செஞ்சுடர் நீண்முடித் தாழ்ந்த தாயும்,\nசங்கொடு சக்கரம் கண்டு கந்தும் தாமரைக் கண்களுக் கற்றுத் தீர்ந்தும்,\nதிங்களும் நாளும் விழாவ றாத தெந்திருப் பேரையில் வீற்றி ருந்த,\nநங்கள் பிரானுக்கென் னெஞ்சம் தோழீ! நாணும் நிரையு மிழந்த துவே!
Verse 692
இழந்தவெம் மாமை திறத்துப் போன என்னெஞ்சி னாருமங் கே ஒழிந்தார்,\nஉழந்தினி யாரைக்கொண் டெனு சாகோ? ஓதக் கடலொலி போல எங்கும்,\nஎழுந்தநல் வேதத் தொலிநின் றோங்கு தெந்திருப் பேரையில் வீற்றி ருந்த,\nமுழங்குசங் கக்கையன் மாயத் தாழ்ந்தேன் அன்னையர் காள்!என்னை யென்மு னிந்தே?
Verse 693
முனிந்து சகடம் உதைத்து மாயப் பேய்முலை யுண்டு மருதி டைப்போய்,\nகனிந்த விளவுக்குக் கன்றெ றிந்த கண்ண பிரானுக்கென் பெண்மை தோற்றேன்,\nமுனிந்தினி யென்செய்தீர் அன்னை மீர்காள். முன்னி யவன்வந்து வீற்றி ருந்த,\nகனிந்த பொழில்திருப் பேரை யிற்கே காலம் பெறவென்னைக் காட்டு மினே.
Verse 694
காலம் பெறவென்னைக் காட்டு மின்கள் காதல் கடலின் மிகப் பெரிதால்,\nநீல முகில்வண் ணத்தெம் பெருமான் நிற்குமுன் னேவந்தென் கைக்கும் எய்தான்,\nஞாலத் தவன்வந்து வீற்றி ருந்த நான்மறை யாளரும் வேள்வி யோவா,\nகோலச் செந்நெற்கள் கவரி வீசும் கூடு புனல்திருப் பேரை யிற்கே.
Verse 695
பேரெயில் சூழ்கடல் தென்னி லங்கை செற்ற பிரான்வந்து வீற்றி ருந்த,\nபேரையிற் கேபுக்கென் னெஞ்சம் நாடிப் பேர்த்து வரவெங்கும் காண மாட்டேன்,\nஆரை யினிங் குடையம் தோழி. என்னெஞ்சம் கூவ வல்லாரு மில்லை,\nஆரை யினிக்கொண்டென் சாதிக் கின்றது? என்னெஞ்சம் கண்டது வேகண் டேனே.
Verse 696
கண்டது வேகொண்டெல் லாருங் கூடிக் கார்க்கடல் வண்ணனோ டெந்தி றத்துக்\nகொண்டு,அலர் தூற்றிற் றதுமுத லாக் கொண்டவென் காத லுரைக்கில் தோழீ,\nமண்டிணி ஞால முமேழ் கடலும் நீள்வி சும்பும் கழியப் பெரிதால்,\nதெண்திரை சூழ்ந்தவன் வீற்றி ருந்த தெந்திருப் பேரையில் சேர்வன் சென்றே.
Verse 697
சேர்வஞ்சென் றென்னுடைத் தோழி மீர்காள்! அன்னையர் காள்! என்னைத் தேற்ற வேண்டா,\nநீர்கள் உரைக்கின்ற தென்னி தற்கு? நெஞ்சும் நிறைவும் எனக்கிங் கில்லை,\nகார்வண்ணன் கார்க்கடல் ஞால முண்ட கண்ண பிரான்வந்து வீற்றி ருந்த,\nஏர்வள வொண்கழ னிப்பழ னத்துத் தென்திருப் பேரை யின்மா நகரே.
Verse 698
நகரமும் நாடும் பிறவும் தேர்வேன் நாணெனக் கில்லையென் தோழி மீர்காள்!\nசிகரம் அணிநெடு மாடம் நீடு தென்திருப் பேரையில் வீற்றி ருந்த,\nமகர நெடுங்குழைக் காதன் மாயன் நூற்றுவ ரையன்று மங்க நூற்ற,\nநிகரில் முகில்வண்ணன் நேமி யானென் னெஞ்சம் கவர்ந்தெனை யூழி யானே?
Verse 699
ஊழிதோ றூழி யுருவம் பேரும் செய்கையும் வேறவன் வையங் காக்கும்,\nஆழிநீர் வண்ணனை யச்சு தன்னை அணிகுரு கூர்ச்சட கோபன் சொன்ன,\nகேழிலந் தாதியோ ராயி ரத்துள் இவைதிருப் பேரையில் மேய பத்தும்,\nஆழியங் கையனை யேத்த வல்லார் அவரடி மைத்திறத் தாழி யாரே.
Verse 700
ஆழி யெழச்சங்கும் வில்லு மெழ,திசை\nவாழி யெழத்தண்டும் வாளு மெழ,அண்டம்\nமோழை யெழமுடி பாத மெழ,அப்பன்\nஊழி யெழவுல கங்கொண்ட வாறே.
Verse 701
ஆறு மலைக்கெதிர்ந் தோடு மொலி,அர\nவூறு சுலாய்மலை தேய்க்கு மொலி,கடல்\nமாறு சுழன்றழைக் கின்ற வொலி, அப்பன்\nசாறு படவமு தங்கொண்ட நான்றே.
Verse 702
நான்றில வேழ்மண்ணும் தானத்த, வே,பின்னும்\nநான்றில வேழ்மலை தானத்த வே,பின்னும்\nநான்றில வேழ்கடல் தானத்த வே,அப்பன்\nஊன்றி யிடந்தெயிற் றில்கொண்ட நாளே.
Verse 703
நாளு மெழநில நீரு மெழவிண்ணும்\nகோளு மெழேரி காலு மெழ,மலை\nதாளு மெழச்சுடர் தானு மெழ,அப்பன்\nஊளி யெழவுல கமுண்ட வூணே.
Verse 704
ஊணுடை மல்லர் ததர்ந்த வொலி,மன்னர்\nஆணுடை சேனை நடுங்கு மொலி,விண்ணுள்\nஏணுடைத் தேவர் வெளிப்பட்ட வொலி,அப்பன்\nகாணுடைப் பாரதம் கையரைப் போழ்தே.
Verse 705
போழ்து மெலிந்தபுன் செக்கரில்,வான்திசை\nசூழு மெழுந்துதி ரப்புன லா,மலை\nகீழ்து பிளந்தசிங் கமொத்த தால்,அப்பன்\nஆழ்துய ர் செய்தசு ரரைக்கொல்லு மாறே.
Verse 706
மாறு நிரைத்திரைக் கும்சரங் கள்,இன\nநூறு பிணம்மலை போல்புர ள,கடல்\nஆறு மடுத்துதி ரப்புன லா,அப்பன்\nநீறு படவிலங் கைசெற்ற நேரே.
Verse 707
நேர்சரிந் தாங்கொடிக் கோழிகொண் டான்,பின்னும்\nநேர்சரிந் தானெரி யுமன லோன்,பின்னும்\nநேர்சரிந் தான்முக்கண் மூர்த்திகண் டீர்,அப்பன்\nநேர்சரி வாணந்திண் டோள்கொண்ட அன்றே.
Verse 708
அன்று மண்நீரெரி கால்விண் மலைமுதல்,\nஅன்று சுடரிரண் டும்பிற வும்,பின்னும்\nஅன்று மழையுயிர் தேவும்மற் றும்,அப்பன்\nஅன்று முதலுல கம்செய் ததுமே.
Verse 709
மேய்நிரை கீழ்புக மாபுர ள,சுனை\nவாய்நிறை நீர்பிளி றிச்சொரி ய,இன\nஆநிரை பாடியங் கேயொடுங் க,அப்பன்\nதீமழை காத்துக் குன்ற மெடுத் தானே.
Verse 710
குன்ற மெடுத்த பிரானடி யாரொடும்,\nஒன்றிநின் றசட கோப னுரைசெயல்,\nநன்றி புனைந்த ஓராயிரத் துள்ளிவை\nவென்றி தரும்பத்தும் மேவிக்கற் பார்க்கே.
Verse 711
கற்பார் இராம பிரானையல்லால்மற்றும் கற்பரோ?,\nபுற்பா முதலாப் புல்லெறும் பாதியொன் றின்றியே,\nநற்பால் அயோத்தியில் வாழும் சராசரம் முற்றவும்,\nநற்பாலுக் குய்த்தனன் நான்முக னார்பெற்ற நாட்டுளே.
Verse 712
நாட்டில் பிறந்தவர் நாரணற் காளன்றி யாவரோ,\nநாட்டில் பிறந்து படாதன பட்டு மனிசர்க்கா,\nநாட்டை நலியும் அரக்கரை நாடித் தடிந்திட்டு,\nநாட்டை யளித்துய்யச் செய்து நடந்தமை கேட்டுமே?
Verse 713
கேட்பார்கள் கேசவன் கீர்த்தியல் லால்மற்றூம் கேட்பரோ,\nகேட்பார் செவிசுடு கீழ்மை வசவுக ளேவையும்,\nசேட்பால் பழம்பகைவன் சிசு பாலன், திருவடி\nதாட்பால் அடைந்த தன்மை யறிவாரை யறிந்துமே?
Verse 714
தன்மை யறிபவர் தாமவற் காளன்றி யாவரோ,\nபன்மைப் படர்பொருள் ஆதுமில் பாழ்நெடுங் காலத்து,\nநன்மைப் புனல்பண்ணி நான்முகனைப்பண்ணி, தன்னுள்ளே\nதொன்மை மயக்கிய தோற்றிய சூழல்கள் சிந்தித்தே?
Verse 715
சூழல்கள் சிந்திக்கில் மாயன் கழலன்றிச் சூழ்வரோ,\nஆழப் பெரும்புனல் தன்னுள் அழுந்திய ஞாலத்தை,\nதாழப் படாமல்தன் பாலொரு கோட்டிடைத் தான்கொண்ட,\nகேழல் திருவுரு வாயிற்றுக் கேட்டும் உணர்ந்துமே?
Verse 716
கேட்டும் உணர்ந்தவர் கேசவற் காளன்றி யாவரோ,\nவாட்டமி லாவண்கை மாவலி வாதிக்க வாதிப்புண்டு ,\nஈட்டங்கொள் தேவர்கள் சென்றிரந் தார்க்கிடர் நீக்கிய,\nகோட்டங்கை வாமன னாயச்செய்த கூத்துகள் கண்டுமே?
Verse 717
கண்டும் தெளிந்தும்கற் றார்க்கண்ணற் காளன்றி யாவரோ,\nவண்டுன் மலர்த்தொங்கல் மார்க்கண்டேயனுக்கு வாழுநாள்\nஇண்டைச் சடைமுடி யீசனுடன்கொண்டு சாச்சொல்ல,\nகொண்டங்குத் தன்னொடும் கொண்டுடன்சென்றதுணர்ந்துமே?
Verse 718
செல்ல வுணர்ந்தவர் செல்வன்றன் சீரன்றிக் கற்பரோ,\nஎல்லை யிலாத பெருந்தவத் தால்பல செய்மிறை,\nஅல்லல் அமரரைச் செய்யும் இரணிய னாகத்தை,\nமல்லல் அரியுரு வாய்ச்செய்த மாயம் அறிந்துமே?
Verse 719
மாயம் அறிபவர் மாயவற் காளன்றி யாவரோ,\nதாயம் செறுமொரு நூற்றுவர் மங்கவோ ரைவர்க்காய்,\nதேச மறியவோர் சாரதி யாய்ச்சென்று சேனையை\nநாசம்செய் திட்டு, நடந்தநல் வார்த்தை யறிந்துமே?
Verse 720
வார்த்தை யறிபவர் மாயவற் காளன்றி யாவரோ,\nபோர்த்த பிறப்பொடு நோயோடு மூப்பொடு இறப்பிவை\nபேர்த்து, பெருந்துன்பம் வேரற நீக்கித்தன் தாளிங்கீழ்ச்\nசேர்த்து,அவன் செய்யும் சேமத்தையெண்ணித் தெளிவுற்றே?
Verse 721
தெளிவுற்று வீவன்றி நின்றவர்க் கின்பக் கதிசெய்யும்,\nதெளிவுற்ற கண்ணனை தென்குரு கூர்ச்சட கோபன்சொல்,\nதெளிவுற்ற ஆயிரத் துள்ளிவை பத்தும்வல் லாரவர்,\nதெளிவுற்ற சிந்தையர் பாமரு மூவுல கத்துள்ளே.
Verse 722
பாமரு மூவுலகும் படைத்த பற்ப நாபாவோ,\nபாமரு மூவுலகும் அளந்த பற்ப பாதாவோ,\nதாமரைக் கண்ணாவோ. தனியேன் தனியா ளாவோ,\nதாமரைக் கையாவோ. உன்னை யென்றுகொல் சார்வதுவே?
Verse 723
என்றுகொல் சேர்வதந் தோஅரன் நான்முக னேத்தும்,\nசெய்ய நின்திருப் பாதத்தை யான்நிலம் நீரெரி கால்,\nவிண்ணுயிர் என்றிவை தாம்முத லாமுற்று மாய்நின்ற எந்தாயோ,\nகுன்றெடுத் தாநிரை மேய்த்தவை காத்தவெங் கூத்தாவோ
Verse 724
காத்தவெங் கூத்தாவோ! மலையேந்திக் கன்மாரி தன்னை,\nபூத்தண் டுழாய்முடி யாய்! புனைகொன்றையஞ் செஞ்சடையாய்,\nவாய்த்தவென் நான்முகனே! வந்தென் னாருயிர் நீயானால்,\nஏத்தருங் கீர்த்தியினாய்! உன்னை யெங்குத் தலைப்பெய்வனே?
Verse 725
எங்குத் தலைப்பெய்வன் நான்?எழில் மூவுல கும்நீயே,\nஅங்குயர் முக்கட் பிரான் பிரமன்பெரு மானவன்நீ,\nவெங்கதிர் வச்சிரக் கையிந் திரன்முத லாத்தெய்வம்நீ,\nகொங்கலர் தண்ணந் துழாய்முடி யென்னுடைக் கோவலனே.
Verse 726
என்னுடைக் கோவலனே! என் பொல்லாக்கரு மாணிக்கமே,\nஉன்னுடை யுந்தி மலருலகம் அவைமூன் றும்பரந்து,\nஉன்னுடைச் சோதிவெள் ளத்தகம் பாலுன்னைக் கண்டுகொண்டிட்டு,\nஎன்னுடை யாருயிரார் எங்ஙனே கொல்வந் தெய்துவரே?
Verse 727
வந்தெய்து மாறறி யேன்மல்கு நீலச் சுடர்தழைப்ப,\nசெஞ்சுடர்ச் சோதிகள் பூத்தொரு மாணிக்கம் சேர்வதுபோல்,\nஅந்தர மேல்செம்பட் டோடடி உந்திகை மார்வுகண்வாய்,\nசெஞ்சுடர்ச் சோதி விடவுறை என்திரு மார்பனையே.
Verse 728
என்திரு மார்பன் தன்னையென் மலைமகள் கூறன்தன்னை,\nஎன்றுமென் நாமக ளையகம் பால்கொண்ட நான்முகனை,\nநின்ற சசிபதி யைநிலங் கீண்டெயில் மூன்றெரித்த,\nவென்று புலம்துரந் தவிசும் பாளியைக் காணேனோ.
Verse 729
ஆளியைக் காண்பரி யாயரி காண்நரி யாய்,அரக்கர்\nஊளையிட் டன்றிலங்கைகடந் துபிலம் புக்கொளிப்ப,\nமீளியம் புள்ளைக் கடாய்விறல் மாலியைக் கொன்று,பின்னும்\nஆளுயர் குன்றங்கள் செய்தடர்த் தானையும் காண்டுங்கொலோ?
Verse 730
காண்டுங்கொ லோநெஞ்சமே! கடியவினை யேமுயலும்,\nஆண்டிறல் மீளிமொய்ம் பிலரக் கன்குலத் தைத்தடிந்து,\nமீண்டுமவன் தம்பிக்கே விரிநீரி லங்கையருளி,\nஆண்டுதன் சோதிபுக் கவம ரர்அரி யேற்றினையே?
Verse 731
ஏற்றரும் வைகுந்தத் தையருளும் நமக்கு, ஆயர்குலத்து\nஈற்றிளம் பிள்ளையொன் றாய்ப்புக்கு மாயங்க ளேயியற்றி,\nகூற்றியல் கஞ்சனைக் கொன்றுஐவர்க் காயக்கொடுஞ் சேனைதடிந்து,\nஆற்றல்மிக் கான்பெரி யபரஞ் சோதிபுக் கஅரியே.
Verse 732
புக்க அரியுரு வாயவுணனுடல் கீண்டுகந்த,\nசக்கரச் செல்வன்தன்னைக் குருகூர்ச்சட கோபஞ்சொன்ன,\nமிக்கவோ ராயிரத் துளிவைபத்தும்வல் லாரவரை,\nதொக்குப்பல் லாண்டிசைத் துக்கவரி செய்வ ரேழையரே.
Verse 733
ஏழையர் ஆவியுண் ணுமிணைக் கூற்றங்கொ லோவறியேன்,\nஆழியுங் கண்ண பிராந்திருக் கண்கள்கொ லோவறியேன்,\nசூழவும் தாமரை நாண்மலர் போல்வந்து தோன்றும்கண்டீர்,\nதோழியர் காள்! அன்னை மீர்! என்செய் கேந்துய ராட்டியேனே?
Verse 734
ஆட்டியும் தூற்றியும் நின்றன்னை மீரென்னை நீர்நலிந்தென்?\nமாட்டுயர் கற்பகத் தின்வல்லி யோகொழுந் தோ?அறியேன்,\nஈட்டிய வெண்ணெயுண் டாந்திரு மூக்கென தாவியுள்ளே,\nமாட்டிய வல்விளக்கின் சுடராய்நிற்கும் வாலியதே.
Verse 735
வாலிய தோர்கனி கொல்வினை யாட்டியேன் வல்வி னைகொல்,\nகோலம் திரள்பவ ளக்கொழுந் துண்டங்கொ லோவறியேன்,\nநீல நெடுமுகில் போல்திரு மேனியம் மான்தொண்டைவாய்,\nஏலும் திசையுளெல் லாம்வந்து தோன்றுமென் னின்னுயிர்க்கே.
Verse 736
இன்னுயிர்க் கேழையர் மேல்வளையும் இணை நீலவிற்கொல்,\nமன்னிய சீர்மத னங்கருப்புச் சிலை கொல்,மதனன்\nதன்னுயிர்த் தாதைகண் ணபெருமான் புரு வமவையே,\nஎன்னுயிர் மேலன வாய் அடுகின்றன என்று நின்றே.
Verse 737
என்று நின்றேதிக ழும்செய்ய வீன்சுடர் வெண்மின்னுக்கொல்,\nஅன்றியென் னாவி யடுமணி முத்தங்கொ லோவறியேன்,\nகுன்றம் எடுத்தபி ரான் முறுவலெனதாவியடும்,\nஒன்றும் அறிகின்றி லேனன்னை மீர்! எனக் குய்விடமே!
Verse 738
உய்விடம் ஏழையர்க் கும் அசுரர்க்கும் அரக்கர்கட்கும்\nஎவ்விடம்? என்றிலங் கிமகரம் தழைக் கும்தளிர்கொல்,\nபைவிடப் பாம்பணை யான் திருக்குண்டலக் காதுகளே?\nகைவிட லொன்றுமின் றிய் அடுகின்றன காண்மின்களே.
Verse 739
காண்மின்கள் அன்னையர் காள்! என்று காட்டும் வகையறியேன்,\nநாண்மன்னு வெண்திங்கள் கொல்! நயந்தார்கட்கு நச்சிலைகொல்,\nசேண்மன்னு நால்தடந் தோள் பெருமான்தன் திருநுதலே?,\nகோள்மன்னி யாவி யடும்கொடியேன் உயிர் கோளிழைத்தே
Verse 740
கோளிழைத் தாமரையும் கொடியும் பவளமும் வில்லும் ,\nகோளிழைத்தண் முத்தமும் தளிரும் குளிர்வான் பிறையும்,\nகோளிழையாவுடைய கொழுஞ் சோதி வட்டங்கொல், கண்ணன்,\nகோளிழைவாள் முகமாய்க் கொடியேன் உயிர் கொள்கின்றதே?
Verse 741
கொள்கின்ற கோளிரு ளைச்சுகிர்ந் திட்ட கொழுஞ்சுருளின்,\nஉள்கொண்ட நீலநன் னூல்தழை கொல்?அன்று மாயங்குழல்,\nவிள்கின்ற பூந்தண் டுழாய்விரை நாறவந் தென்னுயிரை,\nகள்கின்ற வாறறி யீரன்னை மீர்! கழறாநிற்றிரே.
Verse 742
நிற்றிமுற் றத்துள் என் றுநெரித் தகைய ராயென்னைநீர்\nசுற்றியும் சூழ்ந்தும் வைதிர்சுடர்ச் சோதி மணிநிறமாய்,\nமுற்றவிம் மூவுல கும்விரி கின்ற சுடர்முடிக்கே,\nஒற்றுமைக் கொண்டதுள் ளமன்னை மீர்! நசை யென்நுங்கட்கே?
Verse 743
கட்கரி யபிர மஞ்சிவன் இந்திரன் என்றிவர்க்கும்,\nகட்கரி யகண்ண னைக்குரு கூர்ச்சடகோபன் சொன்ன,\nஉட்குடை யாயிரத் தூளிவை யுமொரு பத்தும்வல்லார்,\nஉட்குடை வானவ ரோடுட னாயென்றும் மாயாரே.
Verse 744
மாயா! வாமன னே! மது சூதா! நீயருளாய்,\nதீயாய் நீராய் நிலனாய் விசும்பாய்க் காலாய்,\nதாயாய் தந்தையாய் மக்களாய் மற்றுமாய் முற்றுமாய்,\nநீயாய் நீநின்ற வரீவை யென்ன நியாயங்களே.
Verse 745
அங்கண் மலர்த்தண் டுழாய்முடி அச்சுதனே! அருளாய்,\nதிங்களும் ஞாயிறு மாய்ச்செழும் பல்சுட ராயிருளாய்,\nபொங்கு பொழிமழை யாய்ப்புக ழாய்பழி யாய்ப்பின்னும்நீ,\nவெங்கண்வெங் கூற்றமு மாவிவை யென்ன விசித்திரமே.
Verse 746
சித்திரத் தேர்வலவா! திருச் சக்கரத் தாய்!அருளாய்,\nஎத்தனை யோருக முமவை யாயவற் றுள்ளியுலும்,\nஒத்தவொண் பல்பொருள் களுலப் பில்லன வாய்வியவாய்,\nவித்தகத் தாய்நிற்றி நீயவை யென்ன விடமங்களே.
Verse 747
கள்ளவிழ் தாமரைக்கண்கண்ண னே!எனக் கொன்றருளாய்,\nஉள்ளது மில்லது மாயுலப் பில்லன வாய்வியவாய்,\nவெள்ளத் தடங்கட லுள்விட நாகணை மேல்மருவி,\nஉள்ளப்பல் யோகுசெய் தியிவை யென்ன உபாயங்களே.
Verse 748
பாசங்கள் நீக்கியென் னையுனக் கேயுறக் கொண்டிட்டு,\nநீ வாச மலர்த்தண் டுழாய்முடி மாயவ னே! அருளாய்,\nகாயமும் சீவனு மாய்க்கழி வாய்ப்பிறப் பாய்ப்பின்னும்நீ,\nமாயங்கள்¦ சய்துவைத் தியிவை யென்ன மயக்குகளே.
Verse 749
மயக்கா வாமன னே! மதி யாம்வண்ணம் ஒன்றருளாய்,\nஅயர்ப்பாய்த் தேற்றமு மாயழ லாய்க்குளி ராய்வியவாய்,\nவியப்பாய் வென்றிகளாய்வினை யாய்ப்பய னாய்ப்பின்னும்நீ,\nதுயக்காய் நீநின்ற வரீவை யென்ன துயரங்களே.
Verse 750
துயரங்கள் செய்யுங்கண்ணா! சுடர் நீண்முடி யாயருளாய்,\nதுயரம்செய் மானங்க ளாய்மத னாகி உகவைகளாய்,\nதுயரம்செய் காமங்க ளாய்த்துலையாய்நிலை யாய்நடையாய்,\nதுயரங்கள் செய்துவைத் தியிவை யென்னசுண் டாயங்களே.
Verse 751
என்னச்சுண்டாயங்களால் நின்றிட்டாயென்னையாளும்கண்ணா,\nஇன்னதோர் தன்மையை என்றுன்னையாவர்க்கும் தேற்றரியை,\nமுன்னிய மூவுல குமவை யாயவற் றைப்படைத்து,\nபின்னுமுள் ளாய்! புறத் தாய்!இவை யென்ன இயற்கைகளே.
Verse 752
என்ன இயற்கைகளால் எங்ஙனேநின்றிட் டாயென்கண்ணா,\nதுன்னு கரசர ணம்முத லாகவெல் லாவுறுப்பும்\nஉன்னு சுவையொளி யூறொலி நாற்றம் முற்றும்நீயே,\nஉன்னை யுணர வுறிலுலப் பில்லை நுணுக்கங்களே.
Verse 753
இல்லை நுணுக்கங்க ளேயித னில்பிறி தென்னும்வண்ணம்\nதொல்லைநன் னூலில் சொன்ன வுருவும் அருவும்நியே\nஅல்லித் துழாயலங் கலணி மார்ப!என் அச்சுதனே,\nவல்லதோர் வண்ணம் சொன்னாலதுவேயுனக் காம்வண்ணமே.
Verse 754
ஆம்வண்ண மின்னதொன் றென்றறி வதரி யஅரியை,\nஆம்வண்ணத் தால்குரு கூர்ச்சட கோபன் அறிந்துரைத்த\nஆம்வண்ண வொண்டமிழ்களிவை யாயிரத் துளிப்பத்தும்,\nஆம்வண்ணத் தாலுரைப்பாரமைந் தார்தமக்கென்றைக்குமே.
Verse 755
என்றைக்கும் என்னையுய் யக்கொண்டு போகிய,\nஅன்றைக்கன் றென்னைத்தன் னாக்கியென் னால்தன்னை,\nஇன்றமிழ் பாடிய ஈசனை யாதியாய்\nநின்றவென் சோதியை, எஞ்சொல்லி நிற்பனோ?
Verse 756
என்சொல்லி நிற்பனென் இன்னுயி ரின்றொன்றாய்,\nஎன்சொல்லால் யான்சொன்ன இன்கவி யென்பித்து,\nதன்சொல்லால் தான்தன்னைக் கீர்த்தித்த மாயன்,\nஎன்முன்சொல்லும் மூவுரு வாம் முதல்வனே.
Verse 757
ஆம்முதல் வனிவ னென்றுதற் றேற்றி,என்\nநாமுதல் வந்து புகுந்துநல் லின்கவி,\nதூமுதல் பத்தர்க்குத் தான்தன்னைச் சொன்ன,என்\nவாய்முதல் அப்பனை என்று மறப்பனோ?
Verse 758
அப்பனை யென்று மறப்பனென் னாகியே,\nதப்புத லின்றித் தனைக் கவி தான்சொல்லி,\nஒப்பிலாத் தீவினை யேனையுய் யக்கொண்டு\nசெப்பமே செய்து திரிகின்ற சீர்கண்டே?
Verse 759
சீர்கண்டு கொண்டு திருந்து நல் லின்கவி,\nநேற்பட யான்சொல்லும் நீர்மை யிலாமையில்,\nஏர்விலா என்னைத்தன் னாக்கிஎன் னால்தன்னை,\nபார்பரவு இன்கவி பாடும் பரமரே.
Verse 760
இன்கவி பாடும் பரம கவிகளால்,\nதன்கவி தான்தன்னைப் பாடுவி யாது,இன்று\nநன்குவந் தென்னுட னாக்கியென் னால்தன்னை,\nவன்கவி பாடுமென் வைகுந்த நாதனே.
Verse 761
வைகுந்த நாதனென் வல்வினை மாய்ந்தறச்,\nசெய்குந்தன் றன்னையென் னாக்கியென் னால்தன்னை,\nவைகுந்த னாகப் புகழ்வண் தீங்கவி,\nசெய்குந்தன் தன்னையெந் நாள்சிந்தித் தார்வனோ.
Verse 762
ஆர்வனோ ஆழியங் கையெம்பி ரான்புகழ்,\nபார்விண்நீர் முற்றும் கலந்து பருகிலும்,\nஏர்விலா என்னைத்தன் னாக்கியென் னால்தன்னை,\nசீர்பெற இன்கவி சொன்ன திறத்துக்கே?
Verse 763
திறத்துக்கே துப்புர வாம்திரு மாலின்சீர்,\nஇறப்பெதிர் காலம் பருகிலும் ஆர்வனோ,\nமறப்பிலா வென் னைத்தன் னாக்கியென் னால்தன்னை,\nஉறப்பல இன்கவி சொன்ன வுதவிக்கே?
Verse 764
உதவிக்கைம் மாறென் னுயிரென்ன வுற்றெண்ணில்,\nஅதுவும்மற் றாங்கவன் றன்னதென் னால்தன்னை,\nபதவிய இன்கவி பாடிய அப்பனுக்கு,\nஎதுவுமொன் றுமில்லை செய்வதிங் குமங்கே.
Verse 765
இங்குமங் கும்திரு மாலன்றி இன்மைகண்டு,\nஅங்ஙனே வண்குரு கூர்ச்சட கோபன் சொல்,\nஇங்ஙனே சொன்னவோ ராயிரத் திப்பத்தும்,\nஎங்ஙனே சொல்லினும் இன்பம் பயக்குமே.
Verse 766
இன்பம் பயக்க எழில்மலர் மாதரும் தானுமிவ் வேழுலகை,\nஇன்பம் பயக்க இனிதுடன் வீற்றிருந் தாள்கின்ற எங்கள்பிரான்,\nஅன்புற் றமர்ந்துறை கின்றா ணிபொழில் சூழ்திரு வாறன்விளை,\nஅன்புற் றமர்ந்து வலம்செய்து கைதொழும் நாள்களும் ஆகுங்கொலோ.
Verse 767
ஆகுங்கொல் ஐயமொன் றின்றி அகலிடம் முற்றவும், ஈரடியே\nஆகும் பரிசு நிமிர்ந்த திருக்குறள் அப்பன் அமர்ந்துறையும்,\nமாகம் திகழ்கொடி மாடங்கள் நீடும் மதிள்திரு வாறன்விளை,\nமாகந்த நீர்கொண்டு தூவி வலஞ்செய்து கைதொழுங் கூடுங்கொலோ.
Verse 768
கூடுங்கொல் வைகலும் கோவிந்த னைமது சூதனைக் கோளரியை,\nஆடும் பறவை மிசைக்கண்டு கைதொழு தன்றி யவனுறையும்,\nபாடும் பெரும்புகழ் நான்மறை வேள்வியைந் தாறங்கம் பன்னினர்வாழ்,\nநீடு பொழில்திரு வாறன் விளைதொழ வாய்க்குங்கொல் நிச்சலுமே.
Verse 769
வாய்க்குங்கொல் நிச்சலும் எப்பொழு தும்மனத்து ஈங்கு நினைக்கப்பெற\nவாய்க்கும் கரும்பும் பெருஞ்செந் நெலும்வயல் சூழ்திரு வாறன்விளை,\nவாய்க்கும் பெரும்புகழ் மூவுல கீசன் வடமது ரைப்பிறந்த,\nவாய்க்கும் மணிநிறக் கண்ணபி ரான்றன் மலரடிப் போதுகளே.
Verse 770
மலரடிப் போதுகள் என்னெஞ்சத் தெப்ப்பொழு துமிருத் திவணங்க,\nபலரடி யார்முன் பருளிய பாம்பணை யப்பன் அமர்ந்துறையும்,\nமலரில் மணிநெடு மாடங்கள் நீடு மதில்திரு வாறன்விளை,\nஉலகம் மலிபுகழ் பாடநம் மேல்வினை ஒன்றும்நில் லாகெடுமே.
Verse 771
ஒன்றும்நில் லாகெடும் முற்றவும் தீவினை யுள்ளித் தொழுமிந்தொண்டீர்,\nஅன்றங் கமர்வென் றுருப்பி ணிநங்கை யணிநெடுந் தோள்புணர்ந்தான்,\nஎன்றுமெப் போதுமென் னெஞ்சம் துதிப்ப வுள்ளேயிருக் கின்றபிரான்,\nநின்ற அணிதிரு வாறன் விளை யென்னும் நீணக ரமதுவே.
Verse 772
நீணக ரமது வேமலர்ச் சோலைகள் சூழ்திரு வாறன்விளை,\nநீணக ரத்துறை கின்றபி ரான்நெடு மால்கண்ணன் விண்ணவர்கோன்\nவாண புரம்புக்கு முக் கட்பி ரானைத் தொலையவெம் போர்கள்செய்து,\nவாணனை யாயிரந் தோள்துணித் தாஞ்சரண் அன்றிமற் றொன்றிலமே.
Verse 773
அன்றிமற் றொன்றிலம் நின்சர ணே!என் றகலிரும் பொய்கை யின்வாய்,\nநின்றுதன் நீள்கழ லேத்திய ஆனையின் நெஞ்சிடர் தீர்த்த பிரான்,\nசென்றங் கினிதுறை கின்ற செழும்பொழில் சூழ்திரு வாறன்விளை,\nஒன்றி வலஞ்செய்ய ஒன்றுமோ? தீவினை யுள்ளத்தின் சார்வல்லவே.
Verse 774
தீவினை யுள்ளத்தின் சார்வல்ல வாகித் தெளிவிசும் பேறலுற்றால்,\nநாவினுள் ளுமுள்ளத் துள்ளும் அமைந்த தொழிலினுள் ளும்நவின்று ,\nயாவரும் வந்து வணங்கும் பொழில்திரு வாறன் விளையதனை,\nமேவி வலஞ்செய்து கைதொழக் கூடுங்கொல் என்னுமென் சிந்தனையே.
Verse 775
சிந்தைமற் றொன்றின் திறத்ததல் லாத்தன்மை தேவபி ரானறியும்,\nசிந்தையி னால்செய்வ தானறி யாதன மாயங்கள் ஒன்றுமில்லை,\nசிந்தையி னால்சொல்லி னால்செய்கை யால்நிலத் தேவர் குழுவணங்கும்,\nசிந்தை மகிழ்திரு வாறன் விளையுறை தீர்த்தனுக் கற்றபின்னே.
Verse 776
தீர்த்தனுக் கற்றபின் மற்றோர் சரணில்லை யென்றெண்ணி,\nதீர்த்தனுக்கே தீர்த்த மனத்தன னாகிச் செழுங்குரு கூர்ச்சட கோபன்சொன்ன,\nதீர்த்தங்க ளாயிரத் துள்ளிவை பத்தும்வல் லார்களை, தேவர்வைகல்\nதீர்த்தங்க ளேயென்று பூசித்து நல்கி யுரைப்பார்தம் தேவியர்க்கே.
Verse 777
தேவிமா ராவார் திருமகள் பூமி யேவமற் றமரராட் செய்வார்,\nமேவிய வுலகம் மூன்றவை யாட்சி வேண்டுவேண் டுருவம்நின் னுருவம்,\nபாவியேன் தன்னை யடுகின்ற கமலக் கண்ணதோர் பவளவாய் மணியே,\nஆவியே! அமுதே! அலைகடல் கடைந்த அப்பனே! காணுமா றருளாய்.
Verse 778
காணுமா றருளாய் என்றென்றே கலங்கிக் கண்ணநீர் அலமர வினையேன்\nபேணுமா றெல்லாம் பேணிநின் பெயரே பிதற்றுமா றருளெனக் கந்தோ,\nகாணுமா றருளாய் காகுத்தா. கண்ணா! தொண்டனேன் கற்பகக் கனியே,\nபேணுவார் அமுதே. பெரியதண் புனல்சூழ் பெருநிலம் எடுத்தபே ராளா!
Verse 779
எடுத்தபே ராளன் நந்தகோ பன்றன் இன்னுயிர்ச் சிறுவனே, அசோதைக்\nகடுத்தபே ரின்பக் குலவிளங் களிறே! அடியனேன் பெரியவம் மானே,\nகடுத்தபோர் அவுணன் உடலிரு பிளவாக் கையுகி ராண்டவெங் கடலே,\nஅடுத்ததோர் உருவாய் இன்றுநீ வாராய் எங்ஙனம் தேறுவர் உமரே?
Verse 780
உமருகந் துகந்த வுருவம்நின் னுருவம்ஆகி உன் தனக்கன்ப ரானார் அவர்,உகந்\nதமர்ந்த செய்கையுன் மாயை அறிவொன்றும் சங்கிப்பன் வி னையேன்,\nஅமரது பண்ணி அகலிடம் புடைசூழ் அடுபடை அவித்தாம் மானே,\nஅமரர்தம் அமுதே! அசுரர்கள் நஞ்சே! என்னுடை ஆருயி ரேயோ.
Verse 781
ஆருயி ரேயோ! அகலிடம் முழுதும் படைத்திடந் துண்டுமிழ்ந் தளந்த,\nபேருயி ரேயோ. பெரியநீர் படைத்தங் குறைந்தது கடைந்தடைத் துடைத்த,\nசீரிய ரேயோ.மனிசர்க்குத் தேவர் போலத்தே வர்க்கும்தே வாவோ,\nஓருயி ரேயோ. உலகங்கட் கெல்லாம் உன்னைநான் எங்குவந் துறுகோ?
Verse 782
எங்குவந் துறுகோ என்னையாள் வானே! ஏழுல கங்களும் நீயே,\nஅங்கவர்க் கமைத்த தெய்வமும் நீயே அவற்றவை கருமமும் நீயே,\nபொங்கிய புறம்பால் பொருளுள வேலும் அவையுமோ நீயின்னே யானால்\nமங்கிய அருவாம் நேர்ப்பமும் நீயே வான்புலம் இறந்ததும் நீயே.
Verse 783
இறந்ததும் நீயே எதிர்ந்ததும் நீயே நிகழ்வதோ நீயின்னே யானால்,\nசிறந்தநின் தன்மை யதுவிது வுதுவென் றறிவொன்றும் சங்கிப்பன் வினையேன்,\nகறந்தபால் நெய்யே! நெய்யின் சுவையே. கடலினுள் அமுதமே, அமுதில்\nபிறந்தவின் சுவையே! சுவையது பயனே! பின்னைதோள் மணந்தபே ராயா!
Verse 784
மணந்தபே ராயா! மாயத்தால் முழுதும் வல்வி னை யேனையீர் கின்ற,\nகுணங்களை யுடையாய். அசுரர்வன் கையர் கூற்றமே. கொடியபுள் ளுயர்த்தாய்,\nபணங்களா யிரமும் உடையபைந் நாகப் பள்ளியாய்! பாற்கடல் சேர்ப்பா,\nவணங்குமா றாறியேன். மனமும்வா சகமும் செய்கையும் யானும்நீ தானே.
Verse 785
யானும்நீ தானே யாவதோ மெய்யே அருநர கவையும் நீயானால்,\nவானுய ரின்பம் எய்திலென் மற்றை நரகமே யெய்திலென்? எனிலும்,\nயானும்நீ தானாய்த் தெளிதொறும் நன்றும் அஞ்சுவன் நரகம்நா னடைதல்,\nவானுய ரின்பம் மன்னிவீற் றிருந்தாய் அருளுநின் தாள்களை யெனக்கே!
Verse 786
தாள்களை யெனக்கே தலைத்தலை சிறப்பத் தந்தபே ருதவிக்கைம் மாறா,\nதோள்களை யாரத் தழுவிதென் னுயிரை அறவிலை செய்தனன் சோதீ,\nதோள்களா யிரத்தாய். முடிகளா யிரத்தாய்! துணைமலர்க் கண்களா யிரத்தாய்,\nதாள்களா யிரத்தாய்! பேர்களா யிரத்தாய்! தமியனேன் பெரிய அப்பனே.
Verse 787
பெரிய அப்பனைப் பிரமன் அப்பனை உருத்திரன் அப்பனை, முனிவர்க்\nகுரிய அப்பனை அமரர் அப்பனை உலகுக்கோர் தனியப்பன் தன்னை,\nபெரியவண் குருகூர் வண்சட கோபன் பேணின ஆயிரத் துள்ளும்,\nஉரியசொல் மாலை இவையும்பத் திவற்றால் உய்யலாம் தொண்டீர் நங்கட்கே.
Verse 788
நங்கள் வரிவளை யாயங் காளோ! நம்முடை ஏதலர் முன்பு நாணி,\nநுங்கட் கியானொன்று ரைக்கும் மாற்றம் நோக்குகின் றேனெங்கும் காண மாட்டேன்,\nசங்கம் சரிந்தன சாயி ழந்தேன் தடமுலை பொன்னிற மாய்த்த ளர்ந்தேன்,\nவெங்கண் பறவையின் பாக னெங்கோன் வேங்கட வாணணை வேண்டிச் சென்றே.
Verse 789
வேண்டிச்சென் றொன்று பெறுகிற் பாரில் என்னுடைத் தோழியர் நுங்கட் கேலும்,\nஈண்டிது ரைக்கும் படியை யந்தோ! காண்கின்றி லேனிட ராட்டி யேன்நான்,\nகாண்தகு தாமரைக் கண்ணன் கள்வன் விண்ணவர் கோன்நங்கள் கோனைக் கண்டால்,\nஈண்டிய சங்கும் நிறைவும் கொள்வன் எத்தனை காலம் இளைக்கின் றேனே.
Verse 790
காலம் இளைக்கில் லால்வி னையேன் நானிளைக் கின்றிலன் கண்டு கொண்மின்,\nஞாலம் அறியப் பழிசு மந்தேன் நன்னுத லீர்.இனி நாணித் தானென்,\nநீல மலர்நெடுஞ் சோதி சூழ்ந்த நீண்ட முகில்வண்ணன் கண்ணன் கொண்ட,\nகோல வளையொடு மாமை கொள்வான் எத்தனை காலம்கூ டச்சென்றே?
Verse 791
கூடச்சென் றேனினி என்கொ டுக்கேன்? கோல்வளை நெஞ்சத் தொடக்க மெல்லாம்,\nபாடற் றொழிய இழந்து வைகல் பல்வளை யார்முன் பரிச ழிந்தேன்,\nமாடக் கொடிமதிள் தென்கு ளந்தை வண்குட பால்நின்ற மாயக் கூத்தன்,\nஆடல் பறவை உயர்த்த வெல்போர் ஆழி வலவி னை யாதரித்தே.
Verse 792
ஆழி வலவினை ஆதரிப்பும் ஆங்கவன்நம்மில் வரவும் எல்லாம்,\nதோழியர் காள் நம்முடைய மேதான்? சொல்லுவ தோவிங் கரியது தான்,\nஊழிதோ றூழி ஒருவ னாக நன்குணர் வார்க்கும் உணர லாகா,\nசூழ லுடைய சுடர்கொ ளாதித் தொல்லையஞ் சோதி நினைக்குங் காலே.
Verse 793
தொல்லையஞ் சோதி நினைக்குங் காலென் சொல்லள வன்றிமை யோர்த மக்கும்,\nஎல்லையி லாதன கூழ்ப்புச் செய்யும் அத்திறம் நிற்கவெம் மாமை கொண்டான்,\nஅல்லி மலர்த்தண் டுழாயும் தாரான் ஆர்க்கிடு கோவினிப் பூசல் சொல்லீர்,\nவல்லி வளவயல் சூழ்கு டந்தை மாமலர்க் கண்வளர் கின்ற மாலே.
Verse 794
மாலரி கேசவன் நார ணஞ்சீ மாதவன் கோவிந்தன் வைகுந்தன் என்றென்று,\nஒல மிடவென்னைப் பண்ணி விட்டிட் டொன்று முருவும் சுவடும் காட்டான்,\nஏல மலர்குழல் அன்னை மீர்காள். என்னுடைத் தோழியர் காள்! என்செய்கேன்?\nகாலம் பலசென்றும் காண்ப தாணை உங்களோ டெங்க ளிடையில் லையே.
Verse 795
இடையில் லையான் வளர்த்த கிளிகாள். பூவைகள் காள்.குயில் காள்!ம யில்காள்,\nஉடையநம் மாமையும் சங்கும் நெஞ்சும் ஒன்றும் ஒழியவொட் டாது கொண்டான்,\nஅடையும் வைகுந்த மும்பாற் கடலும் அஞ்சன வெற்பும் அவை நணிய,\nகடையறப் பாசங்கள் விட்ட பின்னை அன்றி யவனவை காண்கொ டானே.
Verse 796
காண்கொடுப் பானல்ல னார்க்கும் தன்னைக் கைசெயப் பாலதோர் மாயந் தன்னால்,\nமாண்குறல் கோல வடிவு காட்டி மண்ணும் விண்ணும் நிறைய மலர்ந்த,\nசேண்சுடர்த் தோள்கள் பலத ழைத்த தேவ பிராற்கென் நிரைவினோடு, நாண்கொடுத்\nதேனினி யென்கொடுக்கேன் என்னுடை நன்னுதல் நங்கை மீர்காள்.
Verse 797
என்னுடை நன்னுதல் நங்கை மீர்காள்! யானினச் செய்வதென்? என்நெஞ் சென்னை,\nநின்னிடை யேனல்லேன் என்று நீங்கி நேமியும் சங்கும் இருகைக் கொண்டு,\nபன்னெடுஞ் சூழ்சுடர் ஞாயிற் றோடு பான்மதி ஏந்தியொர் கோல நீல,\nநன்னெடுங் குன்றம் வருவ தொப்பான் நாண்ம லர்ப்பா தமடைந் ததுவே.
Verse 798
பாதம் அடைவதன் பாசத் தாலே மற்றவன் பாசங்கள் முற்ற விட்டு,\nகோதில் புகழ்க்கண் ணன்தன் னடிமேல் வண்குரு கூர்ச்சட கோபன் ¦ சொன்ன,\nதீதிலந்தாதியோ ராயி ரத்துள் இவையுமோர் பத்திசை யோடும் வல்லார்,\nஆதுமோர் தீதில ராகி யிங்கும் அங்குமெல் லாமமை வார்கள் தாமே.
Verse 799
அங்கு மிங்கும் வானவர் தானவர் யாவரும்,\nஎங்கும் இனையையென் றுன்னை அறியகிலா தலற்றி,\nஅங்கம் சேரும் பூமகள் மண்மகள் ஆய்மகள்,\nசங்கு சக்கரக் கையவ னென்பர் சரணமே.
Verse 800
சரண மாகிய நான்மறை நூல்களும் சாராதே,\nமரணம் தோற்றம் வான்பிணி மூப்பென் றிவைமாய்த்தோம்,\nகரணப் பல்படை பற்றற வோடும் கனலாழி,\nஅரணத் திண்படை யேந்திய ஈசற் காளாயே.
Verse 801
ஆளும் ஆளார் ஆழியும் சங்கும் சுமப்பார்தாம்,\nவாளும் வில்லுங் கொண்டுபின் செல்வார் மாற்றில்லை,\nதாளும் தோளும் கைகளை யாரத் தொழக்காணேன்,\nநாளும் நாளும் நாடுவன் அடியேன் ஞாலத்தே.
Verse 802
ஞாலம் போனகம் பற்றியோர் முற்றா வுருவாகி,\nஆலம் பேரிலை யன்னவ சஞ்செய்யும் அம்மானே,\nகாலம் பேர்வதோர் காரிரு ளுழியொத் துளதால்,உன்\nகோலங் காரேழில் காணலுற் றாழும் கொடியேற்கே.
Verse 803
கொடியார் மாடக் கோளு ரகத்தும் புளிங்குடியும் ,\nமடியா தின்னே நீதுயில் மேவி மகிழ்ந்ததுதான்,\nஅடியார் அல்லல் தவிர்த்த அசைவோ? அன்றேல்,\nஇப்படிதான் நீண்டு தாவிய அசைவோ? பணியாயே.
Verse 804
பணியா அமரர் பணிவும் பண்பும் தாமேயாம்,\nஅணியார் ஆழியும் சங்கமு மேந்தும் அவர்காண்மின்,\nதணியா வெந்நோ யுலகில் தவிர்ப்பான், திருநீல\nமணியார் மேனியோ டென்மனம் சூழ வருவாரே.
Verse 805
வருவார் செல்வார் வண்பரி சாரத் திருந்த,என்\nதிருவாழ் மார்வற் கென்திறம் சொல்லார் செய்வதென்,\nஉருவார் சக்கரம் சங்கு சுமந்திங் கும்மோடு,\nஒருபா டுழல்வானோரடி யானு முளனென்றே.
Verse 806
என்றே யென்னையுன் ஏரார் கோலத் திருந்தடிக்கீழ்,\nநின்றே யாட்செய்ய நீகொண் டருள நினைப்பதுதான்,\nகுன்றெழ் பாரேழ் சூழ்கடல் ஞாலம் முழுவேழும்,\nநின்றே தாவிய நீள்கழல் ஆழித் திருமாலே.
Verse 807
திருமால்! நான்முகன் செஞ்சடை யானென் றிவர்கள்,எம்\nபெருமான் தன்மையை யாரறி கிற்பார் பேசியென்,\nஒருமா முதல்வா! ஊழிப் பிரானென் னையாளுடை,\nகருமா மேனியன் என்பனென் காதல் கலக்கவே.
Verse 808
கலக்க மில்லா நல்தவ முனிவர் கரைகண்டோர்,\nதுளக்க மில்லா வானவ ரெல்லாம் தொழுவார்கள்,\nமலக்க மெய்த மாகடல் தன்னைக் கடைந்தானை,\nஉலக்க நாம்புகழ் கிற்பதென் செய்வ துரையீரே.
Verse 809
உரையா வெந்நோய் தவிர அருள்நீண் முடியானை,\nவரையார் மாடம் மன்னு குருகூர்ச் சடகோபன்,\nஉரையேய் சொல்தொடை ஓரா யிரத்து ளிப்பத்தும்,\nநிரையே வல்லார் நீடுல கத்துப் பிறவாரே.
Verse 810
வார்கடா அருவி யானைமா மலையின் மருப்பி ணைக் குவடிறுத் துருட்டி,\nஊர்கொள்திண் பாகன் உயிர்செகுத் தரங்கின் மல்லரைக் கொன்றுசூழ் பரண்மேல்,\nபோர்கடா வரசர் புறக்கிட மாட மீமசைக் கஞ்சனைத் தகர்த்த,\nசீர்கொள்சிற் றாயன் திருச்செங்குன் றூரில் திருச்சிற்றா றெங்கள்செல் சார்வே.
Verse 811
எங்கள்செல் சார்வு யாமுடை அமுதம் இமையவர் அப்பனென் அப்பன்,\nபொங்குமூ வுலகும் படைத்தளித் தழிக்கும் பொருந்துமூ வுருவனெம் அருவன்,\nசெங்கயல் உகளும் தேம்பணை புடைசூழ் திருச்செங்குன் றூர்த்திருச் சிற்றாறு\nஅங்கமர் கின்ற, ஆதியான் அல்லால் யாவர்மற் றெனமர் துணையே?
Verse 812
என்னமர் பெருமான் இமையவர் பெருமான் இருநிலம் இடந்தவெம் பெருமான்,\nமுன்னைவல் வினைகள் முழுதுடன் மாள என்னையாள் கின்றேம் பெருமான்,\nதென்திசைக் கணிகொள் திருச்செங்குன் றூரில் திருச்சிற்றா றங்கரை மீபால்\nநின்றவெம் பெருமான், அடியல்லால் சரணம் நினைப்பிலும் பிறிதில்லை எனக்கே.
Verse 813
பிறிதில்லை யெனக்குப் பெரியமூ வுலகும் நிறையப்பே ருருவமாய் நிமிர்ந்த,\nகுறிய மாண் எம்மான் குரைகடல் கடைந்த கோலமா ணிக்கமென் எம்மான்,\nசெறிகுலை வாழை கமுகுதெங் கணிசூழ் திருச்செங்குன் றூர்த்திருச் சிற்றாறு\nஅறிய,மெய்ம் மையே நின்றவெம் பெருமான் அடியிணை யல்லதோர் அரணே.
Verse 814
அல்லதோர் அரணும் அவனில்வே றில்லை அதுபொரு ளாகிலும், அவனை\nஅல்லதென் ஆவி அமர்ந்தணை கில்லா தாதலால் அவனு றை கின்ற,\nநல்லநான் மறையோர் வேள்வியுள் மடுத்த நறும்புகை விசும்பொளி மறைக்கும்,\nநல்லநீள் மாடத் திருச்செங்குன் றூரில் திருச்சிற்றா றெனக்குநல் லரணே.
Verse 815
எனக்குநல் லரணை எனதா ருயிரை இமையவர் தந்தைதாய் தன்னை,\nதனக்குன்தன் தன்மை அறிவரி யானைத் தடங்கடல் பள்ளியம் மானை,\nமனக்கொள்சீர் மூவா யிரவர்வண் சிவனும் அயனும் தானுமொப் பார்வாழ்,\nகனக்கொள்திண் மாடத் திருச்செங்குன் றூரில் திருச்சிற்றா றதனுள்கண் டேனே.
Verse 816
திருச்செங்குன் றூரில் திருச்சிற்றா றதனுள் கண்டவத் திருவடி யென்றும்,\nதிருச்செய்ய கமலக் கண்ணூம்செவ் வாயும் செவ்வடி யும்செய்ய கையும்,\nதிருச்செய்ய கமல வுந்தியும் செய்ய கமலமார் பும்செய்ய வுடையும்,\nதிருச்செய்ய முடியும் ஆரமும் படையும் திகழவென் சிந்தையு ளானே.
Verse 817
திகழவென் சிந்தை யுள்ளிருந் தானைச் செழுநிலத் தேவர்நான் மறையோர்,\nதிசைகைகூப்பி யேத்தும் திருச்செங்குன் றூரில் திருச்சிற்றா றங்கரை யானை,\nபுகர்கொள்வா னவர்கள் புகலிடந் தன்னை அசுரர்வன் கையர்வெங் கூற்றை,\nபுகழுமா றறியேன் பொருந்துமூ வுலகும் படைப்பொடு கெடுப்புக்காப் பவனே.
Verse 818
படைப்பொடு கெடுப்புக் காப்பவன் பிரம பரம்பரன் சிவபெருமான் அவனே,\nஇடைப்புக்கோ ருருவும் ஒழிவில்லை யவனே புகழ்வில்லை யாவையும் தானே,\nகொடைப்பெரும் புகழார் இனையர்தன் னானார் கூறிய விச்சையோ டொழுக்கம்,\nநடைப்பலி யியற்கைத் திருச்செங்குன் றூரில் திருச்சிற்றா றமர்ந்த நாதனே.
Verse 819
அமர்ந்த நாதனை யவரவ ராகி அவர்க்கருள் அருளுமம் மானை\nஅமர்ந்ததண் பழனத் திருச்செங்குன் றூரில் திருச்சிற்றாற் றங்கரை யானை,\nஅமர்ந்தசீர் மூவா யிரவர்வே தியர்கள் தம்பதி யவனிதே வர்வாழ்வு,\nஅமர்ந்தமா யோனை முக்கணம் மானை நான்முக னையமர்ந் தேனே.
Verse 820
தேனைநன் பாலைக் கன்னலை யமுதைத் திருந்துல குண்டவம் மானை,\nவானநான் முகனை மலர்ந்தண் கொப்பூழ் மலர்மிசைப் படைத்தமா யோனை,\nகோனைவண் குருகூர்ச் வண்சட கோபன் சொன்னவா யிரத்துளிப் பத்தும்,\nவானின்மீ தேற்றி யருள்செய்து முடிக்கும் பிறவிமா மாயக்கூத் தினையே.
Verse 821
மாயக் கூத்தா! வாமனா! வினையேன் கண்ணா! கண்கைகால்\nதூய செய்ய மலர்களாச் சோதிச் செவ்வாய் முகிழதா,\nசாயல் சாமத் திருமேனி தண்பா சடையா, தாமரைநீள்\nவாசத் தடம்போல் வருவானே! ஒருநாள் காண வாராயே!
Verse 822
காண வாராய் என்றென்று கண்ணும் வாயும் துவர்ந்து,அடியேன்\nநாணி நன்னாட் டலமந்தால் இரங்கி யொருநாள் நீயந்தோ,\nகாண வாராய் கருநாயி றுதிக்கும் கருமா மாணிக்க,\nநாணல் மலைபோல் சுடர்ச்சோதி முடிசேர் சென்னி யம்மானே.
Verse 823
முடிசேர் சென்னி யம்மா!நின் மொய்பூந் தாமத் தண்டுழாய்,\nகடிசேர் கண்ணிப் பெருமானே! என்றென் றேங்கி யழுதக்கால்,\nபடிசேர் மகரக் குழைகளும் பவள வாயும் நால்தோளும்,\nதுடிசே ரிடையும் அமைந்ததோர் தூநீர் முகில்போல் தோன்றாயே.
Verse 824
தூநீர் முகில்போல் தோன்றும்நின் சுடர்க்கொள் வடிவும் கனிவாயும்,\nதேநீர்க் கமலக் கண்களும் வந்தென் சிந்தை நிறைந்தவா,\nமாநீர் வெள்ளீ மலைதன்மேல் வண்கார் நீல முகில்போல,\nதூநீர்க் கடலுள் துயில்வானே! எந்தாய்! சொல்ல மாட்டேனே!
Verse 825
சொல்ல மாட்டேன் அடியேனுன் துளங்கு சோதித் திருப்பாதம்,\nஎல்லை யில்சீ ரிளஞாயி றிரண்டு போலென் னுள்ளவா!,\nஅல்லல் என்னும் இருள்சேர்தற் குபாயம் என்னே?, ஆழிசூழ்\nமல்லல் ஞால முழுதுண்ட மாநீர்க் கொண்டல் வண்ணனே!
Verse 826
கொண்டல் வண்ணா! குடக்கூத்தா! வினையேன் கண்ணா. கண்ணா,என்\nஅண்ட வாணா! என்றென்னை ஆளக் கூப்பிட் டழைத்தக்கால்,\nவிண்டன் மேல்தான் மண்மேல்தான் விரிநீர்க் கடல்தான் மற்றுத்தான்,\nதொண்ட னேனுள் கழல் காண ஒருநாள் வந்து தோன்றாயே.
Verse 827
வந்து தோன்றா யன்றேலுன் வையம் தாய மலரடிக்கீழ்,\nமுந்தி வந்து யான்நிற்ப முகப்பே கூவிப் பணிகொள்ளாய்,\nசெந்தண் கமலக் கண்கைகால் சிவந்த வாயோர் கருநாயிறு,\nஅந்த மில்லாக் கதிர்பரப்பி அலர்ந்த தொக்கும் அம்மானே.
Verse 828
ஒக்கும் அம்மா னுருவமென் றுள்ளம் குழைந்து நாணாளும்,\nதொக்க மேகப் பல்குழாங்கள் காணுந் தோறும் தொலைவன்நான்,\nதக்க ஐவர் தமக்காயன்று றீரைம் பதின்மர் தாள்சாய,\nபுக்க நல்தேர்த் தனிப்பாகா. வாராய் இதுவோ பொருத்தமே?
Verse 829
இதுவோ பொருத்தம் மின்னாழிப் படையாய் ஏறும் இருஞ்சிசிறைப்புள்,\nஅதுவே கொடியா வுயர்த்தானே! என்றென் றேங்கி யழுதக்கால்,\nஎதுவே யாகக் கருதுங்கொல் இம்மா ஞாலம் பொறைதீர்ப்பான்,\nமதுவார் சோலை யுத்தர மதுரைப் பிறந்த மாயனே?
Verse 830
பிறந்த மாயா! பாரதம் பொருத மாயா! நீயின்னே,\nசிறந்த கால்தீ நீர்வான்மண் பிறவு மாய பெருமானே,\nகறந்த பாலுள் நெய்யேபோல் இவற்று ளெங்கும் கண்டுகொள்,\nஇறந்து நின்ற பெருமாயா! உன்னை எங்கே காண்கேனே?
Verse 831
எங்கே காண்கேன் ஈன்துழய் அம்மான் றன்னை யான்? என்றென்று\nஅங்கே தாழ்ந்த சொற்களால் அந்தண் குருகூர்ச் சடகோபன்,\nசெங்கேழ் சொன்ன வாயிரத்துள் இவையும் பத்தும் வல்லார்கள்,\nஇங்கே காண இப்பிறப்பே மகிழ்வர் எல்லியும் காலையே.
Verse 832
எல்லியும் காலையும் தன்னை நினைந்தெழ,\nநல்ல அருள்கள் நமக்கேதந் தருள்செய்வான்,\nஅல்லியந் தண்ணந் துழாய்முடி யப்பனூர்,\nசெல்வர்கள் வாழும் திருக்கடித் தானமே.
Verse 833
திருக்கடித் தானமும் என்னுடைச் சிந்தையும்,\nஒருக்கடுத் துள்ளே உறையும் பிரான்கண்டீர்,\nசெருக்கடுத் தன்று திகைத்த அரக்கரை,\nஉருக்கெட வாளி பொழிந்த ஒருவனே.
Verse 834
ஒருவ ரிருவரோர் மூவ ரெனநின்று,\nஉருவு கரந்துள் ளுந்தோறும் தித்திப்பான்,\nதிருவமர் மார்வன் திருக்கடித் தானத்தை,\nமருவி யுரைகின்ற மாயப் பிரானே.
Verse 835
மாயப் பிரானென வல்வினை மாய்ந்தற,\nநேயத்தி னால்நெஞ்சம் நாடு குடிகொண்டான்,\nதேசத் தமரர் திருக்கடித் தானத்தை,\nவாசப் பொழில்மன்னு கோயில்கொண் டானே.
Verse 836
கோயில்கொண் டான்தன் திருக்கடித் தானத்தை,\nகோயில்கொண் டானத னேடுமென் னெஞ்சகம்,\nகோயில்கொள் தெய்வமெல் லாம்தொழ, வைகுந்தம்\nகோயில்கொண் டகுடக் கூத்தவம் மானே.
Verse 837
கூத்தவம் மான்கொடி யேனிடர் முற்றவும்,\nமாய்த்தவம் மான்மது சூதவம் மானுறை,\nபூத்த பொழில்தண் திருக்கடித் தானத்தை,\nஏத்தநில் லாகுறிக் கொண்டமின் இடரே.
Verse 838
கொண்டமின் இடர்கெட வுள்ளத்துக் கோவிந்தன்,\nமண்விண் முழுதும் அளந்தவொண் டாமரை,\nமண்ணவர் தாம்தொழ வானவர் தாம்வந்து,\nநண்ணு திருக்கடித் தான நகரே.
Verse 839
தான நகர்கள் தலைசிறந் தெங்கெங்கும்,\nவானிந் நிலம்கடல் முற்றுமெம் மாயற்கே,\nஆன விடத்துமென் நெஞ்சும் திருக்கடித்\nதான நகரும், தனதாயப் பதியே.
Verse 840
தாயப் பதிகள்தலைசிறந் தெங்கெங்கும்,\nமாயத்தி னால்மன்னி வீற்றிருந் தானுறை,\nதேயத் தமரர் திருக்கடித் தானத்துள்,\nஆயர்க் கதிபதி அற்புதன் தானே.
Verse 841
அற்புதன் நாரா யணனரி வாமனன்,\nநிற்பது மேவி யிருப்பதென் னெஞ்சகம்,\nநற்புகழ் வேதியர் நான்மறை நின்றதிர்,\nகற்பகச் சோலைத் திருக்கடித் தானமே.
Verse 842
சோலை திருக்கடித் தானத் துறைதிரு மாலை,\nமதிள்குரு கூர்ச்சடகோபன்சொல்,\nபாலோ டமுதன்ன ஆயிரத் திப்பத்தும்,\nமேலைவை குந்தத் திருத்தும் வியந்தே.
Verse 843
இருந்தும், வியந்து என்னைத்தன் டிபான் அழக்கீழ், என்று\nஅருத்தித்து, எனைத்து ஓர் பல நாள் அர்த்தேற்கு,\nபொருத்தம் உடை வாமன்ன் தான் புகுந்து, என் – தன்\nகருத்தை உற, வீற்றிருந்தாள் – கண்டுகொண்டே.
Verse 844
இருந்தான் கண்டுகொண் டெனதேழை நெஞ்சாளும்,\nதிருந்தாத வோரைவ ரைத்தேய்ந் தறமன்னி,\nபெருந்தாள் களிற்றுக் கருள்செய்த பெருமான்,\nதருந்தான் அருள்தான் இனியான் அறியேனே.
Verse 845
அருள்தா னினியான் அறியேன் அவனென்னுள்,\nஇருள்தான் அறவீற் றிருந்தான் இதுவல்லால்,\nபொருள்தா னெனில்மூ வுலகும் பொருளல்ல,\nமருள்தானீதோ? மாய மயக்கு மயக்கே.
Verse 846
மாய மயக்குமயக் கானென்னை வஞ்சித்து,\nஆயன் அமரர்க் கரியே றெனதம்மான்,\nதூய சுடர்ச்சோதி தனதென்னுள் வைத்தான்,\nதேயம் திகழும்தன் திருவருள் செய்தே.
Verse 847
திகழுந்தன் திருவருள் செய்துல கத்தார்,\nபுகழும் புகழ்தா னதுகாட்டித் தந்து,என்னுள்\nதிகழும் மணிக்குன்ற மொன்றே யொத்துநின்றான்,\nபுகழும் புகழ்மற் றெனக்குமோர் பொருளே?
Verse 848
பொருள்மற் றெனக்குமோர் பொருள்தன்னில் சீர்க்கத்\nதருமேல்,பின் யார்க்கவன் தன்னைக் கொடுக்கும்?,\nகருமா ணிக்கக் குன்றத்துத் தாமரைபோல்,\nதிருமார்பு கால்கண்கை செவ்வாய் உந்தியானே.
Verse 849
செவ்வாயுந்தி வெண்பல் சுடர்க்குழை, தன்னோடு\nஎவ்வாய்ச் சுடரும் தம்மில்முன் வளாய்க்கொள்ள,\nசெவ்வாய் முறுவலோ டெனதுள்ளத் திருந்த,\nஅவ்வா யன்றியான் அறியேன்மற் றருளே.
Verse 850
அறியேன்மற் றருளென்னை யாளும் பிரானார்,\nவெறிதே யருள்செய்வர் செய்வார்கட் குகந்து,\nசிறியே னுடைச்சிந்தை யுள்மூ வுலகும்,தம்\nநெறியா வயிற்றிற்கொண்டு நின்றொழிந் தாரே.
Verse 851
வயிற்றிற்கொண்டு நின்றொழிந் தாரும் யவரும்,\nவயிற்றிற்கொண்டு நின்றொரு மூவுல கும்,தம்\nவயிற்றிற்கொண்டு நின்றவண் ணம்நின்ற மாலை,\nவயிற்றிற்கொண்டு மன்ன வைத் தேன்மதி யாலே.
Verse 852
வைத்தேன் மதியா லெனதுள்ளத் தகத்தே,\nஎய்த்தே யொழிவேனல் லேனென்றும் எப்போதும்,\nமொய்த்தேய் திரைமோது தண்பாற் கடலுளால்,\nபைத்தேய் சுடர்ப்பாம் பணைநம் பரனையே.
Verse 853
சுடர்ப்பாம் பணைநம் பரனைத் திருமாலை,\nஅடிச்சேர் வகைவண் குருகூர்ச் சடகோபன்,\nமுடிப்பான் சொன்னவா யிரத்திப்பத் தும்சன்மம்\nவிட,தேய்ந் தறநோக்கும் தன்கண்கள் சிவந்தே.
Verse 854
கண்கள் சிவந்து பெரியவாய் வாயும் சிவந்து கனிந்து,உள்ளே\nவெண்பல் இலகு சுடரிலகு விலகு மகர குண்டலத்தன்,\nகொண்டல் வண்ணன் சுடர்முடியன் நான்கு தோளன் குனி சார்ங்கன்,\nஒண்சங் கதைவா ளாழியான் ஒருவன் அடியே னுள்ளானே.
Verse 855
அடியே னுள்ளான் உடலுள்ளான் அண்டத் தகத்தான் புறத்துள்ளான்,\nபடியே யிதுவென் றுரைக்கலாம், படியன் அல்லன் பரம்பரன்,\nகடிசேர் நாற்றத் துள்ளாலை இன்பத் துன்பக் கழிநேர்மை,\nஒடியா இன்பப் பெருமையோன் உணர்வி லும்ப ரொருவனே.
Verse 856
உணர்வி லும்ப ரொருவனை அவன தருளா லுறல்பொருட்டு,என்\nஉணர்வி னுள்ளே யிருத்தினேன் அதுவும் அவன தின்னருளே,\nஉணர்வும் உயிரும் உடம்பும்மற் றுலப்பி லனவும் பழுதேயாம்,\nஉணர்வைப் பெறவூர்ந் திறவேறி யானும் தானா யொழிந்தானே.
Verse 857
யானும் தானா யொழிந்தானை யாதும் யவர்க்கும் முன்னோனை,\nதானும் சிவனும் பிரமனும் ஆகிப் பணைத்த தனிமுதலை,\nதேனும் பாலும் கன்னலும் அமுதும் ஆகித் தித்தித்து,என்\nஊனி லுயிரி லுணர்வினில் நின்ற வொன்றை யுணர்ந்தேனே.
Verse 858
நின்ற ஒன்றை யுணர்ந்தேனுக் கதனுள் நேர்மை அதுவிதுவென்று,\nஒன்றும் ஒருவர்க் குணரலாகா துணர்ந்தும் மேலும் காண்பரிது\nசென்று சென்று பரம்பரமாய் யாது மின்றித் தேய்ந்தற்று,\nநன்று தீதென் றறிவரிதாய் நன்றாய் ஞானம் கடந்ததே.
Verse 859
நன்றாய் ஞானம் கடந்துபோய் நல்லிந் திரிய மெல்லாமீர்த்து,\nஒன்றாய்க் கிடந்த அரும்பெரும்பாழ் உலப்பி லதனை யுணர்ந்துணர்ந்து,\nசென்றாங் கின்ப துன்பங்கள் செற்றுக் களைந்து பசையற்றால்,\nஅன்றே யப்போ தேவீடு அதுவே வீடு வீடாமே.
Verse 860
அதுவே வீடு வீடு பேற்றின்பந் தானும் அதுதேறி,\nஎதுவே தானும் பற்றின்றி யாது மிலிக ளாகிற்கில்,\nஅதுவே வீடு வீடு பேற்றின்பந் தானும் அதுதேறாது,\nஎதுவே வீடே தின்பம்? என்றெய்த்தா ரெய்த்தா ரெய்த்தாரே.
Verse 861
எய்த்தா ரெய்த்தா ரெய்த்தாரென் றில்லாத் தாரும் புறத்தாரும்\nமொய்த்து,ஆங் கலறி முயங்கத்தாம் போகும் போது,உன் மத்தர்போல்\nபித்தே யேறி யனுராகம் பொழியும் போதெம் பெம்மானோடு\nஒத்தே சென்று,அங்குளம்கூடக் கூடிற் றாகில் நல்லுறைப்பே.
Verse 862
கூடிற் றாகில் நல்லுறைப்புக் கூடாமையைக் கூடினால்,\nஆடல் பறவை யுயர்கொடியெம் ஆயனாவ ததுவதுவே,\nவீடைப் பண்ணி யொருபரிசே எதிர்வும் நிகழ்வும் கழிவுமாய்,\nஓடித் திரியும் யோகிகளும் உளரு மில்லை யல்லரே.
Verse 863
உளரு மில்லை யல்லராய் உளரா யில்லை யாகியே,\nஉளரெம் மொருவர் அவர்வந்தென் உள்ளத் துள்ளே யுறைகின்றார்\nவளரும் பிறையும் தேய்பிறையும் போல் அசைவும் ஆக்கமும்,\nவளரும் சுடரும் இருளும்போல் தெருளும் மருளும் மாய்த்தோமே.
Verse 864
தெருளும் மருளும் மாய்த்துத்தன் திருந்து செம்பொற் கழலடிக்கீழ்\nஅருளி யிருத்தும் அம்மானாம் அயனாம் சிவனாம்,திருமாலால்\nஅருளப் பட்ட சடகோபன் ஓரா யிரத்து ளிப்பத்தால்,\nஅருளி யடிக்கீ ழிருத்தும்நம் அண்ணல் கருமா ணிக்கமே.
Verse 865
கருமா ணிக்க மலைமேல்மணித் தடந்தாமரைக் காடுகள்போல்,\nதிருமார்வு வாய்கண்கை யுந்திகாலுடை யாடைகள் செய்யபிரான்\nதிருமா லெம்மான் செழுநீர்வயல் குட்டநாட்டுத் திருப்புலியூர்,\nஅருமாயன் பேரன்றிப் பேச்சிலள் அன்னைமீரிதற் கென்செய்கேனா.
Verse 866
அன்னைமீ ரிதற்கென் செய்கேன்? அணிமேருவின் மீதுலவும்,\nதுன்னு சூழ்சுடர் ஞாயிறும் அன்றியும்பல் சுடர்களும்போல்,\nமின்னு நீண்முடி யாரம்பல்கலன் றானுடை யெம்பெருமான்,\nபுன்னை யம்பொழில் சூழ்திருப் புலியூர் புகழுமிவளே.
Verse 867
புகழு மிவள்நின் றிராப்பகல் பொருநீர்க்கடல் தீப்பட்டு,எங்கும்\nதிகழு மெரியோடு செல்வதொப்பச் செழுங்கதி ராழிமுதல்\nபுகழும் பொருபடை யேந்திப்போர் புக்கசுரரைப் பொன்றுவித்தான்\nதிகழு மணிநெடு மாடம்நீடு திருப்பூலி யுர்வளமே.
Verse 868
ஊர்வ ளம்கிளர் சோலையும் கரும்பும்பெருஞ் செந்நெலும்சூழ்ந்து\nஏர்வ ளம்கிளர் தண்பணைக் குட்டநாட்டுத் திருப்பூலியூர்,\nசீர்வ ளம்கிளர் மூவுல குண்டுமிழ் தேவபிரான்,\nபேர்வ ளம்கிளர்ந் தன்றிப் பேச்சிலளின்றிப் புனையிழையே.
Verse 869
புனையிழைகள் அணிவும் ஆடையுடையும் புதுக்க ணிப்பும்,\nநினையும் நீர்மைய தன்றிவட்கிது நின்று நினைக்கப்புக்கால்,\nசுனுயி னுள்தடந் தாமரை மலரும்தண் திருப்புலியுர்,\nமுனைவன் மூவுல காளியப்பன் திருவருள் மூழ் கினளே.
Verse 870
திருவருள் மூழ்கி வைகளும் செழுநீர்நிறக் கண்ணபிரான்,\nதிருவருள் களும்சேர்ந் தமைக்கடை யாளம் திருந்தவுள,\nஅருளால் திருவருள் அவன் சென்று சேர்தண் திருப்பூலியுர்,\nதிருவருள் கமுகொண் பழுத்தது மெல்லியல் செவ்விதழே.
Verse 871
மெல்லிலைச் செல்வண் கொடிபுல்க வீங்கிளந் தாள்கமுகின்,\nமல்லிலை மடல்வாழை யீங்கனி சூழ்ந்து மணம்கமழ்ந்து,\nபுல்லிலைத் தெங்கி னூடுகால் உலவும்தண் திருப்பூலியுர்,\nமல்லலம் செல்வக் கண்ணந்தாள் அடைந்தாள் இம் மடவரலே.
Verse 872
மடவரல் அன்னைமீர்கட் கெஞ்சொல்லிச் சொல்லுகேன்? மல்லைச்செல்வ\nவடமொழி மறைவாணர் வேள்வியுள் நெய்யழல் வான்புகைபோய்\nதிடவிசும் பிலமரர் நாட்டை மறைக்கும்தண் திருப்பூலியுர்,\nபடவர வணையான் றன்நாமம் அல்லால் பரவா ளிவளே.
Verse 873
பரவா ளிவள்நின் றிராப்பகல் பனிநீர்நிறக் கண்ணபிரான்,\nவிரவா ரிசைமறை வேதியரொலி வேலையின் நின்றொலிப்ப,\nகரவார் தடந்தொறும் தாமரைக் கயந்தீவிகை நின்றலரும்,\nபுரவார் கழனிகள் சூழ்திருப் புலியூர்ப்புக ழன்றிமற்றே.
Verse 874
அன்றிமற் றோருபாய மென்னிவ ளந்தண்டு ழாய்கமழ்தல்,\nகுன்ற மாமணி மாடமாளிகைக் கோலக்கு ழாங்கள்மல்கி,\nதென்தி சைத்தில தம்புரைக் குட்டநாட்டுத் திருப்பூலியுர்,\nநின்ற மாயப்பி ராந்திரு வருளாமிவள் நேர்ப்பட்டதே.
Verse 875
நேர்ப்பட்ட நிறைமூ வுலகுக்கும் நாயகன் றன்னடிமை,\nநேர்ப்பட்ட தொண்டர்தொண்டர் தொண்டர்தொண்டன் சடகோபன்,சொல்\nநேர்ப்பட்ட தமிழ்மாலை யாயிரத்துள் இவையு மோர்பத்தும்\nநேர்ப்பட் டாரவர், நேர்ப்பட்டார் நெடுமாற்கடி மைசெய்யவே.
Verse 876
நெடுமாற் கடிமை செய்வேன்போல் அவனை கருத வஞ்சித்து,\nதடுமாற் றற்ற தீக்கதிகள் முற்றும் தவிர்ந்த சதிர்நி னைந்தால்,\nகொடுமா வினையேன் அவனடியார் அடியே கூடும் இதுவல்லால்,\nவிடுமா றென்ப தென்னந்தோ! வியன்மூ வுலகு பெறினுமே?
Verse 877
வியன்மூ வுலகு பெறினும்போய்த் தானே தானே யானாலும்,\nபுயல்மே கம்போல் திருமேனி அம்மான் புனைபூங் கழலடிக்கீழ்,\nசயமே யடிமை தலைநின்றார் திருத்தாள் வணங்கி, இம்மையே\nபயனே யின்பம் யான்பெற்ற துறுமோ பாவி யேனுக்கே?
Verse 878
உறுமோ பாவி யேனுக்கிவ் வுலகம் மூன்றும் உடன்நிறைய,\nசிறுமா மேனி நிமிர்த்தவென் செந்தா மரைக்கண் திருக்குறளன்\nநறுமா விரைநாண் மலரடிக்கீழ்ப் புகுதல் அன்றி அவனடியார்,\nசிறுமா மனிச ராயென்னை ஆண்டா ரிங்கே திரியவே.
Verse 879
இங்கே திரிந்தேற் கிழக்குற்றென். இருமா நிலமுன் னுண்டுமிழ்ந்த,\nசெங்கோ லத்த பவளவாய்ச் செந்தா மரைக்க ணென்னம்மான்\nபொங்கேழ் புகழ்கள் வாயவாய்ப் புலன்கொள் வடிவென் மனத்தாய்\nஅங்கேய் மலர்கள் கையவாய் வழிபட் டோட அருளிலே?
Verse 880
வழிபட் டோட அருள்பெற்று மாயன் கோல மலரடிக்கீழ்,\nசுழிபட் டோடும் சுடர்ச்சோதி வெள்ளத் தின்புற் றிருந்தாலும்,\nஇழிபட் டோடும் உடலினிற் பிறந்து தன்சீர் யான்கற்று,\nமொழிபட் டோடும் கவியமுத நுகர்ச்சி யுறுமோ முழுதுமே?
Verse 881
நுகர்ச்சி யுறுமோ மூவுலகின் வீடு பேறு தன்கேழில், புகர்ச்செம்\nமுகத்த களிறட்ட பொன்னா ழிக்கை யென்னம்மான்,\nநிகர்ச்செம் பங்கி யெரிவிழிகள் நீண்ட அசுர ருயிரெல்லாம்,\nதகர்த்துண் டுழலும் புட்பாகன் பெரிய தனிமாப் புகழே?
Verse 882
தனிமாப் புகழே யெஞ்ஞான்றும் நிற்கும் படியாத் தான்தோன்றி,\nமுனிமாப் பிரம முதல்வித்தாய் உலகம் மூன்றும் முளைப்பித்த,\nதனிமாத் தெய்வத் தளிரடிக் கீழ்ப் புகுதல் அன்றி அவனடியார்,\nநனிமாக் கலவி யின்பமே நாளும் வாய்க்க நங்கட்கே.
Verse 883
நாளும் வாய்க்க நங்கட்கு நளிர்நீர்க் கடலைப் படைத்து,தன்\nதாளும் தோளும் முடிகளும் சமனி லாத பலபரப்பி,\nநீளும் படர்பூங் கற்பகக் காவும் நிறைபன் னாயிற்றின்,\nகோளு முடைய மணிமலைபோல் கிடந்தான் தமர்கள் கூட்டமே.
Verse 884
தமர்கள் கூட்ட வல்வி னையை நாசஞ் செய்யும் சதிர்மூர்த்தி,\nஅமர்கொள் ஆழி சங்குவாள் வில்தண் டாதி பல்படையன்,\nகுமரன் கோல ஐங்கணைவேள் தாதை கோதில் அடியார்தம்!\nதமர்கள் தமர்கள் தமர்களாம் சதிரே வாய்க்க தமியேற்கே!
Verse 885
வாய்க்க தமியேற் கூழிதோ றூழி யூழி மாகாயாம்\nபூக்கொள் மேனி நான்குதோள் பொன்னா ழிக்கை யென்னம்மான்,\nநீக்க மில்லா அடியார்தம் அடியார் அடியார் அடியாரெங்\nகோக்கள், அவர்க்கே குடிகளாய்ச் செல்லும் நல்ல கோட்பாடே!
Verse 886
நல்ல கோட்பாட் டுலகங்கள் மூன்றி னுள்ளும் தான்நிறைந்த,\nஅல்லிக் கமலக் கண்ணனை அந்தண் குருகூர்ச் சடகோபன்,\nசொல்லப் பட்ட ஆயிரத்துள் இவையும் பத்தும் வல்லார்கள்,\nநல்ல பதத்தால் மனைவாழ்வர் கொண்ட பெண்டிர் மக்களே.
Verse 887
கொண்டபெண்டிர்மக்களுற்றார் சுற்றத்தவர்பிறரும்\nகண்டதோடுபட்டதல்லால் காதல்மற்றியதுமில்லை\nஎண்டிசையுங்கீழும்மேலும் முற்றவமுண்டபிரான்\nதொண்டரோமாயுய்யலல்லால் இல்லைகண்டீர்துணையே.
Verse 888
துணையுஞ்சார்வுமாகுவார்போல் சுற்றத்தவர்பிறரும்\nஅணையவந்தவாக்கமுண்டேல் அட்டைகள்போல்சுவைப்பர்\nகணையொன்றுலேயேழ்மரமுமெய்த எங்கார்முகிலே\nபுணையென்றுய்யப்பபோகிலல்லால் இல்லைகண்டீர்பொருளே
Verse 889
பொருள்கையுண்டாய்ச்செல்லக்காணில் போற்றினெற்றேழுவர்\nஇருள்கொள்துன்பத்திமைகாணில் என்னேயென்பாருமில்லை\nமருள் கொள்செய்கையசுரர்மங்க வடமதுரைப்பிறந்தாற்கு\nஅருள் கொளாளாயுய்யவல்லால் இல்லைகண்டீரரணே.
Verse 890
அரணமாவரற்றகாலைக்கு என்றென்றமைக்கப்பட்டார்\nஇரணங்கொண்ட தெப்பராவர் இன்றியிட்டலுநஃதே\nவருணித்தென்னே வடமதுரைப்பிறந்த வன்வண்புகழே\nசரணென்றுய்யப்பபோகிலல்லால் இல்லைகண்டீர்சதிரே.
Verse 891
சதிரமென்று நம்மைத்தாமே சம்மதித்தின்மொழியார்\nமதுரபோகம்துற்றவரே வைகிமற்றொன்றுறுவர்\nஅதிகொள்செய்கையசுரர்மங்க வடமதுரைப்பிறந்தாற்கு\nஎதிர்கொள்ளாயுய்யலல்லால் இல்லைகண்டீரின்பமே.
Verse 892
இல்லைகண் டீரின்பமந்தோ உள்துநினையாதே\nதொல்லையார்களெத்தனைவர் தோன்றிக் கழிந்தொழிந்தார்\nமல்லைமூதூர் வடமதுரைப்பிறந்தவன் வண்புகழே\nசொல்லியுய்யப் போகிலல்லால் மற்றொன்றில்லை சுருக்கே.
Verse 893
மற்றொன்றில்லை சுருங்கச்சொன்னோம் மாநிலத் தெவ்வுயிருக்கும்\nசிற்றவேண்டா சிந்திப்பேயமையும் கண்டீர் களந்தோ\nகுற்றமன் றெங்கள் பெற்றத்தாயன் வடமதுரைப் பிறந்தான்\nகுற்றிமில் சீர்கற்றுவைதல் வாழ்தல் கண்டீர்குணயே.
Verse 894
வாழ்தல்கண்டீர் குணமிதந்தோ மாயவண்டிபரலி\nபோழ்துபோகவுள்ளநிற்கும் புன்மையிலாதவர்க்கு\nவாழ்துணையா வடமதுரைப்பிறந்தவன் வண்புகழே\nவீழ்துணையாப்போமிதனில் யாதுமில்லைமிக்கதே.
Verse 895
யாதுமில்லை மிக்கதனில் என்றென்றது கருதி\nகாதுசெய்வான் கூதைசெய்து கடைமுறை வாழ்க்கை யும்போம்\nமாதுகிலின் கொடிக் கொள்மாட வடமதுரைப் பிறந்த\nதாதுசேர்தோள் கண்ணனல்லால் இல்லை கண்டீர்சரணே.
Verse 896
கண்ணனல்லாலில்லை கண்டீர்சரண் அதுநிற்கவந்து\nமண்ணின்பாரம் நீக்குதற்கே வடமதுரைப்பிறந்தான்\nதிண்ணமாநும்முடைமையுண்டேல் அவனடிசேர்த்துய்மினோ\nஎண்ணவேண்டாநும்மதாதும் அவனன்றிமற்றில்லையே.
Verse 897
ஆதுமில்லைமற்றவனில் என்றதுவே துணிந்து\nதாதுசேர்தோள்கண்ணனைக் குருகூர்ச்சடகோபன் சொன்ன\nதீதிலாதவொண்டமிழ்கள் இவையாயிரத்துளிப்பத்தும்\nஓதவல்லபிராக்கள் நம்மையாளுடையார்கள்பண்டே.
Verse 898
பண்டைநாளாலேநின்திருவருளும் பங்கயத்தாள் திருவருளும்\nகொண்டு நின்கோயில்சீய்த்துப்பல்டிகால் குடிகுடி வழிவந்த நாட்செய்யும்\nதொண்டரொர்க்கருளிச்சோ திவாய்திறந்து உன் தாமரைக் கண்களால்நோக்காய்\nதொண்டிரைப்பொருநல் தண்பணை சூழ்ந்த திருப்புளிங்குடிக்கிடா தானே.
Verse 899
குடிக்கிடந்தாக்கஞ்செய்து நின்தீர்த்தபடிமைக்குற்றேவல் செய்து உன் பொன்\nனடிக்சுடவாதே வழிவருகின்ற அடியரோர்க்கருளி நீயொருநாள்\nபடிக்களவாகநிமிர்த்த நின்பாதபங்கயமேதலைக்கணியாய்\nகொடிக்கொள்பொன்மதிள் சூழ்குளிர்வயற்சோலைத் திருப்புளிங்குடிக்கிடந்தானே.
Verse 900
கிடந்தநாள் கிடந்தாயேத்தனை காலங்கிடத்தி உன்திருவு டம்பசைய\nதொடர்ந்து குற்றவேல் செய்து தொல்லடிமை வழி வருந்தொண்ட ரோர்கருளி\nதடங்கொள் தாமரைக் கண்விழித்து நீயேழுந்துன் தாமரை மங்கையும் நீயும்\nஇடங்கொள் மூவுலகுந் தொழவிருந் தருளாய் திருப்புளிங்குடிக் கிடந்தானே.
Verse 901
புளிங்குடிக்கிடந்து வாகுணமங்கையிருந்து வைகுந்தத்துள்நின்று\nதெளிந்தவென்சிந்தையகங்கழியாதே என்னையாள்வாயெனக்கருளி\nநளிர்ந்தசீருலக மூன்றுடன்வியப்ப நாங்கள் கூத்தாடிநின்றார்ப்ப\nபுளிங்குநீர்முகிலின்பவளம் போற்கனிவாய்சிவப்ப ரிகாணவாராயே.
Verse 902
பவளம்போல்கனிவாய் சிவப்பநீ காணவந்து நின்பன்னிலாமுத்தம்\nதவழ்கதிர்முறுவல்செய்து நின்திருக்கண்தாமரை தயங்கறின்றருளாய்\nபவளநன்படர்க்கீழ்ச்சங்குறைபொருநல் தண் திருப்புளிங்குடிக்கிடந்தாய்\nகவளமாகளிற்றினிடர்கெடத்தடத்துக் காய்சினப்பறையூர்ந்தானே.
Verse 903
காய்சினப்பறவையூர்ந்து பொன்மலையின் மீமிசைக்காரர் முகில் போல்\nமாசினமாலிமாலிமானென்று அங்கவர்படக் கனன்று முன்னின்ற\nகாய்சினவேந்தே கதிர்முடியாநே கலிவயல்திருப்புளிங்குடியாய்\nகாய்சின வாழிசங்குவாள் வில் தண்டேந்தியெம்மிடர்கடிவானே.
Verse 904
எம்மிடர் கடிந்திங்கென்னையாள்வேனே இமையவர் தமக்குமாங்களையாய்\nசெம்மடல்மருந்தாமரைப்பழனத் தண்திருப்புளிங்குடிக்கிடந்தாய்\nநம்முடையவடியர்கவ்வைகண்டுகேந்து நாங்களித்துளஉலங்கூர\nஇம்மடவுலகர்காண நீயொருநாள் இருந்திடாயெங்கள் கண்முகப்பே.
Verse 905
எங்கள் கண் முகப்பேயுலர்களெல்லாம் இணையடிதொழு தேழுநிறைஞ்சி\nதங்களன்பாரத்தமது சொல்வலத்தால் தலைத்தலைச் சிறந்தபூசிப்ப\nதிங்கள் சேர்மாடத்திருப்புளிங்குடியாய் திருவைருந் தத்துள்ளாய்தேவா\nஇங்கண்மா ஞாலத்திதனுளுமொருநாள் இருந்திடாய் வீற்றிடங்கொண்டே.
Verse 906
வீற்றிடங்கொண்டுவியன் கொள்மாஞாலத்து இதனுளுமிருந்திடாய் அடியோம்\nபோற்றியோவாதே கண்ணிணைகுளிரப் பூதுமலராகத்தைப்பருக\nசேற்றிளவாளைசெந்நூடுகளும் செழும்பணைத்திருப்புளிங்குடியாய்\nகூற்றமாயசுரர் குலமுதலரிந்த கொடுவினைப்படைகள் வல்லனே.
Verse 907
கொடுவினைப்படைகள்வல்லையாய் அமரக்கிடர்கெட அசுரர்கட்கிடர்செய்\nகடுவினைநஞ்சேயென்னுடையமுதே கலிவயல்திருப்ஙபளிங்குடியார்\nவடிவிணையில்லாமலர்மகள் மற்றை நிலமகள் பிடிக்கும் மெல்லடியை\nகொடுவினையேணும்பிடிக்கந்யொருநாள் கூவுதல் வருதல்செய்யாயே.
Verse 908
கூவுதல் வருதல் செய்திடாயென்று குரைகடல் கடைந்தவன்தன்னை\nமேலிநன்கமர்ந்த வியன்புனற்பொருநல் வழுதிநாடன் சடகோபன்\nநாவியல்பாடலாயிரத்துள்ளும் இவையுமோர்பத்தும் வல்லார்கள்\nஓவுதலின்றியுலகம் மூன்றளந்தான் அடியிணையுள்ளத் தோர்வாரே.
Verse 909
ஓராயிரமாய் உலகேழளிக்கும்\nபேராயிரங்கொண்டதோர் பீடுடையன்\nகாராயின காளநன்மேனியினன்\nநாராயணன் நங்கள் பிரானவேன.
Verse 910
அவனே அகல்ஞாலம் படைத்திடந்தான்\nஅவனே அஃதுண்டுமிழ்ந்தானளந்தான்\nஅவனே யவனும் அவனுமவனும்\nஅவனே மற்றெல்லாமுமறிந்தனமே.
Verse 911
அறிந்தவவேத வரும்பொருள்நூல்கள்\nஅறிந்தனகொள்க அரும்பொருளாதல்\nஅறிந்தனரெல்லாம் அரியைவணங்கி\nஅறிந்தனர் நோய்களறுக்கும்மருந்தே.
Verse 912
மருந்தே நங்கள்போகமகிழ்ச்சிக் கென்று\nபெருந்தேவர்குழாங்கள் பிதற்றும்பிரான்\nகருந்தேவனெம்மான் கண்ணன் விண்ணுலகம்\nதருந்தேவனைச் சோரேல்கண்டாய்மனமே.
Verse 913
மனமேயன்னை வல்வினையேனிரந்து\nகனமேசொல்லினேன் இதுசோரேல்கண்டாய்\nபுனமேலிய பூந்தண்டுழாயலங்கல்\nஇனமேதுமிலானை அடைவதுமே.
Verse 914
அடைவதுமணியார் மலர்மங்கைதோள்\nமிடைவதுமசுரர்க்கு வெம்டோர்களே\nகடைவதும் கடலுளமுதம் என்மன\nமுடைவதும் அவற்கேயொருங்காகவே.
Verse 915
ஆகம்சேர் நரசிங்கமதாகி ஓர்\nஆகம்வள்ளுகிரால் பிளந்தானுறை\nமாகவைகுந்தம் காண்பதற்கு என்மனம்\nஏகமெண்ணு மிராப்பகவின்றியே.
Verse 916
இன்றிப்போக இருவினையுங்கெடுத்து\nஒன்றியாக்கைபுகாமை உய்யக்கொள்வான்\nநின்றவேங்கடம் நீணிலத்துள்ளது\nசென்றுதேவர்கள் கைதொழுவார்களே
Verse 917
தொழுதுமாமலர் நீர்சுடர்தூபம் கொண்டு\nஎழுதுமென்னாமிது மிகையாதலில்\nபழுதில்தோல்புகழ்ப் பாம்பணைப்பள்ளியாய்\nதழுவுமாற்றியேன் உனதாள்களே.
Verse 918
தாளாதாமரையான் உனதுந்மதியான்\nவால் கொள்நீள்மழுவாளி உன்னாகத்தான்\nஆளராய்த் தொழுவாகும் அமரர்கள்\nநாளுமேன்புகழ்கோ உனசீலமே.
Verse 919
சீல மெல்லையிலானடிமேல் அணி\nகோலநீள் குருகூர்ச்சடகோபன் சொல்\nமாலையாயிரந்துள் இவைபத்தினின்\nபாலர் வைகுந்தமேறுதல் பான்மையே.
Verse 920
மையார்கருங்கண்ணி கமலமலர்மேல்\nசெய்யாள் திருமார்லினில்சேர் திருமாலே\nசெய்யார்சுடராழி சுரிசங்கமேந்தும்\nகையா உன்னைக்காணக் கருதுமென்கண்ணே.
Verse 921
கண்ணேயுன்னைக் காணக்கருதி என்னெஞ்சம்\nஎண்ணேகொண்ட சிந்தையநாய்நின்றியம்பும்\nவிண்ணோர் முனிவர்க்கென்றும் காண்பரியாயை\nநண்ணாதொழியேனென்று நானழைப்பனே.
Verse 922
அழைக்கின்றவடிநாயேன் நாய்கூழைவாலால்\nகுழைக்கின்றதுபோல என்னுள்ளம்குழையும்\nமழைக்கன்று குன்றமெடுத்து ஆநிரைகாத்தாய்\nபிழைக்கின்றதருளென்று பேதுறுவனே.
Verse 923
உறுவதிதுவென்று உனக்காட்பட்டு நின்கண்\nபெறுவதெதுகொலென்று பெதையேன்நெஞ்சம்\nமறுநல்செய்யும் வானவர்தானவர்க்கென்றும்\nஅறிவதரிய அரியாயவம்மானே.
Verse 924
அரியாயவம்மானை அமரர்பிரானை\nபெரியனைப் பிரமனை முன்படைத்தானை\nவரிவாளரவினணைப் பள்ளிகொள்கின்ற\nகரியானகழல்காணக் கருதும்கருத்தே.
Verse 925
கருத்தே உன்னைக்காணக்கருதி என்னெஞ்சத்\nதிருத்தாகவிருத்தினேன் தேவர்கட்கெல்லாம்\nவிருத்தா விளங்குஞ்சுடர்சோதி உயரத்\nதொருத்தா உன்னையுள்ளு மென்னுள்ளமுகந்தே.
Verse 926
உகந்தேயுன்னை உள்ளுமென்னுள்ளத்து\nஅகம்பாலகந்தானமர்ந்தே இடங்கொண்டவமலா\nமிகுந்தானவன்மார்வகலம் இருகூறா\nநகந்தாய் நரசிங்கமதாயவுருவே.
Verse 927
உருவாகிய ஆறுசமயங்கட்கெல்லாம்\nபொருவாகி நின்றானவன் எல்லாப்பொருட்கும்\nஅருவாகியவாதியைத் தேவர்கட்கெல்லாம்\nகருவாகியகண்ணனைக் கண்டுகொண்டேனே.
Verse 928
கண்டுகொண்டு என் கண்ணிணையாரக்களித்து\nபண்டைவினையாயின பற்றோடறுத்து\nதொண்டர்க்கமுதுண்ணச்சொல்மாலைகள் சொன்னேன்\nஅண்டத்தமரர்பெருமான் அடியேனே.
Verse 929
அடியானிவனென்று எனக்காரருள்செய்யும்\nநெடியானை நிரைபுகழஞ் சிறைப்புள்ளின்\nகொடியானை குன்றாமல் உலகமளந்த\nஅடியானை அடைந்தடியேனாய்ந்தவாறே.
Verse 930
ஆறாமதயானை அடர்த்தவன்தன்னை\nசேறார்வயல் தென்குருகூர்ச்சடகோபன்\nநூறேசொன்ன ஓராயிரத்துளிப்பத்தும்\nஏறேதரும் வானவர்தமின்னுயிர்க்கே.
Verse 931
இன்னுயிர்ச்சேவலும் நீருங்கூவிக்கொண்டிங்கெத்தனை\nஎன்னுயிர்நோவமிழற்றேன்மின் குயிற்பேடைகாள்\nஎன்னுயிர்க்கண்ணபிரானை நீர்வரக்கூவகிலீர்\nஎன்னுயிர்கூலிக்கொடுப்பார்க்கும் இத்தனைவேண்டுமோ.
Verse 932
இத்தனைவேண்டுவதன்றந்தொ அன்றிற்பேடைகாள்\nஎத்தனைநீரும்நுஞ்சேவலும் கரைந்தேங்குதிர்\nவித்தகண்கோவிந்தன் மெய்யனல்லனொருவர்க்கும்\nஅத்தனையாமினி யென்னுயிரவன்கையநே.
Verse 933
அவன்கையதேயெனதாருயிர் அன்றிற்பேடைகாள்\nஎவஞ்சொல்லிநீர் குடைந்தாடுதிர் புடைசுழவே\nதவஞ்செய்தில்லா வினையாட்டியேனுயிர் இங்குண்டோ?\nஎவஞ்சொல்லிநிற்றும் நும்மேங்குகூக்குரல் கேட்டுமே.
Verse 934
கூக்குரல்கேட்டும் நங்கண்ணன்மாயன் வெளிப்படான்\nமெற்கிளைகொள்ளேன்மின் நீருஞ்சேவலுங்கோழிகாள்!\nவாக்கும்மனமுங் கருமமும்நமக்காங்கநே\nஆக்கையுமாலியும் அந்தரம்நின்றுழலுமே
Verse 935
அந்தரநின்றுழல்கின்ற யானுடைப்பூவைகாள்!\nநுந்திறத்தேதுமிடையில்லை குழறேன்மினோ\nஇந்திரஞாலங்கள்காட்டி யிவ்வேழுலகுங்கொண்ட\nநந்திருமார்பன் நம்மாவியுண்ணநன்கெண்ணினான்.
Verse 936
நன்கெண்ணிநான்வளர்த்த சிறுகிளிப்பைதலே!\nஇன்குரல்நீமிழற்றேல் என்னாருயிர்க்காகுத்தன்\nநின்செய்யவாயொக்கும்வாயன் கண்ணன்கைகாவினன்\nநின்பசுஞ்சாமநிற்ததன் கூட்டுண்டுநீங்கினான்.
Verse 937
கூட்டுண்டுநீங்கிய கோலத்தாமரைக்கட்செவ்வாய்\nவாட்டமிலென்கருமாணிக்கம் கண்ணன்மாயன்போல்\nகோட்டியவில்லோடு மின்னுமேகக்குழாங்கள்காள்\nகாட்டேன்மின்நும்முரு என்னுயிர்க்கதுகாலனே.
Verse 938
உயிர்க்கதுகாலனென்று உம்மையானிரந்தேற்கு நீர்\nகுயில்பைதல்காள் கண்ணன்நாமமேகுழறிக் கொன்றீர்\nதயிர்ப்பழஞ்சோற்றோடு பாலடிசிலும் தந்து சொல்\nபயிற்றியநல்வளமூட்டினீர் பண்புடையீரே.
Verse 939
பண்புடைவண்டொடுதும்பிகாள் பண்மிழற்றேல்மின்\nபுண்புரைவேல்கொடு குத்தாவொக்கும்நும்மின்குரல்\nதண்பெருநீர்த்தடந்தாமரை மலர்ந்தலொக்குங்\nகண்பெருகண்ணன் நம்மாவியுண்டெழுநண்ணினான்.
Verse 940
எழ நண்ணிநாமும் நம்வானநாடனோடொன்றினோம்\nபழனநன்னாரைக் குழாங்கள்காள் பயின்றென்னினி\nஇழைநல்லவாக்கையும் பையவேபுயக்கற்றது\nதழைநல்லவின் பம்தலைப்பெய்து எங்குந்தழைக்கலே.
Verse 941
இன்பந்தலைப்பெய்தெங்கும்தழைத்த பல்லுழிக்கு\nதன்புகழேத்தத் தனக்கருள்செய்தமாயனை\nதென்குருகூர்ச்சடகோபன் சொல்லாயிரத்துள்ளிவை\nஒன்பதோடொன்றுக்கும், மூவுலகுமுருகுமே.
Verse 942
உருகுமால்நெஞ்சம் உயிர்ன்பரமன்றி\nபெருகுமால்வேட்கையும் என்செய்கேன்தொண்டனேன்\nதெருவெல்லாங்காலிகழ் திருக்காட்கரை\nமருவியமாயன்றன் மாயம்நினைதொறே.
Verse 943
நினைதொறும் சொல்லுந்தொறும் நெஞ்சிடிந்துகும்\nவினைகொள்சீர்பாடிலும் வேமெனதாருயிர்\nகனைகொள்பூஞ்சோலைத் தென்காட்கரையென்னப்பா\nநினைகிலேன் நானுனக்காட்செய்யும்நீர்மையே.
Verse 944
நீர்மையால்நெஞ்சம் வஞ்சித்துப்புகுந்து என்னை\nஈர்மைசெய்து என்னாயிராயென்னுயிருண்டான்\nசீர்மல்குசோலைத் தென்காட்கரையென்னப்பன்\nகார்முகில்வண்ணன்றன் கள்வமறிகிலேன்.
Verse 945
அறிகிலேன்தன்னுள் அனைத்துலகும் நிற்க\nநெறிமையால்தானும் அவற்றுள் நிற்கும்பிரான்\nவெறிகமழ்சோலைத் தென்காட்கரையென்னப்பன்\nசிறியவென்னாயிருண்ட திருவருனே.
Verse 946
திருவருள்செய்பவன் போல என்னுள்புகுந்து\nஉருவமுமாருயிரும் உடனேயுண்டான்\nதிருவளர்சோலைத் தென்காட்கரையென்னப்பன்\nகருவளர்மேனி என்கண்ணன்கள்வங்களே
Verse 947
என்கண்ணன்கள்வம் எனக்குச் செம்மாய்நிற்கும்\nஅங்கண்ணனுண்ட என்னாருயிர்க்கோதிது\nபுன்கண்மையெதிப் புலம்பியிராப்பகல்\nஎன்கண்ணனென்று அவன்காட்கரையேத்துமே.
Verse 948
காட்கரையேத்தும் அதனுள்கண்ணாவென்னும்\nவேட்கைநோய்கூர நினைந்துகரைந்துகும்\nஆட்கொள்வானொத்து என்னுயிருண்டமாயனால்\nகோட்குறைபட்டது என்னாருயிர்கோளுண்டே.
Verse 949
கோளுண்டானன்றிவந்து என்னுயிர்தானுண்டான்\nநாளுநாள் வந்து என்னை முற்றவுந்தானுண்டான்\nகாளநீர்மேகத் தென்காட்கரையென்னப்பற்கு\nஆளன்றேபட்டது என்னாருயிர்பட்டதே.
Verse 950
ஆருயிர்பட்டது எனதுயிர்பட்டது\nபேரிதழ்த்தாமரைக்கண் கனிவாயதோர்\nகாரெழில்மேகத் கேன்காட்கரைகோயில்கொள்\nசீரெழில்நால்தடந்தோள் தெய்வவாரிக்கே.
Verse 951
வாரிக் கொண்டு உன்னைவிழுங்குவன் காணிலென்று\nஆர்வற்றவென்னையொழிய என்னில்முன்னம்\nபாரித்து தானென்னை முற்றப்பருகினான்\nகாரொக்கும் காட்கரையப்பன்கடியனே.
Verse 952
கடியனாய்க் கஞ்சனைக் சொன்றபிரான்றன்னை\nகொடிமதிள்தென்குருகூர்ச் சடகோபன்சொல்\nவடிவமையாயிரத்து இப்பத்தினால்சன்மம்\nமுடிவெய்தி நாசங்கண்டீர்களெங்கானலே.
Verse 953
எங்கானலகங்கழிவாய் இரைதேர்ந்திங்கினிதமரும்\nசெங்காலமடநாராய் திருமுழிக்களத்துறையும்\nகொங்கார்பூந்துழர்முடி யெங்குடக் கூத்தர்க்கென்தூதாய்\nமுங்கால்களென்தலைமேல் கெழுமிரோநுமரோடே.
Verse 954
நுமரோடும்பிரியாதே நீரும்நும்சேவலுமாய்\nஅமர்காதல் குருகினங்காள் அணிமுழிக்களத்துறையும்\nஎமலாரும் பழிப்புண்டு இங்கென்? தம்மாலிழிப்புண்டு\nதமரோடங்குறைவார்க்குத் தக்கிலமேகேளீரே.
Verse 955
தக்கிலமேகேளீர்கள் தடம்புனல்வாயிரைதேரும்\nகொக்கினங்காள் குருனிங்காள் குளிர்மூழிக்களத்துறையும்\nசெக்கமலர்த்தவர்போலும் கண்கைகால்செங்கனிவாய்\nஅக்கமலத்திலைபோலும் திருமேனியடிகளுக்கே.
Verse 956
திருமேனியடிகளுக்குத் தீவினையேன்விடுதூதாய்\nதிருமூழிக்களமென்னும் செமுநகர்வாயணிமுகில்காள்\nதிருமேனியவட்கருளீர் என்றக்கால் உம்மைத்தம்\nதிருமேனியோளியகற்றித் தெளிவிசும்புகடியுமே.
Verse 957
தெளிவிசும்புகடிதோடித் தீவளைத்துமின்னிலகும்\nஒளிமுகில்காள திருமுழிக்களத்துளையுமொண்சுடர்க்கு\nதெளி விசும்புதிருநாடாத் தீவினையேன்மனத்துறையும்\nதுளிவார்கட்குழலார்க்கு என்தூதுரைத்தல் செப்புமினே
Verse 958
தூதுரைத்தல்செப்புமின்கள் தூமொழிவாய்வண்டினங்காள்\nபோ திரைத்துமதுநுகரும் பொழில்முழிக்களத்துறையும்\nமாதரைத்தம்மார்வகத்தே வைத்தார்ககென்வாய்மாற்றம்\nதூதுரைத்தல்செப்புதிரேல் சுடர்வளையும் கலையுமே.
Verse 959
சுடர்வளையுங்கலையுங்கொண்ட அருவினையேன்தோற்துறந்த\nபடர்புகாழான் திருமூழிக்களத்துறையும்பங்கயக்கண்\nசுடர்பவளவாயனைக்கண்டு ஒருநாளோர்தூய்மாற்றம்\nபடர்பொழில்வாய்க்குருகினங்காள் எனக்கொன்றுபணியீரே.
Verse 960
எனக்கொன்றுபணியீர்கள் இரும்பொழிவாயிரைதேர்ந்து\nமனக்கின்பம்படமேவும் வண்டினங்காள்தும்பிகாள்\nகனக்கொள்திண்மதீர்படைசூழ் திருமூழிக்களத்துறையும்\nபுனக்கொள்காயாமேனிப் பூந்தழாய்முடியார்க்கே.
Verse 961
பூந்துழாய்முடியார்க்குப் பொன்னாழிக்கையாருக்கு\nஏந்துநீரிளங்குருகே திருமுழிக்களத்தாருக்கு\nஏந்துபூண்முலைபயந்து என்னிணைமலர்ககண்ணீர்ததும்ப\nதாந்தம்மைக்கொண்டகல்தல் தகவன்றேன்றுரையீரே.
Verse 962
தகவன்றென்றுரையீர்கள் தடம்புனல்வாயிரைதேர்ந்து\nமிகலின்பம்படமேவும் மென்னடையவன்னங்காள்\nமிகமேனிமெலிவெய்தி மேகலையுமிடழிந்து என்\nஅகமேனியொழியாமே திருமுழிக்களத்தார்க்கே
Verse 963
ஒழிலின்றித்திருமூழிக்களத்துரையு மொண்சுடரை\nஒழிவில்லாவணிமழலைக் கிளிமொழியாலைவற்றியசொல்\nவழுவில்லாவண்குகூர்ச் சடகோபன்வாய்ந்துரைத்த\nஅழிவில்லாவாயிரத்து இப்பந்தும கோயனுக்குமே
Verse 964
அறுக்கும்வினையாயின ஆகந்தவனை\nநிறுத்தும்மனத் தொன்றிய சிந்தையினார்க்கு\nவெறித்தண்மலர்ச்சோலைகள்சூழ் திருநாவாய்\nகுறுக்கும்வகையுண்டுகோலோ கொடியேற்கே.
Verse 965
கொடியேரிடைக் கோகனத்தவள்கேள்வன்\nவடிவேல்தடங்கண் மடப்பின்னைமணாளன்\nநெடியானுறைசோலைகள் சூழ் திருநாவாய்\nஅடியேனணுகப்பெறுநாள் எவைகொவோ.
Verse 966
எவைகோலணுகப்பெறுநா ளென்றப்போதும்\nகலைபில்மனமின்றிக் கண்ணீர்கள்கலுழ்வன்\nநவையில் திநாரணன்சேர் திருநாவாய்\nஅவையுள்புகலாவதோர் நாளறியேனே.
Verse 967
நாளேலறியேன் எனக்குள்ளநானும்\nமீளாவடிமைப் பணிசெய்யப்புகுந்தேன்\nநீளார்மலர்ச்சோலைகள்சூழ் திருநாவாய்\nவாளேய்தடங்கண் மடப்பின்னைமணாளா.
Verse 968
மணாளன்மலர்மங்கைக்கும் மண்மடந்தைக்கும்\nகண்ணாளனுலகத்துயில் தேவர்கட்கெல்லாம்\nவண்ணாளன்விரும்பிறையும் திருநாவாய்\nகண்ணாரக்களிக்கின்றது இங்கென்றுகொல்கண்டே.
Verse 969
கண்டேகளிக்கின்றது இங்கென்றுகொல்கண்கள்\nதொண்டேபுனக்காயொழிந்தேன் துரிசின்றி\nவண்டார்மலர்ச்சோலைகள்சூழ் திருநாவாய்\nகொண்டே யுறைகின்ற எங்கோவலர்கோவே.
Verse 970
கோவாகிய மாவலியைநிலங்கொண்டாய்\nதேவாசுரம்செற்றவனே திருமாலே\nநாவாயுறைகின்ற என்னாரணநம்பி\nஆவாலவடியானி னென்றருளாயே.
Verse 971
அருளாதொழிவாயருள்செய்து அடியேனைப்\nபொருளாக்கி உன்பொன்னடிக்கீழ்புகவைப்பாய்\nமருளேயின்றி உன்னையென்னெஞ்சத்திருத்தும்\nதேருளேதரு தென்திருநாவாயென்தேவே.
Verse 972
தேவர் முனிவர்க்கென்றும் காண்டற்கரியன்\nமூவர்முதல்வன் ஒருமூவுலகாளி\nதேவன்விரும்பி யுறையும் திருநாவாய்\nயாவரணுகப்பெறுவார் இனியந்தோ.
Verse 973
அந்தோவணுகப்பெறுநாள் என்றெப்போதும்\nசிந்தைகலங்கித் திருமாவென்றழைப்பன்\nகொந்தார்மலர்ச்சோலைகள்சூழ் திருநாவாய்\nவந்தேயுறைகின்ற எம்மாமணிவண்ணா.
Verse 974
வண்ணம்மணிமாட நன்னாவாயுள்ளானை\nதிண்ணம்மதிள் தென்குருகூர்ச்சடகோபன்\nபண்ணார்தமிழ் ஆயிரத்திப்பத்தும்வல்லார்\nமண்ணாண்டு மணங்கமழ்வர்மல்லிகையே.
Verse 975
மல்லிகை கமழ்தென்ற லீருமாலோ \n[TAB]வண்குறிஞ்சி யிசைத வருமாலோ\nசெல்கதிர் மாலையும் மயக்கு மாலோ \n[TAB]செக்கர்நன் மேகங்கள் சிதைக்கு மாலோ\nஅல்லி யந்தாமரைக் கண்ண னெம்மான் \n[TAB]ஆயர்க ளேரியே றெம்மாயோன்\nபுல்லிய முலைகளும் தோளும் கொண்டு \n[TAB]புகலிட மறிகிலம் தமியமாலோ.
Verse 976
புகலிடமறிகிலம்தமியமாலோ \n[TAB]புலம்புறுமணிதென்றலாம்பலாலோ\nபகலடுமாலைவண்சாந்தமாலோ \n[TAB]பஞ்சமம் முல்லை தண்வாடையாலோ\nஅகலிடம்படைத்திடந்துண்டுமிழ்ந்து \n[TAB]அளர்ந்து எங்குமளிக்கின்றவாயன்மாயோன்\nஇகலிடத்தசுரர்கள்கூற்றம் வாரான் \n[TAB]இனியிருந்தென்னுயிர் காக்குமாறென்.
Verse 977
இனியிருதென்னுயிர்காக்குமாறென் \n[TAB]இணைமுலைநமுக நுண்ணிடைநுடங்க\nதுனியிருங்கலவிசெய்தாகந்தோய்ந்து \n[TAB]துறந்தெம்மையிட்டகல் கண்ணன்கள்வன்\nதனியிளஞ்சிங்கமெம்மாயன்வாரான் \n[TAB]தாமரைக் கண்ணும் செவ்வாயும் நீலப்\nபனியிருங்குழல்களும்நான்குதோளும் \n[TAB]பாவியேன் மனத்தேநின்றீருமாலோ.
Verse 978
பாவியேன் மனத்தேநின்றீருமாலோ \n[TAB]வாடைதண்வாடை வெவ்வாடையாலோ\nமேவுதண்மதியம் வெம்மதியமாலோ \n[TAB]மென்மலர்பபள்ளி வெம்பள்ளியாலோ\nதூவியம் புள்ளுடைத்தெய்வண்டுதுதைந்த \n[TAB]எம்பெண்மையம் பூவி தாலோ\nஆவியின் பரமல்லவகைகளாலோ \n[TAB]யாமுடைநெஞ்சமும் துணையன்றாலோ.
Verse 979
யாமுடை நெஞ்சமும்துணையன்றாலோ \n[TAB]ஆபுகுமாலையுமா கின்றாலோ\nயாமுடை ஆயன்றன்மனம் கல்லாலோ \n[TAB]அவனுடைத்தீங் குழலீருமாலோ.\nயாமுடைத்துணையென்னும் தோழிமாரும் \n[TAB]எம்மில் முன்னவனுக்கு மாய்வராலோ\nயாமுடையாருயிர்காக்குமாறென் \n[TAB]அவனுடையருள் பெறும்போதரிதே.
Verse 980
அவனுடையருள் பெறும்போதரிதால் \n[TAB]அவ்வருளல்லனவருளுமல்ல\nஅவனருள் பெறுமளவாவிநில்லாது \n[TAB]அடுபகல் மாலையும் நெஞ்சுங்காணேன்\nசிவனொடுபிரமன் வண்டிருமடந்தை \n[TAB]சேர்திருவாகமெம்மாவியிரும்\nஎவமினிப்புகுமிடமெவம் செய்கேனோ \n[TAB]ஆருக்கென் சொல்லுகேனன்னைமீர்காள்.
Verse 981
ஆருக்கென் சொல்லுகேனன்னைமீர்காள் \n[TAB]ஆருயிரளவன்றிக் கூர்தண்வாடை\nகாரோக்குமேனி நங்கண்ணன் கள்வம் \n[TAB]கவர்ந்தவத்தனி நெஞ்சமவன்கணஃதே\nசீருற்றவகில்புகையாழ்நரம்பு \n[TAB]பஞ்சமம் தண்பசும்சாந்தணைந்து\nபோருற்றவாடைதண் மல்லிகைப்பூப் \n[TAB]புதுமணமுகந்து கொண்டேறியுமாலோ.
Verse 982
புதுமணமுகந்துகொண்டெறியுமாலோ \n[TAB]பொங்கிளவாடை புன்செக்கராலோ\nஅதுமணந்தகன்ற நங்கண்ணன்கள்வம் \n[TAB]கண்ணனிற்கொடி தினியதனிலும்பர்\nமதுமணமல்லிகைமந்தக்கோவை \n[TAB]வண்பசும்சாந்தினில் பஞ்சமம்வைத்து\nஅதுமணந்தின்னருளாய்ச்சியர்க்கே \n[TAB]ஊதுமத்தீங் குழற்கேயுய்யேன் நான்.
Verse 983
ஊதுமத்தீங்குழற்கேயுய்யேன் நான் \n[TAB]அது மொழிந்திடையிடைத் தன் செய்கோலத்\nதூதுசெய்கண்கள் கொண்டொன்று பேசித் \n[TAB]தூமொழியிசைகள் கொண்டொன்றுநோக்கி\nபேதுறுமுகம்செய்துநொந்துநொந்து \n[TAB]பேதைநெஞ்சற வறப்பாடும்பாட்டை\nயாதுமொன்றறிகிலமம்மவம்ம \n[TAB]மாலையும் வந்தது மாயன்வாரான்.
Verse 984
மாலையும் வந்தது மாயன் வாரான் \n[TAB]மாமணிபுலம்பவல்லேறணைந்த\nகோலநன்னாகுகளுகளுமாலோ \n[TAB]கொடியன குழல்களும்குழறுமாலோ\nவமலொளிவளர்முல்லை கருமுகைகள் \n[TAB]மல்லிகை யலம்பிவண்டாலுமாலோ\nவேலையும் விசும்பில்விண்டலறுமாலோ \n[TAB]என் சொல்லியுய்வனிங்கவனைலிட்டே.
Verse 985
அவனைவிட்டகன்றுயிராற்றகில்லா \n[TAB]அணியிழையாச்சியர் மாலைப்பூசல்\nஅவனை விட்ட கல்வதற்கேயிரங்கி \n[TAB]அணி குருகூர்ச்சடகோபன்மாறன்\nஅவனியுண்டுமிழ்ந்தவன் மேலுரைத்த \n[TAB]ஆயிரந்துள்ளிவைபத்தும் கொண்டு\nஅவனியுளலற்றிநின்றுய்மின் தொண்டீர் \n[TAB]அச்சொன்ன மாலைநண்ணித்தொழுதே.
Verse 986
மாலைநண்ணித் தொழுதெழுமினோவினைகெட\nகாலைமலை கமலமலரிட்டுநீர்\nவேலைமோதும்மதிள்சூழ் திருக்கண்ணபுரத்து\nஆலின்மேலாலமர்ந்தான் அடியிணைகளே.
Verse 987
கள்ளவிழும்மலரிட்டு நீரிறைஞ்சுமின்\nநள்ளிசேரும்வயலசூழ் கிடங்கின்புடை\nவெள்ளியேய்ந்தமதிள்சூழ் திருக்கண்ணபுர\nமுள்ளி நாளுந்தொழுதேழுமினோதொண்டரே.
Verse 988
தொண்டர்நுந்தம் துயர்போகநீரேகமாய்\nவிண்டுவாடாமலரிட்டு நீரிறைஞ்சுமின்\nவண்டுபாடும்பொழில் சூழ் திருக்கண்ணபுரத்\nதண்டவாணன் அமரர்பெருமானையே.
Verse 989
மானை நோக்கி மடப்பின்னைதன்கேள்வனை\nதேனைவாடாமலரிட்டு நீரிறைஞ்சுமின்\nவானையுந்துமதிள்சூழ் திருக்கண்ணபுரம்\nதானயந்தபெருமான் சரணாகுமே.
Verse 990
சாணாமாகும் தனதாளா டைந்தார்க் கெல்லாம்\nமரணமானால் வைகுந்தம்கொடுக்கும்பிரான்\nஅரணமைந்த மதிள்சூழ் திருக்கண்ணபுரத்\nதரணியாளன் தனதண்டர்க்சன்பாகுமே.
Verse 991
அன்பனாகும் தனதாளடைந்தார்க்கெல்லாம்\nசெம்போனாகத்து அவணனுடல்கீண்டவன்\nநன்போனேய்ந்தமதிள்சூழ் திருக்கண்ணபுரத்\nதன்பன் நாளும் தனமெய்யர்க்கு மெய்யனே.
Verse 992
மெய்யனாகும் விரும்பித்தொழுவார்க்கெல்லாம்\nபொய்யனாகும் புறமேதொழுவார்க்கெல்லாம்\nசெய்யில்வாளையுகளும் திருக்கண்ணபுரத்\nதையன் ஆகத்தணைப்பார்கட்கணியனே.
Verse 993
அணியனாகும் தனதாளடைந்தார்க்கெல்லாம்\nபிணியும் சாரா பிறவிகெடுந்தாளும்\nமணிபொனேய்ந்தமதிள்சூழ் திருக்கண்ணபுரம்\nபணிமின் நாளும்பரமேட்டிதன்பாதமே.
Verse 994
பாதநாளும்பணியத் தணியும்பிணி\nஏதாம் எனக்கேலினியென்குறை\nவேதநாவர்விரும்பம் திருக்கண்ணபுரத்\nதாதியானை அடைந்தார்க் கல்லலில்லையே.
Verse 995
இல்லையல்லல் எனக்கேலினியென்குறை\nஅல்லிமாதரமரும் திருமார்பினன்\nகல்லிலேய்ந்த மதிள்சூழ் திருக்கண்ணபுரம்\nசொல்ல நாளும்துயர் பாடுசாராவே.
Verse 996
பாடுசாராவினை பற்றறவேண்டுவீர்\nமாடநீடு குருகூர்ச்சடகோபன் சொல்\nபாடலானதமிழ் ஆயிரத்துளிப்பத்தும்\nபாடியாடி பணிமினவன் தாள்களே.
Verse 997
தாள தாமரைத் தடமணி வயல் திருமோகூர்\nநாளும் மேவிநன் கமர்ந்துநின் றசுரரைத் தகர்க்கும்\nதோளும் நான்குடைச் சுரிகுழல் கமலக்கண் கனிவாய்\nகாள மேகத்தை யன் றிமற் றொன்றிலம் கதியே.
Verse 998
இலங்கதி மற்றொன் றெம்மைக்கும் ஈன்தண் துழாயின்\nஅலங்கலங் கண்ணி ஆயிரம் பேருடை அம்மான்\nநலங்கொள் நான்மறை வாணர்கள் வாழ்திரு மோகூர்\nநலங்க ழலவன் அடிநிழல் தடமன்றி யாமே.
Verse 999
அன்றி யாமொரு புகலிடம் இலம் என்றென் றலற்றி\nநின்று நான்முகன் அரனொடு தேவர்கள் நாட\nவென்றிம் மூவுல களித்துழல் வான்திரு மோகூர்\nநன்று நாமினி நணுகுதும் நமதிடர் கெடவே.
Verse 1000
இடர்கெட எம்மைப் போந்தளி யாய் என்றென் றேத்தி\nசுடர்கொள் சோதியைத் தேவரும் முனிவரும் தொடர\nபடர்கொள் பாம்பணைப் பள்ளிகொள் வான்திரு மோகூர்\nஇடர்கெ டவடி பரவுதும் தொண்டீர்! வம்மினே.
Verse 1001
தொண்டீர்! வம்மின் நம்சுடரொளி யொருதனி முதல்வன்\nஅண்ட மூவுல களந்தவன் அணிதிரு மோகூர்\nஎண்டி சையுமீன் கரும்பொடு பொருஞ்செந்நெல் விளைய\nகொண்ட கோயிலை வலஞ்செய்திங் காடுதும் கூத்தே.
Verse 1002
கூத்தன் கோவலன் குதற்றுவல் லசுரர்கள் கூற்றம்\nஏத்தும் நங்கட்கும் அமரர்க்கும் முனிவர்க்கும் இன்பன்\nவாய்த்த தண்பணை வளவயல் சூழ்திரு மோகூர்\nஆத்தன் தாமரை யடியன்றி மற்றிலம் அரணே.
Verse 1003
மற்றி லமரண் வான்பெரும் பாழ்தனி முதலா\nசுற்று நீர்படைத் ததன்வழித் தொன்முனி முதலா\nமுற்றும் தேவரோ டுலகுசெய் வான்திரு மோகூர்\nசுற்றி நாம்வலஞ் செய்யநம் துயர்கெடும் கடிதெ.
Verse 1004
துயர்கெ டும்கடி தடைந்துவன் தடியவர் தொழுமின்\nஉயர்கொள் சோலையொண் தடமணி யொளிதிரு மோகூர்\nபெயர்கள் ஆயிர முடையவல் லரக்கர்புக் கழுந்த\nதயரதன் பெற்ற மரதக மணித்தடத் தினையே.
Verse 1005
மணித்த டத்தடி மலர்க்கண்கள் பவளச் செவ்வாய்\nஅணிககொள் நால்தடந் தோள்தெய்வம் அசுரரை யென்றும்\nதுணிக்கும் வல்லரட் டனுறை பொழில்திரு மோகூர்\nநணித்து நம்முடை நல்லரண் நாமடைந் தனமே.
Verse 1006
நாம டைந்தநல் லரண்தமக் கென்றுநல் லமரர்\nதீமை செய்யும்வல் லசுரரை யஞ்சிச்சென் றடைந்தால்\nகாம ரூபம்கொண் டெழுந்தளிப் பான்திரு மோகூர்\nநாம மேநவின் றெண்ணுமின் ஏத்துமின் நமர்காள்.
Verse 1007
ஏத்து மின்நமர் காள் என்று தான்குட மாடு\nகூத்தனை குரு கூர்ச்சட கோபன்குற் றேவல்\nவாய்த்த ஆயிரத் துள்ளிவை வண்திரு மோகூர்க்கு\nஈத்த பத்திவை யேத்தவல் லார்க்கிடர் கெடுமே.
Verse 1008
கெடுமிட ராயவெல்லாம் கேசவா வெள்ள நாளும்\nகொடுவினை செய்யும்கூற்றின் தமர்களும் குறுககில்லார்\nவிடமுடை யரவில்பள்ளி விரும்பினான் சுரும்பலற்றும்\nதடமுடை வயல் அனந்தபுரநகரிப் புகுதுமின்றே.
Verse 1009
இன்றுபோய்ப் புகுதிராகி லெழு மையும் ஏதம்சார\nகுன்றுனேர் மாடமாடே குருந்துசேர் செருந்திபுன்னை\nமன்றலர் போழில் அனந்தபுரநகர் மாயன்நாமம்\nஒன்றுமோ ராயிரமாம் உள்ளுவார்க் கும்பரூரே.
Verse 1010
ஊரும்புட் கொடியுமஃதே யுலகொல்லாமுண்டுமிழ்ந்தான்\nசேரும்தண் ணனந்தபுரம் சிக்கெனப் புகுதிராகில்\nதீரும்நோய்வினைகளெல்லாம் திண்ணநாம் அறியச்சொன்னோம்\nபேரும் ஓராயிரத்துள் ஒன்றுநீர் பேசுமினே.
Verse 1011
பேசுமின் கூசமின்றிப் பெரியநீர் வேலைசூழ்ந்து\nவாசமே கமழுஞ்சோலை வயலணி யனந்தபுரம்\nநேசம்செய் துறைகின்றானை நெறிமையால் மலர்கள்தூவி\nபூசனை செய்கின்றார்கள் புண்ணியம் செய்தவாறே.
Verse 1012
புண்ணியம் செய்துநல்ல புனலொடு மலர்கள்தூவி\nஎண்ணுமி னெந்தைநாமம் இப்பிறப் பறுக்குமப்பால்\nதிண்ணம்நாம் அறியச்சொன்னோம் செறிபொழில்\nஅனந்தபுரத்து அண்ணலார் கமலபாதம் அணுகுவார் அமரராவார்.
Verse 1013
அமரராய்த் திரிகின்றார்கட்கு ஆதிசேர அனந்தபுரத்து\nஅமரர்கோன் அர்ச்சிக்கின்றங் ககப்பணி செய்வர்விண்ணோர்\nநமர்களோ! சொல்லக்கேண்மின் நாமும்போய் நணுகவேண்டும்\nகுமரனார் தாதைதுன்பம் துடைத்தகோ விந்தனாரே.
Verse 1014
துடைத்தகோ விந்தனாரே யுலகுயிர் தேவும்மற்றும்\nபடைத்தவெம் பரமமூர்த்தி பாம்பணைப் பள்ளிகொண்டான்\nமடைத்தலை வாளைபாயும் வயல ணியனந்தபுரம்\nகடைத்தலை சீய்க்கப்பெற்றால் கடுவினை களையலாமே.
Verse 1015
கடுவினை களையலாகும் காமனைப் பயந்தகாளை\nஇடவகை கொண்டதென்பர் எழிலணி யனந்தபுரம்\nபடமுடை யரவில்பள்ளி பயின்றவன் பாதம்காண\nநடமினோ நமர்களுள்ளீர்! நாமுமக் கறியச்சொன்னோம்.
Verse 1016
நாமுமக் கறியச்சொன்ன நாள்களும் நணியவான\nசேமம் நங்குடைத்துக்கண்டீர் செறிபொழிலனந்தபுரம்\nதூமநல் விரைமலர்கள் துவளற ஆய்ந்துகொண்டு\nவாமனன் அடிக்கென்றெத்த மாய்ந்தறும் வினைகள்தாமே.
Verse 1017
மாய்ந்தறும் வினைகள்தாமே மாதவா என்ன நாளும்\nஏய்ந்தபொன் மதிளனந்தபுர நகரெந்தைக்கென்று\nசாந்தொடு விளக்கம்தூபம் தாமரை மலர்கள்நல்ல\nஆய்ந்துகொண் டேத்தவல்லார் அந்தமில் புகழினாரே.
Verse 1018
அந்தமில் புகழனந்தபுர நகர் ஆதிதன்னை\nகொந்தலர் பொழில்குருகூர் மாறன் சொல் லாயிரத்துள்\nஐந்தினோ டைந்தும்வல்லார் அணைவர்போய் அமருலகில்\nபைந்தொடி மடந்தையர்தம் வேய்மரு தோளிணையே.
Verse 1019
வேய்மரு தோளிணை மெலியு மாலோ! \n[TAB]மெலிவுமென் தனிமையும் யாதும் நோக்கா\nகாமரு குயில்களும் கூவு மாலோ! \n[TAB]கணமயில் அவைகலந்தாலு மாலோ\nஆமரு வினநிரை மேய்க்க நீபோக்கு \n[TAB]ஒருபக லாயிர மூழி யாலோ தாமரைக்\nகண்கள்கொண் டீர்தி யாலோ! \n[TAB]தகவிலை தகவிலையே நீ கண்ணா.
Verse 1020
தகவிலை தகவிலை யேநீ கண்ணா! \n[TAB]தடமுலை புணர் தொறும் புணற்ச்சிக் காரா\nசுகவெள்ளம் விசும்பிறந்து அறிவை மூழ்க்கச் \n[TAB]சூழ்ந்தது கனவென நீங்கி யாங்கே\nஅகவுயிர் அகமதந்தோறும் உள்புக்கு \n[TAB]ஆவியின் பரமல்ல வேட்கை யந்தோ\nமிகமிக இனியுன்னைப் பிரிவை யாமால் \n[TAB]வீவநின் பசுநிரை மேய்க்கப் போக்கே.
Verse 1021
வீவன்நின் பசுநிரை மேய்க்கப் போக்கு \n[TAB]வெவ்வுயிர் கொண்டென தாவி வேமால்\nயாவரும் துணையில்லை யானி ருந்து \n[TAB]உன் அஞ்சன மேனியை யாட்டம் காணேன்\nபோவதன் றொருபகல் நீய கன்றால் \n[TAB]பொருகயற் கண்ணிணை நீரும் நில்லா\nசாவதிவ் வாய்க்குலத் காய்ச்சி யோமாய்ப் பிறந்த \n[TAB]வித் தொழுத்தையோம் தனிமை தானே.
Verse 1022
தொழுத்தையோம் தனிமையும் துணைபிரிந்தார் \n[TAB]துயரமும் நினைகிலை கோவிந் தாநின்\nதொழுத்தனில் பசுக்களை யேவி ரும்பித் \n[TAB]துறந்தெம்மையிட்டு அவை மேய்க்கப் போதி\nபழுத்தநல் லமுதினின் சாற்று வெள்ளம் \n[TAB]பாவியேன் மனமகந் தோறு முள்புக்\nகழுத்த நின் செங்கனி வாயின் கள்வப் பணிமொழி \n[TAB]நினைதொறும் ஆவிவேமால்.
Verse 1023
பணிமொழி நினைதொறும் ஆவி வேமால் பகல்நிரை \n[TAB]மேய்க்கிய போய கண்ணா!\nபிணியவிழ் மல்லிகை வாடை தூவப்\n[TAB]பெருமத மாலையும் வந்தின் றாலோ\nமணிமிகு மார்வினில் முல்லைப் போது \n[TAB]எவ்வனமுலை கமழ்வித்துன் வாயமு தம்தந்து\nஅணிமிகு தாமரைக் கையை யந்தோ \n[TAB]அடிச்சி யோம்தலை மிசைநீ யணியாய்!
Verse 1024
அடிச்சி யோம்தலை மிசைநீ யணியாய் \n[TAB]ஆழியங் கண்ணா! உன் கோலப் பாதம்\nபிடித்தது நடுவுனக் கரிவை மாரும் பலர் \n[TAB]அது நிற்கவெம் பெண்மை யாற்றோம்\nவடித்தடங் கண்ணிணை நீரும் நில்லா \n[TAB]மனமும்நில் லாவெமக் கதுதன் னாலே\nவெடிப்புநின் பசு நிரை மேய்க்கப் போக்கு \n[TAB]வேம் எமது உயிர் அழல் மெழுகில் ளுக்கே
Verse 1025
வேமெம துயிரழல் மெழுகில் ளுக்கு \n[TAB]வெள்வளை மேகலை கழன்று வீழ\nதூமலர்க் கண்ணிணை முத்தம் சோரத் \n[TAB]துணைமுலை பயந்து என தோள்கள் வாட\nமாமணி வண்ணா உன்செங்கமல வண்ண\n[TAB]மென் மலரடி நோவ நீபோய்\nஆமகிழ்ந் துகந்தவை மேய்க்கின் றுன்னோடு \n[TAB]அசுரர்கள் தலைப்பெய்யில் எவன்கொல் ஆங்கே?
Verse 1026
அசுரர்கள் தலைப்பெய்யில் எவன்கொ லாங்கென்று \n[TAB]ஆழுமென் னாருயிர் ஆன்பின் போகேல்\nகசிகையும் வேட்கையும் உள்க லந்து \n[TAB]கலவியும் நலியுமென் கைகழி யேல்\nவசிசெயுன் தாமரைக் கண்ணும் வாயும் \n[TAB]கைகளும் பீதக வுடையும் காட்டி\nஒசிசெய்நுண் ணிடையிள ஆய்ச்சி யர் \n[TAB]நீ உகக்குநல் லவரொடும் உழித ராயே.
Verse 1027
உகக்குநல்லவரொடுமுழிதந்து \n[TAB]உன்தன் திருவுள்ளமிடர்கெடுந்தொறும் நாங்கள்\nவியக்கவின்புறுதும்எம்பெண்மையாற்றோரும் \n[TAB]எம்பெருமான் பசுமேய்க்கப்போகேல்\nமிகப்பலவகரர்கள் வேண்டுருவங்கொண்டு \n[TAB]நின்றுழிதருவர்கஞ்சனேவ\nஅகப்படிலவரொடும் நின்னொடாங்கே \n[TAB]அவத்தங்கள் விளையுமென்சொற்கொளந்தொ!
Verse 1028
அவத்தங்கள் விளையுமென் சொற்கொள் அந்தோ \n[TAB]அசுரர்கள் வங்கையர் கஞ்ச னேவத்\nதவத்தவர் மறுக நின்றுழி தருவர் \n[TAB]தனிமையும் பெரிதுனக்கு இராமனையும்\nஉவர்த்தலை உடந்திரி கிலையு மென்றென்று \n[TAB]ஊடுற வென்எ டை யாவிவேமால்\nதிவத்திலும் பசுநிரை மேய்ப்பு வத்தி \n[TAB]செங்கனி வாயெங்கள் ஆயர் தேவே.
Verse 1029
செங்கனி வாயெங்கள் ஆயர் தேவு \n[TAB]அத்திருவடி திருவடி மேல் பொருநல்\nசங்கணி துறைவன் வண்தென் குருகூர் \n[TAB]வண்சட கோபன்சொல் லாயி ரத்துள்\nமங்கைய ராய்ச்சிய ராய்ந்த மாலை \n[TAB]அவனொடும் பிரிவதற் கிரங்கி தையல்\nஅங்கவன் பசுநிரை மேய்ப்பொ ழிப்பான் \n[TAB]உரைத்தன இவையும்பத் தவற்றின் சார்வே.
Verse 1030
சார்வேதவ நெறிக்குத் தாமோதரன் தாள்தள்,\nகார்மேக வண்ணன் கமல நயனத்தன்,\nநீர்வானம் மண்ணெர்கா லாய்நின்ற நேமியான்,\nபேர்வா னவர்கள் பிதற்றும் பெரு மையனே.
Verse 1031
பெருமையனே வானத் திமையோர்க்கும் காண்டற்\nகருமையனே ஆகத் தணையாதார்க்கு என்றும்\nதிருமெய் யுறைகின்ற செங்கண்மால் நாளும்\nஇருமை வினைகடிந்திங்கு என்னையாள் கின்றானே.
Verse 1032
ஆள்கின்றா னாழியான் ஆரால் குறைவுடையம்?\nமீள்கின்ற தில்லைப் பிறவித் துய ர்கடிந்தோம்,\nவாள்கெண்டையொண்கண் மடப்பின்னை தன்கேள்வன்,\nதாள்கண்டு கொண்டு என் தலைமேல் புனைந்தேனே.
Verse 1033
தலைமேல் புனைந்தேன் சரணங்கள் ஆலின்\nஇலைமேல் துயின்றான் இமையோர் வணங்க\nமலைமேல்தான் நின்றென் மனத்து ளிருந்தானை\nநிலைபேர்க்க லாகாமை நிச்சித் திருந்தேனே.
Verse 1034
நிச்சித் திருந்தேனென் நெஞ்சம் கழியாமை\nகைச்சக் கரத்தண்ணல் கள்வம் பெரிதுடையன்\nமெச்சப் படான்பிறர்க்கு மெய்போலும் பொய்வல்லன்\nநச்சப் படும்நமக்கு நாகத் தணையானே.
Verse 1035
நாகத் தணையானை நாள்தோறும் ஞானத்தால்\nஆகத் தணைப்பார்க்கு அருள்செய்யும் அம்மானை\nமாகத் திள மதியம் சேரும் சடையானை\nபாகத்து வைத்தான் தன் பாதம் பணிந்தேனே.
Verse 1036
பணிநெஞ்சே! நாளும் பரம பரம்பரனை\nபிணியொன்றும் சாரா பிறவி கெடுத்தாளும்\nமணிநின்ற சோதி மதுசூதன் என்னம்மான்\nஅணிநின்ற செம்பொன் அடலாழி யானே.
Verse 1037
ஆழியா னாழி யமரர்க்கும் அப்பாலான் ஊழியா\nனூழி படைத்தான் நிரைமேய்த்தான்\nபாழியந் தோளால் வரையெடுத்தான் பாதங்கள்\nவாழியென் நெஞ்சே! மறவாது வாழ்கண்டாய்.
Verse 1038
கண்டேன் கமல மலர்ப் பாதம், காண்டதுமே,\nவிண்டே ஒழிந்த வினையாயின் எல்லாம்,\nதொண்டே செய்து, என்று\nதொழுது வழியொழுக,\nபண்டே பரமன் பணித்த பணிவகையே.
Verse 1039
வகையால் மனமொன்றி மாதவனை நாளும்\nபுகையால் விளக்கால் புதுமலரால் நீரால்\nதிகைதோ றமரர்கள் சென்றிறைஞ்ச நின்ற\nதகையான் சரணம் தமர்கடகோர் பற்றே.
Verse 1040
பற்றென்று பற்றிப் பரம பரமபரனை\nமற்றிண்டோள் மாலை வழுதி வளநாடன்\nசொற்றொடையந் தாதியோ ராயிரத்து ளிப்பத்தும்\nகற்றார்க்கோர் பற்றாகும் கண்ணன் கழலிணையே.
Verse 1041
கண்ணன் கழல் இணை நண்ணும் மனம் உடையீர்\nஎண்ணும் திருநாமம் திண்ணம் நாரணமே.
Verse 1042
நாரணன் எம்மான் பாரணங்காளன்\nவாரணம் தொலைத்த காரணன் தானே.
Verse 1043
தானே உலகெலாம் தானே படைத்திடந்து\nதானே உண்டுமிழ்ந்து தானே யாள்வானே.
Verse 1044
ஆள்வான் ஆழிநீர் கோள்வாய அரவணையான்\nதாள்வாய் மலரிட்டு நாள்வய் நாடீரே.
Verse 1045
நாடீர் நாள்தோறும் வாடா மலர்கொண்டு\nபாடீர் அவன்நாமம் வீடே பெறலாமே.
Verse 1046
மேயான் வேங்கடம் காயா மலர்வண்ணன்\nபேயார் முலையுண்ட வாயான் மாதவனே.
Verse 1047
மாதவன் என்றென்று ஓத வல்லீரேல்\nதீதொன்று மடையா ஏதம் சாராவே.
Verse 1048
சாரா ஏதங்கள் நீரார் முகில்வண்ணன்\nபேர் ஆர் ஓதுவார் ஆரார் அமரரே.
Verse 1049
அமரர்க்கு அரியானை தமர்கட்கு எளியானை\nஅமரத் தொழுவார்கட்கு அமரா வினைகளே.
Verse 1050
வினைவல் இருளென்னும் முனைகள் வெருவிப்போம்\nசுனை நன் மலரிட்டு நினைமின் நெடியானே.
Verse 1051
நெடியான் அருள் சூடும் படியான் சடகோபன்\nநொடி ஆயிரத்திப்பத்து அடியார்க்கு அருள் பேறே.
Verse 1052
அருள்பெறுவார் அடியார்தம் அடியனேற்கு ஆழியான்\nஅருள்தருவான் அமைகின்றான் அதுநமது விதிவகையே\nஇருள்தருமா ஞாலத்துள் இனிப்பிறவி யான்வேண்டேன்\nமருளொழிநீ மடநெஞ்சே! வாட்டாற்றான் அடிவணங்கே.
Verse 1053
வாட்டாற்றா னடிவணங்கி மாஞாலப் பிறப்பறுப்பான்\nகேட்டாயே மடநெஞ்சே! கேசவனெம் பெருமானை\nபாட்டாய பலபாடிப் பழவினைகள் பற்றறுத்து\nநாட்டாரோ டியல்வொழிந்து நாரணனை நண்ணினமே.
Verse 1054
நண்ணினம் நாரணனை நாமங்கள் பலசொல்லி\nமண்ணுலகில் வளம்மிக் க வாட்டாற்றான் வந்தின்று\nவிண்ணுலகம் தருவானாய் விரைகின்றான் விதிவகையே\nஎண்ணினவா றாகாவிக் கருமங்க ளென்னெஞ்சே
Verse 1055
என்னெஞ்சத் துள்ளிருந்திங் கிருந்தமிழ்நூலிவைமொழிந்து\nவன்னெஞ்சத் திரணியனை மார்விடந்த வாட்டாற்றான்\nமன்னஞ்சப் பாரதத்துப் பாண்டவர்க்காப் படைதொட்டான்\nநன்னெஞ்சே! நம்பெருமான் நமக்கருள்தான் செய்வானே.
Verse 1056
வானேற வழிதந்த வாட்டாற்றான் பணிவகையே\nநானேறப் பெறு கின்றென் நரகத்தை நகுநெஞ்சே\nதேனேறு மலர்த்துளவம் திகழ்பாதன் செழும்பறவை\nதானேறித் திரிவான தாளிணையென் தலைமேலே.
Verse 1057
தலைமேல தாளிணைகள் தாமரைக்கண் என்னம்மான்\nநிலைபேரான் என்நெஞ்சத் தெப்பொழுதும் எம்பெருமான்\nமலைமாடத் தரவணைமேல் வாட்டாற்றான் மதமிக்க\nகொலையானை மருப்பொசித் தான் குரைகழல்தள் குறுகினமே.
Verse 1058
குரைகழல்கள் குறுகினம் நம் கோவிந்தன் குடிகொண்டான்\nதிரைகுழுவு கடல்புடைசூழ் தென்னாட்டுத் திலதமன்ன\nவரைகுழுவும் மணிமாட வாட்டாற்றான் மலரடிமேல்\nவிரைகுழுவும் நறுந்துளவம் மெய்ந்நின்று கமழுமே.
Verse 1059
மெய்ந்நின்று கமழ்துளவ விரையேறு திருமுடியன்\nகைந்நின்ற சக்கரத்தன் கருதுமிடம் பொருதுபுனல்\nமைந்நின்ற வரைபோலும் திருவுருவ வாட்டாற்றாற்கு\nஎந்நன்றி செய்தேனா என்னெஞ்சில் திகழவதுவே?
Verse 1060
திகழ்கின்ற திருமார்பில் திருமங்கை தன்னோடும்\nதிகழ்கின்ற திருமாலார் சேர்விடம்தண் வாட்டாறு\nபுகழ்கின்ற புள்ளூ ர்தி போரரக்கர் குலம்கெடுத்தான்\nஇகழ்வின்றி என்னெஞ்சத் தெப்பொழுதும் பிரியானே.
Verse 1061
பிரியாதாட் செய்யென்று பிறப்பறுத்தாள் அறக்கொண்டான்\nஅரியாகி இரணியனை ஆகங்கீண் டானன்று\nபெரியார்க்காட் பட்டக்கால் பெறாதபயன் பெறுமாறு\nவரிவாள்வாய் அரவணைமேல் வாட்டாற்றான் காட்டினனே.
Verse 1062
காட்டித்தன் கனைகழல்கள் கடுநரகம் புகலொழித்த\nவாட்டாற்றெம் பெருமானை வளங்குருகூர்ச் சடகோபன்\nபாட்டாய தமிழ்மாலை யாயிரத்துள் இப்பத்தும்\nகேட்டு ஆரார் வானவர்கள் செவிக்கினிய செஞ்சொல்லே.
Verse 1063
செங்சொற் கவிகாள். உயிர்காத்தாட் செய்மின் திருமா லிருஞ்சோலை\nவஞ்சக் கள்வன் மாமாயன் மாயக் கவியாய் வந்து என்\nநெஞ்சு முயிரு முள் கலந்து நின்றார் அறியா வண்ணம் என்\nநெஞ்சு முயிரும் அவைடுண்டு தானே யாகி நிறைந்தானே
Verse 1064
தானே யாகி நிறைந்தெல்லா உலகும் உயிரும் தானேயாய்\nதானே யானென் பானாகித் தன்னைத் தானே துதித்து எனக்குத்\nதேனே பாலே கன்னலே அமுதே திருமாலிருஞ்சோலை\nகோனே யாகி நின்றொழிந்தான் என்னை முற்றும் உயிருண்டே
Verse 1065
என்னை முற்றும் உயிருண்டென் மாய ஆக்கை யிதனுள்புக்கு\nஎன்னை முற்றும் தானேயாய் நின்ற மாய அம்மான் சேர்\nதென்னன் திருமா லிருஞ்சோலைத் திசைகை கூப்பிச் தேர்ந்தயான்\nஇன்னம் போவே னேகொலோ. எங்கொல் அம்மான் திருவருளே?
Verse 1066
என்கொல் அம்மான் திருவருள்கள்? உலகும் உயிரும் தானேயாய்\nநன்கென் னுடலம் கைவிடான் ஞாலத் தூடே நடந்துழக்கி\nதென்கொள் திசைக்குத் திலதமாய் நின்ற திருமாலிருஞ்சோலை\nநங்கள் குன்றம் கைவிடான் நண்ணா அசுரர் நலியவே
Verse 1067
நண்ணா அசுரர் நலிவெய்த நல்ல அமரர் பொலிவெய்த\nஎண்ணா தனகள் எண்ணும்நன் முனிவ ரின்பம் தலைசிறப்ப\nபண்ணார் பாடல் இன்கவிகள் யானாய்த் தன்னைத் தான்பாடி\nதென்னா வென்னும் என்னம்மான் திருமாலிருஞ்சோலையானே
Verse 1068
திருமாலிருஞ்சோலையானே ஆகிச் செழுமூ வுலகும் தன்\nஒருமா வயிற்றி னுள்ளேவைத்து ஊழி யூழி தலையளிக்கும்\nதிருமாலென்னை யாளுமால் சிவனும் பிரமனும்காணாது\nஅருமா லெய்தி யடிபரவ அருளை யீந்த அம்மானே
Verse 1069
அருளை ஈயென் அம்மானே. என்னும் முக்கண் அம்மானும்\nதெருள் காள் பிரமன் அம்மானும் தேவர் கோனும் தேவரும்\nஇருள்கள் கடியும் முனிவரும் ஏத்தும் அம்மான் திருமலை\nமருள்கள் கடியும் மணிமலை திருமாலிருஞ்சோலைமலையே
Verse 1070
திருமாலிருஞ்சோலைமலையே திருப்பாற் கடலே என்தலையே\nதிருமால்வைகுந்தமே தண் திருவேங்கடமே எனதுடலே\nஅருமா மாயத் தெனதுயிரே மனமே வாக்கே கருமமே\nஒருமா நொடியும் பிரியான் என் ஊழி முதல்வன் ஒருவனே.
Verse 1071
ஊழி முதல்வன் ஒருவனே என்னும் ஒருவன் உலகெல்லாம்\nஊழி தோறும் தன்னுள்ளே படைத்துக் காத்துக் கெடுத்துழலும்\nஆழி வண்ணன் என்னம்மான் அந்தண் திருமாலிருஞ்சோலை\nவாழி மனமே கைவிடேல் உடலும் உயிரும் மங்கவொட்டே
Verse 1072
மங்க வொட்டுன் மாமாயை திருமாலிருஞ்சோலைமேய\nநங்கள் கோனே. யானேநீ யாகி யென்னை யளித்தானே\nபொங்கைம் புலனும் பொறியைந்தும் கருமேந்திரியும் ஐம்பூதம்\nஇங்கு இவ்வுயிரேய் பிரகிருதி மானாங்கார மனங்களே
Verse 1073
மானாங்கார மனம்கெட ஐவர் வன்கை யர்மங்க\nதானாங்கார மாய்ப்புக்குத் தானே தானே யானானை\nதேனாங் காரப் பொழில்குருகூர்ச் சடகோபன்சொல்லாயிரத்துள்\nமானாங்காரத்திவைபத்தும் திருமாலிருங்சோலைமலைக்கே
Verse 1074
திருமாலிருஞ்சோலை மலைமென்றேன் என்ன\nதிருமால்வந்து என் நெஞ்சு நிறையப் புகுந்தான்\nகுருமா மணியுந்து புனல்பொன்னித் தென்பால்\nதிருமால்சென்று சேர்விடம் தென் திருப்பேரே
Verse 1075
பேரே யுறைகின்ற பிர ¡ன் இன்று வந்து\nபேரேனென் றென்னெஞ்சு நிறையப் புகுந்தான்\nகாரேழ் கடலேழ் மலையே ழுலகுண்டும்\nஆராவ யிற்றானை யடங்கப் பிடித்தேனே
Verse 1076
பிடித்தேன் பிறவி கெடுத்தேன் பிணிசாரேன்\nமடித்தேன் மனைவாழ்க்கை யுள்நிற்பதோர் மாயையை\nகொடிக்கோ புரமாடங்கள் சூழ்திருப் பேரான்\nஅடிச்சேர்வதெனெனக்கெளி தாயின வாறே
Verse 1077
எளிதா யினவாறென் றெங்கண்கள் களிப்ப\nகளிதா கியசிந் தையனாய்க் களிக்கின்றேன்\nகிளிதா வியசோழைகள் சூழ்திருப் பேரான்\nதெளிதா கியசேண் விசும்புதரு வானே
Verse 1078
வானே தருவா னெனக்காயென் னோடொட்டி\nஊனேய் குரம்பை யிதனுள் புகுந்து இன்று\nதானே தடுமாற்ற வினைகள் தவிர்த்தான்\nதேனே பொழில்தென் திருப்பேர் நகரானே
Verse 1079
திருப்பேர் நகரான் திருமாலிருஞ்சோலைப்\nபொருப்பே யுறைகின் றபிர ¡னின்றுவந்து\nஇருப்பேன் என் றென்னேஞ்சு நிறையப் புகுந்தான்\nவிருப்பே பெற்றமு த முண்டு களித்தேனே
Verse 1080
உண்டு களித்அதற்கு கும்பரென் குறை மேலைத்\nதொண்டு களித்தந்தி தொழும்சொல்லுப் பெற்றேன்\nவண்டு களிக்கும் பொழில்சூழ் திருப்பேரான்\nகண்டு களிப்பக் கண்ணுள்நின் றகலானே
Verse 1081
கண்ணுள்நின் றகலான் கருத்தின்கண் பெரியன்\nஎண்ணில்நுண் பொருளே ழிசையின் சுவைதானே\nவண்ணநன் மணிமாடங்கள் சூழ்திருப் பேரான்\nதிண்ணமென் மனத்துப் புகுந்தான் செறிந்தின்றெ
Verse 1082
இன்றென்னைப் பொருளாக்கித் தன்னையென் னுள்வைத் தான்\nஅன்றென்னைப் புறம்பொகப் புணர்த்ததென் செய்வான்?\nகுன்றென்னத் திகழ்மாடங்கள் சூழ்திருப் பேரான்\nஒன்றெனக் கருள்செய்ய வுணர்த்தலுற் றேனே
Verse 1083
உற்றே னுகந்து பணிசெய் துனபாதம்\nபெற்றேன் ஈதேயின் னம்வேண் டுவதெந்தாய்\nகற்றார் மறைவாணர் கள்வாழ் திருப்பேராற்கு\nஅற்றார் அடியார் தமக்கல்லல் நில்லாவே
Verse 1084
நில்லா அல்லல் நீள்வயல்சூழ் திருப்பேர்மேல்\nநல்லார் பலர்வாழ் குருகூர்ச் சடகோபன்\nசொல்லார் தமிழா யிரத்துள் இவைபத்தும்\nவல்லார் தொண்டராள் வதுசூழ்பொன் விசும்பே
Verse 1085
சூழ்விசும் பணிமுகில் தூரியம் முழக் கின\nஆழ்கடல் அலைதிரை கையெடுத் தாடின\nஏழ்பொழி லும்வளம் ஏந்திய என்னப்பன்\nவாழ்புகழ் னாரணன் தமரைக்ககண் டுகந்தே
Verse 1086
நாரணன் தமரைக்கண் டுகந்துநன் னீர்முகில்\nபூரண பொற்குடம் பூரித் த துயர்விண்ணில்\nநீரணி கடல்கள்நின் றார்த்தன நெடுவரைத்\nதோரணம் நிரைத்தெங்கும் தொழுதனர் உலகரே
Verse 1087
தொழுதனர் உலகர்கள் தூபநல் மலர்மழை\nபொழிவனர் பூழியன் றளந்தவன் தமர்முன்னே\nஎழுமின் என் றிமருங்கிசைத்தனர் முனிவர்கள்\nவழியிது வைகுந்தற் கென்றுவந் தெதிரே
Verse 1088
எதிரெதிரி இமையவர் இருப்பிடம் வகுத்தனர்\nகதிரவர் அவரவர் கைந்நிரை காட்டினர்\nஅதிரிகுரல் முரசங்கள் அலைகடல் முழக்கொத்த\nமதுவிரி துழாய்முடி மாதவன் தமர்க்கே
Verse 1089
மாதவன் தமரென்று வாசலில் வானவர்\nபோதுமின் எமதிடம் புகுதுக வென்றலும்\nகீதங்கள் பாடினர் கின்னரர் கெருடர்கள்\nவேதநல்வாயவர் வேள்ளியுள் மடுத்தே.
Verse 1090
வேள்வியுள் மடுத்தலும் விரைகமழ் நறும்புகை\nகாளங்கள் வலம்புரி கலந் தங்கும் இசைத்தனர்\nஆளுமிங்கள் வானகம் ஆழியான் தமர் என்று\nவாளொண்கண் மடந்தையர் வாழ்த் தினர் மகிழ்ந்தே
Verse 1091
மடந்தையர் வாழ்த்தலும் மருதரும் வசுக்களும்\nதொடர்ந்தெங்கும் தோத்திரம் சொல்லினர் தொடுகடல்\nகிடந்தவென் கேசவன் கிளரொளி மணிமுடி\nகுடந்தையென் கோவலன் குடியடி யார்க்கே
Verse 1092
குடியடி யாரிவர் கோவிந்தன் தனக்கென்று\nமுடியுடை வானவர் முறைமுறை எதிரிகொள்ள\nகொடியணி நெடுமதிள் கோபுரம் குறுகினர்\nவடிவுடை மாதவன் வைகுந்தம் புகவே
Verse 1093
வைகுந்தம் புகுதலும் வாசலில் வானவர்\nவைகுந்தன் தமரெமர் எமதிடம் புகுகென்று\nவைகுந்தத் தமரரும் முனிவரும் வியந் தனர்\nவகுந்தம் புகுவது மண்ணவர் விதியே
Verse 1094
விதிவகை புகுந்தனர் என்றுநல் வேதியர்\nபதியினில் பாங்கினில் பாதங்கள் கழுவினர்\nநிதியுநற் சுண்ணமும் நிறைகுட விளக்கமும்\nமதிமுக மடந்தயர் ஏந்தினர் வந்தே
Verse 1095
வந்தவர் எதிரிகொள்ள மாமணி மண்டபத்து\nஅந்தமில் பேரின்பத் தடியரோ டிருந்தமை\nகொந்தலர் பொழில்குரு கூர்ச்சட கோபஞ்சொல்\nசந்தங்கள் ஆயிரத் திவைவல்லார் முனிவரே
Verse 1096
முனியே. நான்முக னே.முக்கண் ணப்பா என் பொல்லாக்\nகனிவாய்த் தாமரைக் கண் கரு மாணிக்கமே. என்கள்வா\nதனியேன் ஆருயிரே. என் தலை மிசையாய் வந்திட்டு\nஇனிநான் போகலொட் டேன் ஒன்றும் மாயம் செய்யேல் என்னையே
Verse 1097
மாயம்செய் யேலென்னை உன்திரு மார்வத்து மாலைநங்கை\nவாசம்செய் பூங்குழலாள் திருவாணை நின்னாணை கண்டாய்\nநேசம்செய்து உன்னோடு என்னை உயிர் வேறின்றி ஒன்றாகவே\nகூசம்செய் யாதுகொண் டாயென்னைக் கூவிச்கொள் ளாய்வந்தந்தோ
Verse 1098
கூவிக்கொள் ளாய்வந்தந் தோ.என் பொல்லாக்கரு மாணிக்கமே\nஆவிக்கோர் பற்றுக்கொம்பு நின்னலால் அறிகின்றி லேன்யான்\nமேவித் தொழும்பிரமன் சிவன் இந்திர னாதிக்கெல்லாம்\nநாவிக் கமல முதற்கிழங்கே. ளும்பர் அந்ததுவே
Verse 1099
ளும்ப ரந்தண் பாழேயோ. அதனுள்மிசை நீயேயோ\nஅம்பர நற்சோதி. அதனுள் பிரமன் அரன் நீ\nளும்பரும் யாதவரும் படைத்த முனிவன் அவன்நீ\nஎம்பரம் சாதிக்க லுற்றென்னைப் போரவிட் டிட்டாயே
Verse 1100
போரவிட் டிட்டென்னை நீபுறம் போக்கலுற்றால் பின்னையான்\nஆரைக்கொண் டெத்தையந்தோ. எனதென்பதென் யானென்பதென்\nதீர இரும்புண்ட நீரது போலவென் ஆருயிரை\nஆரப் பரு க,எனக்கு ஆராவமுதானாயே
Verse 1101
எனக்கா ராவமு தாயென தாவியை இன்னுயி ரை\nமனக்கா ராமைமன்னி யுண்டிட்டா யினியுண் டொழியாய்\nபுனக்கா யாநிறத்த புண்டரீ கக்கண் செங்கனிவாய்\nஉனக்கேற்கும் கோல மலரிப்பாவைக் கன்பா..என் அன்பேயோ
Verse 1102
கோல மலரிப்பாவைக் கன்பா கியவென் அன்பேயோ\nநீல வரையிரண்டு பி றைகவ்வி நிமிர்ந்த தொப்ப\nகோல வராகமொன் றாய்நிலங் கோட்டிடைக் கொண்டேந்தாய்\nநீலக் கடல்கடைந் தாயுன்னைப் பெற்றினிப் போக்குவனோ?
Verse 1103
பெற்றினிப் போக்குவனோ உன்னை என் தனிப்\nபேருயிரை உற்ற இருவினையாய் உயிராய்ப் பயனாய் அவையாய்\nமுற்றவிம் மூவுலகும் பெருந் தூறாய்த் தூற்றில்புக்கு\nமுற்றக் கரந்தொளித் தாய்.என் முதல்தனி னித்தேயோ
Verse 1104
முதல்தனி வித்தேயோ. முழுமூ வுலகாதிக் கெல்லாம்\nமுதல்தனி யுன்னையுன்னை எனைநாள் வந்து கூடுவன்நான்\nமுதல்தனி அங்குமிங்கும் முழுமுற் றுறுவாழ் பாழாய்\nமுதல்தனி சூழ்ந் தகன் றாழ்ந்துயர்ந்த முடிவி லீயோ
Verse 1105
சூழ்ந்தகன் றழ்ந்துயர்ந்த முடிவில் பெரும்பா ழேயோ\nசூழ்ந்தத னில்பெரிய பரநன் மலர்ச்சோ தீயோ\nசூழ்ந்தத னில்பெரிய சுடர்ஞான வின்ப மேயோ\nசூழ்ந்தத னில்பெரிய என்னவா அறச்சூழ்ந் தாயே
Verse 1106
அவாவறச் சூழரியை அயனை அரனை அலற்றி\nஅவாவற்று வீடுபெற்ற குருகூர்ச் சடகோபன் சொன்ன\nஅவாவிலந் தாதிகளால் இவையா யிரமும் முடிந்த\nஅவாவிலந் தாதியிப் பத்தறிந் தார்பிறந் தாருயர்ந்தே
Key Takeaways & AI Summary
This chapter explores the profound teachings of Thiruvaimozhi — The Sacred Utterance. It includes 1106 verses detailing core themes like "", "", "".The 4,000 Tamil hymns of the twelve Alwars — the crown jewel of Sri Vaishnava devotional literature, sung at the 108 sacred Divya Desams.